Monday, April 13, 2026

விவசாயிகளும் மக்கு மந்திரி நிர்மலாவும்

 


"நெல் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு தனியாக ஊக்கத் தொகை அளிப்பதால் நெல் உற்பத்தி அதிகமாகிறது. அதனால் பல பிரச்சினைகள் வருகிறது. எனவே நெல்லுக்கு மாநில அரசு தரும் ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டும்"

என்று நிதியமைச்சகம் தமிழ்நாட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியதாக முதல்வர் குற்றம் சுமத்தினார்.

அப்படியெல்லாம் நான் ஒன்றும் எழுதவில்லை என்று நிர்மலா அம்மையார் சாதித்தார்.

நிதியமைச்சகம் அனுப்பிய கடிதத்தை முதல்வர் பகிரங்கப் படுத்தி விட்டார்.


இந்த கடிதம் நெல் மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மீது வன்மத்தை கக்குகிறது.

நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதால் அதிக தண்ணீர் செலவாகிறது, உரப்பயன்பாடு அதிகரிக்கிறது. மண்ணே நாசமாகிறது, வைக்கோலை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்றெல்லாம் அடுக்கி விட்டு பருப்பு பயிரிடு, பருத்தி நடு, எண்ணெய் வித்துக்கள் போடு என்று உபதேசிக்கிறது அக்கடிதம்.

வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டேன், அதனால் அவற்றின் விலை உயர்வு பற்றி தெரியாது என்று நிர்மலா அம்மையாருக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? எந்த மண்ணில் எந்த காலத்தை என்ன பயிரிடுவது என்று விவசாயிகளுக்கு தெரியுமா? இல்லை இந்த மக்கு மந்திரிக்கு தெரியுமா?

கோதுமை, நெல் பயிரிடாவிட்டால் உணவுக்கு மக்கள் என்ன செய்வார்கள்? பருத்தியை உண்ண முடியுமா? ரொட்டியோ, சோறோ இல்லாமல் பருப்பை வைத்து என்ன செய்ய?

விவசாயிகள் பற்றியோ மக்கள் பற்றியோ கவலையில்லாத மக்கு மந்திரி நிர்மல, தன் அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தன் அமைச்சகம் அனுப்பிய கடிதமே தனக்கு தெரியாமல் அனுப்பப்பட்டு விட்டது என்று மக்குத்தனமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பாரா அல்லது வழக்கம் போல ஆணவமாக குரைப்பாரா? 

தந்தை நாட்டின் பெயர் சொல்ல தைரியமில்லையா மோடி?

 


இரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் இருக்கும் சூழலில் அதனை சீர்குலைக்க லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்றது.

அத்தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெண்டைக்காயையும் விளக்கெண்ணெயையும் சேர்த்து ஒரு அறிக்கை.

லெபனான் மீதான தாக்குதலுக்காகவும் உயிரிழப்பிற்காகவும் வருந்தி இனி இப்படி ஒரு தாக்குதல் நடக்காமல் இருப்பது நலம் என்ற ரீதியில் அந்த அறிக்கை செல்கிறது.

தாக்குதல் நடத்திய இஸ்ரேல் கண்டிக்கப்படவே இல்லை. ஏன் இஸ்ரேலின் பெயர் கூட எந்த இடத்திலும் இல்லை.

தந்தை நாட்டின் மீது அவ்வளவு பயமா மோடி?

இஸ்ரேல் உங்களுக்கு கொடுத்த ‘Speaker of the Knesset Medal’  விருதை பறித்து விடுவார்கள் என்ற பயமா?

Sunday, April 12, 2026

பிரகாஷ்ராஜ் சீனை கிறுக்குத்தனமாய் காப்பியடித்த விஜய்

 


"கோ" திரைப்படத்தில் ஒரு காட்சியில் காரில் வரும் முதலமைச்சர் பிரகாஷ்ராஜ், பேட்டியெடுக்கும் கார்த்திகாவிடம் கடுப்படித்தபடி சாலையில் இறங்கி நடக்கத் தொடங்குவார். மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் உருவாகும். "என் கெத்தை பாத்தியா, மக்கள் மத்தியில எனக்கு இருக்கிற மரியாதையை கவனிச்சியா" என்ற படி மீண்டும் காரில் உட்கார்ந்து கொள்வார்.

அது திரைப்படக் காட்சி.

அந்த காட்சியை இன்று காப்பியடித்தார் தமிழக ரத்துக் கழகத்தின் தலைவர் விஜய்.

