காஷ்மீரில்
வாக்குப் பதிவு 28 % லிருந்து 34 % ஆக உயர்ந்திருப்பது அங்கே அரசியல் சாசனப் பிரிவு
370 நீக்கப்பட்டதற்கு கிடைத்த அங்கீகாரம் என்று பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில்
இளைய கூட்டாளியான அமித்ஷா கூறியுள்ளார்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
காஷ்மீரில்
வாக்குப் பதிவு 28 % லிருந்து 34 % ஆக உயர்ந்திருப்பது அங்கே அரசியல் சாசனப் பிரிவு
370 நீக்கப்பட்டதற்கு கிடைத்த அங்கீகாரம் என்று பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில்
இளைய கூட்டாளியான அமித்ஷா கூறியுள்ளார்.
இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட்டார்.
ஹெலிகாப்டர் விபத்து என்ற செய்தி கிடைத்த போது அவர் நலமுடன் திரும்ப வாய்ப்பு குறைவு என்றே நினைத்தேன். ராஜசேகர் ரெட்டி, பிபின் ராவத் ஆகியோர் கண் முன்னே வந்து போனார்கள்.
நடந்தது விபத்துதானா?
அவர் மீது இரண்டு நாடுகளுக்கு கோபம் உண்டு.
அமெரிக்கா நிரந்தர பகை நாடு. போதாக்குறைக்கு உக்ரைன் மண்ணிலிருந்து ரஷ்யா மீது அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் போரில் அவர் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்துள்ளார். ஆயுதங்கள் வேறு அனுப்பியுள்ளார். அணுசக்தி சோதனையும் முடியும் தருவாயில் உள்ளது. இரானுடன் உறவு கொண்டு ஒரு ஒப்பந்தத்தை நிறைவு செய்தமைக்கு இந்தியாவை வேறு அமெரிக்கா மிரட்டியுள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது அராஜகத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் மீது சில நாட்கள் முன்பாகத்தான் இரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
மூன்று ஹெலிகாப்டர்கள் சென்றுள்ள போது இவர் சென்ற ஹெலிகாப்டர் மட்டும் விபத்துக்குள்ளானது அது சதியோ என்ற சந்தேகத்தை தருகிறது.
இஸ்ரேலா? அமெரிக்காவா? அல்லது இருவரும் இணைந்தா?
பதில் கிடைக்காத மர்ம மரணங்களில் ஒன்று கூடுகிறது என்பதுதான் உண்மை.
இன்றைய ஆங்கில இந்து நாளிதழ் செய்தி கீழே.
மத ரீதியில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஹூமாயுன் கபீர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஓகே.
சபாஷ்.
பாராட்டுக்கள்.
பட்,
இதையெல்லாம் அன்றாடம் மத வெறியை தூண்டி விஷத்தை கக்கி எழவு கொட்டிக்கொண்டிருக்கும் மோடி மீதும் நடவடிக்கை எடுத்தால்தான் பொருந்தும்.
அது எப்போது (விலைக்கு வாங்கப்பட்ட( தேர்தல் ஆணையர்களே?
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிணை கொடுத்ததை விமர்சித்துள்ளார் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளியான அமித்ஷா.
என்னவென்று தெரியுமா?
கேஜ்ரிவாலுக்கு மட்டும் சிறப்புச் சலுகை கொடுத்துள்ளார்கள் (Special Treatment) .தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கெல்லாம் பிணை கொடுப்பது என்பது ரொம்ப ஓவர். நீதிபதிகள் அவருக்கு பிணை கொடுத்தது இதுவரை நீதித்துறையில் காணாத ஒன்று.
நீதிபதிகளின் தீர்ப்பிற்கு உள்ளர்த்தம் கற்பிப்பது நீதிமன்ற அவமதிப்பில் வராதா ஜட்ஜய்யாக்களே?
கொஞ்சம் சுமோட்டாவாக அமித்ஷாவை கவனியுங்களேன்.
