Thursday, August 20, 2020

செங்கோட்டையன் சொல்வதால்தான் ??????

 

மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை என்று எடப்பாடி சில தினங்கள் முன்பாக கூறினார். 

ஆனால் நேற்று கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கைக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில்  இந்தி படிக்க விருப்பமா? கைத்தொழில் கற்றுக் கொள்ள விருப்பமா என்று கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை எழுப்பியது.


இன்று தொலைக்காட்சியை பார்த்த போது கல்வி அமைச்சர் செங்கோட்டையன் "இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை"  என்று சொல்வதைக் கேட்டேன்.

இது நல்ல விஷயம்தான். 

ஆனால்

அதை செங்கோட்டையன் சொல்வதுதான் கவலையாக இருக்கிறது.

காலையில் ஒரு அறிக்கை வெளியிடும் போதே மாலையில் வெளியிட வேண்டிய மறுப்பறிக்கையையும் தயார் செய்து கொள்வது அவருடைய வாடிக்கையாயிற்றே! 

2 comments:

  1. செங்கோட்டையனுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ன தனியாக முடிவு எடுக்க?

    ReplyDelete
    Replies
    1. இல்லை. அதனால்தான் குழப்பங்களே

      Delete