சீமான் கட்சியின் 234 வேட்பாளர்களில் 34 வேட்பாளர்கள் கடுமையான குற்றச்செயல் புரிந்தவர்கள் என்று அறிக்கை சொல்கிறது.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Tuesday, April 21, 2026
சீமான் கட்சி வேட்பாளர்கள் உத்தமர்களா? டீலிங்கா?
சீமான் கட்சியின் 234 வேட்பாளர்களில் 34 வேட்பாளர்கள் கடுமையான குற்றச்செயல் புரிந்தவர்கள் என்று அறிக்கை சொல்கிறது.
ஆஸ்பிடல் சீனையாவது காப்பியடிக்க வேண்டாம் விஜய்
ஊடகவியலாளர் தோழர் கவின்மலர் அவர்களின் முகநூல் பதிவும் அவர் பகிர்ந்த புகைப்படங்களும் கீழே உள்ளது.
Monday, April 20, 2026
குஜராத்தில் குழந்தைகள் குறையுது. செலவு ???????
குஜராத் மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில்
2022-23 ம் ஆண்டில் 42,21,257 குழந்தைகளுக்காக 1,035.84 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
அதுவே
2024-25 ம் ஆண்டில் பயன் பெற்ற குழந்தைகள் எண்ணிக்கை 40,44,689.
ஆனால்
செலவழிக்கப்பட்டதாக சொல்லப்படும் தொகை 1,626.08 கோடி ரூபாய்.
1,76,568 குழந்தைகள் குறைந்துள்ளனர்.
ஆனால் செலவு மட்டும் 590.26 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
விலைவாசி உயர்வு என்று காரணம் சொல்கிறார்கள்.
என்னத்தான் விலைவாசி உயர்வு என்றாலும் குறைந்த குழந்தைகள் எண்ணிக்கை அதை ஈடு செய்து விடும்.
மாறாக உயர்கிறது என்றால்
அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான்.
ஊழல்.
குழந்தைகளின் உணவைச் சொல்லி கொள்ளையடிப்பதுதான் குஜராத் மாடல்.
இதிலே கவலையளிக்கிற ஒரு தகவலும் இருக்கிறது. காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகள் குறைகிறது என்பது பள்ளி செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை குறைகிறது என்பதன் அடையாளமும் கூட.
இப்படிப்பட்ட மோசமான குஜராத் மாடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டுமா மிஸ்டர் எடப்பாடி?
சபாஷ் விஜய், சரியான வேட்பாளர்
விஜய்க்கு பாராட்டுக்கள். மிகச் சிறப்பான வேட்பாளரை சென்னை துறைமுகம் தொகுதியில் நிறுத்தியுள்ளார்.
அப்படியென்ன சிறப்பு?
நீங்களே காணொளியை பாருங்கள்.
மக்கள் இவரையெல்லாம் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பினால் டாஸ்மாக் பார் காட்சிகளை சட்ட சபையிலேயே அன்றாடம் பார்க்கலாம்.
பிகு: மற்ற கட்சி வேட்பாளர்கள் மிகவும் யோக்கியமா என்றெல்லாம் யாரும் அனாமதேயமாக வந்து பின்னூட்டமிட வேண்டும். இது போன்ற மோசமானவர்கள், கம்யூனிஸ்டு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். (தவறிழைப்பவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் நடவடிக்கை எடுத்து நீக்கி விடும்) ஆனால் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ்வளவு மோசமாக யாரும் நடந்து கொண்டதில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் கௌதம் கம்பீர் கூட ஒரு டூப்பைத்தான் தனக்கு பதிலாக ஜீப்பில் நிற்க வைத்தாரே தவிர, வழக்கமான மோசமான மிரட்டல் மொழியில் பேசவில்லை.
Sunday, April 19, 2026
மகளிர் மசோதா-சரியாகத்தான் சொன்னார் பேரா.காதர் மைதீன்
மகளிர் இட ஒதுக்கீட்டை அமலாக்காமல் திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் தடுத்து பாவம் செய்து விட்டார்கள் என்று பொய்யாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
மகளிர் மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளிக்கச் சொல்லி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கச் சொல்லி எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறைகூவல் கொடுத்தது. (மகளிர் மசோதாவிற்காக எங்கள் சங்கம் நடத்திய இயக்கங்கள் பற்றி மட்டுமே தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். ஒரு நூலுக்காக தொகுத்தது உள்ளது. அதனால் பகிர்வது சுலபம்)
வேலூர் எம்.பி யாக இருந்த முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் அவர்களை சந்தித்தோம்.
அப்போது அவர் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொன்னார்.
காங்கிரஸ், பிஜேபி என்றெல்லாம் இல்லை, எல்லா கட்சிகளிலும் உள்ள ஆண் எம்.பி க்கள் மகளிருக்கான இட ஒதுக்கீடு வருவதை அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுடைய தொகுதி பெண்களுக்கான தொகுதியாக மாறினால் அவர்களின் அரசியல் முடிந்து போகும் என்ற அச்சம் உள்ளது. எல்லாராலும் லாலு தன் மனைவியை முதல்வராக்கியது போல மனைவியை எம்.பி யாக்க முடியாதல்லவா! அதனால் வாய்ப்பு குறைவுதான் என்று சொன்னவர் இன்னொரு ஆலோசனையையும் சொன்னார்.
டி.கே.ரங்கராஜன் என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜ்யசபையில் இருக்கிறார். அவரை பாருங்கள். அந்த கட்சி வேண்டுமானால் இதற்காக குரல் கொடுப்பார்கள் என்பதுதான் அவர் ஆலோசனை.
மோடிக்கும் அமித்ஷாவிற்கும் எதிர்க்கட்சிகள் பேசினால் முகத்தை கடுப்பாகவே வைத்துக் கொள்ளும் சபாநாயகர் ஓம் பிர்லா, ஆவேசமாக பேசிய பிஞ்சிலே வெம்பிப் போன தேஜஸ்வி சூர்யா ஆகியோருக்கு மகளிர் இட ஒதுக்கீட்டில் ஆர்வம் இருந்தால் இப்போதுள்ள 543 என்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப 33 % இட ஒதுக்கீட்டை அளிக்கலாமே!
திமுக எம்.பி வில்சன் தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளாரே, அதை பாஜக ஆதரிக்கலாமே!
செய்வார்களா?
பிகு: இந்த பதிவிற்கு தொடர்பில்லையென்றாலும் இன்றுள்ள சூழலில் இதனையும் பதிவு செய்வது மிகவும் அவசியம்.
நாங்கள் திரு காதர் மைதீன் அவர்களை சந்திக்க சென்ற போது அவர் வாசித்துக் கொண்டிருந்தது "திருவாசகம்"
அவர் மேஜையில் இருந்த இன்னொரு நூல் "நாலாயிர திவ்விய பிரப்பந்தம்"
Saturday, April 18, 2026
மோடியே ......................என்று சொல் ஆட்டுக்காரா
ஆட்டுக்காரன் விடுத்திருந்த இந்த வீர தீர சவாலை இப்போதுதான் பார்த்தேன்.
இந்த ராசியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. மோடி துவக்கி வைக்கும் திட்டங்களில் எல்லாம் சொதப்பல் ஏற்படுவதால் சிலர் அவரை பீடை, அவருடைய ராசியால்தான் பாலம் இடிகிறது, ரோடு பிளக்கிறது, வந்தே பாரத் விபத்துக்குள்ளாகிறது என்று திட்டுவார்கள். அது மோடி பீடை என்பதால் அல்ல, மோடிக்காக காண்பிக்கிற அவசரத்தின் விளைவு, அதனால் செய்யப்படும் தரமற்ற கட்டுமானம், ஊழல் என்று சொல்வேன்.
ஆனால் ஆட்டுக்காரனின் ராசி மீது நம்பிக்கை வைக்கலமா என்று தோன்றுகிறது.
மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள கமா, புள்ளி யைக் கூட மாற்ற முடியாது என்று சொன்ன மறு நாளே, அவற்றை மோடி திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்.