திடீரென (முன் கூட்டியே திட்டமிட்ட படி) சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து விட்டார்.


கேரவனில் போனாலே பின்னால் தொடரும் மூட ரசிகர்கள் கூட்டம் சைக்கிளில் போனால் சும்மா விடுமா?

விபத்துக்களும் நெரிசல் மரணங்களும் நடப்பதற்கான வாய்ப்புக்கள் தோன்றினாலும் அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை.

சினிமா சீன் போல கிறுக்குத்தனம் செய்த விஜயின் சைக்கிள் பயணம், அவரது தற்குறிகளில் ஒருவர் பட்டாசு கொளுத்துப் போக அவர் பயந்து போய் கேரவனில் ஏற நிறைவுக்கு வந்தது.

துரதிர்ஷ்டவசமாக ஏதாவது நடந்திருந்தால் தன் கிறுக்குத்தனத்தை மூடி மறைக்க திமுக மீது பழி போட்டிருப்பார் விஜய். 

தமிழ்நாட்டு அரசியலின் துயரம் விஜய்

விஜய் கட்சியின் பெயர் இனி . . .

 தனியாக விளக்கம் அவசியமில்லை. படமே போதும் . . .



Saturday, April 11, 2026

சீமான் அவ்வளவு நல்லவரில்லையே!

 


கீழேயுள்ள காணொளியை பாருங்கள். நீங்களும் கண்டிப்பாக சிரிப்பீர்கள். 


2000  கோடி ரூபாயும் துணை முதல்வர் பதவியும் கிடைப்பதாக இருந்தால் முதலில் ஓடிப் போய் அந்த புரவலர்களோடு கை கோர்த்துக் கொண்டிருப்பார். இப்போதும் அவர் ஏதோ வஜனம் பேஸ்ய்கிறாரே தவிர, அவற்றையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்பது உலகறிந்த உண்மை. 

எரிந்த ரூபாய் நோட்டுக்களும் புனிதமாகும் முயற்சியும்

 


டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த தீ விபத்தின் போது சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. 

அவரை இடை நீக்கம் செய்வதற்குப் பதிலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.

உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையை நாடாளுமன்றம் தொடங்கியது. இதில் ஏதோ சிக்கல் வர துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தாங்கர் பதவி விலகினார். அந்த மர்மம் என்ன என்பதை இன்று வரை தெரியவில்லை.

இப்போது தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தன் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் விவரித்து ஜனாதிபதிக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் காரணங்களை தெரிவிக்கவில்லை என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளாராம்.

இது அவர் தன்னை ஒரு புனிதனாக காண்பித்துக் கொள்ளும் முயற்சி.  எந்த கேள்விக்கும் விசாரணைக்கும் உட்படாமல் தப்பித்துக் கொள்வதற்கான உத்தி.

ஜனாதிபதி இந்த ராஜினாமாவை நிராகரிக்க வேண்டும். ஏற்றுக் கொண்டால் யஷ்வந்த் வர்மாவின் புரவலர்கள் மோடி வகையறாக்கள், மோகன் பகவத் கூட்டத்தினர் என்பது தெளிவாகும்.

Friday, April 10, 2026

எச்.ராசா அரசியலிலிருந்து விலகலா?


 மேலே உள்ள படத்திற்கு என்ன அவசியம்?

கீழேயுள்ள செய்தியை பாருங்கள்.


மிகவும் பழைய செய்திதான் இது. இதை வைத்துக் கொண்டு பலர், எச்.ராசா ஏதோ அரசியலிலிருந்தே விலகி விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் நான்கு முறை மக்களவைத் தேர்தலிலும் நான்கு முறை சட்டப்பேரவை தேர்தலிலும்  போட்டியிட்டு ஏழு முறை தோற்றுப் போயுள்ளார். ஒரே ஒரு முறை கலைஞர் புண்ணியத்தில் எம்.எல்.ஏ ஆனார். சாரணர் அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பரிதாபமாக தோற்றுப் போனார். போன முறை சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சி கொடுத்த காசை செலவழிக்காமல் ஆடம்பர மாளிகை கட்டி விட்டதாக சொந்தக்கட்சிக்காரர்களே போராட்டம் நடத்தினார்கள். அதனால் அப்போது வஜனம் பேசியிருப்பார் போல . . .

அப்போது அவர் மனதில் என்ன நினைத்திருப்பார் என்பதுதான் மேலே உள்ள படம். 

கலவர அரசியலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை!