Showing posts with label கலைஞன். Show all posts
Showing posts with label கலைஞன். Show all posts

Friday, June 11, 2021

நல்ல முன்னெடுப்பு - அமைப்புக்கும் அமைச்சருக்கும்

 இளம் எழுத்தாளர் தோழர் அ.கரீம் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நல்லதொரு முயற்சியை மேற்கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கும் அதனை தக்க முறையில் எதிர்கொண்டு உறுதியளித்துள்ள தமிழ்நாடு அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களுக்கும் பாராட்டுக்கள்.





கலை இலக்கிய பண்பாட்டுத் செயல்பாட்டில் எப்போதுமே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் களச் சூழலில் இருந்து துரிதமான நடவடிக்கை எடுக்கும் அந்த வகையில் இன்று மிக முக்கியமான முன்னெடுப்பாக நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான ஒரு கோரிக்கை கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சரும் பண்பாட்டு துறை அமைச்சருமான மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் பங்கேற்றார்கள்.

பேசும் ஒவ்வொரு கலைஞர்களின் கோரிக்கையும் மிகப் பொறுமையாக சுமார் இரண்டரை மணி நேரம் குறிப்புகள் எடுத்தபடி அவர் முழுமையாக கலந்து கொண்டார்.

தமிழக நாட்டுப்புற கலைகளின் மீது பேரார்வம் கொண்ட கலை செயல்பாட்டாளர் அன்னம்.டீ. ப்ருயின் கலந்து கொண்டார். அவர் பேசும் போது

"நான் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தாவள் அங்கே இருந்த நாட்டுப்புற கலைகள் அனைத்தும் யாரும் கவனிக்காததினால் அழிந்து விட்டது. ஆனால் தமிழ்நாடு அப்படி அல்ல இயல் இசை நாடகம் என்று பரம்பரியமாக செயல்படும் மாநிலம் ஆனால் நாட்டுப்புற கலைஞர்களுக்கு என்று ஒரு தனிப்பல்கலைகழகம் இதுவரை இல்லை. இந்த கொரனோ காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களின் நிலை மிக மோசமாகிவிட்டது " என்று பேசினார். இப்படி ஒவ்வொருவரின் பேச்சையும் மிக கவனமாக குறிப்பெடுத்தவர் அடுத்த வாரமே பண்பாட்டு துறை கூட்டம் கூடி போர்க்கால அடிப்படையில் சில முடிவுகள் உடனடியாக எடுக்கப்படும் என்று கூறினார். (கடந்த பத்து ஆண்டுகளாக பண்பாட்டு துறை கூட்டம் கூடவே இல்லை என்பது பிரதிநிதி ஒருவர் கூறினார் ).

கூட்டத்தில் பங்கேற்ற நாட்டுபுற கலைஞர்கள் பலரின் வாழ்வும் கேட்க கேட்க மிக மோசமாக இருந்ததை உணர முடிந்தது. அதை அமைச்சரும் ஏற்புரையில் குறிப்பிட்டார். உங்களுக்கு என்ன தேவை என்றாலும் என்னை தொடர்பு கொள்ளவும், எனது வாட்சப்பில் கூட தகவல் அனுப்புங்கள் நான் உங்கள் தோழன் என்பதை நினைவில் வைத்து உரிமையோடு பேசுங்கள் " என்று நாட்டுப்புற கலைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அமைச்சர் விதைத்து உள்ளார்.

தமுஎகச வரலாற்றில் இன்றைய கூட்டம் மிக முக்கியமான நிகழ்வு.

சரியான காலத்தில் மிக சரியான கோரிக்கையை முன்னெடுத்தார்கள் நாடகவியலாளர் பிரளயன், பேரா. காளிஸ்வரன், பூபாலம் பிரகதீஸ்வரன், மதுக்கூர் ராமலிங்கம் ஆதவன் திட்சாண்யா உள்ளிட்ட தோழர்கள்.

Monday, April 3, 2017

மார்லன் பிராண்டோவை நேசிக்கிறேன்

தோழர் ஃபெரோஸ் பாபு தன்னுடைய முக நூலில் பகிர்ந்து கொண்டதை படித்து விட்டு நான் மார்லன் பிராண்டோவை நேசிக்கத் தொடங்கி விட்டேன். காட் ஃபாதர் திரைக்கதையை படித்த பின்பு சில காட்சிகளை யுட்யூபில் பார்த்ததற்கு மேல் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. இனி அவர் திரைப்படங்களை தேடிப் பிடித்து பார்க்க வேண்டும். 

 


ஏப்ரல் 3: மார்லன் பிராண்டோ பிறந்த நாள்.

புகழின் உச்சியில் வெகுகாலம் இருந்த மார்லான் பிராண்டோ நடிகர்களை இறைவன் போல கொண்டாடுவதை வெறுத்தார். கூட்டங்கள் அவருக்கு கடுப்பைத்தந்தன. ஒரு பாராட்டு விழாவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திக்கு முக்காட வைத்த பொழுது ,"கர்த்தரே ! நான் ஏன் எந்த நகரத்திற்கு வரவேண்டும் !" என்று புலம்பிய ஒரே கலைஞன் அவராகத்தான் இருக்க முடியும்

உலகம் முழுக்க தன்னுடைய படங்களுக்காக பயணம் போன பொழுது அவர் எப்படி கிழக்கு நாடுகள் பஞ்சத்தில் தோய்ந்து துன்பப்படுகின்றன என்பதை கண்டார். "இந்த நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம். அதற்கு உகந்த அரசாங்கங்கள் அங்கே செயல் படுகின்றன !" என்று கச்சிதமாக அவர் குறித்தார்.

மார்லன் பிராண்டோவுக்கு காட் பாதர் படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக,தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார்.
லண்டன் நகரத்துக்கு படப்பிடிப்புக்கு போனவர் அங்கே அப்பாவி கறுப்பின மக்களை கைது செய்து வைத்திருக்கும் அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் பேரணி போவதை கண்டார். அந்த மெழுகுவர்த்தி பேரணியில் தான் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்பதை தூக்கி கிடாசிவிட்டு கலந்து கொண்டார் அவர்.

 மார்ட்டின் லூதர் கிங் எனக்கொரு கனவு இருக்கிறது உரையை நிகழ்த்தும் பொழுது அதை கேட்க ஓடோடி வந்தவர் அவர். அவர் இறந்த பொழுது படப்பிடிப்பை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு மண்டியிட்டு கண்ணீர் விட்டார் அவர் !

செவ்விந்திய மக்களை எப்படி கொன்றும்,குலைத்தும் அமெரிக்கா எழுந்தது என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து பதைபதைத்து போனார் 

காட்ஃபாதர் படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார். அதே போல இந்தியாவின் பீகாரில் நிலவிய கொடிய பஞ்சத்தை பற்றி படமெடுத்து அமெரிக்க மக்களுக்கு போட்டு காண்பித்து அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முயன்ற பொழுது அதற்கு பெருந்தடைகள் எழவே "அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை !" என்று கோபத்தோடு பதிவு செய்தார் அவர்.


"நான் ஹாலிவுடில் இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை. எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது ! வேறொன்றும் இல்லை !" என்று ஓபனாக பேசிய ஒரே நபர் அவராகத்தான் இருக்கவேண்டும்.

"மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை கொண்டாடுகிறார்கள். உங்களை சந்திக்காமலே நீங்கள் அற்புதமானவர்கள் என்று நம்புவார்கள். அதே மக்கள் உங்களின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக உங்களை வெறுப்பார்கள். மக்கள் தங்களுக்கான எதிரிகளை இழக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு பிடித்த வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். வெறுப்பதை காதலிக்கவும்,காதலிப்பதை வெறுக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு திட்டவும்,கொண்டாடவும் ஒரு நாயகன் எப்பொழுதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறான்" என்று அவர் சொன்னது எத்தனை உண்மையானது !

- பூ.கொ.சரவணன் , Vikatan EMagazine

Tuesday, November 29, 2016

தாத்தா கலக்குறார்பா !!!!!!!!!

கீழே உள்ள ஓவியங்களை எல்லாம் நன்றாகப் பாருங்கள்


















இவை எதுவும் கையாலோ, கணிணி கொண்டோ வரையப்பட்ட ஓவியங்கள் அல்ல.



பிறவியிலேயே மாற்றுத் திறனாளியான பால் ஸ்மித் என்ற இந்த முதியவர் டைப்ரைட்டர் கொண்டு உருவாக்கிய ஓவியங்கள்தான் இவை. 

அவரது விடா முயற்சிக்கும் உறுதிக்கும் கலைத்திறனுக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும் வாழ்த்துக்களும்.  
 

Friday, November 11, 2016

கொஞ்சம் கைத்தட்டலாமா?














மேலே உள்ள ஓவியங்களைப் பார்த்தீர்களா? 



இவற்றை வரைந்தது இந்தப் பெண்தான். கேரளாவைச் சேர்ந்த இவரின் பெயர் ஸ்வப்னா அகஸ்டின். இரு கைகளையும் இழந்த இவர் கால்களால் வரைந்த ஓவியங்கள்தான் இவை.

தன்னம்பிக்கையின் அடையாளமாய் திகழும் இந்த அற்புதக் கலைஞரை பாராட்டுவோம்.

 

Wednesday, August 5, 2015

குடியரசுத் தலைவரும் சந்திரபாபுவும்

 http://media.newindianexpress.com/article1273691.ece/alternates/w620/chandrababu-E-E.jpg

இன்று சந்திரபாபுவின் பிறந்தநாள் என்று முகநூல் மூலம் அறிந்து கொண்டேன். அப்போது சந்திரபாபு பற்றி படித்த இரண்டு செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கவலை இல்லாத மனிதன் என்ற படத்தில் சந்திரபாபு பாடும் ஒரு பாடலின் ஒலிப்பதிவு முடிந்த நாளன்று இரவு, மெல்லிசை மன்னரின் வீட்டிற்கு இரவு சந்திரபாபு எதிர்பாராமல் வந்தாராம். அவரது கையில் ஒரு ஏர் கூலர். "விசு என்னம்மா பாட்டு போட்டிருக்கே. உன்னோட தலை எப்பவும் கூலாக இருக்கனும்" என்று சொல்லி பரிசளித்ததாக ஒரு செய்தியை  எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு படித்த நினைவிற்கு வருகிறது.

அதே போல கவியரசர் கண்ணதாசன் எழுதிய புத்தகத்தில் படித்த சம்பவம் இது.

இந்தியா பாகிஸ்தான் போரின் போது ராணுவ வீரர்களுக்கு உற்சாகமளிக்க தமிழக திரைப்படக் கலைஞர்கள் எல்லைக்குச் செல்கிறார்கள். அவர்களின் செயலைப் பாராட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்களுக்கு ஒரு விருந்து நடக்கிறது. அப்போது குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். 

அவர் நம் கலைஞர்களை பாடச் சொல்கிறார். யாரும் பாடாவிட்டால் நானே பாடி விடுவேன் என்று சொல்லி அவரே ஒரு பழைய பாட்டை பாட ஆரம்பித்து விடுகிறார். உடனே சந்திரபாபு அவர் மடியில் படுத்துக் கொண்டு "நீ ரசிகன்டா" என்று கன்னத்தை தடவிக் கொடுக்கிறார். எங்கே பிரச்சினை வந்து விடப் போகிறதோ என்று எல்லோரும் அஞ்சினாலும் சந்திரபாபுவின் செய்கையை  டாக்டர் ராதாகிருஷ்ணன் ரசித்ததால்  பிரச்சினை இல்லாமல் போய் விட்டது. 

எம்.எஸ்.வி க்கு சந்திரபாபு ஏர் கூலர் வாங்கிக் கொடுக்க காரணமாக இருந்த பாடலை பார்த்தும் கேட்டும் ரசியுங்கள், கண் கலங்காமல்

Friday, December 5, 2014

காவியத் தலைவன் சிவாஜி




காவியத் தலைவன் திரைப்படத்திற்கு நாளை செல்லலாமா என்றொரு யோசனை இருக்கிறது. கத்தி போகலாம் என்று பல சனிக்கிழமைகள் திட்டமிட்டு ஆனால் வேலைகள் வந்து நான் செல்வதற்குள் அப்படம் வேலூரை விட்டு சென்று விட்டது. காவியத்தலைவன் நிலை என்ன ஆகுமோ?

காவியத்தலைவன் விமர்சனங்களில் ராஜபார்ட் ரங்கதுரை பற்றிய ஒப்பீடு வந்தது. சரி அப்படத்தில் ஏதாவது ஒரு காட்சியை பார்ப்போம் என்று யுட்யூபில் தேடிய போது இக்காட்சி கிடைத்தது. அல்லி தர்பார் நாடகம் இது.   

நாடகத்தில் தன் கலை வாழ்வை தொடங்கிய நடிகர் திலகம் இயல்பாக நடித்துள்ளது என்பதில் எந்த ஆச்சர்யமும் கிடையாது. ஆனால் தான் நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலைப் பிடித்துக் கெஞ்சுவதாக ஒரு காட்சி வருகிறது.

இன்றைக்கு உள்ள எந்த ஒரு பெரிய கதாநாயக நடிகரும் தன்னை விட கம்மியான பிரபலம் உள்ளவர்களின் காலில் விழுவது போன்ற காட்சிகள் எல்லாம் எடுக்க அனுமதிப்பார்கள் என்று தோன்றவில்லை.

அங்கேதான் நடிகர் திலகம் நிற்கிறார் காவியத் தலைவனாக.