நேற்று முகநூலில் ஒரு தோழர் தன்னுடைய ஞாபக மறதி அனுபவங்களை ஞாபகமாக பகிர்ந்து கொண்டிருந்தார். அதைப் படித்ததும் ஞாபக மறதியின் விளைவால் நடந்த ஒரு நிகழ்வு ஞாபகத்துக்கு வந்து விட்டது.
நான் நெய்வேலியில் பணியில் சேர்ந்த காலம். ஒரு சக ஊழியர் டீக்கடைக்குச் செல்ல என்னுடைய சைக்கிளை வாங்கிச் சென்றார். டீ குடித்து விட்டு வந்து சைக்கிள் சாவியை ஞாபகமாக கொடுத்து விட்டே அவரது இருக்கைக்குச் சென்றார்.
மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்ப வாசலுக்கு வந்தால் சைக்கிளைக் காணவில்லை. அலுவலகத்தின் நான்கு புறங்களைத் தேடியும் கிடைக்கவில்லை.
போலீசில் புகார் கொடுக்கலாம், கொடுத்தால் பயனிருக்காது, சைக்கிள் அட்வாஸ் போட்டு புதிய சைக்கிள் வாங்கலாம் என்று ஆலோசனை மழையில் நனைந்து கொண்டிருந்தேன்.
அப்போது வெளியிலிருந்து உள்ளே நுழைந்த இன்னொரு ஊழியர், "ஜி.ஹெச் எதிரில் உள்ள டீக்கடையில் உன் சைக்கிள் உள்ளது" என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். அவசரம் அவசரமாக போய் சைக்கிளை எடுத்துக் கொண்டேன்.
சைக்கிளில் டீக்கடைக்குச் சென்றவர் அதை மறந்து நடந்து திரும்பி வந்தவர், சாவியை மட்டும் ஞாபகமாக கொடுத்து விட்டார்.
என்னுடைய வரமும் சாபமும் ஞாபக சக்திதான்.
ஒரு தொழிற்ச்சங்கப் பொறுப்பாளராக ஞாபக சக்தி மிகப் பெரிய வரம். அதுவும் மாறுதல்கள் போன்றவை எந்தெந்த காலத்தில் எந்த சூழலில் நடந்தது என்பதெல்லாம் நினைவுகளின் அடுக்கில் இருப்பது எப்போதுமே ஊழியர்களுக்கு பலன்களை பெற்றுத்தர உதவிகரமாக இருக்கும். சங்கத்தின் வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் உதவும்.
சமீபத்தில் இரண்டு நூல்களை கொண்டு வந்தோம். ஐம்பதாண்டுகள் முன்பு நடந்த லாக் அவுட் போராட்டம் குறித்து ஒரு நூல், எங்கள் கோட்டத்து மகளிர் இயக்க நடவடிக்கைகள் குறித்து இன்னொரு நூல். இரண்டு நூல்களை தொகுக்கவும் ஞாபக சக்திதான் கை கொடுத்தது.
அந்த வகையில் ஞாபக சக்தி வரமே . . .
அதே நேரம் சில நிகழ்வுகள் நினைவில் நிற்பது சாபமே. அது பிரச்சினையில்லை. நாகரீகம் கருதி போலித்தனங்களை பேச முடியாது வாயை மூடிக்கொண்டிருக்கும் சூழல்தான் சாபம்.
நான் சிலவற்றை, சிலரை மன்னித்து விடுவேன். ஆனால் எந்நாளும் மறக்க மாட்டேன்.
பதவி மோகத்தில் பொய் பேசி மத வெறியை கிளப்பும் மோடியை அரசியல் அரங்கத்திலிருந்து துரத்தியடிக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு பேச்சு போதும்.
இந்திய மக்களே, பொய்யனை நம்பால் உண்மையின் பக்கம் நில்லுங்கள். மோடிக்கு விழும் அடி பதவி மோகத்தில் பொய்களை பேசி பிரிவினையை தூண்டும் அனைத்து அயோக்கியர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும். இவர்களுக்கு முட்டு கொடுப்பவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.
இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கொடுத்து விட்டு பாலஸ்தீன நகர் ராஃபாவில் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த ஐ.நா.சபை வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அதிலே பலர் இறந்து போயுள்ளனர். இந்திய ராணுவ அதிகாரியாக இருந்து ஐ.நா பாதுகாப்புப் படையில் இணைந்த அனில் காலே என்ற இந்திய குடிமகனும் கொல்லப்படவர்களில் ஒருவர்.
ஐ.நா மீது நடத்தப்பட்ட தாக்குதலையோ அதிலே இந்தியர் கொல்லப் பட்டதையோ கண்டித்தோ
இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தோ
இந்தியப் பிரதமரோ புத்திசாலி மந்திரி என்று முட்டாள் சங்கிகள் அளந்து கொண்டிருக்கிற ஜெய்சங்கரோ வாய் திறக்கவே இல்லை.
"எங்க உதவியோடதான் எதிர்க்கட்சி தலைவர்களை, ஊடகவியலாளர்களை உளவு பார்த்தாய், ஏதாவது பேசினால் நடப்பதே வேறு. கொயட்டா இருக்கனும்"
என்று இஸ்ரேல் அந்த 56 இஞ்ச் மாகோழையை (மாவீரனுக்கு எதிர்ப்பதம் மாகோழை. இதை நான்தான் கண்டுபிடித்தேன் என்று ஜெயமோகன் மாதிரி உரிமை கொண்டாட மாட்டேன்) மிரட்டி விட்டது போல.
அதனால்தான் அனைவரும் கொயட்டா இருக்காங்க . . .
இன்று நான் பார்த்து ரசித்த மீம் நீங்களும் ரசித்து சிரிக்க . . .
பிரதமர் வேலையைத் தவிர மற்ற வெட்டி வேலைகளைப் பார்த்தால் மோடி அசிங்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பிகு: சங்கிகளின் வன்மத்திலிருந்து பாதுகாக்க ஒரிஜினலாக எழுதியவர் பெயரை நான் மறைத்து விட்டேன்.
சியல்லோ கார்களை எல்லாம் பள்ளத்தாக்கில் கவிழ்த்து அழிப்பதுதான் பிரம்மாண்டம் என்று நினைத்து கே.டி.குஞ்சுமோனை கடனாளியாக்கி திரை உலகத்திலிருந்து துரத்திய பிரவீண் காந்த் என்ற இயக்குனர் பேசிய ஒரு காணொளியையும் கவுண்டன்பாளையம் என்ற படத்தின் ட்ரெய்லரையும் பார்க்க நேரிட்டது.
இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமா ரொம்பவும் சூப்பரா சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக, மக்களின் பிரச்சினைகள பேசி விவாதித்தது போலவும் வெற்றி மாறன், பா.ரஞ்சித் ஆகியோர் படமெடுக்க ஆரம்பித்த பின்புதான் தமிழ் சினிமா அழிந்து கொண்டிருப்பதாக அந்த மனிதனின் பேச்சு அமைந்திருந்தது.
விஜயினுடைய மொக்கைப்படங்களாக பலரும் சுறா, வில்லு, குருவி என்று சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை அப்படங்களை விட மிகவும் மொக்கையான படங்கள் திருப்பாச்சியும் சிவகாசியும். அதே மாதிரி அஜித்தின் திருப்பதி இன்னொரு கொடுமை. இந்த படங்களை எல்லாம் எடுத்த பேரரசு இயக்கிய கவுண்டன் பாளையம் படம் தொடர்பான நிகழ்ச்சியில்தான் பிரவீன் காந்தி பேசியுள்ளார்.
அப்போ அந்த படம் என்ன தமிழ் சினிமாவை அழிவிலிருந்து காப்பாற்ற வந்த அபூர்வ தேவதையா?
மருத்துவர் ஐயாக்களின் அபாண்டமான குற்றச்சாட்டுக்களுக்கான நாடகக் காதல் என்பதை மொக்கையாக சொல்கிறது ட்ரெய்லர். ஓசிகே கட்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வம்புக்கு இழுக்கிறது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை காம வெறியர்களாக சித்தரித்து பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களாக காண்பிக்கிறது.
இரண்டு நிமிட ட்ரெய்லரிலேயே இரண்டு லாரி விஷத்தை கக்குகிறார்கள். அப்பட்டமாக தலித் மக்கள் மீது மற்றவர்கள் வெறுப்படைவது போல ஆதிக்க ஜாதி வெறியை ஊட்டுகிறார்கள்.
பேரரசு ஒரு பாஜக உறுப்பினர். பிரவீன் காந்த் ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் அதன் கொபசெ ஆகியிருப்பார். இத்திரைப்படத்தில் நடிக்கும் ரஞ்சித் வாயைத் திறந்தாலே பிற்போக்குத்தனத்தை வாந்தி எடுப்பார்.
இவர்கள் யாரை குறை சொல்லுகிறார்கள்?
பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆண்டைகளையும் வெண்மணி தீயில் விவசாயத்தொழிலாளர்களை கொளுத்திய பண்ணையார்களையும் இருக்கும் சொற்ப நிலத்தையும் பறிக்க துடிக்கும் எஜமானர்களை அசுரன் என்ற அற்புதமான படத்தில் அம்பலப்படுத்திய வெற்றிமாறனை. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை திரையில் வெளிப்படுத்துவர்களை.
இது இவர்களின் குரல் மட்டுமல்ல. ஒட்டு மொத்த சங்கிகளின் குரல், சனாதனவாதிகளின் குரல், ஜாதிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வெறி கொண்டலையும் ஆதிக்க சக்திகளின் குரல். பொது வெளியில் உரக்க ஒலிக்கும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் திரையில் ஒலிக்க்க் கூடாது என்று விரும்புகிற பிற்போக்குத்தனமாவர்கள்.
தமிழ் சினிமா இது போன்ற கூட்டணிகளால்தான் நாளை நிச்சயம் அழிவும். ஆனால் இந்த கூட்டணியும் கட்டாயம் அழிந்து போகும், இந்த கூட்டணி மட்டுமல்ல எல்லா கிரிமினல் கூட்டங்களும் கூட்டுக் களவாணிகளும் நிச்சயம் அழிந்து போவார்கள்.
கமலஹாசன் நடித்த தசாவதாரம் படம் நினைவில் உள்ளதா? துவக்கக் காட்சிகள்?
சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஒரு பகுதியாக இருக்கிற கோவிந்தராஜர் கோயிலின் மூலவரை சைவர்கள் சோழ மன்னனின் ஆதரவோடு அங்கேயிருந்து அகற்றி கடலில் எறிவார்கள். போனசாக ஓம் நமச்சிவாய என்று சொல்ல மறுக்கும் ரங்கராஜன்நம்பியையும் சேர்த்து எறிவார்கள்.
திரைப்படம் சொன்ன காலத்திலிருந்த சைவ – வைஷ்ணவர்கள் இன்னும் ஓயவில்லை.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள்தான் கோவிந்தராஜர் கோயில் இப்போதும்
உள்ளது.
நடராஜர் கோயில் பொது தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிந்தராஜர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இப்போது என்ன பிரச்சினை?
கோவிந்தராஜர் கோயிலில் பிரம்மோத்ஸவம் நடத்த வேண்டும் என்று காலம் காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடராஜர்தான் இங்கே பெரும் கடவுள், கோவிந்தராஜர் துணைக்கடவுள்தான். துணைக்கடவுளுக்கெல்லாம் பிரம்மோத்ஸவம் நடத்தக் கூடாது என்று தீட்சிதர்கள் மறுக்கிறார்கள்.
