Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

Sunday, November 30, 2014

வைகோ மயங்கி விட வேண்டாம்




பாஜக தன் கோர முகத்தை, சகிப்புத் தன்மையற்ற பாசிஸ குணாம்சத்தை அதன் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வைகோவிற்கு விடுத்த மிரட்டல் மூலம் வெளிப்படுத்தி விட்டது. "பெரியாரை செருப்பால் அடிப்பேன்" என்ற கீழ்த்தரமான வார்த்தைகளுக்கு சொந்தக்காரரான ஹெச்.ராஜா இப்போது வைகோ பாதுகாப்பாக நடமாட முடியாது என்று நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.

"அப்படியென்ன நரேந்திர மோடி வானிலிருந்து குதித்த தேவதையா? உலகின் மிக உன்னதமான மனிதனா? ரத்தக்கறை படிந்த களங்கமான மனிதன் தானே! மோடியை விமர்சித்தால் சும்மா இருக்க மாட்டோம் என்று மிரட்டுவது வைகோவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிரட்டல். கருத்துரிமைக்கு விடப்பட்ட மிரட்டல். இதை அனுமதிக்க முடியாது. கண்டிக்கிறேன். கண்டியுங்கள், எல்லோரும் கண்டிப்போம்.

இப்போது பாஜக வின் தமிழிசையும் பொன்னாரும் ஹெச்.ராஜா பேசியது அவரது சொந்தக் கருத்து என்று சொல்லி அந்த அநாகரீகத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். திருமதி தமிழிசை சௌந்தரராஜன் பேசும் போது கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்யாதீர்கள். கோரிக்கை வையுங்கள் என்று சொல்லியுள்ளார்.

இந்த வார்த்தைகளுக்கு உள்ளேயுள்ள அர்த்தம் என்ன?

ஒழுங்காக இருங்கள், எலும்புத் துண்டுகளை வீசியெறிவோம் என்பதுதானே!

வைகோவிற்கு ஒரு வார்த்தை.

பெரியாரின் பாசறையில் வளர்ந்ததாகச் சொல்லும் நீங்கள் ஹெச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுபடுத்திய போது அமைதியாக இருந்தீர்கள். அவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டீர்கள். பிரச்சாரம் செய்தீர்கள், சான்றிதழ் கொடுத்தீர்கள். இப்போது உங்களை மிரட்டுகிறார்கள். அதே நேரம் ஆசையும் காட்டுகிறார்கள்.

பெரியாரை நீங்கள் நேசிப்பது உண்மையென்றால் இனியாவது காவிக்கூட்டத்திற்கு முட்டு கொடுக்கும் தவறை திருத்திக் கொள்ளுங்கள், உங்களது சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.