Tuesday, May 31, 2022

சுட்டும் விழிச் சுடரே

 


சூர்யா நடித்த கஜினி படத்தின் “சுட்டும் விழிச்சுடரே” பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கை வண்ணத்தில்.

யூட்யூப் இணைப்பு இங்கே

 

ஆட்டுக்காரருக்கு ஸ்வீட்டு! அப்பாவிகளுக்கு???

 ஸ்வீட் கொடுத்து கொள்ளையா அண்ணாமலை?

 


மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும்

 

இணைய தள இணைப்பில் பிரச்சினை. அதனால் மூன்று நாட்களாக பதிவிட முடியவில்லை.  இன்றுதான் சரியானது.

 

இந்த மூன்று நாட்களில் எழுதியிருக்க வேண்டிய பல விஷயங்களை எழுத முடியவில்லை.

 

ஆட்டுக்காரர் ஊடகவியலாளர்களிடமெல்லாம் ஏலம் போட்டதெல்லாம் பழங்கஞ்சி ஆகி விட்டது. அதனால் அதை இப்போது எழுதப் போவதில்லை.

 

ஆனாலும் ஆட்டுக்காரரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் சில உண்டு.

 

திருவாச்சூர் மதுரகாளியம்மன் புனரமைப்பு என்ற பெயரில் ஐம்பது லட்சம் ரூபாய் ஆட்டைய போட்ட உங்கள் கட்சிக்காரன் கார்த்திக் கோபிநாத் உங்களுக்கு கொடுத்த இனிப்பு நன்றாக இருந்ததா?

 

எந்த திருட்டையும் ஸ்வீட் கொடுத்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் உங்களுக்கு அவன் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தானா?

 

இந்த ஊழலில் உங்கள் பங்கு எவ்வளவு ரூபாய்?

 

தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் மிகச்சரியாகத்தான் சொன்னார்.

 


ஆனால் எனக்கென்னவோ ஐ.பி.எஸ் ஆக இருந்த போது கூட காசு வாங்கிக் கொண்டு கிரிமினல்களை தப்ப விட்டிருப்பீர்கள் என்றுதான் தோன்றுகிறது.

 

 

Saturday, May 28, 2022

அற்பர்களின் முட்டாள்தன போட்டோஷாப்

 


நேற்று முன் தினம் இந்திய அளவில் #GoBackModi ட்ரெண்டிங் ஆன சமயத்தில் அதனை வரவேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 


கிட்டத்தட்ட இதே நேரத்தில் ஒரு போட்டோஷாப் பொய் ஒன்று தோழர் ஜி.ஆரை மையமாக வைத்து உலாவியது.



இதை அதிக அளவில் பரப்பியது நாம் டம்ப்ளர் வகையறாக்களும் கணிணிப் புரட்சியாளர்களும்தான். மோடிக்கு மேடையில் முதல்வர் பாடம் புகட்டும் வரை பதுங்கியிருந்த சில இணைய உபிக்களும் கூட.

மார்க்சிஸ்ட் கட்சி மீதான ஒவ்வாமையை அவ்ர்கள் அம்பலப்படுத்திக் கொண்டார்களே தவிர, தோழர் ஜி.ஆர். இப்படியெல்லாம் சொல்லியிருப்பாரா என்று கொஞ்சம் கூட சிந்திக்க முடியாத அளவுக்கு அலர்ஜி நோயால் பாதிக்கப் பட்டிருந்தார்கள்.

தோழர் ஜி.ஆரின் ட்விட்டர் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்ட பின்பு மனசாட்சியுள்ள சிலர் பதிவை நீக்கி விட்டனர். அலர்ஜி நோய் உச்சத்துக்குப் போனவர்கள் தாங்கள் பிடித்த முயலின் காலை ஒடித்து விட்டு மூன்று கால்தான் என்று சாதித்துக் கொண்டிருந்தனர்.

அற்பத்தனமாவர்கள் என்பதைத் தவிரவேறென்ன சொல்ல? 


Friday, May 27, 2022

அசிங்கமா போயிடும் அண்ணாமலை

 



 

பாஜகவின் ரௌடி அணியைச் சேர்ந்த ஒருவர் நேற்று தன் முன்னாள் ரௌடிக் கூட்டாளிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

 

பாலச்சந்திரன் என்ற நம்பர் மீது ஏழு கொலை வழக்குகள் உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளது. போலீஸின் கேடி லிஸ்டில் இருந்த அவர் பெயர், பாஜகவில் இணைந்து புனிதராக மாறிய பின்பு நீக்கப்பட்டு தன் தொழில் விரோதிகளிடமிருந்து காத்துக் கொள்ள போலீஸ் பாதுகாப்பு வேறு தரப்பட்டிருக்கிருக்கிறது.

 

பழைய டீலிங் படி தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியதற்காகவும் எதிரிகளை போலீஸில் போட்டுக் கொடுத்ததற்காகவும் அவர்கள் இந்த மனிதனை போட்டுத் தள்ளி விட்டார்கள்.

 

நடந்தது முழுக்க முழுக்க ரௌடிகளின் கேங் வார் கொலை. கொல்லப்பட்டதும் ஒரு ரௌடி.


 

இறந்தது பாஜககாரன் என்பதற்காக அவனை தியாகியாக்கினாலோ அல்லது மதச்சாயம் பூசினாலோ, கடைசியில் நீதான் அசிங்கப்படுவாய் அண்ணாமலை.

 

அதனால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

ஆட்டுக்காரரை அறுத்துடாதீங்கப்பு

 


பாவம், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி ரொம்ப கடுப்பாயிட்டார் போல. அந்த கடுப்பை ஆட்டுக்காரர் கிட்ட காண்பிச்சிட்டாரு போல. 

அதனால நேற்று ஒரே அழுவாச்சி ட்வீட்தான். டிவிக்காரங்க கிட்டயும் ஒரே புலம்பல்.



நேற்று தமிழக முதல்வர் மோடியை பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்டதற்காக தயவு செய்து ஆட்டுக்காரரை அறுத்து பிரியாணி செய்து விடாதீர்கள். அதாங்க மாநிலத் தலைவர் பதவியில இருந்து நீக்கிடாதீங்க.

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறைன்னு கேட்கறீங்களா?

அண்ணாமலை மாதிரி முட்டாள் இருந்தால்தான் போட்டு அடிக்க வசதியா இருக்கும்.

மோடி கட்சியில எல்லாருமே முட்டாள்தான்னு சொல்றீங்களா?

அதுவும் சரிதான்.

Thursday, May 26, 2022

ஆம், நான் தேச விரோதிதான்.

 



#GoBackModi என்ற ஹேஷ்டேக்கிற்குப் பின்னால் தேச விரோதிகள் இருப்பதாக தேர்தலில் தோற்றுப் போனாலும் அமைச்சரான, வீட்டின் பின்புறம் தட்டு முட்டு சாமான்கள் உள்ள இடத்தில் அமரவைக்கப்பட்டாலும் பெருமையோடு விஜயேந்திர சரஸ்வதி முன்பாக கை கட்டி அமர்ந்த எல்.முருகன் சொல்கிறார்.



அவர் கூற்றின்படி முக நூலிலும் ட்விட்டரிலும் நான்கு பதிவுகளை (நேரமில்லாத காரணத்தால் அதற்கு மேல் முடியவில்லை) #GoBackModi என்ற ஹேஷ்டேகோடு பதிவு செய்த நானும் தேச விரோதிதான்.

ஆம். நான் தேச விரோதிதான்.

மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்துவதுதான் இந்த தேசமென்றால்,

மதத்தின் பெயரால், மாட்டுக்கறியின் பெயரால் கொலைகள் செய்வதுதான் இந்த தேசமென்றால்

பிற மதங்களின் வழிபாட்டுத் தளங்களை கிரிமினல்தனமாக கைப்பற்றுவதுதான் இந்த தேசமென்றால்,

இந்திய மக்களின் உழைப்பால் உருவான பொதுத்துறை நிறுவனங்களை பெரும் செல்வந்தர்களுக்கு விற்பதுதான் இந்த தேசமென்றால்,

இந்தியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதுதான் இந்திய தேசமென்றால்,

பன்முகத்தன்மையை சிதைத்து ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரத்தை திணிப்பதுதான் இந்த தேசமென்றால்

அரசியல் சாசனத்தை, அதன் விழுமியங்களை அழிப்பதுதான் இந்த தேசமென்றால்,

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழிப்பதுதான் இந்த தேசமென்றால்,

நீதிமன்றம், சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் போன்ற சுயேட்சையான அமைப்புக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதுதான் இந்த தேசமென்றால்

மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத, அவர்களிடமிருந்து பறித்து அம்பானி, அதானிகளின் செல்வத்தைப் பெருக்குவதுதான் இந்த  தேசமென்றால்,

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் வீழ்ந்து கிடப்பதுதான் இந்த தேசமென்றால்

பொய்களை மட்டுமே பேசுபவர்களை ஆட்சியாளராகக் கொண்டது இந்த தேசமென்றால்,

இது என் தேசமல்ல,

காந்தி கனவு கண்ட தேசமல்ல,

உழைப்பாளி மக்களின் தேசமல்ல,

மக்கள் ஒற்றுமையை விரும்புபவர்களின் தேசமல்ல,

இது மோடியின் தேசம், ஆர்.எஸ்.எஸ் ஸின் தேசம். தரகர்களின் தேசம், போலிச்சாமியார்களின் தேசம்.

இப்படிப்பட்ட மோடியின் தேசத்திற்கு நாங்கள் விரோதிகள்தான்.

 அதனால்தான் தேசத்தை நாசமாக்கிய மோடி என்ற நபர் இங்கே வரும் போதெல்லாம் #GoBackModi என்று எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.

 அதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?

 இந்திய நாடு

 பன்முகத்தன்மையுள்ள, எந்த மதத்தையும் பின்பற்றுகிற, பின்பற்ற மறுக்கிற, மக்களின் சொத்துக்கள் மக்களுக்கே உடையதாய் அமைய, செல்வந்தர் சார் அரசாக இல்லாமல் மக்கள் நல அரசாக திகழ, இறையாண்மை கொண்ட நாடாக இந்தியா தொடர, அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட்ட நாடாக, அரசியல் சாசன அமைப்புக்கள் யாருடைய ஏவலாட்களாக இல்லாமல் சுதந்திரமாக செயல்படும் நாடாக

 மாற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

 அதற்கு தடையாக இருக்கிற சங்கி கும்பலின் அடையாளமாக இருக்கிற மோடிக்கு எப்போதும் சொல்வோம்.

 #GoBackModi.

 இதற்கான உரிமை எங்களுக்குத்தான் உண்டு.

 ஏனென்றால் நாங்கள்தான்

உண்மையான தேச பக்தர்கள்.

எங்களைப் பழிக்கும் நீங்கள்தான் நிஜமான தேச விரோதிகள் மிஸ்டர் முருகன்.

பின் குறிப்பு: முருகன் சொன்னது போன வருடம்தான். ஆனால் சங்கிகள் இன்றைக்கு அதனை மீண்டும் சுற்றில் விட்டதால்தான் இந்த பதிவு.

 #GoBackModi.

Wednesday, May 25, 2022

உலகத்திலேயே பயங்கரமான ??????

 பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக்கியமான பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.


உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாத நாடு எதுவென்று கேட்டால் நாம் எதையெதையோ யோசிப்போம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அது அமெரிக்காவைத் தவிர வேறில்லை.

அதற்கு மிகமுக்கியமான காரணம் என்னவென்றால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்லவேண்டும் என்றால், காவல்துறையினரும் துப்பாக்கியைக் கையில் எடுக்கலாம், காவல்துறையில் இல்லாத மக்களில் ஒருவரும் துப்பாக்கியைத் தூக்கலாம்.

