Tuesday, February 28, 2023

மோடியை கலாய்க்கும் சுமந்து

 


காலையில் போட்ட பதிவு ஆட்டுக்காரனை சிப்பு சேகர் கலாய்த்தது தொடர்பாக. 

இப்போது ஆயுஷ்மான் திட்டத்தில் 25 கோடி பேரை இணைத்துள்ளது பற்றி அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கே தெரியாதே என்று வலதுசாரி சுமந்து மோடியை கலாய்த்தது.

ஏன் இப்படி சேம் சைட் கோல் அடிக்கிறார்கள்?

மாயைகள் தகர்கின்றதா?

ஆட்டுக்காரனை கலாய்க்கும் சிப்பு சேகர்

 


உன் கட்சிக்காரனே, உன்னை கலாய்க்கிறானே ஆட்டுக்காரா! உனக்கு இந்த அவமானம் தேவையா?


Monday, February 27, 2023

எனக்கு ஏன் பிடித்தது?

 

வாரம் ஒரு நூல் அறிமுகம்

இந்த வாரம் : 26.02.2023

 


நூல் : போராட்டங்களின் கதை

ஆசிரியர் : அ.முத்துக்கிருஷ்ணன்,

வெளியீடு : விகடன் பிரசுரம்,

                        சென்னை

விலை        : ரூபாய் 310.00

 

அறிமுகம் செய்பவர் : எஸ்.ராமன், வேலூர்

 

காடுகளைப் பாதுகாக்க பழங்குடி மக்கள் என்ன செய்தார்கள்? மரங்களை கட்டித் தழுவிக் காத்த அந்த இயக்கத்தின் பெயர் என்ன?

 

வெளி நாடுகளுக்கு செல்ல நீங்கள் பாஸ்போர்ட் வாங்க வேண்டும். உள்நாட்டுக்குள்ளேயே செல்லக்கூட பாஸ்போர்ட் வாங்க வேண்டிய அவசியம் இருந்த நாடு எது தெரியுமா?

 

ஒரு நாட்டின் நாடாளுமன்றம் முன்பு கூடாரங்கள் அமைத்து அரை நூற்றாண்டு காலமாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு போராடுவது எங்கே தெரியுமா?

 

பழங்கள் விற்கும் ஒரு இளைஞனின் தீக்குளிப்பு எந்த நாட்டின் அரசியலையே மாற்றியமைத்தது?

 

தங்கள் அரசின் போர்வெறிக்கு எதிராக அந்நாட்டு ம்க்களே போராடியிருக்கிறார்களா?

 

“செய் அல்லது செத்து மடி” என்ற முழக்கத்தோடு துவங்கிய போராட்டம் எது?

 

பன்னாட்டுக் கம்பெனியின் நலனுக்கு எதிராக எழுதினால் தூக்கு தண்டனையா?

 

ரத்தம் கசிந்த பாதங்களுடன் நடந்து வந்தவர்களின் நோக்கம் நிறைவேறியதா?

 

மேலே எழுப்பப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. பதில் சொன்ன நூல் பொது அறிவு நூல் அல்ல, உலகெங்கும் நடைபெற்ற பல போராட்டங்களைப் பற்றி விவரிக்கும் “போராட்டங்களின் கதை” எனும் நூல்.

 

இந்திய விடுதலைப் போரின் அங்கமாக திகழ்ந்த தண்டி உப்பு யாத்திரை தொடங்கி, வெள்ளையனே வெளியேறு, ஜாலியன் வாலாபாக் மட்டுமல்ல, சமூக நீதிக்காக தமிழ்நாட்டில் நடந்த இயக்கங்கள், வெண்மணி காவியம் முதல் பல்வேறு போராட்டங்களின் தொகுப்பு இந்நூல்.

 

தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டம், ஆஸ்திரேலிய அபாரிஜின் மக்களின் போராட்டம், வியட்னாம், இராக் போர்களுக்கு எதிரான அமெரிக்க மக்களின் போராட்டம், ஜியார்ஜ் பிளைட்டின் மரணத்தைத் தொடர்ந்து சமீபத்தில் இன வெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், சர்வாதிகாரத்துக்கு எதிராக துனிசியாவில் நடைபெற்ற மல்லிகை வசந்தம் உள்ளிட்ட எண்ணற்ற போராட்டங்களைப் பற்றியும் நூல் பேசுகிறது.

 

உலகின் மிக முக்கியப் போராட்டங்களைப் பற்றிய அறிமுகம் அளிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள படிக்க வேண்டிய நூல்களைப் பற்றியும் பார்க்க வேண்டிய ஆவணப்படங்களைப் பற்றிய குறிப்புக்களும் அந்தந்த அத்தியாயங்களிலேயே எழுதப்பட்டுள்ளது தேடல் உள்ளோருக்கு உதவிகரமாக இருக்கும்.

 

எளிமையான, அதே நேரம் உணர்வூட்டும் மொழி நூலின் வலிமை. எந்த ஒரு நாட்டின் சுதந்திரமோ, மக்கள் உரிமையை பெறுவதோ, தக்க வைப்பதோ, ஆட்சியாளர்கள், பன்னாட்டு முதலாளிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் தாக்குதல்களை சந்திப்பதோ ஒன்றுபட்ட போராட்டத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வலியுறுத்தும் நூல் இது.

 

அதனாலேயே மிகவும் முக்கியமான நூலாகிறது.

 

செவ்வானம்.


போராட்டங்கள் இல்லாமல் மனித குல மாற்றங்களோ, முன்னேற்றங்களோ இல்லை என்பதை மிகவும் அழுத்தமாக சொல்வதாலேயே இந்த நூல் மிகவும் பிடித்தமானதாகிறது. 

 

Sunday, February 26, 2023

மசூதியையும் இடித்து விட்டு புதிதாகவும் . . .

 


மேலே உள்ளது இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தை ராமர் கோயிலுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்படைத்த ஆலமரத்தடி பஞ்சாயத்தில் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்படவுள்ள மசூதி, மருத்துவமனை, கல்வி நிலையம் ஆகியவற்றின் மாதிரி இது.

ஆனால் இதை கட்ட முடியுமா? கட்ட அனுமதிப்பார்களா?

இந்த வருடத்தில் ராமர் கோயிலை திறந்து வைத்து மோடி அதனை தன் சாதனையாக ஓட்டே கேட்கப் போகிறார்.

ஆனால் மசூதி?

ராமர் கோயிலில் இருந்து 25 கிலோ மீட்டர் தள்ளி ஒரு இடத்தை ஒதுக்கி உள்ளார்கள்.

மசூதி கட்ட விண்ணப்பம் கொடுத்து ஆறு மாதம் கழித்து அதனை ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு பல்வேறு அரசாங்க துறைகளில் இருந்து தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளனர்.

அவை அனைத்தும் முடித்த பின்பு இப்போது மேலும் இரண்டு காரணங்கள் சொல்லியுள்ளனர்.

கட்டப்படும் மசூதிக்கு முன்பாக 12 மீட்டர் அகல சாலை இருக்க வேண்டும். 11 மீட்டர்தான் உள்ளது. அதனால் முடியாது. சாலையை அகலப்படுத்த பணம் கட்டினாலும் அந்த கோப்பு தூங்கிக் கொண்டிருக்கிறது.

அடுத்த காரணம். மசூதி கட்டப்படவுள்ள நிலம், விவசாய நிலம். ஆகவே அனுமதி கிடையாது. இந்த இடத்தை ஒதுக்கியதே மொட்டைச்சாமியார் அரசுதான். ஆனால் அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதி கிடையாதாம்.

ஊடகங்கள் கேள்வி கேட்டதும் அயோத்தி வளர்ச்சி வாரிய ஆணையர் மழுப்பலாக பதில் சொல்லி சமாளித்துள்ளார்.

மசூதியையும் இடித்து அந்த இடத்தையும் கைப்பற்றி அங்கே கோயில் கட்டி திறப்பு விழாவுக்கும் தயாராகிக் கொண்டு,

இடத்தையும் உரிமையையும் இழந்த இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தில் கூட மசூதி கட்ட தடை போடும் இந்த கேவலமான பேர்வழிகள் கையில் நாடு மீண்டும் சென்றால் என்ன ஆகும்?




வஜனம் சூப்பரு மோடி . . .

 


வஜனம் சூப்பராத்தான் இருக்கு மோடி. ஆனா என்ன அது வெறும் வஜனம் என்பது புரியற மாதிரிதான் உங்க நடவடிக்கை இருக்கு.

மாநிலத்தின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கறதில்லை என்பதை வேண்டுமானால் கொஞ்சம் ஏத்துக்கலாம்.

ஆமாம்.

உங்க முதலாளிங்களைத் தவிர வேற எந்த மாநில மக்களுக்கு நீங்க நல்லது செஞ்சிருக்கீங்க! 

எவன் செத்தா என்ன? துட்டுதான்

 


ஜோஷிமத்தின் நிலைமை பற்றி முன்னரே எழுதியிருந்தேன். கொஞ்சம் சிரமம் பார்க்காமல்  கீழே உள்ள இணைப்பின் மூலமாக அந்த பதிவை கொஞ்சம் படித்து விட்டு பாருங்கள்.

 

 "ஜோஷிமத்துக்கு போகாதீங்க" என்ற பதிவின் இணைப்பு இங்கே . . .

ஏற்கனவே  ஜோஷிமத் இன்னும் நான்கு செண்டி மீட்டர் அளவிற்கு புதையுண்டுள்ளது.  சாலைகள் பிளவுண்டு கிடக்கிறது. வீடுகளின் விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் வீடுகளை இழந்து கொண்டே இருக்கிறார்கள்.

 

இத்தகைய சூழலில் சார்தம் யாத்திரையை நடத்தியே தீருவதென்று உத்தர்கண்ட் மாநில பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

 

சாலைகளின் பாதிப்புக்கள் இன்னும் சரி செய்யப்படவில்லை, வீடுகளில் விரிசல்கள் நிற்கவே இல்லை, ஏற்கனவே வீடிழந்தவர்கள் விடுதிகளில்தான் தங்கியுள்ளனர், ஊருக்கு வரும் பக்தர்கள் எங்கே தங்குவார்கள்? இன்றைய சூழலில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் அதை ஊர் தாங்குமா?

 

இதெல்லாம் ஜோஷிமத் மக்கள் கேட்கும் கேள்விகள்.

 

இவை எதற்கும் பதில் இல்லை.

 

பதில் சொல்ல தயாராக இல்லை.

 

அவர்கள் நோக்கம் ஒன்றுதான்.

 

யாத்திரை நடத்தி கல்லா கட்டுவது மட்டுமே இவர்கள் நோக்கம்.

Saturday, February 25, 2023

"மத்யமர் ஆட்டுக்காரன்" மாண்பு

 


"மத்யமர் ஆட்டுக்காரன்" குழுவில் அதன் மாடரேட்டர் ஒருவர் அபாண்டமாக ஒரு பொய் சொன்ன போது

"உங்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது மூட நம்பிக்கை" என்று கமெண்ட் போட்டவுடன் அவர் கடுப்பாகி விட்டு நம்மையும் நக்கலடித்து அந்த குழுவின் மாண்புகளைப் பற்றி சொற்பொழிவாற்றினார்.



அதற்கடுத்த சில மணி நேரங்களிலேயே ஐகோர்ட்டு ராசாவுடன் எடுத்த போட்டோவை ஃப்ரொஃபைல் படமாக வைத்திருந்த ஒருவர் சில மாநில முதல்வர்களை இழிவு படுத்தி எழுதியிருந்தார்.


இதுதான் உங்க மாண்பா என்று நான் அந்த மாடரேட்டரை கேட்க,  இணைப்பைக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று வீர வஜனம் பேசினார். 


ஆனால் அந்த பதிவோ அல்லது முதல்வர்களை இழிவு படுத்தியதோ இன்னும் நீக்கப்படவில்லை.

படியளக்கும் எஜமானர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ன! அதனால்தான் திரு திருவென்று முழிக்கிறார்.

கரடியே காரித்துப்பிடுச்சே ரவி!

 


தலைப்பிற்கான விளக்கத்தை கீழேயுள்ள செய்தி சொல்லும். ஆனாலும் ஆட்டுத்தாடி தன் முகத்தில் உமிழப்பட்ட எச்சிலை துடைத்துக் கொண்டு அடுத்த விஷத்தைக் கக்கும். . .



 

Friday, February 24, 2023

நரேந்திர கௌதம் மோடியென்றால் ஜெயில்

 


காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா என்பவர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியை "நரேந்தர் கௌதம் மோடி" என்று சொன்னதற்காக

அஸ்ஸாமில் புகார் கொடுத்து டெல்லி போலீசுக்கு தகவல் செய்து ரெய்ப்பூர் செல்ல விமானத்தில் அமர்ந்த கேராவை கீழிறக்கி கைது செய்துள்ளார்கள்.

மோடிக்கு பயம் வந்து விட்டதன் அடையாளம் இது!

மோடியும் அதானியும் ஒன்றுதானே! கேரா சொன்னதில் என்ன தவறென்று நீங்கள் யோசிக்கலாம்.

அது தவறு.

படியளக்கும்  எஜமானும் வாங்கித்தின்னும் சேவகனும் ஒன்றாக முடியாது என்று மோடி நினைப்பதால்தான் கைது. 

நாவடக்கு திருப்பதி நாராயணா!

வாயைத் திறந்தால் பொய்யைத் தவிர வேறு ஏதுவும் பேசாதவன், ஆணவம் தலைக்கேறி ஆடும் அற்பன், தொலைக்காட்சி விவாதங்களில் பல முறை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் அடி வாங்கி ஓடிப் போனவன், ரயில்வே வாரியத்தில் ஏதோ துக்கடா பொறுப்பில் இருக்கும் திமிரில் அராஜகம் செய்தவனை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளருமான தோழர் கே.சாமுவேல்ராஜ் தட்டிக் கேட்க, கட்டுக்கதைகளை அள்ளி வீசியுள்ளான் திருப்பதி நாராயணன் எனும் அற்ப சங்கி. 

இவர்கள் நம்பும் புராணத்தில் கடவுளையே கேள்வி கேட்ட கதைகள் உள்ள போது பிரதமரை விமர்சிக்கக் கூடாதாம். அவ்ளோ பெரிய அப்பாடக்கரா மோடி?

இனியாவது வாயை அடக்கு திருப்பதி நாராயணா! 


 பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுத்திடுக!

தென்னக ரயில்வே காவல்துறைக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
*****
நேற்று ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சக பயணியர் ஒருவரை பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “தூக்கிவிடுவேன், நான் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்” என்றெல்லாம் தொடர்ச்சியாக மிரட்டியிருக்கிறார்.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் நாராயணன் திருப்பதியை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வதற்கு பதிலாக ஆளும் கட்சி என்ற அதிகாரத்தையும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பையும் தவறாக பயன்படுத்தி காவல்துறையை ஏவி விட்டு கே.சாமுவேல்ராஜை ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். பாஜகவுக்கு அஞ்சி ரயில்வே போலீஸ் நடந்து கொண்டவிதம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

பொதுவாழ்க்கையில் இருக்கிற யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல ; கருத்து சுதந்திரம், அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள உரிமையாகும். சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தனமாகவும் மாறுவதை அனுமதிக்கவே கூடாது. இந்நிலையில் பிரதமரை விமர்சித்தால் காவல்துறையை ஏவிவிடுவோம் என்பது பாஜகவின் சகிப்பற்ற தன்மையையும், அதிகார மமதையுமே காட்டுகிறது. இத்தனையும் செய்துவிட்டு கே.சாமுவேல்ராஜ் பேசியதை வெட்டியும், திரித்தும் வெளியிட்டு அவர் குற்றம் செய்துவிட்டதைப் போல பொதுவெளியில் பதிவிடுவதை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது.

தென்னக ரயில்வே காவல்துறை, இச்சம்பவத்தில் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீதும், சக பயணிகளை மிரட்டிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

- கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

பிகு: நேற்று கூட பாஜக போலீஸை வைத்து டெல்லியில் ஒரு அயோக்கியத்தனம் செய்துள்ளது. அது பற்றி மாலை . . .

Thursday, February 23, 2023

ஒரு வழியாய் டெல்லி மேயர் ..

 


ஒரு வழியாக டெல்லி மாநகராட்சி மேயருக்கான தேர்தல் நடந்து முடிந்து ஆம் ஆத்மி கட்சியின்  ஷெல்லி ஓபராய் என்பவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் தோற்றுப்போனாலும் மேயராக வேண்டுமென்பதற்காக பாஜக நிறைய அயோக்கியத்தனங்கள் செய்தது. மூன்று முறை தேர்தலை நடத்த முடியாமல் கலாட்டா செய்தது. 

16 நியமன உறுப்பினர்களை ஆட்டுத்தாடி நியமித்தது. அவர்களும் சேர்த்து ஓட்டு போட்டாலும் கவுன்சிலர்களை கட்சி மாற வைக்க முடியாததால் பாஜக தோற்றுப் போனது.

யார் செய்யும் தேர்தல் முறைகேடு பற்றியும் பேச சங்கிகளுக்கு அருகதை கிடையாது.

பிகு" திரிபுராவில் ஒன்றிய கிரிமினல் மந்திரி செய்த லீலை பற்றி தனியாக எழுத வேண்டும். 

Wednesday, February 22, 2023

அசிங்கப்பட்டது ஆட்டுத்தாடி

 


இப்போது மீமில்தான் மெண்டல் என்று சொல்லி ரவியை அசிங்கப்படுத்தி உள்ளனர்.

இந்தாள் இப்படியே உளறிக் கொண்டிருந்தால் நிஜமாகவே அந்தாளை மன நல விடுதியில்தான் சேர்க்க வேண்டியிருக்கும் .. .

மேனகாவின் கொலைகார நாய்கள்

 


 

பிரதீப் என்ற நான்கு வயது சிறுவன் ஒருவனை நான்கு தெரு நாய்கள் துரத்தி முகத்திலும் நெஞ்சிலும் மற்ற பகுதிகளிலும் கடித்து குதறியதில் அவன் இறந்து போயுள்ளான்.

 

இது நடந்தது ஞாயிற்றுக்கிழமையன்று,  ஹைதராபாத் நகரில்.

 

ஒவ்வொரு நாய்க்கடி மரணத்துக்கும் பொறுப்பு மேனகா அம்மையார் மட்டுமே!

 

தெரு நாய்களை கொல்லக்கூடாது. அவற்றுக்கு கருத்தடை ஊசி போட்டு விட வேண்டும் என்று விலங்குகளின் மீது மட்டும் கருணையை பொழியும் மேனகா அம்மையார் போட்ட உத்தரவு.

 

இதைத் தொடர்ந்து நாய்க்கடி மருந்துகள் தயாரிக்கும் பொறுப்பை பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பறித்து தனியார் கம்பெனிகளுக்கு ஒப்படைத்தார் சின்ன டாக்டரய்யா என்பது வேறு கதை . . .

 

தெரு நாய்களின் தொல்லை என்பது இன்று இந்திய அளவிலான பிரச்சினை. எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் ஒரு மாதத்திற்கு மார்க்கெட் பகுதியில் ஒரு வெறி நாய் நாற்பது பேரை கடித்ததாக செய்தி வந்தது.

 

இங்கே ஹைதராபாத்தில் அச்சிறுவனை கடித்த நாய்கள் அனைத்தும் கருத்தடை செய்யப்பட்டவை. இந்த கருத்தடை ஊசியால் நாய்களின் இனப் பெருக்கம் குறையலாமே தவிர, அவற்றின் குணாம்சம் மாறாது. எத்தனையோ மனிதர்களின் வாலையே நிமிர்த்த முடியாத போது நாய்களை என்ன செய்ய முடியும்! மேலும் அப்படியெல்லாம் தெரு நாய்களின் எண்ணிக்கை குறைந்தது போலவெல்லாம் தெரியவில்லை. எங்கள் பகுதியில் அரை கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு போய் விட்டு எங்கள் வீட்டிற்கு திரும்ப வருகையில் வழியில்  உலாவும் தெரு நாய்களின் எண்ணிக்கையை எண்ணுவது என் வழக்கம். போன மாதம் 28 என்றிருந்தது போன வாரம் 36 ஆக உயர்ந்திருந்தது.

 

இப்பிரச்சினைக்கு  இரண்டு தீர்வுகள் உண்டு.

 

முந்தைய பாணியில் தெரு நாய்களைக் கொல்வது.

 

அது ஈவிரக்கமற்ற செயலென்றால்

 

பசுவிற்கு கோசாலைகள் வைத்து பராமரிப்பது போல, தெரு நாய்களுக்கும் அரசே பராமரிப்பு மையங்களை உருவாக்கி அங்கே அடைப்பது.

 

நாய்களின் உயிர்களும் முக்கியம்தான். தாங்கள் செய்வது என்னவென்று அறியாத நாய்களிடமிருந்து மனிதர்களை அதை விடவும் முக்கியமல்லவா!

 

பிகு: மேனகா அம்மையாரை மேனகா காந்தி என்பதா அல்லது அவர் பாஜககாரர் என்பதால் மோடி சொன்னபடி மேனகா நேரு என்று பெயரை மாற்றிக் கொண்டு விட்டாரா என்பது தெரியாத காரணத்தால் பொதுவாக மேனகா அம்மையார் என்று எழுதி விட்டேன்.

 

 

மோடிக்கு சரிப்பட்டு வர மாட்டார்!

 



உங்கள் முதுகெலும்பு வளையாமல் நேராக நன்றாக உள்ளது என்று சொல்லும் மருத்துவரிடம் பணி ஓய்வுக்குப் பிறகு நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை என்று பதிலுரைக்கும் நீதிபதியெல்லாம் 

மோடிக்கு கொஞ்சம் கூட ஒத்து வர மாட்டாரே!

Tuesday, February 21, 2023

இதுவாடா தேச பக்தி !

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பார்த்த பதிவு கீழே உள்ளது.

 


நான் கூட ஏதோ பகடிப் பதிவு என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்தாள் தீவிர சங்கி.

 பாவம் மெண்டலாயிட்டாரு போல . . .

 இதுதான் தேச பக்தி என்றால் தேச விரோதியாக இருப்பதே மேல்.

 

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை . . .

 


நீங்கள் தமிழ்நாட்டு மக்கள், எங்களுக்கு ஓட்டு போடாமல் எங்களை தோற்கடித்தீர்கள். நாங்கள் ஜெயித்திருந்தால் அமைச்சராகி இருப்போம். இருந்தாலும் எங்கள் திறமையை புரிந்து கொண்ட மோடி எங்களை கவர்னராக்கினார். 

இது தமிழிசை அம்மையார் உதிர்த்த பொன்மொழி

தோற்றுப் போன எல்.முருகனை மந்திரியாக்கினார் என்பதை அவருக்கு நினைவு படுத்தி, மக்களால் நிராகரிக்கப்பட்ட உங்களை கவர்னராக்கியது பெருமை அல்ல, உங்களை நிராகரித்த ஜனநாயக நடைமுறைக்கு செய்யப்படும் அசிங்கம். ஆணவம்.

இதே அசிங்கத்தை இதர கட்சிகள் கூட சில முறை செய்துள்ளனர் என்பது இந்திய ஜனநாயகத்தின் களங்கம்.

Monday, February 20, 2023

அபத்தமாக பேச வேண்டாம் ரஜினி

 


மயில்சாமியின் மறைவு ஒரு துயரம். அதற்கு ரஜினிகாந்த் கொடுத்துள்ள வியாக்யானம் அதை விட துயரம்.

திருப்பி ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். அசிங்கமாகி விடும் ரஜினி.

பாவம் வயதாகி விட்டது. ஓய்வெடுக்க வேண்டிய வேளையிலும் ஓயாமல் உழைக்க வைக்க்கிறார்கள். அதனால் சிந்தனைத் திறன் மழுங்கி விட்டது.

அதனால் பேசுவதை நிறுத்திக் கொள்ளவும் ரஜினி.

அதுதான் உங்களுக்கு நல்லது. . .

வீழ்வேனென்று நினைப்போரே . . .

 

நல்லெண்ணம் மிக்க நண்பர்கள்,

நேசமிகு தோழர்களுக்கு 

நன்றியும்

வஞ்சகமிகு எதிரிகள்,

வேடதாரிக் கயவர்களுக்கு பாரதிதான் பதில்





Sunday, February 19, 2023

கப்பர் சிங் மண் அது . . .

 


மேலே உள்ள படத்தை எந்த திரைப்படத்திலாவது பார்த்த நினைவு உள்ளதா?

காரணம் பிறகு சொல்கிறேன். கீழே உள்ள புகைப்படங்களையும் பாருங்கள்




மறைந்த என் அம்மாவின் அஸ்தியை ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் காவிரியில் கரைத்து விட்டு வருகையில் என் அக்கா பையன், இந்த இடத்தை கடந்த போது நான் மேலே கேட்ட அதே கேள்வியை கேட்டான்.

ஷோலே திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்த ராம் நகரா இதுதான். இங்கதான் கப்பர் சிங் காட்சியெல்லாம் எடுத்தார்களாம் என்றான்.

40 % கமிஷன் வாங்கும் பசவராஜ் பொம்மை இங்கே பிரம்மாண்டமான கோயில் கட்டுவது பொருத்தம்தான். . .


கப்பர்சிங் கொள்ளையடித்தை விட 1000 மடங்கு கொள்ளையடிக்கும் திருட்டுக்கூட்டம்தானே இது!

Saturday, February 18, 2023

400 கோடி கமிஷனுக்கா பொம்மை?

