Tuesday, September 1, 2020

சிங்கத்தின் கர்ஜனையோடு

 இன்றைய தேதியின் முதல் பதிவை ஒரு சிங்கத்தின் கர்ஜனையோடு துவக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.



இன்று 65 வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் எல்.ஐ.சி நிறுவனத்தை வாழ்த்தி, அதன் பங்குகளை விற்க வேண்டும் என்ற முடிவை மத்தியரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும் பொதுவுடமை இயக்கத்தின் புடம் போட்ட தங்கமுமான தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்த்துச் செய்தியை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.



எல்.ஐ.சி நிறுவனம் இந்திய மக்களின் சொத்து. அதனை தனியார் கை கொள்ள அனுமதியோம் என்பதை அரசு உணர்த்துகிற வகையில் 

ட்விட்டரில்

#HBD_LIC 

என்ற ஹாஷ்டேக் உடன் உங்கள் செய்தியை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment