Thursday, August 13, 2020

மார்க்கின் மனைவி என்றாலும் முகநூல்?

 

ஊடகவியலாளரும் செயற்பாட்டாளருமான தோழர் கவின்மலர் சங்கிகளின் முருக பூஜை நாடகங்களை அம்பலப்படுத்தி எழுத ஒரு கேடு கெட்ட, தரங்கெட்ட சங்கி அவரது பதிவிலேயே அவரது படத்தில் அவரை இழிவு படுத்தும் வாசகத்தை போட்டு பின்னூட்டமிட்டுள்ளான்.

 சசிகுமார் என்ற அந்த சங்கி தன் முக நூல் பக்கத்தை இழுத்து பூட்டி யாரும் கருத்து சொல்ல முடியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறான்.


அடுத்த வீட்டுப் பெண்களை ஆபாசமாக பார்க்கும் சங்கிகள் அடிப்படையில் பலவீனமானவர்கள். வாதங்களுக்கு பதில் அளிக்க முடியாத கையாலாகாதவர்கள். அதனால்தான் அவதூறு கிளப்பி ஆறுதல் அடைகிறார்கள். சசிகுமாரின் குருமார்களான குருமூர்த்தி, எச்.ராசா, எஸ்.வி.சேகர், கரு.நாகராஜன் ஆகியோர் போட்டுக் கொடுத்த அசிங்கமான பாதையில்தான் அவன் பயணிக்கிறான். இப்படி நான் பின்னூட்டம் போட்டுள்ளேன், கருத்து சொல்லியுள்ளேன் என்று இவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களிடம் சொல்லட்டும். செருப்படி விழும். 

 அந்த கமெண்டை நீக்க வேண்டும் என்று தோழர் கவின்மலர் முகநூல் நிர்வாகத்திடம் முறையிடுகிறார்.

 அந்தப்படம் ஒன்றும் அவர்களது சமூகத் தர விதிகளுக்கு (Community Standards) முரணானது அல்ல என்பதால் அதை நீக்க மறுத்து விடுகிறார்கள். 


 அவர் மீண்டும் மேல் முறையீடு செய்கிறார்.

 அப்போதும் முக நூல் நிர்வாகம் அப்படம் ஒன்றும் தங்களின் சமூகத்தர விதிகளுக்கு (Community Standards) முரணான ஒன்று அல்ல என்றே சாதிக்கிறது.



 முக நூல் நிர்வாகத்திற்கு சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது. ஒரு பெண்ணை இழிவு படுத்தி ஒருவன் கேவலமான படம் போடுகிறான். அது உங்கள் சமூக தர விதிகளுக்கு முரணானது இல்லையென்றால் அப்படி என்னதான் உங்கள் சமூகத் தர விதி(Community Standards) ?

 சங்கிகள் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அதை கண்டுகொள்ளக் கூடாது என்று மோடி அரசாங்கம் உத்தரவு போட்டுள்ளதா?

அல்லது

முகநூலின் இந்திய நிர்வாகத்தை சங்கிகள் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்களா?

அடுத்த கேள்வியை தட்டச்சு செய்ய என் விரல்கள் கூசுகிறது. ஆனாலும் கேட்க வேண்டியுள்ளது. 

நாளை யாராவது முக நூல் நிறுவனர் மார்க் ஸூகெர்பெர்க்கின் மனைவி பிரிஸில்லாவின் படத்தைப் போட்டு ஆபாசமாக எழுதினாலும் அப்போதும் முகநூல் இது ஒன்றும் எங்கள் சமூகத்தர விதிகளுக்கு முரணானது அல்ல என்று பிடிவாதம் பிடிக்குமா?

பிகு: நாளை மார்க்கின் மனைவியையோ, ஏன் இந்த பொறுக்கி சசிகுமாரின் குடும்பத்து பெண்களையோ ஆபாசமாக யாராவது பேசினால் கூட இப்போது தோழர் கவின்மலருக்காக குரல் கொடுக்கும் அனைவரும் அந்த பெண்ணுக்கு நியாயம் கேட்க போராடுவார்கள். அதில் முன் வரிசையில் தோழர் கவின் மலரும் நிற்பார்.


No comments:

Post a Comment