பிரச்சினை உயர் நீதிமன்றத்துக்கு போய் விட்டது. நடராஜர் கோயில் வளாகத்திற்குள் இருப்பதால் கோவிந்தராஜர் ஒன்றும் துணைக்கடவுள் அல்ல, அவரு வேற, இவரு வேற. கோவிந்தராஜருக்க்கே கட்டுப்பட்ட துணைக் கடவுள்கள் உண்டு. அந்த கோயில்கள் எல்லாம் தனியாக வேறு இடங்களில் உள்ளதென்று கோவிந்தராஜருக்கு ஆதரவான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லியுள்ளது?
பொது தீட்சிதர்களோடு பேசி சமாதானத்திற்கு முயற்சிக்குமாறு இந்து அறநிலையத் துறைக்கு அறிவித்துள்ளது.
அப்படியெல்லாம் சமாதானத்துக்கு வருபவர்களா அவர்கள்! ராஜராஜ சோழனுக்கே தண்ணி காட்டியவர்கள் அல்லவா!
இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கென்றே அவதாரமெடுத்துள்ளதாக பீற்றிக் கொள்ளும் பாஜகவினர் யார் பக்கம்? சைவ-வைஷ்ணவ ஒற்றுமை அவர்களால் சாத்தியமாகுமா?
வாயை மூடிக் கொண்டு ஓடி விடுவார்கள் என்பதுதான் யதார்த்தம். நடராஜர் கோயில் அதிகாரத்தை தீட்சிதர்களிடமிருந்து பறித்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு வரும் என்பது இன்னொரு யதார்த்தம்.
தேர்தல் அறிவிப்பு வந்த காலத்தில் இருந்து ஆட்டுத்தாடி ரெவியின் சத்தம் கேட்கவேயில்லை. நீ ஏதாவது கன்னாபின்னா என்று பேசினால் இருக்கும் அல்ப ஓட்டு கூட விழாது என்று ரெவியின் கையைப் பிடித்துக் கொண்டு இதை காலாக நினைத்துக் கொள் என்று கெஞ்சியிருப்பார் என்று நினைத்திருந்தேன்.
அப்படியெல்லாம் நான் காணாமல் போகவில்லை. சக சங்கிக்காக வர வேண்டிய நேரத்தில சரியா வருவேன் என்பது போல "நானா ஆட்டுக்காரன் மேல வழக்கு தொடுக்க அனுமதி கொடுப்பேன்" என்று பதறிப் போய் அறிக்கை கொடுத்து விட்டார்.
ஆமாம், யாரு இந்த ஆட்டுக்காரன்?
முதல்வரா? மந்திரியா? எம்.பி யா? எம்.எல்.ஏ வா? கவுன்சிலரா?
ஒரு எழவும் கிடையாது.
ஐ.பிஎஸ் பதவியை பாதியில் ராஜினா செய்து விட்டு ஓடி வந்த கிரிமினல்.
இந்தாள் மீது வழக்கு பதிவு செய்ய எதுக்கு கவர்னர் அனுமதி கொடுக்கனும்? அவசியமே கிடையாதே! உங்க அதிகாரிகளில் காவி ஊடுறவல் நடந்துள்ளது. அதனால்தான் இப்படி செய்திகளை வெளியிட்டு கோமாவில் இருந்த சப்ஜெக்டை எழுப்பி விட்டுட்டாங்க.
இப்படித்தான் கோமாவில் பல சப்ஜெக்டுங்க நாட்டில் கிடக்குது. தப்பான நேரத்துலதான் அதுக்கெல்லாம் உணர்வு வரும், முழிப்பு வரும். அதையெல்லாம் எதுக்கு நான் என் வாயால சொல்லிக்கிட்டு.
ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பக்கத்தில்தான் கீழேயுள்ள படத்தைப் பார்த்தேன். மூத்த்த்த்த்த்த்த வார்த்தை வணிகர் மாலன் அதற்காற்றிய எதிர்வினையையும் பற்றியும் படித்தேன். அதனால் தோழர் விஜயசங்கர் குறிப்பிட்டிருந்த திரு அகிலன் கண்ணன் அவர்களின் பக்கத்திற்கே சென்றால் மாலனின் அறிவைக் கண்டு அப்படியே அசந்து போய் விட்டேன்.
நான்
பெற்ற இன்பம், பெறுக இவ்வையகமும் என்ற நல்லெண்ணத்தில் அந்த படம் தொடர்பாக நடந்த உரையாடலும்
கீழே.
மாலன்
அறிவாளி என்று நிஜமாகவே வியக்கிறேன். அறிவு இருப்பதால்தான் படம் சொல்லும் செய்தி மத
வெறியை உசுப்பேற்றி கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிற மோடியைத்தான் இந்த
படம் நக்கலடிக்கிறது என்பதை புரிந்து கொண்டுள்ளார்.
அவரைப் போலவே மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என்பதையும் அவர் அறிந்து கொண்டு விட்டார்.
அதனால்தான் அதை திசை திருப்ப பிரெட் ஆம்லட் என்று ஒரு முட்டாள்தனமான கேள்வியோடு வந்து
விட்டார்.
கொடுத்த
காசுக்கு மேல் கூவுகிறார் மாலன்.
கிரிமினல்களுக்கு அரசியல்வாதி என்ற போர்வையில் நீதிமன்றம் இரக்கம் காட்டக்கூடாது. அப்படி ஊழல் பேர்வழிகளுக்கு பிணை கொடுத்து சலுகை காண்பித்தால் எல்லா கிரிமினல்களும் அரசியலில் ஈடுபட வந்து விடுவார்கள்.
இது கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்பதற்காக அமலாக்கப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் நாற்பது பக்கத்தில் வைத்த வாதம்.
இவர்களுக்கெல்லாம் வெட்கம், மானம், என்பதே இருக்காதா?
மோடியின் கைப்பிள்ளையாக, மோடி வாஷிங் மிஷினில் தூய்மை செய்யப்பட்ட ஊழல்வாதிகளை வழக்கிலிருந்து விடுவித்து விட்டு இப்படி பேச வெட்கமே இருக்காதா?
இதற்காகவே அமலாக்கப்பிரிவு இயக்குனருக்கு சிறந்த நடிப்பிற்கான ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும்.
"அழகென்ற சொல்லுக்கு முருகா" என்று பாடப்பட்ட முருகனை இப்படி விகாரமான சிலையாக அமைத்து விட்டார்களே என்பதுதான் இரண்டு நாட்களாக தமிழர்களின் ஆதங்கமாக இருந்தது.
அந்த சிலையை நன்றாக கவனித்த போதுதான் விகாரத்திற்கான காரணம் புரிந்தது.
தாமரை மேல் நிற்கவைத்ததால் முருகன் முகம் கோணி உடல் இளைத்து நோஞ்சானாகி விட்டார்.
இந்த சிலையை மாற்றப் போகிறார்களாம். தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் மட்டுமல்ல தமிழ்க்கடவுள் முருகனுக்கும் தாமரை தேவையில்லை. தாமரையை அகற்றுங்கள், சிலையிலிருந்தும் இந்திய நாட்டிலிருந்தும்.
தனக்குப் பிடித்த பாடல்களை வயலினில் வாசித்து யூட்யூபில் பதிவு செய்வது எனது மகனின் ஆர்வம் நிறைந்த பொழுது போக்கு.
இன்று நான் பகிரவுள்ளது அவனது நூறாவது காணொளி.
பதிமூன்று இசையமைப்பாளர்களின் பாடல்களின் தொகுப்பே இந்த முயற்சி.
அம்மா, அம்மா - வி.ஐ.பி - அனிருத்
சண்டைக்காரா - இறுதிச்சுற்று - சந்தோஷ் நாராயண்
தெய்வத்திருமகள் தீம் இசை -ஜி.வி.பிரகாஷ்
அழகாய் பூக்குதே - நினைத்தாலே இனிக்கும் (புது) - விஜய் ஆண்டனி
ஐய்யயோ ஆனந்தமே - கும்கி- டி.இமான்
கனா காணும் காலங்கள் - 7ஜி ரெயின்போ காலனி - யுவன் சங்கர் ராஜா
தேரடி வீதியில் - ரன் - வித்யாசாகர்
காடு திறந்தே - வசூல்ராஜா, எம்.பி,பி.எஸ் - பரத்வாஜ்
மனம் விரும்புதே - நேருக்கு நேர் - தேவா
முதற்கனவே - மஜ்னு - ஹாரிஸ் ஜெயராஜ்
சிக்குபுக்கு ரயிலே - இடையிசை - ஜெண்டில்மேன் - ஏ.ஆர்.ரஹ்மான்
இளைய நிலா பொழிகிறது - பயணங்கள் முடிவதில்லை - இளையராஜா
செந்தமிழ் தேன்மொழியாள் - மாலையிட்ட மங்கை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
யூட்யூப் இணைப்பு இங்கே . . .
எங்கேயாவது ஏதாவது ஜனநாயகத்துக்கு எதிரான சம்பவம் நடந்தால் அதை நியாயப்படுத்தி முட்டு கொடுக்க வாய்ப்பில்லாத போது சங்கிகள் அதனை கர்மா என்று சொல்லி விடுவார்கள்.
இப்போது பாஜக ஆட்சி ஹரியானாவில் கவிழும் நிலை ஏற்பட்டு விட்டது. மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ க்கள் பாஜக பக்கத்திலிருந்து காங்கிரஸ் பக்கத்திற்கு தாவி விட்டார்கள். அதனால் பாஜக பெரும்பான்மையை இழந்து விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தோற்றுப் போவார்கள். இதுவும் குதிரை பேரத்தின் விளைவுதான்.
மகாராஹ்டிரா, பீகார், மத்தியப்பிரதேசம், கர்னாடகம் என்றெல்லாம் ஆட்சிகளை கவிழ்த்த பாஜகவின் ஆட்சியும் கவிழ்வது இனிமையான செய்திதான், அந்த முறை உடன்பாடில்லாவிட்டாலும் கூட.
சங்கிகள் இந்த சம்பவத்திற்கு என்ன எதிர்வினையாற்றுவாற்றுவார்கள்?
ஜனநாயகப் படுகொலை என்பார்களா?
இல்லை
கர்மா அவர்களை திரும்பித் தாக்கி விட்டது என்பார்களா?
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தொடர்ந்து அயோக்கியத்தனம் செய்து கொண்டிருப்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, யாருடைய ஆதரவு இருந்தாலும் சரி, அடி நிச்சயம் விழும் என்பதைத்தான் ஹரியானா உணர்த்துகிறது.
சங்கிகள்
பார்வையில் இடஒதுக்கீடு பெறுபவர்கள்.
இந்த
கேவலமான பதிவை மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில்தான் பார்த்தேன். இதற்கு பதிலளித்த சங்கிகள்
அனைவருமே இந்த அம்மையாரின் நிலைக்கு ஆதரவாக அதே போலத்தான் கேவலமான மன நிலையை வெளிப்படுத்தி
இருந்தார்கள்.
சில தினங்கள் முன்பாக இந்து ஆங்கில நாளிதழில் பார்த்த செய்தி கீழே உள்ளது.
கடந்த
15 வருடங்களில் சீனாவிலிருந்து செய்ய்ப்படும் இறக்குமதி 2.3 மடங்கு அதிகமாகி உள்ளது.
அதிலும் கடந்த ஐந்து வருடங்களில் மிகவும் அதிகமான அளவில் இறக்குமதி நடந்துள்ளது.
இயந்திரங்கள்
39.7%
ஆடைகள், துணிகள், 38.2%
ரசாயனங்கள்
26.8%
மோட்டார் வாகனங்கள் 26 %