ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Tuesday, February 3, 2026
மீண்டும் மோடியை சிறைப்படுத்திய ட்ரம்ப்
அதாம்லே நிர்மலா சீத்தாராமன் !
நிர்மலா அம்மையார் பட்ஜெட்டில் கொடுத்துள்ள ஒரு அறிவிப்பு கீழே உள்ளது.
கடலே இல்லாத வாரணாசியிலும் பாட்னாவிலும் கப்பல் ரிப்பேர் மையம் எப்படி சாத்தியம் என்று எல்லோரும் கிண்டலடித்துள்ளார்கள்.
ஐடியா இல்லாத ஆளுங்க!
அவங்களுக்கு நிர்மலா அம்மையாரின் ப்ளானே தெரியலை.
வாரணாசியிலும் பாட்னாவிலும் கப்பல் ரிப்பேர் சென்டருக்கு கப்பல் வர வேண்டும். அதனால் அருகிலிருந்த கடலிருந்து கப்பல்கள் செல்லும் அளவிற்கு மிகப் பெரிய கால்வாய்கள் தோண்டப்படும். சேது சமுத்திர திட்டத்தை இவர்கள் சீரழித்தாலும் இதனை செயல்படுத்துவார்கள்.
அந்த கால்வாய்கள் தோண்டுவதற்கான ஒப்பந்தம் அதானி, அம்பானிக்கு வழங்கப்படும்.
அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக அதானி, அம்பானிக்கு ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகள் கடன் தரும்.
எப்படி விமான நிலையங்களும் துறைமுகங்களும் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அது போல கப்பல் ரிப்பேர் சென்டர்களும் அதானிக்கு வழங்கப்படும்.
அதை வாங்குவதற்கான பணம்?
எதற்கு இருக்கின்றன அரசு வங்கிகள்!
வாங்கிய கடனை அதானி எப்படியும் திருப்பி கட்ட மாட்டார். அதனால் சில வருடங்கள் கழித்து அனைத்து கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.
அதானி, அம்பானிக்கு கொடுக்க எதுவும் இல்லாத போது இப்படி எதையாவது புதிதாக உருவாக்கித்தானே தர வேண்டும்!
அதனால்தான் கப்பல் ரிப்பேர் சென்டர்.
அங்கதான் நிக்கறாங்க நிர்மலா சீத்தாராமன்.
Monday, February 2, 2026
மரண பயத்தில் நடுங்கிய பாஜக . . .
சங்கிகள் - திருந்த மாட்டார்கள்
பாஜகவின் பெரிய சங்கி எச்.ராசா ஒரு நிகழ்வில் பங்கேற்ற போது அவருக்கு உடல் நலன் பாதிக்கப்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மேடையில் சரிந்து விழும் போது திமுக வைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய மருத்துவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவரும் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளனர். திமுக கொண்டு வந்த தமிழறிஞர் இட ஒதுக்கீட்டுத் திட்டம் மூலம் மருத்துவரான தமிழிசை அம்மையார் அவர்களும் தலையிட்டுள்ளார்.
தமிழிசை நீங்கலாக மற்றவர்களும் தலையிட்டுள்ளது காணொளி ஒன்றில் தெளிவாக தெரிகிறது.
எச்.ராசாவிற்கு மற்றவர்கள் உதவியதை பார்த்த சிலர் பதிவிட்டுள்ளனர். முதல்வர் சென்ற வாகனத்தின் டயர் வெடித்த போது அது முருகன் செயல் என்று உரக்கச் சிரித்த சங்கிகள் போல யாரும் எதுவும் எழுதவில்லை. தமிழ்நாட்டின் மனித நேய மரபை உணர்ந்து இனியாவது எச்.ராசா வெறுப்பரசியலை கைவிடுவார் என்ற நம்பிக்கையைத்தான் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் சங்கிகளால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தலைவருக்கு ஒரு இஸ்லாமியரும் காங்கிரஸ் பெண்மணி ஒருவரும் உதவினார் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சில்லறை சங்கிகள் மட்டுமல்ல பெரிய சங்கி தமிழிசை கூட உண்மைகளை மூடி மறைத்து ஸ்டிக்கர் ஒட்டியதாக கதை விடத் தொடங்கினர்.
முதல்வர் சென்று நலன் விசாரித்ததைக் கூட கொச்சைப்படுத்தி உள்ளனர்.
சங்கிகள் மனித நேயம் என்பதற்கு அர்த்தம் தெரியாத, எந்த நாகரீகமும் அற்ற காட்டுமிராண்டிகள்,
நாளை எச்.ராசா நலம் பெற்று வந்தால் கூட விஷம் போல வெறுப்பைத்தான் கக்குவார்.
அவர்கள் அனைவருமே என்றுமே திருந்தாத ஜந்துக்கள்.
Sunday, February 1, 2026
இந்த வருஷ பட்ஜெட்டிலும் . . .
கோட்சேவுக்காக மறைக்கப்படுகிறதா காந்தியின் உடல்?
நேற்று முன் தினம் மகாத்மாவை மறவோம், கோட்சேவையும் . . . என்ற பதிவில் போடுவதற்காக மகாத்மாவின் சடலத்தை வைத்திருக்கும் படத்தை கூகிளில் தேடினேன்.
என்ன பதில் கிடைத்தது பாருங்கள்.
மகாத்மா காந்தியின் பெயரை வேலை உறுதிச்சட்டத்திலிருந்து நீக்கியவர்கள், இப்போது அவரது சடலத்தின் படத்தையும் இருட்டடிப்பு செய்கிறார்கள்.
கோட்சேவின் புகழ் பாடும் மோடி வகையறாக்களுக்கு அவனால் கொல்லப் பட்ட மகாத்மாவின் சடலம் பொது வெளியில் இருப்பது உறுத்தலாகத்தானே இருக்கும்!
பிகு: பழைய பதிவொன்றை தேடிப்பிடித்து கிடைத்த படத்தை பகிர்ந்து கொண்டேன்.
Saturday, January 31, 2026
எல்லா கவர்னருக்கும் இதே பிழைப்புதானா?
தமிழ்நாடு சட்டபேரவையிலிருந்து ஆரெஸெஸ் ரெவி ஓடிப் போன கதை நமக்குத் தெரியும்.
ரெவி மட்டுமல்ல,
கேரள ஆட்டுத்தாடி ஓடிப் போகவில்லை. ஆனால் மாநில அரசு தயாரித்த உரையில் சில ப்த்திகளை படிக்கவில்லை.
கர்னாடக ஆட்டுத்தாடியும் ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த ஒரு அறிக்கையை படித்து விட்டு இரண்டு நிமிடங்களில் ஓடி விட்டது.
பாஜக ஆளாத மாநிலங்களின் ஆட்டுத்தாடிகள் அத்தனை பேரும் "ஒசாமா பின் லேடனின் விலாசம் கேட்கும் மனநிலம் பாதிக்கப்பட்டவர்கள்" போல சட்டப்பேரவையிலிருந்து ஓடுவதையே பிழைப்பாகக் கொண்டுள்ளனரே!









