Showing posts with label ம்தவெறி. Show all posts
Showing posts with label ம்தவெறி. Show all posts

Monday, June 5, 2023

கட்டெறும்புகள் காமெடியர்கள் இல்லை

 



கோகுல்ராஜ்  ஆணவக் கொலைக்காக ஜாதி வெறியன் யுவராஜ் “சாகும் வரை சிறை” தண்டனை பெற்றதற்கு “ஆயிரம் யுவராஜ் வெளியே இருக்கிறார்கள்” என்று ட்வீட்டிய கட்டெறும்பு என்ற பெயரில் இசக்கி போலீசிடம் கொடுத்த சாவர்க்கர் கடிதத்தில் (இனி மன்னிப்பின் இன்னொரு பெயர் சாவர்க்கர்) தனக்கு பத்து நாட்கள் முன்பாகத்தான்  ஆபரேஷன் நடந்துள்ளது, டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டும், சுகர் பேஷண்ட்  என்றெல்லாம் எழுதியுள்ளதை வைத்து அவனை ஏதோ கலகலப்பு படத்து சந்தானத்தின் அல்லக்கை அடியாட்கள் ரேஞ்சில் பலரும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 


ஆனால் கட்டெறும்பு காமெடியன் இல்லை. அவனுடைய ட்விட்டர் பக்கத்திற்கு சென்றிருந்தேன். முழுக்க முழுக்க நஞ்சு கக்கும் மத வெறிப் பதிவுகள்தான். ஆயிரம் அயோக்கிய சங்கிகளில் இவனும் ஒரு அயோக்கிய சங்கி. அவ்வளவுதான்.

 

கட்டெறும்பு போல விஷம் கக்கும் ஏராளமான ஜந்துக்களின் பதிவுகளை மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் அன்றாடம்  பார்க்கிறேன்.

 


கட்டெறும்புவின் முகப்பு படத்தில் உள்ள சாவர்க்கரின் கொள்கை வழியில் அவர் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் ஒன்றும் பெரிய மனிதனாகி விட மாட்டார்.  பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு பின்பு மகாத்மா காந்தியை படுகொலை செய்ய ஸ்கெட்ச் போடுமளவிற்கு சாவர்க்கர் மோசமாக போனாரோ, அது போல இந்த கட்டெறும்புகளும் இன்னும் மோசமாக செல்வார்கள்.

 

ஏற்கனவே ஒடிஷா விபத்திற்கு சதிதான் காரணம் என்று பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். தேர்தல் நெருங்க நெருங்க விஷத்தின் வீச்சு அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதனால் இவர்களை காமெடியர்களாக பார்த்து கலாய்த்து விட்டு போகக்கூடாது.

 பிகு: முகப்பு படத்தில் கோழை சாவ்ர்க்கர் படத்தோடு பகத்சிங் படத்தையும் வைத்ததற்கே இந்த கட்டெறும்பை உதைக்க வேண்டும்,

Monday, September 1, 2014

அம்மாடி, ஆத்தாடி, இதுதான் பிள்ளையார் கதியாடி?

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgMCQIuAxClbOMzHGDgU5JQSQ0zmtr1N9hEjCXMMEAQCqTTsqLbUWltvA-1rz_lsSKhGB_34JuznXJvudPJtQYwKD3n1P9zQKVWtF2HueabgWHxsftWaZj8148kzYW-i-ON6jdqlxeFjtT/s1600/vin.jpg

நேற்று விழுப்புரத்தில் பார்த்த காட்சி இது. 

விழுப்புரம் ரயில் நிலையத்தை தாண்டி புதுவை சாலையில் உள்ள பாணாம்பட்டு கிராமத்திற்கு செல்ல வேண்டும். ஆட்டோவில் வந்து கொண்டிருந்தோம். 

வழியில் ஒரு இடத்தில் பிள்ளையாரைக்  கரைப்பதற்கான லாரி நின்று கொண்டிருக்க  பிள்ளையார் முன்பு பத்து பதினைந்து இளைஞர்கள் வேகமான குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் லாரியை நிறுத்தி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இடம் ஒரு சர்ச்.

ஆட்டோ அந்த இடத்தை தாண்டி வந்து விட்டது. பிறகு பாணாம்பட்டு செல்லும் சாலையில் இறங்கிக் கொண்டோம். எங்களது உறவினர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. அவர் எனது மனைவியை அழைத்துச் சென்று விட்டார். 

அவர் மீண்டும் வருவதற்காக காத்திருந்த போது மீண்டும் பிள்ளையார் லாரி அங்கே வந்தது.  வண்டியை நிறுத்தினார்கள். "அம்மாடி, ஆத்தாடி, உன்னை எனக்கு தரியாடி" என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்க மீண்டும் ஒரு குத்தாட்டம். வெறியாட்டமாக இருந்தது. எல்லோரும் முகத்தில் கலர் பொடிகளை அப்பிக் கொண்டு காவித்துண்டை தலையில் கட்டிக் கொண்டு ஆட்டம் போட்டார்கள்.

அத்தனை பேரும் டாஸ்மாக் உபயத்தில் உற்சாகத்தில் இருந்தார்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்த இடமும் ஒரு கிறிஸ்துவ கான்வெண்ட். 

வீடுகளிலும் கோயில்களிலும் இருந்த பிள்ளையாரை வலுக்கட்டாயமாக தெருவில் நிறுத்துவதே மாற்று மதத்தாரோடு வம்பிழுக்க மட்டுமே என்பதை  இச்சம்பவம் உணர்த்துகிறது.

மோடி சர்க்காரில் இது போன்ற சம்பவங்கள் இன்னும் அதிகமாக நடக்கப் போகிறது.

அம்மாடி ஆத்தாடி பாட்டு கேட்ட பிள்ளையார்தான் பரிதாபத்துக்குரிய கடவுள்.