ஆக கைது, விசாரணை, வழக்கு, நீதிமன்றம், தீர்ப்பு, நீதி, நியாயம் எதுவுமே தேவைப்படாமல் அதிகாரம் படைத்த எவரும் துப்பாக்கியை எடுத்து அவரவருக்கான (அ)நியாயத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
அமெரிக்காவின் மக்கள் தொகை தோராயமாக 33 கோடி. அதேவேளையில் அமெரிக்காவில் இருக்கும் ஒட்டுமொத்த துப்பாக்கிகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா? ஏறத்தாழ 40 கோடி. காவல்துறையினரும் இராணுவத்தினரும் வைத்திருக்கும் துப்பாக்கிகளை இதில் கணக்கில் சேர்க்கவில்லை. ஆக, 33 கோடி மக்களின் கைகளில் 40 கோடி துப்பாக்கிகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்திய சூழலில் வைத்து இதனை யோசித்தால் அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? நம்முடைய பெரும்பாலானோரின் வாழ்க்கை முழுவதிலும் நாம் ஒரேயொரு துப்பாக்கியைக் கூட தொட்டுப்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் இத்தனை கோடி துப்பாக்கிகள் மக்களின் வீடுகளில் சர்வசாதாரணமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

அதனால் தான் ஒரு வீட்டுத் தோட்டத்திலிருந்து ஒரு செடி வளர்ந்து பக்கத்துவீட்டில் நுழைந்துவிட்டால் கூட கோபப்பட்டு துப்பாக்கி எடுத்து சுட்டுத்தள்ளும் நிகழ்வெல்லாம் நடக்கிறது அமெரிக்காவில். தங்கள் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளை வைத்தே தங்களுக்குத் தேவையான தீர்வுகளைக் கண்டடைந்துகொள்வதுமாக அவர்கள் நினைக்கிறார்கள்.

கடந்தகாலங்களில் கருப்பின மக்களை அடிமைகளாக வைத்திருந்து வேலை வாங்கிய வெள்ளையின அமெரிக்கர்களின் கைகளில் எப்போதும் துப்பாக்கிகள் இருந்தன. கருப்பின மக்கள் தப்பித்து ஓடிவிடக்கூடாது என்பதற்காகவும், அப்படியே ஓடமுயற்சி செய்தால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதற்காகவும், அதையும் மீறி ஓடினால் அவர்களை சுட்டுவீழ்த்துவதற்காகவும் துப்பாக்கிகளை வெள்ளையின ஆதிக்கவெறியர்கள் வைத்திருந்தனர். அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டபின்னரும், சுதந்திரமாக சுற்றும் கருப்பின மக்கள் எப்போது வேண்டுமென்றாலும் தங்களைத் தாக்கலாம் என்று நம்பி, ஏற்கனவே வைத்திருந்த துப்பாக்கிகளை கீழேபோடாமல் தொடர்ச்சியாக அவற்றை வைத்துக்கொண்டனர் வெள்ளையின அமெரிக்கர்கள். அதனால் தான் க்ளூ க்ளக்ஸ் க்ளான் போன்ற வெள்ளையின வெறி அமைப்புகள் ஏராளமான துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு கண்ணில்படுகிற கருப்பின மக்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.

ஆனால் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் இன்றைய ஜனநாயக உலகிலும் கூட யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்பதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது தானே. ஆனால் அமெரிக்காவுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதால் துப்பாக்கிக் கலாச்சாரம் இன்றும் தொடர்கிறது.

அதிலும், மாஸ் ஷூட்டிங் என்றழைக்கப்படுகிற துப்பாக்கிச்சூடுகள் மிகப்பிரபலமாகி இருக்கின்றன. அதென்ன மாஸ் ஷூட்டிங்? மக்களில் ஒருவரோ ஒரு குழுவோ இணைந்து துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு நான்கிற்கும் மேற்பட்ட மக்களைச் சுட்டால் அதற்கு மாஸ் ஷூட்டிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதே மாஸ் ஷூட்டிங்கை ஒரு பள்ளிக்கூடத்தில் போய் நடத்தினால் அதற்கு "ஸ்கூல் ஷூட்டிங்" என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். குற்றத்தைத் தடுக்கிறார்களோ இல்லையோ, பேரெல்லாம் நன்றாக வைக்கிறார்கள்.

2021 இல் மட்டும் 45000 பேர் அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் ஒன்றுகூட காவல்துறையினரோ இராணுவத்தினரோ சுட்டுக்கொல்லப்பதல்ல. அந்த புள்ளிவிவரம் தனிக்கதை. அதே 2021 இல் எத்தனை துப்பாக்கிகள் விற்பனையாகி இருக்கின்றன தெரியுமா? 2 கோடி துப்பாக்கிகள். ஆக ஒவ்வொரு ஆண்டும் அதிகமான துப்பாக்கிகள் விற்பனையாவதும், ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு சாவதும் தான் நடக்கிறது. துப்பாக்கி வியாபாரிகள் பலனடைவதும், துப்பாக்கி முனையில் தொடர்ச்சியாக அடிமைத்தனம் நிலைநிறுத்தப்படுவதும் தான் அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரத்தின் மையப்புள்ளி.

நமக்கெல்லாம் ஐஎஸ்ஐஎஸ் பற்றி தான் தெரியும். ஆனால் வெள்ளையின பயங்கரவாத அமைப்புகள் அதைவிடவும் மோசமான பயங்கரவாதிகள் என்பதை நமக்கு சொல்லாமல் உலக ஊடகங்கள் தவிர்க்கின்றன. அமெரிக்காவில் அவ்வப்போது நடக்கிற மாஸ் ஷூட்டிங் பலவற்றையும் இந்த வெள்ளையின வெறியர்கள் தான் நடத்துகின்றனர். கடந்த மாதம் அமெரிக்காவின் பஃபலோ நகரின் சூப்பர்மார்க்கட் ஒன்றில் நுழைந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை நடத்தியதும் அதே வெள்ளையின வெறியர்கள் தான். அதேபோல கடந்த ஆண்டும் அமெரிக்க மசூதிகளில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவின் கருப்பின மக்களுக்கென்றே பிரத்யேகமாக இயங்கும் தேவாலயங்களில் கூட புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள் வெள்ளையின வெறிக்கூட்டத்தினர். அவர்களைப் பொறுத்தவரையில் ஜீசஸும் தேவாலயங்களும் அமெரிக்காவும் முழுமையாக வெள்ளையினத்தவருக்கு மட்டும் தான் சொந்தமாம்.

இப்படியாக சராசரியாக ஆண்டுக்கு 45000 பேர் கொல்லப்படுவதில் 60% த்திற்கும் மேற்பட்டோர் கருப்பின மக்கள் தான். அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் வெறுமனே 13% மக்களாக இருக்கிற கருப்பினத்தவர்கள் தான் ஒட்டுமொத்த துப்பாக்கிச்சூட்டில் 60% கொல்லப்படுகிறார்கள்.

இது போதாதென்று, அமெரிக்க வாழ்க்கையினால் மன அழுத்தம் பெற்றவர்கள், தனிநபர் பிரச்சனையில் இருப்பவர்கள், வாழ்க்கையே வெறுத்துப்போனவர்கள், தோல்விகளை சந்திப்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் துப்பாக்கி தான்.

அப்படியாக நேற்று டெக்சாசில் ஒரு 18 வயது இளைஞன் துப்பாக்கியை எடுத்து, தன் பாட்டியை சுட்டுவீழ்த்திவிட்டு, அப்படியே கார் போன போக்கில் சென்று ஒரு பள்ளியில் நிறத்த, உள்ளே நுழைந்து 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றுபோட்டிருக்கிறான். அமெரிக்க காவல்துறை இப்படியான எல்லா நிகழ்வுகளிலும் செய்வதென்ன தெரியுமா? சம்பவ இடத்திலேயே கொலைகாரர்களைக் கொன்றுவிடுவது தான். ஆக துப்பாக்கியால் துவங்குவதை துப்பாக்கியால் அன்றே முடித்துவிடுவார்கள். மீண்டும் அடுத்த துப்பாக்கிச் சூடு வேறொரு ஊரில் நடக்கும். மீண்டும் இதே கதை தான்.

