Showing posts with label நாத்திகர்கள். Show all posts
Showing posts with label நாத்திகர்கள். Show all posts

Tuesday, September 6, 2022

உண்மையான பக்தனாக இருந்தால்???

 


மேலே உள்ள படத்தை அனைவரும் பல முறை பார்த்திருப்பீர்கள்.

ஊரெல்லாம் காசு வசூல் செய்து சேர்த்த காசில் பாதியை பிள்ளையாருக்கும் மீதியை சரக்குக்கும் சைட் டிஷ்ஷிற்கும் செலவு செய்து மூன்று நாட்கள் வீதியில் நிறுத்தி அப்போதும் உண்டியலும் தட்டும் வைத்து வசூல் செய்து விட்டு ஊரையே பதற்றத்தில் ஆழ்த்தி போலீஸ்காரர்களை வேறு பிழைப்பை எல்லாம் விட்டு விட்டு பந்தோபஸ்து கொடுக்க வைத்து கட்டையால் அடித்து உடைத்து கரைத்தாலும் இப்படி தலை வேறு கால் வேறாக பிள்ளையார் சிலையின் எச்சங்கள் மிதப்பதை பக்தர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

நீங்கள் வணங்கும் கடவுளுக்கு இப்படி ஒரு இழிவான நிலை உருவாவதை நீங்கள் விரும்புகிறீர்களா?

நீங்கள் உண்மையான பக்தன் என்றால் பிள்ளையார் சிலையை வைத்து வியாபாரம் செய்வதையும் கலவரம் செய்வதையும் இனியாவது அனுமதிக்காதீர்கள்.

நினைவில் இருக்கட்டும். நல்லவர்கள் அமைதியாக இருந்தால் அயோக்கியர்கள் கூத்தாடுவார்கள்.

உங்களின் எதிரி நாத்திகர்கள் அல்ல, கடவுளின் பெயரில் வியாபாரம் செய்யும் சுய நலப் பேர்வழிகள்தான். . .

 அவர்களை ஒதுக்கி வைத்தால் உங்களுக்கும் பிரச்சினை கிடையாது. நீங்கள் வழிபடும் கடவுளுக்கும் பிரச்சினை கிடையாது.