தோழர் கவிஞர் சுகிர்தராணியின் கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.
சாதியற்றவனின் மரணம்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
தோழர் கவிஞர் சுகிர்தராணியின் கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.
சாதியற்றவனின் மரணம்
கீழே உள்ளது சங்கி சுமந்த் ராமனின் ட்வீட்
என்று சொன்னதன் மூலம் சுமந்த் இரண்டு விஷயங்களை ஒப்புக் கொள்கிறார்.
தேர்தலில் வெல்லப் போவது திமுக கூட்டணிதான்.
வெற்றி பெற்ற எம்.எல்.ஏ க்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்க பாஜக தயாராகிக் கொண்டிருக்கிறது.
பாவம், மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக எழுதி விட்டார்
நேற்று
முன் தினம் ஆஜான் குண்டர் படை தளபதி லச்சூ
பற்றி போட்ட பதிவில் ஒருவர் “தோழர் என்பதே அவருக்கு அருவருப்பாக உள்ளதாம்” என்று எழுதி
இருந்தார்.
மனிதன்
என்று அழைக்கப்படுவதற்கே அருகதையற்ற மத வெறி அழிவு சக்தியெல்லாம் “தோழர்” என்ற உன்னதமான
வார்த்தை பற்றி பேசுவதெல்லாம் கொடுமையானது.
சேற்றில் புழலும் பன்றி அப்படித்தான் பேசும்.
வழக்கறிஞரும் இளம் எழுத்தாளருமான தோழர் அ.கரீம் அவர்களின் முக நூல் பதிவையும் நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் நீல நிறத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த முறை மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் நாளன்று சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் காட்டுமன்னார் கோயில் ஒன்றியத்தின் பொன்பரப்பி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வெறியாட்டம் ஆடி தலித் மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர்.
இந்த வருடம் அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று மனதில் ஒரு சின்ன நிறைவு இருந்தது.
அப்படியெல்லாம் மன நிறைவு அடைய விட மாட்டோம் என பாமகவினர் மீண்டும் தங்கள் ரௌடித்தனத்தை தொடங்கினர்.
அரக்கோணம் தொகுதி சோகனூரில் பாமகவினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதிலே ஒருவருக்கு 15 நாட்களுக்கு முன்பும் இன்னொருவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பும்தான் திருமணம் ஆகியுள்ளது. இன்னும் மூவர் உடல் நிலை கவலைக்கிடமாக் உள்ளது.
ஆண்ட பரம்பரை எனும் போலிப் பெருமையால் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்குவது என்பது பாமகவிற்கு வாடிக்கையாகி விட்டது.
சீமான் முட்டாள் சீடர்களை உருவாக்குகின்றார் என்றால் டாக்டரய்யாக்கள் கொலைகார தொண்டர்களை உருவாக்குகின்றனர்.
சிறைக்கு போகப் போவது கொலை செய்தவர்கள். மருத்துவரய்யாக்கள் தைலாபுரம் தோட்டத்தில் சொகுசு வாழ்க்கையை தொடர்வார்கள்.
எதிர்கால சந்ததியையாவது இவர்கள் வன்முறைச் சதியின் பிடியிலிருந்து பாதுகாக்க பாமக வை தடை செய்ய வேண்டும். இதைத்தவிர வேறு வழி கிடையாது.
கொல்லப்பட்டவர்கள் என் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
இன்று காலை அலுவலகம் வரும் போது பக்கத்திலேயே இன்னொரு இரு சக்கர வாகனம். வாகனத்தை ஓட்டியவர் பின்னால் அமர்ந்தவரிடம் உரத்த குரலில் கத்திக் கொண்டு வந்தார்.
“அண்ணன் இல்லைன்னா இவனுங்க எல்லாம் யாருன்னு ஒரு நாய்க்குக் கூட தெரியாது. ஏதோ பெரிசா ரூம் போட்டானுங்கன்னு வீடியோ போடறானுங்க . . . ……
………………………….. அண்ணன் யாரு. அவரு எப்போ டைரக்ட் செய்யப் போனாலும் கோடிக் கணக்கா பணம் கொட்டும். இந்த பிச்சைக்கார ………………. எல்லாம் அண்ணனுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது”
ரொம்பவுமே உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கிட்டு இருந்தாரு அந்த நாதக தம்பி. அதில ஒன்னும் பிரச்சினை இல்லை.
ஆனால் மேடையில் பேசுவது போல ஒரு நொடி வலது கையை உயர்த்துவது, அடுத்த நொடி இடது கையை உயர்த்துவது. வானத்தை நோக்கி காற்றில் குத்து விடுவது என்ற அவரது செய்கைதான் பயம் கொடுத்தது.
இதற்குள்ளாக எங்கள் பகுதியில் உள்ள சிறு பாலம் வந்து விட்டது. குண்டும் குழியுமாக உள்ள அந்த பாலத்தில் இரண்டு கைகளையும் வாகனத்தின் மீது வைத்திருந்தாலே பேலன்ஸ் கிடைப்பது சிரமம்! இதிலே ஒற்றைக் கையில் வண்டியைப் பிடித்து சாகஸம் காட்டுபவர் நம் மீது விழுந்தால் என்ன ஆவது என்ற அச்சம் வந்தது.
வாட்சைப் பார்த்தேன். இரண்டு நிமிடம் நின்றாலும் கூட பத்து மணிக்கு முன்பாக அலுவலகத்திற்கு போய் விடலாம் என்று நம்பிக்கை வந்ததால் பொறுத்திருந்து அந்த தம்பிக்கும் எனக்கும் மத்தியில் பாதுகாப்பான இடைவெளியை உருவாக்கிக் கொண்டேன்.
பார்த்துப் போ என்று சொல்லலாமா என்று யோசித்தேன். உணர்ச்சி வேகத்தில் ஏற்கனவே அந்த தம்பி புள்ளி வைத்த வார்த்தைகளாக பேசிக் கொண்டிருந்தது. எதற்கு தேவையில்லாமல் நாமும் …………………… வார்த்தைகளில் திட்டு வாங்க வேண்டும் என்று அமைதியாக வந்து விட்டேன்.
இளைஞர்களில் ஒரு பகுதியை சீமான் சீரழித்து வைத்துள்ளார் என்பது வருத்தமானது.
அவர்கள் தலைவர் ஆடம்பர வாழ்க்கை யாருடைய செலவில் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.