Showing posts with label அபாயம். Show all posts
Showing posts with label அபாயம். Show all posts

Sunday, March 22, 2026

மீண்டும் மஞ்சுமல் பாய்ஸ் வேண்டாம்

 


மலையாளத் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கேரளாவிலிருந்து கொடைக்கானல் உல்லாசப் பயணம் வந்து "குணா" குகையில் விழுந்து உயிர் தப்பிய இளைஞனின், அவனை மீட்ட நண்பர்களின் கதை.

கேரள் வாலிபர்களை குடிகாரர்கள், இத்யாதி, இத்யாதி என ஜெயமோகன் திட்டி அதனால் பாட்டு வாங்கியதும் "கண்மணி அன்போடு" பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு போட்டதும் கிளைக் கதைகள்.







மேலே உள்ள அழகிய படங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலையின் அற்புதக் காட்சிகள்.


நேற்று முன் தினம் அங்கே ஒரு வாலிபன் செல்ஃபி எடுக்கும்  மோகத்தில் வேகத்தில் கால் தவறி விழ நூறு அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டான்.

ராணுவத்தினர் வந்து சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளனர்.


இன்று செல்பி மோகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

புகைப்படங்கள் எடுங்கள். 

ஆனால் உயிரைப்பற்றியும் கவலைப்படுங்கள்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது.

இன்னும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் அனுபவம் வேண்டாமே