Wednesday, August 19, 2020

ஜெயமோகனுக்கு ஒரு பாட்டு டெடிகேட் . . .

 துப்பினா துடைச்சுக்குவார் ஜெயமோகன்


 கோவை ஞானிக்கு அஞ்சலி என்ற பெயரில் ஜெயமோகன் நடத்தி வருகிற அவதூறுப் பிரச்சாரத்தில் அவர் லேட்டஸ்ட்டாக விஷத்தை கக்கியது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மீது.

 அது தொடர்பாக எஸ்.ரா ஆற்றிய எதிர்வினை கீழே . . .

 எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து

 ஜெயமோகனின் அவதூறு

 ஜெயமோகன் தனது இணையதளத்தில் இன்று என்னைப் பற்றி ஒரு அவதூறு எழுதியிருக்கிறார். வழக்கமாக இது போன்ற அவதூறுகள் எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது நான் பெரிதும் மதிக்கும் கோவை ஞானியின் பெயரில் வந்துள்ள பொய்

 ஜெயமோகனின் இந்த அவதூறு எப்போதும் போல இறந்தவரின் வாக்குமூலமாக ஒலிக்கிறது.

 விஷ்ணுபுரம் நூல் விழாவில் நான் பேசியது உண்மை. புத்தகம் படிக்காமலே நான் பேசினேன் என்பது அவரது கற்பனை. தன்னை விமர்சனம் செய்தவர்கள் மீது இது போன்று சேற்றை வாறி இறைப்பது அவரது வழக்கம் .

 விழாவில் கோவை ஞானியுடன் விஷ்ணுபுரம் நூல் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. சுந்தர ராமசாமியுடன் மட்டுமே பேசினேன். அவரும் எந்த மறுப்பையும் சொல்லவில்லை

 ஞானியை அதன்பிறகு பலமுறை கோவையில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒருமுறையும் அவர் மறுத்தோ, கண்டித்தோ ஒரு வார்த்தை சொன்னது கிடையாது.

 காலச்சுவடு அப்படி என்னிடம் பேச்சின் உரையைக் கேட்கவேயில்லை. இதுவும் ஜெயமோகனின் கற்பனையே.

 அவரால் எவர் மீதும் சேற்றை வாறி அடிக்க முடியும்அது ஒருவகை உளவியல் சிக்கல். சக எழுத்தாளர்கள் மீது அவர் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை உலகம் அறியும்.

 என் தந்தையைப் பற்றி  ஒரு மோசமான குறிப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கேலி என்ற பெயரில் தனது இணையதளத்தில் எழுதினார் அது என் குடும்பத்தை மிகவும் வருத்தமடைய செய்தது. எழுத்தாளின் தந்தை தாய் மனைவி என எவரையும் இழிவுபடுத்த ஜெயமோகன் தயங்கியதேயில்லை.

 இன்று என் மீதும் பொய்களை வாறி இறைக்கிறார்சதா தன்னைப் பற்றி பிறர் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பது ஒரு கொடிய நோய்.

 இந்த நோய் முற்றிய நிலையில் இருக்கிறார் ஜெயமோகன்.

 என்ன தான் ஜெயமோகன் வேண்டும் உங்களுக்கு.

 ஏன் இப்படிக் கேவலமாக நடந்து கொள்கிறீர்கள்.

 குடும்பத்தில் ஏற்பட்ட இறப்பு ஒன்றின் துக்கத்தில் இருக்கிறேன்.

 உங்களுடன் வெட்டிவிவாதம் செய்ய விரும்பவில்லை.

 என் மீதான அவதூறு மற்றும் எனது புகைப்படத்தை உடனடியாக இணையதளத்திலிருந்து நீக்கவும்.

 இதற்குப் பிறகு புமா, தன் முந்தைய பதிவிலிருந்து சில பகுதிகளையும் எஸ்.ராமகிருஷ்ணனின் புகைப்படத்தையும் நீக்கி விட்டார். கீழே விழுந்தாலும்  இல்லாத மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல ஒரு விளக்கெண்ணெய் விளக்கத்தையும் கொடுத்தார்.

 அன்புள்ள ராமகிருஷ்ணன்


விஷ்ணுபுரம் வெளிவந்தபோது நீங்கள் பேசியதும் அதற்கு வந்த எதிர்வினையும் உங்கள் பேச்சின் ஒருவடிவம்  காலச்சுவடில் வந்ததும் உண்மை. நான் அப்போதும் காலச்சுவடுடன் தொடர்பிலேயே இருந்தேன்.அங்கிருந்த பிறநண்பர்கள் என்னிடம் சொன்னதையே நான் எழுதினேன். ஞானியும் பின்னர் பேசியிருக்கிறார்.

இன்று அவற்றை நீங்கள் மறுப்பீர்கள் என்றால் நான் அதை நேரடியாக பார்க்காமையால் வலியுறுத்தமுடியாது. இது தனிப்பட்ட விஷயமல்ல. ஒருகாலகட்டத்தின் இலக்கிய வரலாற்று உண்மை. ஆனால் உங்கள் மனம் வருத்தப்படுகிறது என்றால் நீக்கிவிடுகிறேன்.

உங்களை அவமதிக்கவோ துன்புறுத்தவோ நான் என்றும் நினைத்ததில்லை. உங்களையோ உங்கள் சுற்றத்தையோ எப்போதும் எதுவும் சொன்னதுமில்லை

ஜெ

அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை.

 வைரமுத்து விவகாரத்தில் அடித்த பல்டி போல இப்போதும் அதே உத்தியை கையாண்டு விட்டார்.

 எஸ்.ராமகிருஷ்ணனைப் பாராட்டி நான் என்னவெல்லாம் எழுதியுள்ளேன் தெரியுமா என்று பழைய பதிவுகளின் இணைப்புக்களையெல்லாம் கொடுக்க தொடங்கி விட்டார்.


 “அந்த உளறுவாயனை ஏன் மன நோயாளி என்கிறீர்கள்? எந்த மன நோயாளியும் தன்னெஞ்சறிய பொய் சொல்வதில்லை, வன்மம் கக்குவதில்லை”

 என்று தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா மிகவும் சரியாகவே கேட்டுள்ளார்.

 ஆம்,

 ஜெமோ போல அறமற்ற செய்கைகளை எந்த மன நோயாளியும் செய்ய மாட்டார்கள், பின்பு பல்டி அடிக்க  மாட்டார்கள்.

 சமீபத்தில் ஒரு திரைப்படத்தில்  நாஞ்சில் சம்பத் “துப்பினா துடைச்சுக்குவேன்” என்பார்.

 ஜெயமோகன் அந்த மாதிரி துப்பினா துடைச்சிக்கிட்டு அடுத்து யாரை வம்பிழுக்கலாம் என்று அலைகிற கேரக்டர்.  

 பிகு: மேலே உள்ள படமே அந்த படத்தில் வரும் “துப்பினா துடைச்சிக்குவேன்” என்ற பாட்டில் வரும் காட்சிதான்.

 ஏதாவது சேனலில் அந்த பாட்டை ஜெயமோகனுக்கு டெடிகேட் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment