Friday, August 28, 2020

17 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்

 



ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தோழர் நினைவு படுத்தி இருந்தார்.


பதினேழு வருடங்களுக்கு முன்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இதே நாளில் 28.08.2003 அன்று இரண்டு மணி நேர வேலை நிறுத்தம் மேற்கொண்டிருந்தது.

தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் மேற்கொள்வது வழக்கமானதுதானே! இந்த நாளில் என்ன சிறப்பம்சம் என்று கேட்கலாம்.

ஒரு துளி மையில் ஜெ ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். வழக்கு உச்ச நீதி மன்றம் சென்ற போது உச்ச நீதி மன்றம் தொழிலாளி வர்க்கத்தின் மீது ஒரு மிகப் பெரும் தாக்குதலை நடத்தியது.

ஆமாம்.

வேலை நிறுத்தம் செய்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று அந்த உரிமையையே பறித்தது. வேலை நிறுத்தம் செய்வதே சட்ட விரோதம் என்று தொழிலாளி வர்க்க வெறுப்பை வெளிப்படுத்தியது. 

அந்த தீர்ப்பு கடுமையான விவாதங்களுக்கு ஆளானாலும் அத்தீர்ப்பை மீறிய, வேலை நிறுத்த உரிமையை முதன் முதலில் நிலை நாட்டிய அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

ஆம்.

உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற முதல் வேலை நிறுத்தம் 28.08.2003 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய வேலை நிறுத்தமே.

ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கத்திற்கே உற்சாகமும் நம்பிக்கையும் அளித்த வேலை நிறுத்தம் அது.

தீர்ப்பில் ஒளிந்திருந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் அந்த வீரம் மிக்க போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு தோழருக்கும் வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment