Friday, August 14, 2020

13 நாளில் இ.மு பல்டி ஏன்?

 

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு இருப்பதால் இந்த வருடம் பொது இடங்களில் வினாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்வதோ, வினாயகர் சிலை மூழ்கடித்தல் ஊர்வலங்களோ அவசியமில்லை என்றும் அவரவர் வீட்டிற்குள் மஞ்சளால் பிடித்த பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டுக் கொள்ளுங்கள் என்று இந்து முன்னணி 01.08.2020 அன்று அறிக்கை விடுத்தது. 


இந்த வருடம் வினாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது என்று நேற்று தமிழக அரசு அறிவித்ததும் "தடையை மீறி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இடங்களில் வினாயகர் சிலை வைக்கப்பட்டு வினாயகர் சிலை மூழ்கடித்தல் ஊர்வலம் நடந்தே தீரும்" என்று இந்து முன்னணி நேற்று அறிவித்துள்ளது.


01.08.2020  அன்று அவர்கள் எடுத்த நிலையைத்தான் அரசும் எடுத்துள்ளது. இந்த வருடம் வினாயகர் சிலை வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்த இந்து முன்னணி அரசு அறிவித்ததும் பல்டி அடித்து அடம் பிடிப்பது ஏன்?

முருகருக்கான வேல் பூஜை காமெடியாகப் போனதால் மீண்டும் வினாயகரை வைத்து வன்முறை அரசியலை கையிலெடுக்கப் பார்க்கிறதா?

ஒரு வேளை தமிழக அரசும் சங்கிகளும் ஏதாவது கூட்டுக் களவாணித்தனம் செய்கிறார்களா என்று ஒரு சந்தேகமும் வருகிறது.

உண்மையான பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்து முன்னணி போன்ற காவிகளின் நோக்கத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். இந்த கயவர்களுக்கு வினாயகரோ, முருகனோ அல்லது பக்தர்களின் உடல் நலனோ முக்கியமில்லை. கடவுளின் பெயரால் கலவரத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அனைத்து அங்கங்களையும் புறக்கணியுங்கள்.

தகவல் உதவி : வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராம



No comments:

Post a Comment