 

பிரம்மாண்டமான கோயிலும் ஆயிரம் கோடி ஒதுக்கீடும் எதற்கு 40 % பசவராஜ் பொம்மை?

400 கோடி ரூபாய் கமிஷன் அடிக்கத்தானே!

பிகு: இந்த ராம நகராவின் சிறப்பு என்ன தெரியுமா? நாளை எழுதுகிறேன்


சபாஷ், சரியான கேள்வி

 


தோழர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மோடியோ, ஸ்மிர்தியோ இல்லை ஏதாவது ஒரு கேடு கெட்ட கிரிமினல் சங்கியாவது பதில் சொல்ல முடியுமா?

Friday, February 17, 2023

எடுபிடிக்கான மீசை வச்ச கண்ணன்

 


எடுபிடி பழனிச்சாமி ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் "நீ ஆம்பளயா இருந்தா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா" என்றெல்லாம் வஜனம் பேசியதாக படித்தேன்.

கண்ணன் குலத்தவர், கண்ணன் குலத்தை சேர்ந்த தனது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எழுதிய கடிதத்தையும் பார்த்தேன்.


பல படங்களில் என்.டி.ராமாராவ், படிக்காத மேதையில் நடிகர் திலகம், சில படங்களில் சிவகுமார், இந்தி தொலைக்காட்சித் தொடர் மகாபாரதம் எதிலுமே கண்ணனுக்கு மீசை கிடையாதே, மீசை இருந்தால் எடுபிடி இன்னும் சந்தோஷமாகி விடுவாரே என்று யோசித்த போது கிடைத்தவர்தான் கிரேசி மோகன்.

மீசை வச்ச ஆம்பள + கண்ணன் : இந்த காம்பினேஷன் ஓகேதானே எடுபிடி? 

பிகு: இப்படி ஜாதியைச் சொல்லி ஓட்டு கேட்பதெல்லாம் சட்ட பூர்வமானதுதானா?

இதுதான் சங்கிக் கொழுப்பு

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடாவடியை கண்டிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தையும் பிச்சைக்காரர்கள் என்று சொல்வது சங்கிக் கொழுப்பு அல்லாமல் வேறென்ன?

வெறும் சூதாட்டமாகிப் போன கிரிக்கெட்டை தள்ளி வையுங்கள் என்று நான் சொல்வது இதனால்தான்.

இப்பதிவு மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு ஃபேக் ஐடி போட்டது. அந்த ஃபேக் ஐடி அதன் அட்மின் உடையது என்பது என் சந்தேகம்.



Thursday, February 16, 2023

ஏடிஎம் கொள்ளை - தனியார்மயத்தின் விளைவு

 



திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை தொடர்பான நேற்றைய பதிவின் தொடர்ச்சி

 

ஏடிஎம் ம்மை உடைத்தவர்கள் யார் என்பது அங்கிருந்த சி.சி,டிவி காமராக்களில் பதிவாகவில்லை.,

 

ஏடிஎம்மை உடைத்தால் காவல் நிலையத்திலும் வங்கியிலும் ஒலிக்க வேண்டிய அலாரம் ஒலிக்கவில்லை.

 

இந்த ஏ.டி.எம் களில் காவலர்களும் இல்லை.

 

என்ன காரணம்?

 

பணம் வைப்பது முதற்கொண்டான ஏ.டி.எம் தொடர்பான பராமரிப்பு சேவைகள் அனைத்தும் இப்போது வங்கிகளால் அரசு வங்கிகளும் சரி, தனியார் வங்கிகளும் சரி அவைகளால் நேரடியாக செய்யப்படுவதில்லை. அவை ,அனை,த்தும் சில ,தனியார் ஏஜென்ஸிகளுக்கு அவுட்சோர்ஸிங் முறையில் ஒப்பந்தத்திற்கு கொடுக்கப்ப்பட்டு விட்டன.

 

காமெரா இயங்குகிறதா, அலாரம் இயங்குகிறதா என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை.

 

கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம் களில் மட்டுமா?

 

பெரும்பாலான ஏ.டி.எம் களில் இதுதான் நிலை என்று சொல்கிறது போலீஸ்.

 

அதே போல இப்போதெல்லாம் ஏ.டி.எம் களில் செக்யூரிட்டிகளை பார்ப்பதும் அரிதாகி வருகிறது. எதற்கு சம்பளம் கொடுப்பது என்று நிறுத்தி விட்டார்கள் போல..

