Wednesday, August 26, 2020

பிரஷாந்த் பூஷண் பாஜகவில் இணைந்தால்?

  


மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தோழர் இக்கேள்வியை எழுப்பியிருந்தார்.

 இது ஒரு கற்பனாவாத கேள்வி என்பதையும் தெளிவு படுத்தியிருந்தார்.

 அவருக்கு வந்த பின்னூட்டங்கள்  சுவாரஸ்யமாக இருந்தது.

 அவற்றை  பகிர்ந்து கோள்கிறேன்

 சாவர்க்கர் பாணியில் அவர் மன்னிப்பு கேட்பார்.

நீதிமன்றம் அவரிடம் மன்னிப்பு கேட்கும்.

அவர் திடீரென்று தேச பக்தர் என அழைக்கப்படுவார்.

நீதி காக்க வந்த காவலர் என்று மோடி அவரை புகழ்வார்.

உச்ச நீதிமன்றமே அவர் வழக்கை மூடி விடும்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கி விடுவார்கள்.

சோனியாவை கண்டித்து அவர் போட்டிருந்த பழைய ட்வீட்டுகளை அகழ்வாராய்ச்சி செய்து கண்டு பிடிப்பார்கள்.

 இன்னொன்றை நான் சொல்ல விரும்புகிறேன்.

 2011 ல் அவரை தாக்கியவர்களுக்கு இப்போது தண்டனை கிடைக்கும்.

 வாட்ஸப்பில் நேற்று முதல் அந்த பழைய காணொளி வேகமாக சுற்றிக் கொண்டு இருக்கிறது. விளக்கம் கொடுத்து “முடியல”

 

No comments:

Post a Comment