அடுத்த படியாக அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் நான் தலைவர் பதவியிலிருந்து செல்ல மாட்டேன் என்றார். ஆனால் அவரால் தற்குறி என்று திட்டப்பட்ட எடப்பாடியின் நிபந்தனைக்காக ஆட்டுக்காரனின் மாநிலத் தலைவர் பதவி மட்டும் பறி போகவில்லை, எம்.எல்.ஏ சீட் கூட கொடுக்கப்படவில்லை.
இப்போ லேட்டஸ்டாக தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது என்று சொல்ல அந்த மசோதா பரிதாபமாக தோற்றுப் போய் விட்டது.
செந்தில் ஊளையிடுவதை பார்த்து விட்டு போனால் வடக்குப்பட்டி ராமசாமி வாங்கிய கடனை வசூலித்து விடலாம் என்று நம்பிப் போன கவுண்டமணியின் நிலைமையில் உள்ளது பாஜக.
அதனால் ஆட்டுக்காரன் அவர்களே,
மோடிதான் எங்கள் நிரந்தரப் பிரதமர் என்று சொல்லுங்களேன்.
துரத்தி விடப்பட்ட நிதீஷ்குமார் ஏதாவது செய்கிறாரா என்று பார்ப்போம்.
76 லட்ச ரூபாய் தாமோதர்தாஸ் சொத்தா மோடி?
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசு 76 லட்ச ரூபாய் அளவில் விளம்பரங்கள் கொடுத்துள்ளது என்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
ஏன் மிஸ்டர் மோடி,
ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு.
இரண்டு முறை தடை செய்யப்பட்ட அமைப்பு.
இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பு.
பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் குரு பீடமாக ஆர்.எஸ்.எஸ் இருக்கலாம். ஆனால் அதற்காக அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன?
தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக முதலாளிகளிடமிருந்து மிரட்டி கொள்ளையடித்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!
பி.எம். கேர்ஸ் என்ற பெயரில் மக்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏமாற்றி சேர்த்து வைத்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!
ஒரு வேளை நீங்கள் கொடுத்த அந்த 76 லட்ச ரூபாய், உங்கள் அப்பா தாமோதர் தாஸ் சம்பாதித்த சொத்துக்களிலிருந்து கொடுத்ததா?
Friday, April 17, 2026
சதி தோற்றது -சுடச்சுட செய்தி சு.வெ யிடமிருந்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன், மக்களவையிலிருந்து பகிர்ந்து கொண்ட செய்தி.
இந்திய ஜனநாயகத்திற்கும், தென்னிந்திய மாநில நலன்களுக்கும், தமிழ் நாட்டின் உரிமைக்கும் பா.ஜ.க. உண்டாக்கிய அச்சுறுத்தலை நாடாளுமன்றத்தில் வீழ்த்தினோம்.
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை தற்போது இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையிலேயே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திகிறோம்.
மகளிர் மசோதாவை கெடுத்து விட்டார்கள் என்ற அவதூறை பரப்புவார்கள். அதனையும் முறியடிப்போம்.
எடப்பாடி இழிவுபடுத்தப்படாமல் தடுத்திடுவோம்.
எல்.முருகன் எங்கே அமித்ஷா??????
மோடியின் தொகுதி மறுசீரமைப்பு மோசடி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி தோழர் சு.வெங்கடேசன், எப்போதும் போல ஒரு அழுத்தமான உரையை அற்புதமாக நிகழ்த்தியுள்ளார்.
அந்த உரையின் காணொளி கீழே உள்ளது.
வலதுசாரிகள் எப்போதுமே பெண்களை பணயம் வைக்கிறார்கள் என்று திரௌபதியை உதாரணம் காண்பித்ததை ஆளும் கட்சியினராலும் தாங்க முடியவில்லை. அவைத்தலைவர் பொறுப்பில் இருந்தவராலும் முடியவில்லை. முழுமையாக பேசும் முன்பே முடிக்க வைத்து விட்டார்கள்.
ஆவேசமான உரையில் அவர் ஒரு கேள்வி கேட்டார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எல்.முருகன் எங்கே?
தோற்றுப் போவதற்காக ஏன் அவர் பிரச்சாரம் செய்கிறார்?
ஆமாம் மோடி, எல்.முருகன் தோற்றுப் போனாலும் அமைச்சராக தொடர்வாரா?
Thursday, April 16, 2026
ஆட்டுக்காரன் பேச்சைக் கேட்டால் சொத்து நாசம்
வாக்குப் பதிவு இயந்திரத்தின் பட்டம் உடையும் வரை பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டுமாம். இது ஆட்டுக்காரன் உதிர்த்த முத்து.
ஒரு படத்தில் பேருந்தில் எழுதப்பட்டுள்ள "இது உங்கள் சொத்து" என்ற வாசகத்தைக் காண்பித்து அதை விற்க முயற்சிப்பார்.வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்படாவிட்டாலும் அது நம் சொத்து, மக்கள் சொத்து, இந்தியாவின் சொத்து.
அதனால் பாஜகவிற்கு ஓட்டு போட்டு பட்டனை உடைத்தால் நம்முடைய சொத்து நாசமாகும்.
அதனால் பாஜகவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஓட்டு போடாமல் நம்முடைய சொத்துக்களை பாதுகாப்போம்.
ரஜினி&கமல் - பாஜக காப்பி
ஸ்டிக்கர் ஒட்டுவது என்ற கலாச்சாரம் சென்னை பெரு மழையின் போது ஏ1 ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தது.
திமுக அரசோ இல்லை வேறு எந்த மாநில அரசோ எந்த ஒரு புதிய மக்கள் நலத் திட்டத்தை அறிமுகம் செய்தாலும் அவர்கள் எங்களைப் பார்த்து காப்பி அடித்து விட்டார்கள், ஸ்டிக்கர் ஒட்டி விட்டார்க்ள் என்று கதை விடுவார்கள், மோடிக்கும், மோடி வகையறாக்களுக்கும் மக்கள் நலன் என்பதற்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது என்றாலும்.
அப்படி மற்றவர்களை ஸ்டிக்கர் பாய்ஸ் என்று சொல்பவர்கள் காப்பி அடித்த கதைதான் இந்த பதிவு.
ரஜினியும் கமலும் மீண்டும் இணையவுள்ள படத்திற்கான ப்ரோமா வீடியோ வைரலான ஒன்று.
அதை அப்படியே காப்பியடித்து கமலஹாசன், ரஜினிகாந்திற்கு பதிலாக பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகளை கொண்டு வந்துள்ளனர்.
Wednesday, April 15, 2026
மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில்
"நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க, இன்னிக்கு நீங்களும் என்னை மாதிரியே மாறிட்டீங்க, நான் செஞ்ச தவறிலயே பெரிய தவறு இதுதான்"
உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற ஊரின் முடிவை நிறைவேற்ற குளத்திற்குள் இறங்கும் முன்பு விஜயன் பேசும் வசனம் அது.
மகளிர் இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டுக்கிட்டு இருந்த உங்க எல்லாரையும் இன்னிக்கு மகளிர் இட ஒதுக்கீடு வேண்டாம்னு சொல்ல வச்சுட்யேன். நான் செஞ்சதுலயே மிகப் பெரிய சாதனை இதுதான்.
-இதுதான் மோடியின் மனதில் ஓடும் வசனமாக இருக்கும்.
நாளை மோடி கொண்டு வரப்போகும் மசோதாவால் தொகுதி எண்ணிக்கைகள் எப்படி மாறும் என்பதை கீழே உள்ள பட்டியல் உணர்த்தும்.
இப்போதுள்ள 545 என்ற எண்ணிக்கையின் விகிதத்தின் படி 850 ற்கு உயர்த்தினால் 203 இடங்களை பெற வேண்டிய தென்னிந்திய மாநிலங்கள் 166 இடங்களை பெறுவதும் 313 இடங்களை பெற வேண்டிய இந்தி பேசும் வட மாநிலங்களான உபி,மபி, பீகார், குஜராத், ராஜஸ்தான் 367 இடங்களை பெறும்.
இதை மோசடி என்றழைக்காமல் வேறென்ன சொல்வது?
இதனை கண்டிப்பாக முறியடிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி என்ன செய்யப் போகிறது?
மோடிக்கு வாரிசாகும் தகுதியுள்ள மோசடிப்பேர்வழி
கீழேயுள்ள புகைப்படத்தில் உள்ள முகத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
ராஜ்யசபாவிற்கு துரத்தப்பட்ட நிதீஷ்குமாருக்குப் பதிலாக பீகார் முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ள சாம்ராட் சவுத்ரி.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டரேட் பட்டம் பெற்றதாக,
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றதாக இவர் தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினை என்னவென்றால் ஐயா, பத்தாம் க்ளாஸே பாஸ் செய்யவில்லை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிஜமாகவே இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்களா? எதற்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
பனிரெண்டாம் வகுப்பு கூட படிக்காதவர்கள், திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்பு படிக்க தொடங்குவதற்கு முன்பாக ஒரு அடிப்படை வகுப்பில் பங்கேற்க வேண்டும். அதில் கலந்து கொண்டது மட்டுமே இவரது உயர் தகுதி.
எம்.ஏ (எண்டயர் பொலிட்டிக்கல் சைன்ஸ்) படித்ததாக கதை விடும் மோடிக்கு பொருத்தமான வாரிசு இவர்தானே!
பிரதமராக, முதல்வராக படிப்பு அவசியமா என்ற கேள்வியோடு சில மேதாவிகள் வருவார்கள்.
மோடியும் சௌத்ரியும் படிக்காதது பிரச்சினை இல்லை. படித்ததாக பொய் சொன்னதுதான் பிரச்சினை.
Tuesday, April 14, 2026
காப்பான் வில்லனும் விவசாயிகள் விரோத நிர்மலா அம்மையாரும்
காப்பான் திரைப்படத்தின் ஒரு காட்சியை கீழேயுள்ள காணொளியில் பாருங்கள்.
அந்த வில்லனின் இடத்தில் அதானி, அம்பானியை வைத்துப் பாருங்கள். வில்லனின் ஆலோசனையை மறுக்கும் ஆர்யா, சூர்யாவின் இடத்தில் தமிழக, கேரள முதல்வர்கள், கம்யூனிஸ்டுகள், விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோரை வைத்துப் பாருங்கள்.
காட்சியின் இறுதியில் வில்லன் கொதிப்பது போலத்தான் இப்போது நிர்மலா அம்மையார் கொதித்துக் கொண்டிருக்கிறார்.
திரைப்படத்தின் இறுதியில் எப்படி வில்லனின் சூழ்ச்சி முறியடிக்கப்படுமோ அது போல நெல், கோதுமை உற்பத்தியை நாசமாக்க நினைக்கும் மோடி, நிர்மலா வகையறாக்களின் சதியும் தோற்றுப் போகும்.
பிகு: காப்பான் திரைப்படத்தை முதல் முறை பார்க்கும் போது பிரதமர் மோகன்லால் தாடி வைத்திருந்ததால் மோடியை குறிப்பிடுகிறார்களோ என்று நினைத்தேன். இன்னொரு முறை தொலைக்காட்சியில் பார்த்த போதுதான் நான் நினைத்தது தவறு என்று புரிந்தது. அது தனி பதிவாகவே எழுத வேண்டிய ஒன்று.
Monday, April 13, 2026
விவசாயிகளும் மக்கு மந்திரி நிர்மலாவும்
"நெல் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு தனியாக ஊக்கத் தொகை அளிப்பதால் நெல் உற்பத்தி அதிகமாகிறது. அதனால் பல பிரச்சினைகள் வருகிறது. எனவே நெல்லுக்கு மாநில அரசு தரும் ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டும்"
என்று நிதியமைச்சகம் தமிழ்நாட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியதாக முதல்வர் குற்றம் சுமத்தினார்.
அப்படியெல்லாம் நான் ஒன்றும் எழுதவில்லை என்று நிர்மலா அம்மையார் சாதித்தார்.
நிதியமைச்சகம் அனுப்பிய கடிதத்தை முதல்வர் பகிரங்கப் படுத்தி விட்டார்.
இந்த கடிதம் நெல் மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மீது வன்மத்தை கக்குகிறது.
நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதால் அதிக தண்ணீர் செலவாகிறது, உரப்பயன்பாடு அதிகரிக்கிறது. மண்ணே நாசமாகிறது, வைக்கோலை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்றெல்லாம் அடுக்கி விட்டு பருப்பு பயிரிடு, பருத்தி நடு, எண்ணெய் வித்துக்கள் போடு என்று உபதேசிக்கிறது அக்கடிதம்.
வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டேன், அதனால் அவற்றின் விலை உயர்வு பற்றி தெரியாது என்று நிர்மலா அம்மையாருக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? எந்த மண்ணில் எந்த காலத்தை என்ன பயிரிடுவது என்று விவசாயிகளுக்கு தெரியுமா? இல்லை இந்த மக்கு மந்திரிக்கு தெரியுமா?
கோதுமை, நெல் பயிரிடாவிட்டால் உணவுக்கு மக்கள் என்ன செய்வார்கள்? பருத்தியை உண்ண முடியுமா? ரொட்டியோ, சோறோ இல்லாமல் பருப்பை வைத்து என்ன செய்ய?
விவசாயிகள் பற்றியோ மக்கள் பற்றியோ கவலையில்லாத மக்கு மந்திரி நிர்மல, தன் அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தன் அமைச்சகம் அனுப்பிய கடிதமே தனக்கு தெரியாமல் அனுப்பப்பட்டு விட்டது என்று மக்குத்தனமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பாரா அல்லது வழக்கம் போல ஆணவமாக குரைப்பாரா?
தந்தை நாட்டின் பெயர் சொல்ல தைரியமில்லையா மோடி?
இரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் இருக்கும் சூழலில் அதனை சீர்குலைக்க லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்றது.
அத்தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெண்டைக்காயையும் விளக்கெண்ணெயையும் சேர்த்து ஒரு அறிக்கை.
லெபனான் மீதான தாக்குதலுக்காகவும் உயிரிழப்பிற்காகவும் வருந்தி இனி இப்படி ஒரு தாக்குதல் நடக்காமல் இருப்பது நலம் என்ற ரீதியில் அந்த அறிக்கை செல்கிறது.
தாக்குதல் நடத்திய இஸ்ரேல் கண்டிக்கப்படவே இல்லை. ஏன் இஸ்ரேலின் பெயர் கூட எந்த இடத்திலும் இல்லை.
தந்தை நாட்டின் மீது அவ்வளவு பயமா மோடி?
இஸ்ரேல் உங்களுக்கு கொடுத்த ‘Speaker of the Knesset Medal’ விருதை பறித்து விடுவார்கள் என்ற பயமா?
Sunday, April 12, 2026
பிரகாஷ்ராஜ் சீனை கிறுக்குத்தனமாய் காப்பியடித்த விஜய்
"கோ" திரைப்படத்தில் ஒரு காட்சியில் காரில் வரும் முதலமைச்சர் பிரகாஷ்ராஜ், பேட்டியெடுக்கும் கார்த்திகாவிடம் கடுப்படித்தபடி சாலையில் இறங்கி நடக்கத் தொடங்குவார். மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் உருவாகும். "என் கெத்தை பாத்தியா, மக்கள் மத்தியில எனக்கு இருக்கிற மரியாதையை கவனிச்சியா" என்ற படி மீண்டும் காரில் உட்கார்ந்து கொள்வார்.
அது திரைப்படக் காட்சி.
அந்த காட்சியை இன்று காப்பியடித்தார் தமிழக ரத்துக் கழகத்தின் தலைவர் விஜய்.
திடீரென (முன் கூட்டியே திட்டமிட்ட படி) சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து விட்டார்.
கேரவனில் போனாலே பின்னால் தொடரும் மூட ரசிகர்கள் கூட்டம் சைக்கிளில் போனால் சும்மா விடுமா?
விபத்துக்களும் நெரிசல் மரணங்களும் நடப்பதற்கான வாய்ப்புக்கள் தோன்றினாலும் அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை.
சினிமா சீன் போல கிறுக்குத்தனம் செய்த விஜயின் சைக்கிள் பயணம், அவரது தற்குறிகளில் ஒருவர் பட்டாசு கொளுத்துப் போக அவர் பயந்து போய் கேரவனில் ஏற நிறைவுக்கு வந்தது.
துரதிர்ஷ்டவசமாக ஏதாவது நடந்திருந்தால் தன் கிறுக்குத்தனத்தை மூடி மறைக்க திமுக மீது பழி போட்டிருப்பார் விஜய்.
தமிழ்நாட்டு அரசியலின் துயரம் விஜய்
Saturday, April 11, 2026
சீமான் அவ்வளவு நல்லவரில்லையே!
கீழேயுள்ள காணொளியை பாருங்கள். நீங்களும் கண்டிப்பாக சிரிப்பீர்கள்.
2000 கோடி ரூபாயும் துணை முதல்வர் பதவியும் கிடைப்பதாக இருந்தால் முதலில் ஓடிப் போய் அந்த புரவலர்களோடு கை கோர்த்துக் கொண்டிருப்பார். இப்போதும் அவர் ஏதோ வஜனம் பேஸ்ய்கிறாரே தவிர, அவற்றையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்பது உலகறிந்த உண்மை.
எரிந்த ரூபாய் நோட்டுக்களும் புனிதமாகும் முயற்சியும்
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த தீ விபத்தின் போது சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
அவரை இடை நீக்கம் செய்வதற்குப் பதிலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.
உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையை நாடாளுமன்றம் தொடங்கியது. இதில் ஏதோ சிக்கல் வர துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தாங்கர் பதவி விலகினார். அந்த மர்மம் என்ன என்பதை இன்று வரை தெரியவில்லை.
இப்போது தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தன் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் விவரித்து ஜனாதிபதிக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் காரணங்களை தெரிவிக்கவில்லை என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளாராம்.
இது அவர் தன்னை ஒரு புனிதனாக காண்பித்துக் கொள்ளும் முயற்சி. எந்த கேள்விக்கும் விசாரணைக்கும் உட்படாமல் தப்பித்துக் கொள்வதற்கான உத்தி.
ஜனாதிபதி இந்த ராஜினாமாவை நிராகரிக்க வேண்டும். ஏற்றுக் கொண்டால் யஷ்வந்த் வர்மாவின் புரவலர்கள் மோடி வகையறாக்கள், மோகன் பகவத் கூட்டத்தினர் என்பது தெளிவாகும்.
Friday, April 10, 2026
எச்.ராசா அரசியலிலிருந்து விலகலா?
மிகவும் பழைய செய்திதான் இது. இதை வைத்துக் கொண்டு பலர், எச்.ராசா ஏதோ அரசியலிலிருந்தே விலகி விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பொய்ப்பிரச்சாரமா மாலன்?????
நேற்று முகநூலில் பார்த்த ஒரு செய்தி. ஒரு வயதானவர், அவருக்கு திராவிட இயக்கமும் பிடிக்காது, சங்கிகளையும் பிடிக்காது. மோடியை திட்டுவார். அதை விட அதிகமாக தந்தை பெரியாரை திட்டுவார். கருத்துக் கணிப்புக்கள் என்ன சொல்கிறது என்று அவர் கேள்வி கேட்க, மூத்த்த்த்த்ஹ்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் என்று கருதப்படுகிற மாலன் உடனடியாக ஒரு பட்டியலை போடுகிறார்.
பாஜக கூட்டணிதான் வெற்றி பெறப்போவதாக எல்லா தொலைக்காட்சிகளும் சொல்வதாக அந்த பட்டியலில் இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இன்னொரு சங்கி உடனடியாக அதை மறுத்து அது பொய் செய்தி என்றும் ஒரு தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு திமுக கூட்டணி வெல்லும் என்று போட்ட பட்டியலை பகிர்ந்தார்.
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இப்படி கருத்துத்திணிப்பு பொய்ப்பிரச்சாரம் செய்யலாமா மிஸ்டர் மாலன்? இது கேவலமாக இல்லையா? காலம் போல காலத்தில் ஓய்வெடுக்காமல் இவ்வளவு தரம் தாழ்ந்து போகலாமா?
