Saturday, August 15, 2020

இதெல்லாம் வட இந்தியாவில் செய் . . .

 


வட இந்தியர் நலச்சங்கம் என்ற பெயரில் நடக்கும் அராஜகம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

ஏற்கனவே பக்ரீத் அன்றைக்கு ஆடுகளை வெட்டக் கூடாது என்ற வழக்கு போட்டவர்கள் இப்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறான்கள்.

இவங்களுக்கு இறைச்சி வேண்டாமென்றால் அவர்கள் வீட்டில் சமைக்காமல் சாப்பிடாமல் இருந்து கொள்ளட்டும். அடுத்தவர்கள் உணவில் கை வைக்க இவனுங்க யாரு?

ஏற்கனவே மகாவீர் ஜெயந்தி அன்றைக்கு இறைச்சி விற்பனை கிடையாது. இந்த வருடம் மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் மாதமே முடிந்து விட்டது. இப்போது என்ன புதிதாக பண்டிகை?

வட இந்தியர் நலச்சங்கம் என்றால் அங்கே போய் என்ன எழவு வேண்டுமானாலும் கொட்டிக் கொள்ளட்டும். தமிழ்நாட்டில் வட்டிக்கு விட்டு துட்டு சம்பாதிப்பவர்கள் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் பழக்கத்தை இங்கே திணிக்கப் பார்த்தால் ராஜஸ்தானுக்கே போங்கடா என்று சொல்ல வேண்டியிருக்கும்.

இந்திய மக்களின் ஒற்றுமையை கெடுப்பது இது போன்ற கேடு கெட்டவர்களே!

No comments:

Post a Comment