Friday, August 14, 2020

பறிப்பதை தடுப்போம் என்று உறுதியேற்போம்

 

இன்று தேசத்தின் 74 வது சுதந்திர தினம்.

சுதந்திரப் போராட்டத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத, சொல்லப் போனால் சுதந்திரப் போராட்டப் போராளிகளை காட்டிக் கொடுத்தவர்கள், சிறிது காலம் முன்பு வரை மூவர்ணக் கொடியை ஏற்றுக் கொள்ளாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் வாரிசு செங்கோட்டையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றுவது என்பது கொடிய முரண்பாடு.

சுதந்திரப் போராட்டத்தில் தொடர்பில்லாதவர்கள் என்பதால்தான் இந்திய சுதந்திரம் உறுதியளித்துள்ள அனைத்து அடிப்படைச் சுதந்திரங்களையும் பறிக்கும் முயற்சியில் தற்போதைய ஆட்சியாளர்கள் இறங்கி உள்ளனர்.

இந்தியாவின் பொருளாதாரத்தையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் காலடியில் சமர்ப்பித்துள்ளனர். இந்தியாவின் பொருளாதார வளமைக்கும் வேலை வாய்ப்புக்களுக்கும் காரணமான பொதுத்துறை நிறுவனங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் சுதந்திர தினம் என்பது அவர்களுக்கு வெறும் கொண்டாட்டம். நாடக வசனம் பேசி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் சடங்கு.

இந்தியாவை உண்மையிலேயே நேசிக்கும் நமக்கு சுதந்திரத்தின் அர்த்தம் புரியும், அவசியம் தெரியும்.

போராடிப் பெற்ற சுதந்திரத்தை வீணர்கள் பறிக்க அனுமதியோம் என்று உறுதியேற்போம்.

இந்தியாவினை வெறும் மண்ணாக மட்டும் பார்க்காமல் மக்களாகவும் பார்க்கிற உண்மையான இந்தியர்கள் அனைவருக்கும் 

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இந்திய சுதந்திரத்திற்காக போராடி இன்னுயிர் நீத்த, சிறை வாசம் அனுபவித்த, தேசத்திற்காக படிப்பு, வேலை அனைத்தையும் துறந்து போராட்டத்தில் பங்கேற்ற நம் தியாக முன்னோர் அனைவரையும் நினைவு கூர்வோம். அவர்களின் தியாகம் வீண் போகாது என்று சூளுரை ஏற்போம்.


சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று இன்னும் வாழும் வரலாறாக நமக்கு எழுச்சியூட்டும், உணர்வூட்டும் தலைவர்கள் தோழர்கள் என்.சங்கரய்யா, வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோருக்கு பிரத்யேக வாழ்த்துக்கள்.


1 comment:

  1. Well said comrade.wishes and salutations to the real patriots.Happy independence day to you n ur family.

    ReplyDelete