Tuesday, February 10, 2026

சங்கிகளின் நடையே தனி!!!

 


முக நூலில் பார்த்து சிரித்த ஒரு காணொளியை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நேரடி பிரதிநிதியாக தமிழ்நாடு பாஜகவின் அமைப்புச் செயலாளராக இருந்த கேசவ வினாகத்தை அந்த பதவியிலிருந்து தூக்கியுள்ளார்கள். அதெல்லாம் அவர்களின் உட்கட்சி விஷயங்கள். அந்தாள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக நிச்சயம் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். காரணம் BJP என்பதன் விரிவே B.JOLLU.P தான்.



துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பது போல பதவி பறிப்புதான் இந்த கிறுக்கு நடைக்கு காரணமாக இருக்குமோ?

மூவரைப் பெற்றால் சர்சங்சாலக் சோறு போடுவாரா?

 


இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத, அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் உதிர்த்த முத்து கீழே உள்ளது.


அவர் சொல்லும் முதல் விஷயம் விஷம். வழக்கமான விஷம். மத வெறியை தூண்டுவதை மட்டுமே நூறாண்டுகளாக செய்து கொண்டிருக்கும் கேவலமான அமைப்பு இது.

கடந்த பல பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் சிறுபான்மையினரின் சதவிகிதம் அதிகரிக்கவே இல்லை என்பதுதான். அது மட்டுமல்ல, கடைசி இரண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புக்கள் இஸ்லாமியர்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இந்துக்களை விட குறைவாகவே இருந்திருக்கிறது. 

2021 ல் எடுக்கப்பட வேண்டிய மக்கட்தொகை கணக்கெடுப்பை இதுவரை துவக்காமல் இருப்பது கூட ஆர்.எஸ்.எஸ் அளந்து கொண்டிருக்கும் கட்டுக்கதை அவர்கள் ஆட்சியிலேயே அம்பலமாகி விடும் என்பதுதான்.

நிற்க

மூன்று பேரை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்கிற மோகன் பகவத் திருமணமாகாதவர். அவருக்கு குடும்பத்தை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தெரியாது. வெங்காயம் சாப்பிடாதாதால் எனக்கு வெங்காய விலை உயர்வு பற்றி தெரியாது என்று சொன்ன நிர்மலா அம்மையார் கேடகிரிதான் இவர்.

இவருக்கு குழந்தைகளை வளர்ப்பதற்காக ஆகும் உணவுச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு, திருமணச் செலவு ஆகியவற்றைப் பற்றி தெரியுமா?

வேலையின்மை பிரச்சினையைப் பற்றி தெரியுமா?

குடும்ப பாரம் சுமக்காத இவருக்கு குடும்பத்தை பெருக்கச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

மூன்று குழந்தைகளுக்கான செலவுகளை அரசு கொடுக்குமா? இது என்ன பழைய சோவியத் யூனியன் அரசா?

கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி கொழுத்துப் போயிருக்கும் பாஜக அளிக்குமா?

முடியாது அல்லவா?

SO SHUT UP MR MOHAN BHAGAWATH

Monday, February 9, 2026

மோடிக்கு இதெல்லாம் ஒரு பிழைப்பா சங்கிகளே?

 மலேசியாவில் மோடி தமிழை உயர்த்திப் பிடித்ததாக பாஜக ஐ.டி விங் எழுதிக் கொடுத்ததை அப்படியே பகிர்ந்து கொண்டு பீற்றிக் கொண்டிருக்கும் மருத்துவனையில் படுத்துக் கொண்டிருக்கும் ஹைகோர்ட் புகழ் எச்.ராசா உட்பட அனைத்து சங்கிகளுக்கும் கீழே உள்ள படம் சமர்ப்பணம். . . 



அஸ்ஸாம் முதல்வருக்கு கருணை கூடாது



 ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா - அஸ்ஸாமின் முதலமைச்சர், 2015 ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தவர். முதல்வர் கனவிலும் இருந்தவர். ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்களை பாஜக முன் வைக்க, பாஜகவிலேயே சேர்ந்து மோடி வாஷிங் மிஷின் மூலமாக புனிதராக மாறி பாஜக சார்பிலேயே முதலமைச்சராக ஐந்தாண்டுகளாக குப்பை கொட்டிக் கொண்டு இருப்பவர்.

அஸ்ஸாம் பாஜக நேற்று ஒரு காணொளி வெளியிட்டது. அந்த காணொளியில் ஹி.பி.சர்மா துப்பாக்கியால் சுடுகிறார். அவர் குறி பார்ப்பது இஸ்லாமியர்களை. NO MERCY கருணையே கிடையாது என்ற வாசகத்துடன் காணொளி முடிகிறது.



அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடான இந்த காணொளியை அஸ்ஸாம் பாஜக இப்போது நீக்கி விட்டது.

இப்படிப்பட்ட காணொளி மூலம் ஹி.பி.சர்மா தன் தொ/குண்டர்களுக்கு என்ன சொல்கிறார்?

இஸ்லாமியர்களை அழித்தொழியுங்கள் என்பதைத்தான் மிகவும் வெளிப்படையாக சொல்கிறார்.

இப்படிப்பட்ட முதல்வர் மீது மோடி நடவடிக்கை எடுக்க மாட்டார்.