Thursday, April 9, 2026
திருப்பரங்குன்றம் - தீர்ப்புகள் திசை மாறுது
திருப்பரங்குன்றத்தை முன்வைத்து தமிழ்நாட்டை கலவர பூமியாக்க சங்கிகள் எடுத்த முயற்சிகள் மதுரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நடத்திய போட்டோ ஷூட் கூட வழக்கம் போல காமெடி ஷோ வாகத்தான் முடிந்து போயிருந்தது.
ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத தீர்ப்பாளர் மட்டும் அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
நேற்றும் இன்றும் அதே உயர் நீதி மன்றத்தில் வந்த தீர்ப்புகள், அந்த மிரட்டலுக்கும் இனி அவசியம் இருக்காது என்பதை உணர்த்தியுள்ளது.
நேற்று வந்த தீர்ப்பு, தீர்ப்பாளர் இனிமே வழக்கை விசாரிக்க தடை போட்டு விட்டது, அவர் கொடுத்த தீர்ப்புக்களுக்கும் கூட. . .
தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட புது வழக்கை "வேற பிழைப்பே உங்களுக்கு இல்லையாடா" என்ற ரேஞ்சில் திட்டி ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து துரத்தி விட்டு விட்டார்கள். இது நடந்தது இன்று.
திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தி ஆக்கும் முயற்சியை இனியாவது சங்கிகள் கை விடுவார்கள். உடனடி வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததால்தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. எப்போதும் போல தோற்கப் போகும் போலிப் பேராசிரியன் காம.சீனிவாசனுக்குக் கூட திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தைரியம் இல்லை.
ஆனாலும் சங்கிகள் மீண்டும் முயற்சிப்பார்கள்.
மீண்டும் தோற்றுப் போவார்கள்.
உங்களைத்தாண்டா மக்கள் மன்னிக்க மாட்டாங்க
Wednesday, April 8, 2026
இரான் - இருளில் ஒளி
சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் சிறப்பான ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். இரான் மக்களின் மன உறுதிக்கு சான்றாக இப்பதிவு அமைந்துள்ளது.
ஈரானிய மக்கள் உலகிற்கு காட்டிய வெளிச்சம்...
கறி விருந்திற்கு வாய்ப்பில்லை சுந்தர்.சி
புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்தி தொகுதியில் போட்டியிடும் பாஜக பொறுப்பாளர் குஷ்புவின் கணவர், இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி, தான் எம்.எல்.ஏ ஆனால் மதுரை மத்திய தொகுதியில் அசைவ விடுதிகளை மூடி மீனாட்சி அம்மன் கோயில் புனிதத்தை பாதுகாப்பேன் என்று பேசியதாக ஒரு செய்தி உலாவியது.
பிரபலமான அசைவ விடுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மதுரையில் இப்படியெல்லாம் பேசுமளவிற்கு சுந்தர்.சி மோசமான சங்கியா என்று சின்ன சந்தேகம் வந்தாலும் அந்த செய்தியை உறுதிப்படுத்தாமல் பதிவு எழுத வேண்டாம் என்றிருந்தேன்.
அந்த செய்தி சரியில்லை என்றும் தன் வெற்றிக்குப் பிறகு அச்செய்தியை பரப்பியவர்களுக்கும் சேர்த்து கறி விருந்து கொடுப்பேன் என்று சுந்தர்.சி பேசியுள்ளார்.
ஆனால் திரு சுந்தர் அவர்களே, நீங்கள் வெற்றி பெறப் போவதுமில்லை. யாருக்குமே கறி விருந்துமே தரப் போவதில்லை.இந்த தேர்தல் காரணமாக கமலஹாசன் தயாரித்து, ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்து விட்டேனே என்று நீங்கள் புலம்பப் போவது மட்டுமே நடக்கப் போகிறது.
பாவம் ஏ.சி.சண்முகம்! இது நாள் வரை வேலூர் மக்களவை தொகுதியில் அவர் போட்டியிட்டு கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளார், அதனை மாணவர்களிடமிருந்து வசூலித்து விடுவார் என்பது வேறு.
தனக்காக பணத்தை இழந்த அவர், முதல் முறையாக உங்களுக்காக பணத்தை இழக்கப் போகிறார்.

















































