Showing posts with label மனோரமா. Show all posts
Showing posts with label மனோரமா. Show all posts

Saturday, October 17, 2015

ஆச்சிக்கு என் பாணி அஞ்சலி

 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் மூலமாக நம்மை சிரிக்க வைத்த, தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனோரமா அவர்களுக்கு எனது இதய அஞ்சலி.

புதுகை வலைப்பதிவர் விழாவில் பங்கேற்ற காரணத்தால் உடனடிப் பதிவிற்கான வாய்ப்பில்லாமல் போய் விட்டது.  அதனால் அவரை அறிமுகம் செய்த கவியரசர் நினைவுநாளில் இன்று பதிவிடுகிறேன்.

தில்லானா மோகனாம்பாள் ஜில் ஜில் ரமாமணியையோ நடிகன் அத்தையையோ சம்சாரம் அது மின்சாரத்தின் முனியம்மாவையோ யாரால் மறக்க முடியும்?

பல முக்கியமான காட்சிகளை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அதனால் அவற்றை தவிர்த்துள்ளேன். 

செந்தமிழ் தேன் மொழியாள்  இவர்தான் என்பது தெரியுமல்லவா?

மறக்க முடியுமா இந்த ஐய்யய்யோ, ஐய்யய்யயோ  வை?

அந்தக் காலத்தில் இவர்களும் பிரபலமான ஜோடிகள்தான்
தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. இவருக்கோ இங்கே?? 

இப்படியெல்லாம் போராட்டத்தை குழப்பாதீங்கம்மா.  

ஒரு உணர்ச்சிகரமான காட்சிக்குப் பிறகு இளைப்பாறலாய் இவர்

உங்களுக்கும் கேட்குதா வீணைச் சத்தம்?

செம திட்டுதான்   யாருக்கு?

அவர் நம்மை சிரிக்க மட்டும் வைத்ததில்லை.

கலங்கவும் வைத்திருக்கிறார்  

ஆமாம், இக்காட்சியிலும் கூட

என்ன, இதயம் கனத்து விட்டதா?

மனோரமா என்றால் நகைச்சுவைதானே நினைவுக்கு வரும். அப்படி இருக்கையில் இந்த பதிவை, என்னதான் அவருக்கான அஞ்சலி என்ற போதும் துயரம் கலந்த உணர்வோடு முடிக்க முடியுமா?

அதனால் உலக்ப் புகழ் பெற்ற ஜில்ஜில் ரமாமணியைக்  காணத் தவறாதீர்கள்