Sunday, March 22, 2026

மீண்டும் மஞ்சுமல் பாய்ஸ் வேண்டாம்

 


மலையாளத் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கேரளாவிலிருந்து கொடைக்கானல் உல்லாசப் பயணம் வந்து "குணா" குகையில் விழுந்து உயிர் தப்பிய இளைஞனின், அவனை மீட்ட நண்பர்களின் கதை.

கேரள் வாலிபர்களை குடிகாரர்கள், இத்யாதி, இத்யாதி என ஜெயமோகன் திட்டி அதனால் பாட்டு வாங்கியதும் "கண்மணி அன்போடு" பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு போட்டதும் கிளைக் கதைகள்.







மேலே உள்ள அழகிய படங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலையின் அற்புதக் காட்சிகள்.


நேற்று முன் தினம் அங்கே ஒரு வாலிபன் செல்ஃபி எடுக்கும்  மோகத்தில் வேகத்தில் கால் தவறி விழ நூறு அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டான்.

ராணுவத்தினர் வந்து சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளனர்.


இன்று செல்பி மோகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

புகைப்படங்கள் எடுங்கள். 

ஆனால் உயிரைப்பற்றியும் கவலைப்படுங்கள்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது.

இன்னும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் அனுபவம் வேண்டாமே 


Saturday, March 21, 2026

நிலமே நடுங்கிப் போச்சு டாக்டரய்யா

 


நேற்று தமிழ்நாடு முழுதிலும் சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தீர்களா?

ஆமாம்.

நான் கூட நடுங்கிப் போய் விட்டேன்.

காரணம் தெரியுமா?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

இதோ பாருங்கள்


இந்த தேர்தலின் முதல் காமெடி இது.

இன்னும் என்னென்ன வருமோ? ஆட்டுக்காரன் தயவு செய்தால் நிறைய காமெடி கிடைக்கும். 

Friday, March 20, 2026

பிரதமர்-ஜனாதிபதி. தூரத்திற்கான காரணம் என்ன?

 


இறையாண்மை கொண்ட சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசான இந்தியாவின் ஜனாதிபதி நேற்று அயோத்தி சென்று அங்கே ராமர் கோயிலில் வழிபட்டு, அதற்கான வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாள் பாக்கியம் என்று சொன்னதாக இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன்.

ஜனாதிபதி கோயிலில் வழிபடும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் பார்த்தேன். குடியரசுத்தலைவரின் ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த புகைப்படம் கீழே


மனதுக்குள் ஏதோ மணி அடித்தது.

கோயில் திறப்பு விழா புகைப்படங்களை தேடினேன்.




மோடியும் ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்தும் எங்கே நிற்கிறார்கள் பாருங்கள்.

ஜனாதிபதி எங்கே நிறுத்தப்பட்டுள்ளார் என்று பாருங்கள். 

மோடி பிரதமர், மோகன் பகவத் எந்த அரச பதவியிலும் இல்லாதவர். அவர்கள் ராம் லல்லா விக்கிரகத்தின் அருகாமையில் நிற்க இந்தியாவின் முதல் குடிமகளான ஜனாதிபதி சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மட்டுமல்ல, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்குக் கூட அழைக்கப் படவில்லை.

காரணம் அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்.

அதனால்தான் சனாதனம் அவரை தூரத்தில் நிறுத்தி வைத்தது. 

Thursday, March 19, 2026

தவெக தொண்டர்களும் செந்தில் காமெடியும்

 


தற்போது தவெகவில் வாயை விற்றுக் கொண்டிருக்கிற நாஞ்சில் சம்பத் (ஆமாம், இங்கே இன்னோவா கார் கொடுத்தாங்களா?) தவெக தொண்டர்களின் செயல்திறன் (!) பற்றி வர்ணித்ததை படித்ததும் "நட்புக்காக" படத்தில் மலையை தூக்குவேன் என்று சொல்லி வசூல் செய்து பின்பு என் கையில் தூக்கி வையுங்கள், தூக்குவேன் என்று சொல்லி அடி வாங்குவார். அப்படி அடி வாங்குபவரை காப்பாற்றுகிற சாமியர் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொல்லும் வசனம்தான் நினைவுக்க்கு வந்தது. 


இதைக் கேட்டு உசுப்பேறி தவெக தற்குறிகள் மின்னலை பிடிக்க உலகம் சுற்றும் வாலிபன் முருகன் போல முயற்சித்தோ, மின்சார வயரைப் பிடித்தோ கருகிப் போகக்கூடாது என்பதுதான் என் விருப்பம். 

Wednesday, March 18, 2026

நிஜத்தில் அப்படியில்லையே நிர்மலா அம்மையாரே!

 


இன்சூரன்ஸ் துறை சம்பந்தமாக நேற்று நிர்மலா அம்மையார் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். அதை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இன்சூரன்ஸ் ஒழுங்காற்று வளர்ச்சி ஆணையம் (IRDA) மிகவும் கறாராக பொதுத்துறை, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை கண்காணித்து பாலிசிதாரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும்  தவறிழைக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீது அபராதம் விதித்துள்ளதாகவும் சொல்லியுள்ளார்.


ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.டி,ஃஎப்சி இன்சூரன்ஸ் ஆகியவைக்கு தலா இரண்டு கோடி ரூபாயும்  ராயல் சுந்தரம், எஸ்.பி.ஐ லைப் ஆகிய கம்பெனிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது அமைச்சரின் அறிக்கை.

எல்.ஐ.சி யின் மீதோ, மற்ற நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீதோ அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதை மட்டும் அமைச்சர் ஏனோ சொல்லவில்லை. அதெப்படி பொதுத்துறையை அவரால் பாராட்ட முடியும்!

