தன் மனைவியை "ஒர்த் இல்லை" என்று சொன்ன தற்குறி விஜய்க்கு மகளிரின் "ஒர்த்" என்ன என்று எங்கள் தென் மண்டல கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் கே.சுவாமிநாதன் எடுத்த வகுப்பு கீழே . . .
ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Sunday, March 8, 2026
பாலின சமத்துவம் நோக்கிய பயணம் தொடரட்டும்
பாலின சமத்துவத்திற்காக,
மகளிர் உரிமைகளுக்காக,
உண்மையாக
தொடர்ந்து போராடும், பாடுபடும்அனைவருக்கும்
சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.
படம் "காப்பீட்டு ஊழியர்" இதழிலிருந்து எடுக்கப்பட்டது
Saturday, March 7, 2026
சோ.அதர்மனை கேட்டது விகடனின் கொழுப்பு
ஜெயமோகனுக்கு பாத பூஜை செய்து, தந்தை பெரியார், அறிஞர் அன்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரை வசை பாடவே ஒரு நாவல் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்று,. அந்த கெத்தை விடாமல் தக்க வைக்க கிறிஸ்துவர்களை இழிவு செய்து இன்னொரு நாவல் எழுதி, தான் இழிவு படுத்திய கலைஞரின் மகனிடமிருந்தே வீட்டிற்கான பத்திரத்தை வெட்கமே இல்லாமல் வாங்கிக் கொண்ட சோ.அதர்மன் போட்ட முகநூல் பதிவு கீழே.
ஒரு மிகப் பெரிய மக்கள் தலைவரை, சுதந்திரப் போராட்ட வீரரை, பொதுவுடமை போராளியைப் பற்றி சங்கிகளுக்கு சேவகம் செய்வதையே பிறவிக்கடனாக நினைத்திருக்கும் அதர்மனிடம் கேட்டது விகடனின் கொழுப்பு.
திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர், இப்போது பக்கவாதம் வந்துள்ள ஐகோர்ட் எச்.ராசா ஆகியோரைப் பற்றி கேட்டிருந்தால் சந்தோஷமாக வெண்முரசு அளவிற்கு விஷயங்களை அள்ளி வீசியிருப்பார்.
மிகச் சரியான ஒரு மனிதரைப் பற்றி தவறான மனிதனிடம் கேட்டால் இப்படித்தான் திமிர்த்தனமாக பதில் வரும்.
பிகு 1 : அவருக்கு அங்கேயே சூடாக பதில் கொடுத்தேன்.
பிகு 2 : சோ.அதர்மனின் பதிவுக்கு விருப்பக்குறி கொடுத்திருந்த பேராசிரியர் தோழர் ராஜன்குறை கிருஷ்ணன், தோழர் நல்லக்கண்ணுவிற்கு அஞ்சலி பதிவும் எழுதியிருந்தார். அஞ்சலியும் எழுதி விட்டு அதர்மனுக்கு விருப்பக்குறி இட்டதும் வினோதமாக உள்ளது என்று அங்கே எழுதியிருந்தேன். வாய்ப்பில்லையே என்றார். ஸ்க்ரீன் ஷாட்டை போட்டதும் அகற்றி விட்டு, இந்த தவறு எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை என்று பதில் போட்டிருந்தார்.
பிகு 3 : அதர்மனுக்கு விருப்பக்குறி இட்ட இன்னொரு பிரபலம் கவிஞர் தாமரை - அவருக்கு தோழர் நல்லக்கண்ணு மேல் என்ன வெறுப்போ?
பிகு 4 : சோ.அதர்மனோ இல்லை பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணனோ, அவர்களது பதிவுகளில் நான் நேரடியாக ஒளிந்து கொள்ளாமல்தான் பதிவிடுகிறேன். என் பதிவுகளில் வந்து ஒளிந்து கொண்டு ஆபாச வார்த்தைகளில் பேசும் அனாமதேயங்களுக்கு மட்டும் ஏன் அந்த நேர்மை கிடையாது? மொட்டைக்கடிதங்களில் வாழும் கேடு கெட்ட ஜென்மங்கள் சாகும் வரை ஒளிந்து கொண்டுதான் வசை பாடும்.
மோடி, உமக்கு தகுதி கிடையாதய்யா
கீழேயுள்ள செய்தியை சங்கிகள் நேற்றிலிருந்து பரப்பி மிகவும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் இரானின் கருணையைப் பெற இந்திய அரசுக்கு (மக்களுக்கு அல்ல) தகுதி இருக்கிறதா?
வரலாற்று ரீதியாக இரானோடு நட்புறவு பாராட்டிய இந்தியா, அதன் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் தொடுத்த போது ஏன் ஒளிந்து கொண்டது?
இரானின் உச்ச தலைவர் மறைவிற்கு ஒரு அஞ்சலி தெரிவிக்கக்கூட மோடிக்கு ஏன் மனது வரவில்லை?
இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த இரானின் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த கொடுமைக்கு ஏன் வாய் திறக்கவில்லை?
இரானின் எதிர்வினைக்காக கவலைப்பட்ட மோடி, ஏன் இரான் தாக்குண்டது பற்றி மௌனமாகவே இருக்கிறார்?
அயத்துல்லா காமெனி மரணத்திற்கு இந்தியா அஞ்சலி தெரிவித்துள்ளது. அதுவும் யார் தெரிவித்தது? எப்போது?
"செத்ததுக்கு வா ன்னா, பத்துக்கு வந்திருக்க" என்பது போல 28.02.2026 அன்று கொல்லப்பட்ட அயத்துல்லா காமெனிக்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் 05.03.2026 அன்று இந்தியாவில் உள்ள இரானின் தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் அஞ்சலி குறிப்பு எழுதி வந்துள்ளார்.
மோடி பத்துக்கும் போக மாட்டார்.
இப்படிப்பட்ட நிலையில் இரானின் நல்லெண்ணத்தை பெறவும் அதை மோடியின் ராஜதந்திரம் என்று பீற்றிக் கொள்ளவும் அவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்ன?
Friday, March 6, 2026
இது இந்தியாவின் அசிங்கம் மோடி
ட்ரம்பின் உத்தரவுக்கு அடிபணிந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து கிட்டத்தட்ட நிறுத்தும் நிலைக்கு எடுத்துச் சென்றார் மோடி.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா என்ணெய் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை முப்பது நாட்களுக்கு தளர்த்துவதாக அமெரிக்க சொல்லியுள்ளது.
இந்தியா யாரோடு, என்ன வணிகம் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அமெரிக்கா கட்டளையிடுவது எப்பேற்பட்ட அசிங்கம்! இப்படிப்பட்ட இழிநிலைக்கு இந்தியாவை கொண்டு வந்த நிறுத்தியுள்ள மோடி மிகப் பெரிய அசிங்கம் , , ,
போகாதே போகாதே ஆரென் ரெவி
சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அமித்ஷா இப்படி ஒரு வேலையை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை.
தன் ஒவ்வொரு சொல், ஒவ்வொரு செயல் மூலம் மோடி அரசுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருந்த ஆரெஸெஸ் ரெவியை இப்படி மேற்கு வங்கத்திற்கு மாற்றுவார் என்று எதிர்பார்க்கவேயில்லை. பாஜக-அதிமுக கூட்டணியில் கூட யாரோ ஒரு புத்திசாலி இருக்கின்றார். ரெவி இருந்தால் திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் பெருகும் என்று எச்சரித்ததால்தான் இந்த மாற்றம்.
தேர்தல் முடிந்து திரு மு.க.ஸ்டாலினுக்கு பதவியேற்பை நடத்தி விட்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலிருது ஓடி வந்த பிறகு அவர் மாற்றப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும்.
அமித்ஷாவிற்கு ரெவி மேல் ஏதோ கடுப்பு இருக்கிறது.
ரௌடிகள் ராஜ்ஜியம் நடத்தும் மம்தாவின் மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இங்காவது கலாய்த்து விட்டு துரத்துவார்கள். அங்கே அடித்துத்தான் துரத்துவார்கள்.
நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்து ரெவி, அடி தாங்கனும்ல . . .
Thursday, March 5, 2026
மாட்டிக் கொண்ட மகாராஜா
10,11,ஆகஸ்ட், 2024 ஆகிய
தேதிகளில் எங்கள் கோட்டச்சங்கத்தின் 37 வது பொது மாநாடு திண்டிவனம் நகரில் நடைபெற்றது.
மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் நடைபெற்ற “மக்கள் ஒற்றுமை கலை விழா”வில் நான்
எழுதிய “மாட்டிக் கொண்ட மகாராஜா” நாடகத்தை எங்கள் தோழர்கள் அற்புதமாக நடித்து மக்களின்
கரவொலியை அள்ளினார்கள்.
ராஜா, மகாராஜா, மீண்டும் மகாராஜா, சந்திரனில் மகாராஜா ஆகிய நாடகங்களின் தொடர்ச்சி இந்த "மாட்டிக் கொண்ட மகாராஜா"
மாநாடு முடிந்த பின்பு அதனை இங்கே பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இந்திய அரசில் என்ன நிகழும் என்று நாடகம் வாயிலாக எதிர்பார்த்தோமோ அது நடக்காத காரணத்தால் இந்த நாடகத்தை இங்கே பகிர்வது பொருத்தமில்லை என்று அதை ஒரு ஓரத்தில் வைத்து விட்டேன்.
பீகார் முதல்வர் பொறுப்பிலிருந்து நிதீஷ்குமார் இப்போது துரத்தப்பட்டு ராஜ்யசபா உறுப்பினராகப் போகிறார். மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம். முதல்வர் பதவியிலிருந்து துரத்தப்பட்டதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஆள் அல்ல நிதீஷ்.
அதனால் நாடகக் காட்சிகள் நிஜமாகும், விரைவிலேயே . . .
மாட்டிக்
கொண்ட மகாராஜா . . .
காட்சி
1
இடம் : அரசவை
தலையில் உலகம் சுற்றும்
வாலிபன் தொப்பியோடு “ராஜாவுக்கு ராஜா நாந்தான், எனக்கு மந்திரிங்க யாரும் இல்லை” என்ற
பாடல் ஒலிக்க, அப்போ நாம எல்லாம் யாரு? என்ற கேள்வியோடு மந்திரிகள் இருவரும் பார்த்துக்
கொள்ள, மகாராஜா அரசவைக்கு வருகிறார். அவரது கேமராமேன் அவரை போட்டோ எடுத்துக் கொண்டே
இருக்கிறார்.
மந்திரி 1 : போன தடவை
உங்க கழுத்தில மாலை போட்டதும் சுத்தி சுத்தி போட்டோ எடுத்தீங்க இல்ல!
ஒரு டேபிள் போடப்பட்டு இரண்டு நாற்காலிகளில் மகாராஜாவும் சின்ன ராஜாவும் உட்கார்ந்து இருக்கிறார்கள். நடுவில் ஒரு சேர் போடப்பட்டு அதில் அம்பயர் உட்கார்ந்து மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
காட்சி 3
மகாராஜா அவரே கிரீடத்தை
தன் தலையில் வைத்துக் கொள்கிறார். மந்திரிகளும் நண்பர்களும் கை தட்டுகிறார்கள்.
சின்ன ராஜா : ஒன்னும்
செய்யல
மகாராஜா : தோழர் சி.சோமசுந்தரம்,
கோட்ட அலுவலகம்
மந்திரி 1 : தோழர்
ஜி.ரவி, ஆரணி
மந்திரி 2 : தோழர் கே.அத்தாவூர் ரஹ்மான், கோட்ட அலுவலகம்
சின்ன ராஜா : தோழர் பி.எஸ்.பாலாஜி,
வேலூர் கிளை
புகைப்படக் காரர் : தோழர்
சி.கணேசன், கோட்ட அலுவலகம்
அம்பயர் : தோழர் கே.வி.பாலகுமார், கோட்ட அலுவலகம்
நிதீஷ் :
தோழர் கே.ரபீக் அகமது, வேலூர் கிளை
சந்திரபாபு : தோழர் ஆர்.குமரேசன்,
கோட்ட அலுவலகம்.













