Monday, March 23, 2026

8931 நாட்கள் வேதனைதான் சங்கிகளே

 


ஏதோ 1983 உலகக் கோப்பையில் கபில்தேவ் 175 ரன் அடித்து உலகச் சாதனையை உருவாக்கியது போல 

ஏதோ ஒரு சாதனை படைத்ததாக சங்கிகள் இன்று பீற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் முதல்வராகவும் இந்திய பிரதமராகவும் அவர் 8931 நாட்கள் பதவியில் இருந்து சாதனை படைத்ததாக பீற்றிக் கொள்கிறார்கள்.

குஜராத் முதல்வராகவோ அல்லது இந்திய பிரதமராகவோ அவர் எதுவும் கிழிக்கவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை.

பூஜ் நில நடுக்கத்தின் போது அன்றைய முதல்வர் கேசுபாய் பட்டேல் மீது ஏற்பட்ட  அதிருப்தி காரணமாக யானை மாலை போட்டு ...............அரசன் ஆன கதையாக அவர் முதலமைச்சர் ஆனார்.

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்றதுதான் அவருடைய ஒரே சாதனை. 

அவருடைய செல்வாக்கு சரியும் போதெல்லாம் போலி எண்கவுண்டர்கள் செய்தது இன்னொரு சாதனை.

அவருடைய சாதனைகள் தொடர்பாக அவர் முதல்வராக இருக்கும் போதே எழுதிய மூன்று பதிவுகளை படியுங்கள்.

உங்கள் மகன் மோடி போல இருப்பதை அனுமதிப்பீர்களா?

குஜராத் கோயபல்ஸ்கள்

டாடா நானோ -மேற்கு வங்கத்திலும் குஜராத்திலும்

பிரதமராக என்ன கிழித்தார் என்பதை நிறைய நிறைய எழுதியுள்ளேன். எதற்கும் லாயக்கில்லாத, ஊதிப் பெருக்கப்பட்ட வெற்று பிம்பம் மோடி.

அவருடைய ஆட்சிக்காலம் அவருடைய ஊதாரித்தனமான சொகுசு வாழ்விற்கு உதவியுள்ளது. எஜமானர்கள் அதானி, அம்பானி வகையறாக்கள் செல்வம் பெருக வழி வகுத்துள்ளது.  ட்ரம்ப், நெதன்யாகு போன்ற எஜமானர்கள்  அடி பணிந்து கிடப்பதே சொர்க்கமாய் நினைக்கிறார்.

மோடி குஜராத் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் கொடுத்தது

8931 நாட்கள் வேதனை மட்டுமே. 

அசிங்கப்படுத்தும் சங்கிப் பெண்ணின் நேர்மை


 கீழே உள்ள பதிவை எழுதிய பெண்மணி பாஜகவின் மகளிர் அணி பொறுப்பாளர். ஆபாசமாகவும் அசிங்கமாகவும் எழுதக்கூடியவர். 

கௌசல்யா சங்கர், ஃபாத்திமா பாபு ஆகிய பெண் ஆளுமைகளை இழிவு படுத்தி வாங்கிக் கட்டிக் கொண்டார். வாச்சாத்திப் போராளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களை அசிங்கமாக ஒருமையில் எழுதிய போது நான் சூடாக பதிலடி கொடுத்தேன்.

நேற்று முகநூல் இந்த அம்மையாரின் பதிவொன்றை மெனக்கெட்டு எனக்கு காண்பித்தது.


தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குஷ்புவை உருவக்கேலி செய்த அவருக்கு நான் எழுதிய பின்னூட்டம் கீழே . . .


ஆமாம் இவர் இவ்வளவு தெனாவெட்டாக எழுதுவதற்கான காரணம் என்ன? எங்கிருந்து தைரியம் வருகிறது?

சனாதனம் கொடுக்கும் தைரியம், மேட்டிமை புத்தி கொடுக்கும் திமிர்.

