Showing posts with label காதல் திருமணம். Show all posts
Showing posts with label காதல் திருமணம். Show all posts

Saturday, August 30, 2025

இரண்டாவது கல்யாணம் தனிப்பட்ட விஷயம். ஆனால் . . .

 


நேற்று முழுதும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்தி, மருத்துவர் ஐயா, தன் இரண்டாவது மனைவியோடு ஐம்பதாவது திருமண விழா கொண்டாடியது.

அவருடைய இரண்டாவது திருமணம் பற்றி பேச அவரது குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை. அது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட பிரச்சினை.

மோடி தன் மனைவியை விட்டு விலகி வாழ்வதை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது. 2024 வரை வேட்பு மனுக்களில் அதை மறைத்ததுதான் குற்றம். 

அது போல மருத்துவர் ஐயா, கூடுதலாக ஒரு காதல் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அடுத்தவர்களின் காதலை நாடகக் காதல் என்று கொச்சைப்படுத்தி காதல் ஜோடிகளை பிரிக்கும் அராஜகம் செய்தது, காதலர்கள் வசிக்கும் பகுதிகளை கொளுத்த வைத்தது போன்ற கிரிமினல் வேலைகளின் சூத்ரதாரியாக இருந்தாரே, அதுதான் குற்றம். மன்னிக்க முடியாத குற்றம் . . .

Wednesday, August 27, 2025

காட்டிக் கொடுக்க அழைக்கும் ஆட்டுக்காரன்

 


காதல் திருமணங்கள் செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு வாருங்கள் என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் கூறிய பிறகு, ஆட்டுக்காரனும் பாஜக அலுவலகங்களுக்கும் வரலாம் என்று சொல்ல ஒரே கன்ப்யூசன்.

"போட்டிக்கு பிள்ளை பெறுகிறார்"  என்றுதான் முதலில் நினைத்தேன். அந்தாள் பேசியதன் முழு விபரங்களை மாலை மலர் வெளியிட்டிருந்ததை வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் பகிர்ந்து கொண்டிருந்ததை படித்த பின்புதான் தெளிவு கிடைத்தது.


ஆக ஆட்டுக்காரன் காதலர்களை பாஜக அலுவலகத்திற்கு அழைப்பது திருமணம் செய்து வைக்க அல்ல. அப்பா அம்மாவிற்கும் போலீஸிற்கும் தகவல் கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்த.

அதெப்படி ஆட்டுக்காரன் காதல் திருமணங்களை எல்லாம் ஆதரிப்பான்! பிற்போக்குத்தனமான பாஜக ஆளுங்க எல்லாம் திருந்துவாங்களா என்ன!!