Sunday, August 30, 2020

நிர்மலா அம்மையாரின் நிதி பாசிஸம்




 இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த இணைய வழி கருத்தரங்கம் ஒன்றில் எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் டி.செந்தில் குமார், "நிதி பாசிஸம்" என்ற புதிய சொற்றொடரை பயன்படுத்தினார்.

அதற்கான உதாரணத்தை நிர்மலா அம்மையார் கொடுத்து விட்டார். 

ஆம்.

ஜி.எஸ்.டி மூலம் எல்லா பணமும் மத்தியரசுக்கு செல்கிறது. மாநிலங்களுக்கு மத்தியரசு இழப்பீடு தர வேண்டும். அப்படி மத்தியரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய இழப்பீடு 2.35,000 கோடி ரூபாய்.

அதை மாநிலங்களுக்கு தர முடியாது என்றும் இரண்டு ஆப்ஷன் கொடுத்துள்ளார் அம்மையார்.

மாநிலங்கள் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்குப் பதிலாக ரிசர்வ் வங்கியிலிருந்து 97,000 கோடி (அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து) குறைந்த வட்டியில் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

அல்லது

2,35,000 கோடி ரூபாயையும் ரிசர்வ் வங்கி மூலமாக கூடுதல் வட்டிக்கு வெளிச்சந்தையிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த முன்மொழிவுகளை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாநிலங்களுக்கு விதிகள் படி சேர வேண்டிய தொகையை அளிக்காமல் மத்தியரசு ஏமாற்றி விட்டு, கடனாக மாநிலங்கள் தலையில் சுமையை ஏற்றுவதை ஏற்க முடியாது. மத்தியரசு வேண்டுமானால் கடன் வாங்கி மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி தொகையை பட்டுவாடா செய்யட்டும் என்று கேரள அமைச்சர் தோழர் தாமஸ் ஐசக் சரியாகவே சொல்லியுள்ளார்.

ஆமாம்.

ஏன் மத்தியரசால் மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தர முடியவில்லை.

அதெல்லாம் ஏற்கனவே அதானி, அம்பானிக்கு வாரி விட்டாச்சு. அப்போதானே அவர்கள் சுருட்டிக் கொண்டது போக மீதமுள்ள தொகையை பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக திருப்பித் தருவார்கள்!

No comments:

Post a Comment