 

தனியார்மயம் என்றால் அலட்சியம் என்பதற்கு பல உதாரணங்கள் ஏற்கனவே இருக்கிறது. ஏ.டி.எம் பராமரிப்பு புதிய உதாரணம்.

 

இந்த சமயத்தில் இன்னொரு திரைப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. விக்ரம் பிரபு நடித்த ஒரு படத்தில் .ஏ.டி.எம் பராமரிப்பு சேவை நிறுவன ஊழியர்கள் எப்படி போலி கார்டுகளை உருவாக்கி வாடிக்கையாளர்களின் பணத்தை சூறையாடுவார்கள் என்பதைக் காண்பித்திருப்பார்கள்.

 

வங்கிகள் பராமரிப்பு சேவைகளை தாங்களே செய்யாவிட்டால் இந்த மோசடிகள் கூட எதிர்காலத்தில் அதிகமாகி விடும்.

மோடிதான் கெடுத்தார்

 


ஹிந்துஸ்தான் ஏரோனெடிக்கல் லிமிட்டெட் நிறுவனம்  தயாரிக்கும் “தேஜஸ்” போர் விமானத்தை அர்ஜெண்டினாவும் எகிப்தும் வாங்க உள்ளார்கள்.

 

வெளி நாடுகள் நம்பிக்கையோடு அணுகிய ஒரு நிறுவனத்திற்கான வாய்ப்பை மோடி கெடுத்ததை இத்தருணத்தில் மறக்கக் கூடாது.

 

ரபேல் விமானங்களை பிரான்ஸ் நிறுவனத்திடம் வாங்க முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முதல் தவணை விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் நேரடியாக தயாரித்து அனுப்பும். அதன் பின்பு அவற்றை ஹிந்துஸ்தான் ஏரொனெடிக்கல் நிறுவனம் தயாரிக்கும்.

 

இந்த ஒப்பந்தத்தை மோடி மாற்றினார். ஹெச்.ஏ.எல் க்கு பதிலாக பொம்மை ப்ளேன் கூட தயாரிக்காத தம்பி அம்பானி கம்பெனிக்கு மாற்றி விட்டார்.

 

பெற்ற குழந்தையை பட்டினி போட்டு ஊரார் குழந்தைக்கு விருந்து வைத்த கேவலமான ஜென்மம்தான் மோடி.

 


Wednesday, February 15, 2023

ஏ.டி.எம் கொள்ளை- இன்னொரு தீரன் அதிகாரமா?

 


திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்கள் உடைக்கப்பட்டு   எழுபத்தி ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.                                                                                                                                                                                        அந்த கொள்ளை பற்றி காவலர்கள் கொன்னது சுவாரஸ்யமாகவும் தீரன் அதிகாரம் ஒன்று  படத்தை  நினைவு படுத்துவதாக அமைந்திருந்தது.

 திரைப்படத்தில் ராஜஸ்தான் பவாரியா கும்பல் கொள்ளையடித்தது. திருவண்ணாமலையில் கொள்ளையடித்தது ராஜஸ்தான் மேவார் கும்பலாம். 

 தீரன் படம் போலவே ராஜஸ்தான் தொடங்கி மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், மஹாராஷ்டிரா, கர்னாடகா என்று வரிசையாக ஜனவரி கடைசி வாரம் தொடங்கி பிப்ரவரி இரண்டாம் வாரம் வரையில் 13 ஊர்களில் ஏடிஎம் கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனவாம்.  

 திரைப்படத்தில் கொள்ளையர்கள் லாரியில் வருவார்கள் என்றால் இங்கே ஒரே ஒரு சொகுசு கார் மட்டுமே.

 திரைப்படத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான வீடுகளில் கொள்ளையடிப்பார்கள் என்றால் இந்த கொள்ளையர்களோ சிசி டிவி காமெர கண்காணிப்பு உள்ள நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து கிராமப்புற சாலைகளில்தான் பயணிப்பார்களாம்,

 மேவார் கும்பலைப் பிடிக்க எந்த தீரன் ராஜஸ்தான் செல்லப் போகிறாரோ?

 பிகு: ரொம்பவும் சீரியஸாகவே எழுதிக் கொண்டிருக்கிறோமே என்று கொஞ்சம் ரிலாக்ஸ்டாக எழுதிய பதிவு இது. இதே செய்தியிலேயே கவலைப் படக் கூடிய விஷயம் ஒன்றுண்டு. அது நாளை. .