தெருநாய் பிரச்சினை போல உச்ச நீதிமன்றமும் தன்னியல்பாக நடவடிக்கை எடுக்காது.

அஸ்ஸாம் மக்கள்தான் தெருவில் இறங்கி போராட வேண்டும்,  பதவி விலகும் வரை போராட வேண்டும். ஹி.பி,சர்மாவுக்கு அவசியமே இல்லை, கருணை . . .

Sunday, February 8, 2026

ட்ரம்ப் இடத்தில் மோடியை நினைத்தால்

 


காலையில் முகநூலில் பார்த்த காணொளி கீழே உள்ளது.


டொனால்ட் ட்ரம்ப் இடத்தில் மோடியை நினைத்து பாருங்கள்.

கலாய்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உண்டு.

ஆனால் அப்படி கலாய்ப்பவர்கள் செல்லும் இடம் திஹார் சிறையாகவோ அல்லது போலி எண்கவுண்டராகவோ இருக்கும். 

Saturday, February 7, 2026

ஏலம் போகுது A1 மாளிகை

 


மேலே உள்ள மாளிகை யாருடையது தெரியுமா?

கீழே உள்ள படத்தை பாருங்கள்

இப்போது தெரிந்ததா?

ஆம்.

A1 ஆட்சி செய்த சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் மாளிகைதான் அது.

ஜெ இறந்த பிறகு அந்த மாளிகை அவரது அண்ணன் மகன், மகள் ஆன தீபக், தீபா ஆகியோர் வசம் சென்றது.

1991-92 நிதியாண்டு தொடங்கி 2006-2007 நிதியாண்டு வரை கட்ட வேண்டிய வருமான வரி, 1992-93 நிதியாண்டு தொடங்கி 2015-2016 வரை கட்ட வேண்டிய சொத்து வரி ஆகியவற்றின் பாக்கி, அதற்கான அபராத வட்டி எல்லாமுமாக சேர்த்து 13.69 கோடி கட்ட வேண்டும்.

சொத்துக்களின் வாரிசுகளான தீபக்கையும் தீபாவையும் கட்டச் சொன்னார்கள்.

ஆளுக்கு பாதியாக பிரிக்க வேண்டும், தவணை முறையில் கட்ட வேண்டும் என்று தீபக் நீதிமன்றம் செல்ல, தீர்ப்பும் அப்படியே வந்தது.

தான் கட்ட வேண்டிய தொகையில் இரண்டு தவனைகளோடு தீபக் நிறுத்திக் கொள்ள, தீபாவோ ஒரு பைசா கூட கட்டவில்லை.

அதனால் நீதிமன்ற அனுமதியோடு போயஸ் கார்டன் மாளிகையை ஏலம் போடப் போகிறார்கள்.

ஜெ அதிகாரம் செய்த இடம், ஊழல் செய்து வாங்கிய நகைகள் முதற்கொண்டு செருப்புகள் வரை அடுக்கி வைத்திருந்த இடம். வெள்ளத்தில் சென்னை மிதக்கும் நிலை  வந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த இடம். ரஜினிகாந்தை நடந்து போகச் சொன்ன இடம்.

"ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள் போன கதை தெரியுமா?" என்று ஒரு சூர்யா பாட்டு உண்டு.

அதில் ஒரு கதை தான் ஜெ வின் கதை.

இப்போது ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி வகையறாக்களும் விஜய் வகையறாக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவம். 



மார்க்ஸை நாங்கள் மறக்கவில்லை, இந்தி இசையையும்

 


சென்னையில் பேராசான் காரல் மார்க்ஸின் சிலை கம்பீரமாக எழுந்துள்ளது.


காரல் மார்க்ஸின் சிலை சங்கிகளுக்கு பதற்றத்தையும் எரிச்சலையும் அளித்திருக்கிறது.கண்ட இடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலே இந்தி இசை அம்மையாரின் ஒப்பாரி ரொம்பவே அதிகமாக இருக்கிறது. 


அந்த அறிவு கெட்ட அம்மையாருக்கெல்லாம் விளக்கமாக பதில் சொல்வது வீண்.

தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேறு சில அமைப்புக்களும் கார்ல் மார்க்ஸை மறக்காத காரணத்தால்தான் அவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். 

ஆனால் இந்தியிசை அம்மையார்தான் கலைஞர் ஆட்சியில் தமிழறிஞர்களுக்கான இட ஒதுக்கீட்டில்  எம்.பி.பி.எஸ் படித்தார் என்பதை மறந்து விட்டார்.

அடுத்தவர் தயவில் வாழும் அளவிற்கு தன் வாழ்க்கைக்கு காரணமான தந்தையையே மறந்து விட்டார்.

குமரி அனந்தனின் கௌரவத்தை மீட்டெடுக்க திமுக அரசுதான் அவருக்கு வீடு கொடுத்தது என்பதையும் மறந்து விட்டார். 

பாவம்!

அப்புறம் முருகனை கும்பிட முடியவில்லையா? அறுபடை வீடுகளை மூடி விட்டார்களா என்ன? கோயில்களில் எப்போதும் பக்தர்கள் எப்போதும் போல வழிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

முருகனை வைத்து கலவரம் செய்த நினைத்த சங்கிகள்தான் அசிங்கமாக நிற்கிறார்கள், முருகன் அணிந்த அந்த ஒற்றை ஆடை கூட இல்லாமல் . . .