இதை படிக்கையில் ஐ.ஆர்.டி.ஏ ஏதோ சுத்த சுயம்பிரகாச நியாயவான் போல தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் வேறு.

இந்த அபராதம் எல்லாம் வேறு வழியில்லாமல், ஏராளமான புகார்கள் வந்து,  ஆம்புட்ஸ்மேன்,  நீதிமன்றம் குட்டி விதிக்கப்பட்டவை.

உன்மையின் ஐ.ஆர்.டி.ஏ எல்.ஐ.சி, பொதுத்துறை  பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஒழுங்காற்று வாரியமாக, தனியார் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாக செயல்பட்டு வருகிறது.

எல்.ஐ.சி முகவர்களை தனியார் கம்பெனிகளுக்கு மடை மாற்றி விடக்கூடிய விதத்தில் இன்சூரன்ஸ் சட்டங்களில்  மாற்றம்,

எல்.ஐ.சி புதிய பாலிசிகளுக்கு அனுமதி கேட்கையில் இழுத்தடிப்பது, தனியார் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பள மரியாதை கொடுப்பது,

முகவர்களின் கமிஷன் விகிதத்தை குறைத்து வணிகத்தை முடக்க முயல்வது (எல்.ஐ.சி யின் வணிகத்தில் 90 % முகவர்கள் மூலம் வருகிறது. தனியார் கம்பெனிகளில் 10 % வணிகம்தான் முகவர் மூலம் வருகிறது) 

ஐ.ஆர்.டி.ஏ அடிப்படையில் பொதுத்துறைக்கு வில்லன். அதற்கு மாறான ஒரு சித்திரத்தை நிர்மலா அம்மையார் கொடுத்துள்ளார்.

இந்த டுபாக்கூர் வேலைகள்தான் மோடி அரசின் அடையாளம். 

அசிங்கமா போயிடுச்சே ஜெயமோகன்

 


இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.

இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது.

மேலே உள்ளது ஜெயமோகன் எழுதிய பதிவு. ஞானபீட விருது அகிலனுக்கு கொடுக்கப்பட்டதை ஜெயமோகனும் அவர் ஆசான் சுந்தர ராமசாமியும் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதையும் அகிலனை ஒரு எழுத்தாளராகவே ஜெமோ மதிக்கவில்லை என்பதையும் அந்த பதிவு சொல்கிறது.

ஜெயமோகன் எப்பேற்பட்ட பொய்யன், சந்தர்ப்பவாதி என்பதை எழுத்தாளரும் திரைக் கலைஞருமான தோழர் கவிதா பாரதி எழுதிய பதிவு லட்சமாவது முறையாக அம்பலப்படுத்துகிறது.

இதோ அந்த பதிவு

அகிலனுக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருது அரை நூற்றாண்டு காலம் தமிழ் நவீன இலக்கியத்தை இந்திய இலக்கிய சூழலில் மறைத்தது.
-இவ்வாறு ஒரு கோடி ரூபாய்
பம்பர் இலக்கியப் பரிசு அறிவிப்பில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்
சுவாரசியமானதொரு பிளாஷ்பேக் இதோ..
1990-ல் அகிலன் நினைவு நாவல்போட்டியினை அகிலன் அறக்கட்டளை நடத்தியது..

பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பினர்.. ரப்பர் என்னும் தனது நாவலின் கையெழுத்துப்பிரதியை ஜெயமோகனும் அனுப்பினார்

அதில் முதல் பரிசு பெற்றது ரப்பர்.. ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டு, அகிலன் நினைவு நாவல் போட்டியில் பரிசு பெற்றது என்னும் குறிப்போடு அகிலனின் மகன் அகிலன் கண்ணன் தனது தாகம் பதிப்பகத்தின் சார்பில் அந்த நாவலை வெளியிட்டார்.. அதுதான் ஜெயமோகனின் முதல் நாவல்..





தரமான இலக்கியத்துக்கு
ஒரு கோடி ரூபாய் பரிசறிவிக்கும்
ஜெயமோகனின் இலக்கிய அடையாளம், அவரது அளவுகோல்படி
'தரமற்ற எழுத்தாளர்' அகிலன் நினைவாக வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் மூலமாகத்தான் வெளிப்பட்டது..

இதற்கெல்லாம் ஜெமோ அசந்து விடுவாரா என்ன? அவருடைய முழக்கமே "துப்பினால் துடைச்சுப்பேன்" என்பதுதானே!


Tuesday, March 17, 2026

முன்னாள் மந்திரி சண்முகத்தை விரட்டி அடியுங்கள்

 


இருபத்தி நான்கு  மணி நேரமும் போதையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் அதிமுகவின் முன்னாள் மந்திரி திண்டிவனம் சி.வி.சண்முகம் பேசுவதை கேட்கும் போதெல்லாம் வரும்.

சந்தேகமே தேவையில்லை. அவர் எப்போதும் அப்படித்தான் என்பதை அந்த ஜந்துவின் இன்றைய பேச்சு நிரூபித்துள்ளது.


இப்படிப்பட்ட கேவலமான ஜென்மங்கள் அமைச்சராக இருந்தது, எம்.எல்.ஏ ஆக இருப்பதெல்லாம் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அசிங்கம்.

தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும். வேண்டுமானால் பாலியல் குற்றங்களின் சொர்க்கமான உத்திரப்பிரதேசத்திற்கு செல்லட்டும்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் அந்த ஆள் பேசியது :பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்பதை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்.

இது போன்ற ஜந்துக்கள் இருக்கும் வரை எப்படி பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் !

பாலியல் ஜல்சா கட்சியின் கூட்டாளி வேறெப்படி பேசுவார்!