Showing posts with label மருத்துவமனை. Show all posts
Showing posts with label மருத்துவமனை. Show all posts

Tuesday, January 7, 2025

நிஜத்திலும் இது போல நடந்தது.

 


மேலே உள்ள படத்தை எப்போதோ அலைபேசியில் சேமித்து வைத்திருந்தேன்.

கடந்த சனிக்கிழமையன்று சி.எம்.சி மருத்துவமனையில் சர்க்கரைக்கான அப்பாயிண்ட்மெண்ட். ஒன்பது மணி என்று நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் எல்லாம் மருத்துவரை பார்க்க வாய்ப்பே இல்லை என்பதால் சென்ற வருடத்தின் கடைசி நாளில் தமுஎகச காட்பாடி   நடத்திய புத்தகக் கண்காட்சியில் வாங்கிய வே.பிரசாந்த் எழுதிய “ஆனைமலை” நாவலை எடுத்துச் சென்றிருந்தேன்.



 முன்பெல்லாம் மருத்துவர் பார்க்க தாமதமானல் சத்தம், கூச்சல், குழப்பம் எல்லாம் இருக்கும். இப்போதோ அமைதியாக இருந்தது, ஏனென்றால் அனைவரது கையிலும் அலைபேசிகள். எல்லோரும் அதனை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தனர். நான் நாவலை படிக்க தொடங்கி விட்டே.ன்.

 ஒரு மணி நேரம் கடந்திருக்கும். ஒரு அழைப்புக்காக அலைபேசியை எடுத்து பேசி விட்டு சுற்றி முற்றி பார்த்தால் அந்த அறையில் கிட்டத்தட்ட அறுபது பேர் இருந்திருப்பார்கள். மற்ற அனைவரும் அலைபேசியில் மூழ்கியிருந்தனர். காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த சிலருக்கு அவர்களின் டோக்கன் எண்ணைக் கூப்பிட்டது கூட தெரியவில்லையென்றால் பாருங்களேன். நானும் மீண்டும் நாவலில் மூழ்கி விட்டேன்.

பிகு: நான் ஒருவழியாக மருத்துவரை பார்த்து விட்டு மருந்துகளை வாங்கிக் கொண்டு வெளியே வருகையில் மணி மூன்று. இருநூற்று நாற்பது பக்கங்கள் கொண்ட அந்த நாவலில் நான்கு பக்கங்கள் மட்டும் பாக்கி இருந்தது. மருந்தக நாற்காலியிலேயே அமர்ந்து அதனையும் படித்து முடித்து விட்டுத்தான் வீட்டுக்கு புறப்பட்டேன்.

 

Friday, October 13, 2017

ஒரு தகவலும் யோகீ சீ க்கு ஒரு கேள்வியும்

தகவல், கேள்வி இரண்டுமே படத்திலே உள்ளது.

பதிலளிக்க துப்பில்லாத காவி அனாமதேயங்கள் ஆபாச வார்த்தையில் பின்னூட்டம் இடுவார்கள் என்பது நிச்சயம்.