Saturday, August 22, 2020

கொரோனாவை ஒழிச்சிருக்கலாமே லூசுகளா?



 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தமிழகஅரசு அனுமதிக்கவேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ்நாடு முழுக்க ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவோம். அப்போது கணபதி ஹோமம் நடக்கும். அதில் மூலிகை வைத்து எரிப்போம். அந்த மூலிகை புகை தமிழ்நாடு முழுக்க பரவும். அது தமிழ்நாடு முழுக்க பரவியிருக்கும் கொரானா நோய்கிருமியை ஒழித்துவிடும். இது ஏற்கனவே போபால் விஷவாயு நடந்தபோது விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்டது.

----புதிய தலைமுறை நேர்பட பேசு விவாதத்தில் எஸ்.ஆர்.சேகர் (பிஜேபி)


இதன் உண்மைத்தன்மை பர்ற்றிய விவாதத்திற்குள் நான் செல்லவில்லை.

என் கேள்வி ஒன்றே ஒன்றுதான். நான் சீரியஸாகவே கேட்கிறேன்.

இதன் மூலம் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றால் 

மார்ச் 22 அன்று கைதட்டி மணியடிக்கச் சொன்னதற்கு பதிலாக ஏப்ரல் 9 அன்று லைட்டை அணைத்து விளக்கேற்றச் சொன்னதற்குப் பதிலாக அப்போதே கணபதி ஹோமம் செய்திருந்தால், கொரோனா அப்போதே ஒழிந்திருக்குமே. பி.எம் கேர்ஸ் என்ற மர்ம நிதி வசூல் செய்து ஆளுக்காள் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பை தவிர்த்திருக்கலாமே? ஐம்பதாயிரம் பேர் இறப்பைக் கூட தவிர்த்திருக்கலாமே!


இந்த அரிய அறிவியலை கலவரத்துக்கு வாய்ப்பில்லை என்பது வரை சொல்லாமல் இருந்தது தேசத்துரோகமில்லையா மிஸ்டர் எஸ்.ஆர்.சேகர்?

No comments:

Post a Comment