 தோழர் பெ.சண்முகமும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சங்கரை மணம் செய்து அவரை பறி கொடுத்து ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நிற்பவர் கௌசல்யா. ஃபாத்திமா பாபுவும் குஷ்புவும் இஸ்லாமியர்கள். அதனால்தான் அவர்கள் மீதெல்லாம் இந்த சங்கிப் பெண்மணி வெறுப்பைக் கக்குகிறார்.

Sunday, March 22, 2026

மீண்டும் மஞ்சுமல் பாய்ஸ் வேண்டாம்

 


மலையாளத் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கேரளாவிலிருந்து கொடைக்கானல் உல்லாசப் பயணம் வந்து "குணா" குகையில் விழுந்து உயிர் தப்பிய இளைஞனின், அவனை மீட்ட நண்பர்களின் கதை.

கேரள் வாலிபர்களை குடிகாரர்கள், இத்யாதி, இத்யாதி என ஜெயமோகன் திட்டி அதனால் பாட்டு வாங்கியதும் "கண்மணி அன்போடு" பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு போட்டதும் கிளைக் கதைகள்.







மேலே உள்ள அழகிய படங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலையின் அற்புதக் காட்சிகள்.


நேற்று முன் தினம் அங்கே ஒரு வாலிபன் செல்ஃபி எடுக்கும்  மோகத்தில் வேகத்தில் கால் தவறி விழ நூறு அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டான்.

ராணுவத்தினர் வந்து சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளனர்.


இன்று செல்பி மோகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

புகைப்படங்கள் எடுங்கள். 

ஆனால் உயிரைப்பற்றியும் கவலைப்படுங்கள்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது.

இன்னும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் அனுபவம் வேண்டாமே 


Saturday, March 21, 2026

நிலமே நடுங்கிப் போச்சு டாக்டரய்யா

 


நேற்று தமிழ்நாடு முழுதிலும் சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தீர்களா?

ஆமாம்.

நான் கூட நடுங்கிப் போய் விட்டேன்.

காரணம் தெரியுமா?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

இதோ பாருங்கள்


இந்த தேர்தலின் முதல் காமெடி இது.

இன்னும் என்னென்ன வருமோ? ஆட்டுக்காரன் தயவு செய்தால் நிறைய காமெடி கிடைக்கும். 

Friday, March 20, 2026

பிரதமர்-ஜனாதிபதி. தூரத்திற்கான காரணம் என்ன?

 


இறையாண்மை கொண்ட சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசான இந்தியாவின் ஜனாதிபதி நேற்று அயோத்தி சென்று அங்கே ராமர் கோயிலில் வழிபட்டு, அதற்கான வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாள் பாக்கியம் என்று சொன்னதாக இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன்.

ஜனாதிபதி கோயிலில் வழிபடும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் பார்த்தேன். குடியரசுத்தலைவரின் ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த புகைப்படம் கீழே


மனதுக்குள் ஏதோ மணி அடித்தது.

கோயில் திறப்பு விழா புகைப்படங்களை தேடினேன்.




மோடியும் ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்தும் எங்கே நிற்கிறார்கள் பாருங்கள்.

ஜனாதிபதி எங்கே நிறுத்தப்பட்டுள்ளார் என்று பாருங்கள். 

மோடி பிரதமர், மோகன் பகவத் எந்த அரச பதவியிலும் இல்லாதவர். அவர்கள் ராம் லல்லா விக்கிரகத்தின் அருகாமையில் நிற்க இந்தியாவின் முதல் குடிமகளான ஜனாதிபதி சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மட்டுமல்ல, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்குக் கூட அழைக்கப் படவில்லை.

காரணம் அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்.

அதனால்தான் சனாதனம் அவரை தூரத்தில் நிறுத்தி வைத்தது. 

Thursday, March 19, 2026

தவெக தொண்டர்களும் செந்தில் காமெடியும்

 


தற்போது தவெகவில் வாயை விற்றுக் கொண்டிருக்கிற நாஞ்சில் சம்பத் (ஆமாம், இங்கே இன்னோவா கார் கொடுத்தாங்களா?) தவெக தொண்டர்களின் செயல்திறன் (!) பற்றி வர்ணித்ததை படித்ததும் "நட்புக்காக" படத்தில் மலையை தூக்குவேன் என்று சொல்லி வசூல் செய்து பின்பு என் கையில் தூக்கி வையுங்கள், தூக்குவேன் என்று சொல்லி அடி வாங்குவார். அப்படி அடி வாங்குபவரை காப்பாற்றுகிற சாமியர் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொல்லும் வசனம்தான் நினைவுக்க்கு வந்தது. 


இதைக் கேட்டு உசுப்பேறி தவெக தற்குறிகள் மின்னலை பிடிக்க உலகம் சுற்றும் வாலிபன் முருகன் போல முயற்சித்தோ, மின்சார வயரைப் பிடித்தோ கருகிப் போகக்கூடாது என்பதுதான் என் விருப்பம். 

Wednesday, March 18, 2026

நிஜத்தில் அப்படியில்லையே நிர்மலா அம்மையாரே!

 


இன்சூரன்ஸ் துறை சம்பந்தமாக நேற்று நிர்மலா அம்மையார் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். அதை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இன்சூரன்ஸ் ஒழுங்காற்று வளர்ச்சி ஆணையம் (IRDA) மிகவும் கறாராக பொதுத்துறை, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை கண்காணித்து பாலிசிதாரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும்  தவறிழைக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீது அபராதம் விதித்துள்ளதாகவும் சொல்லியுள்ளார்.


ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.டி,ஃஎப்சி இன்சூரன்ஸ் ஆகியவைக்கு தலா இரண்டு கோடி ரூபாயும்  ராயல் சுந்தரம், எஸ்.பி.ஐ லைப் ஆகிய கம்பெனிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது அமைச்சரின் அறிக்கை.

எல்.ஐ.சி யின் மீதோ, மற்ற நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீதோ அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதை மட்டும் அமைச்சர் ஏனோ சொல்லவில்லை. அதெப்படி பொதுத்துறையை அவரால் பாராட்ட முடியும்!

இதை படிக்கையில் ஐ.ஆர்.டி.ஏ ஏதோ சுத்த சுயம்பிரகாச நியாயவான் போல தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் வேறு.

இந்த அபராதம் எல்லாம் வேறு வழியில்லாமல், ஏராளமான புகார்கள் வந்து,  ஆம்புட்ஸ்மேன்,  நீதிமன்றம் குட்டி விதிக்கப்பட்டவை.

உன்மையின் ஐ.ஆர்.டி.ஏ எல்.ஐ.சி, பொதுத்துறை  பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஒழுங்காற்று வாரியமாக, தனியார் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாக செயல்பட்டு வருகிறது.

எல்.ஐ.சி முகவர்களை தனியார் கம்பெனிகளுக்கு மடை மாற்றி விடக்கூடிய விதத்தில் இன்சூரன்ஸ் சட்டங்களில்  மாற்றம்,

எல்.ஐ.சி புதிய பாலிசிகளுக்கு அனுமதி கேட்கையில் இழுத்தடிப்பது, தனியார் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பள மரியாதை கொடுப்பது,

முகவர்களின் கமிஷன் விகிதத்தை குறைத்து வணிகத்தை முடக்க முயல்வது (எல்.ஐ.சி யின் வணிகத்தில் 90 % முகவர்கள் மூலம் வருகிறது. தனியார் கம்பெனிகளில் 10 % வணிகம்தான் முகவர் மூலம் வருகிறது) 

ஐ.ஆர்.டி.ஏ அடிப்படையில் பொதுத்துறைக்கு வில்லன். அதற்கு மாறான ஒரு சித்திரத்தை நிர்மலா அம்மையார் கொடுத்துள்ளார்.

இந்த டுபாக்கூர் வேலைகள்தான் மோடி அரசின் அடையாளம்.