நேற்று முழுதும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்தி, மருத்துவர் ஐயா, தன் இரண்டாவது மனைவியோடு ஐம்பதாவது திருமண விழா கொண்டாடியது.
அவருடைய இரண்டாவது திருமணம் பற்றி பேச அவரது குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை. அது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட பிரச்சினை.
மோடி தன் மனைவியை விட்டு விலகி வாழ்வதை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது. 2024 வரை வேட்பு மனுக்களில் அதை மறைத்ததுதான் குற்றம்.
அது போல மருத்துவர் ஐயா, கூடுதலாக ஒரு காதல் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அடுத்தவர்களின் காதலை நாடகக் காதல் என்று கொச்சைப்படுத்தி காதல் ஜோடிகளை பிரிக்கும் அராஜகம் செய்தது, காதலர்கள் வசிக்கும் பகுதிகளை கொளுத்த வைத்தது போன்ற கிரிமினல் வேலைகளின் சூத்ரதாரியாக இருந்தாரே, அதுதான் குற்றம். மன்னிக்க முடியாத குற்றம் . . .

.jpg)
