Saturday, August 29, 2020

பிணந்தின்னி கழுகு (சங்கி )


 



கீழே உள்ள ட்விட்டர் பதிவை பார்க்கும் போது மேலே உள்ள படம்தான் நினைவுக்கு வந்தது.

 திரு வசந்தகுமார் மரணத் தருவாயில் இருக்கும் போதே போட்ட பதிவு இது.


 

அவர் இறப்பதற்கு முன்பே அவரது மக்களவை இடம் காலியாகி அங்கே இடைத்தேர்தல் வந்து அதில் பொன்னார் வெற்றி பெற்று மத்தியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்பார் என்பதெல்லாம் எவ்வளவு வக்கிரமான சிந்தனை!

 சங்கிகளை விட கேவலமானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

 அடுத்தவர் மரணத்தை எதிர்பார்த்து நாள் குறித்தவர்கள்தான் முதலில் மரணத்தை தழுவினார்கள் என்பது வரலாறு. ஆனாலும் வக்கிர சிந்தனையாளர்கள் அடுத்தவர்கள் மரணத்திற்காக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 அவர்களை பிணந்தின்னி கழுகுகள் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது?

பிகு : சூடானின் பட்டினிப் பிரச்சினையை மேலே உள்ள படம் சித்தரித்தது.  புகைப்படக் காரருக்கு பாராட்டுக்களும் கண்டனங்களும் குவிந்தது. ஒரு குழந்தையின் மரணத் தருவாயில் அதை காப்பாற்றுவதற்குப் பதிலாக புகைப்படம் எடுத்தோமே என்ற குற்ற உணர்வில் அந்த புகைப்படக் காரர் கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அவருக்கு குற்ற உணர்வு இருந்தது. இந்த பிணம் தின்னிக் கழுகுகளாக இருந்தால்  . . . . .கொன்றே போட்டிருப்பார்கள். 

 

 


No comments:

Post a Comment