Showing posts with label சந்தேகம். Show all posts
Showing posts with label சந்தேகம். Show all posts

Wednesday, January 28, 2026

அது ஆக்ஸிடென்ட் தானா?

 


மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளாகி இறந்து போயுள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அவர் பாஜக கூட்டணியில் போட்டியிடாமல் தன் சித்தப்பாவின் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார்.

அதனால் கேரட்கிறேன்.

இது விபத்துதானே?

Monday, November 10, 2025

முட்டாள் வில்லன்களும் வெடிகுண்டு வெடிப்புக்களும்

 


மேலே உள்ளது துப்பாக்கி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி. 

இந்தப் படம் என்றில்லை பெரும்பாலான தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வில்லனிடமும் வில்லன் கூட்டத்திடமும் துப்பாக்கி இருக்கும். ஆனாலும் அவர்கள் முட்டாள்கள் போல வெறுங்கைகளால் சண்டை போட்டு ஹீரோவிடம் தோற்றுப் போவார்கள்.

அந்த முட்டாள் வில்லன்கள்  போலவே பெரும்பாலான குண்டு வெடிப்புக்களை நடத்தும் தீவிரவாதிகள், எப்படி பாஜகவிற்கு தேர்தல் ஆதாயம் கிடைப்பது போல குண்டு வைக்கிறார்கள்!

இது என்னுடைய கருத்து இல்லை, ஒரு சந்தேகம், அவ்வளவுதான்.

நேற்று டெல்லி செங்கோட்டை வாயிலில் வெடிகுண்டு வெடித்து எட்டு பேர் இறந்த சம்பவத்திற்கும் இன்று பீகாரில் இறுதி கட்ட தேர்தல் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான். ஆமாம் இல்லைதான் . . .

Sunday, November 21, 2021

ஷாருக்கான் மகன் கைது - சதிதானோ?

 


ஒரு சொகுசுக் கப்பலில் ஷாருக்கானின் மகன் போதைப் பொருள் வைத்திருந்ததாய் கைது செய்யப்பட்டதும் பிணையில் வெளியே வந்ததும் இக்கைதில் ஆதாயமடைவதற்கான சதி நடந்துள்ளதாக என்.சி.பி அமைச்சர் ஒருவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மீது குற்றம் சுமத்தியதும் நினைவில் இருக்கலாம்.

பிணை ஆணை நேற்றுதான் வெளியே வந்துள்ளது. 

போதைப் பொருள் கடத்தவோ அல்லது பயன்படுத்தவோ சதி நடந்ததற்கான ஆதாரம் எதையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வழங்கவில்லை. கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன், நண்பன் ஆகியோரோடு கைது செய்யப்பட்ட இன்னொரு நபருக்கும் தொடர்பு இருப்பதற்குக் கூட ஆதாரமளிக்கவில்லை.

இவற்றை விட முக்கியமாக இவர்களை மருத்துவ சோதனைக்குக் கூட உட்படுத்தவில்லை.

இதுதான் பிணை ஆணையின் பிரதான அம்சம்.

அப்படியென்றால்

ஆர்யன் கான் கைது சதிச்செயல்தானோ?

சந்தேகம் வருகிறதே!

Saturday, April 1, 2017

இந்த நகையையெல்லாம் யாரால் ????????????










இது வாட்ஸப் உபயம். துபாயில் ஒரு நகைக்கடை என்று சொல்லியிருந்தார்கள்.

இதிலே கடைசியாக இருக்கிறதே, அந்த நகையை யாரால் அணிந்து கொள்ள முடியும்? அணிந்து கொண்டால் உடல் வெந்து போகாதோ/

ஒரு வேளை உள்ளுக்குள்ளே ஒரு ஏ.சி பொறுத்தினால் அணிந்து கொள்ள முடியுமோ? இவ்வளவு பெரிய நகையை வாங்கக் கூடிய சக்தி படைத்தவர்களுக்கு ஏ.சி வாங்குவது ஒன்றும் சுமையாக இருக்காது. ஆனால் ஏ.சி யின் சுமையையும் சேர்த்து சுமக்கும் தெம்பு வேண்டும்.

சரி, இதைப்பற்றி நமக்கென்ன கவலை?

யார் வாங்குகிறார்களோ அவர்கள் படட்டும் அந்த கவலையை.