துப்பாக்கிகளை முழுவதுமாகப் பறித்து, அன்பை விதைப்பது தான் இதற்கெல்லாம் தீர்வு என்று அமெரிக்க அரசுக்கு யார் எடுத்துச் சொல்வது? உலகம் முழுக்க ஆயுதத்தைத் தூக்கிச்சென்று ஏமனிலும், சிரியாவிலும், ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும், தென்னமெரிக்காவிலும் அனுதினமும் கோடிக்கணக்கான மக்களைக் கொன்று போட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்க அரசிடம் துப்பாக்கிகளைக் குறைக்கச் சொல்லி எப்படிப் பாடமெடுப்பது?

அதனால் தான் சொல்கிறேன். உலகின் மிகமோசமான பயங்கரவாத ஆட்சி நடப்பது அமெரிக்காவில் தான். அதனை சரிசெய்வதற்கு மக்களில் இருந்து தான் ஒரு புதிய அரசியல் மாற்றம் வந்தாகவேண்டும். இல்லையேல் அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல் உலக மக்களும் அவர்களின் ஆயுதங்களுக்கு தொடர்ச்சியாக பலியாகிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

பொய் சொன்னால்தான் மோடி மந்திரி

 மோடியின் அமைச்சரவையில் இடம் பெற பொய்யனாய் இருக்க வேண்டியதுதான் முதல் தகுதி போல.

 


*நாளொரு கேள்வி: 24.05.2022*

 

தொடர் எண்: *723*

 

இன்று நம்மோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் *சு.வெங்கடேசன்

#######################

 

*முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா?*

 

கேள்வி: ரயில்வே துறையில் தனியார் மயம் இருக்காது என அத்துறை அமைச்சர் கூறி இருக்கிறாரே?

 

*சு. வெங்கடேசன்*

 

சென்னை வருகை தந்த

அமைச்சர்  ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அறிவித்திருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுஆகும்

 

*தேசிய ரயில் திட்டம்* என்ற ஒன்றை இந்திய ரயில்வே  அறிவித்திருக்கிறது. வெளியிட்டிருக்கிறது. இதனை நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். அந்தத் திட்டத்தில் கூறப்பட்டு இருப்பது என்ன?

 

* 2031 க்குள் அனைத்து சரக்கு ரயில்களும் தனியார்மயம் ஆகிவிடும்

 

* இந்திய ரயில்வே வேகன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது

 

* அதேபோல லாபம் வரக்கூடிய குளிர்சாதன இருக்கை மற்றும் 3 அடுக்குபடுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மட்டும் கொண்ட விரைவு வண்டிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்

 

இப்படி அந்த  திட்டத்தில் கூறப்பட்டுள்ளதா இல்லையா?  

 

*லாபம் வரும் வண்டிகள் அனைத்தும் தனியாருக்கு. இழப்பு ஏற்படும் வண்டிகள் மட்டும் அரசுக்கு* என்ற கொள்கையை அறிவித்துவிட்டு ரயில்வேயில் தனியார்மயம் இல்லை என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இல்லாமல் வேற என்ன

 

அனைத்து வண்டிகளும் தனியார்மயமானால்

*பயணக் கட்டணம் உயரும். பயணிகள் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் ரயில்வேயின் நிரந்தர வேலை வாய்ப்புகள் பறிமுதலாகும் .சமூக நீதி பாதிக்கப்படும்.* 

பொதுமக்கள் கட்டுப்படியான ரயில் பயண வசதி இன்றி பாதிக்கப்படுவார்கள்

 

*செவ்வானம்*