Wednesday, February 11, 2026

தின மலர் மீது கேஸ் போடுமா அனாமதேய சங்கி?

 


இந்துக்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் பேசியதை கண்டித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

நேற்று இரவு அதற்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. 

Any one can file case on this post, because you are posting some thing not verified and personal. I will forward this to bjp it cell for handling your fake messages.

மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு பின்னூட்டம். 

அந்த அனாமதேயம் பாஜக ஐ.டி விங்கிற்கு அனுப்பிய கடிதத்தை எனக்கு பின்னூட்டமாக போட்டிருந்தது. அந்த கடிதத்திலும் பெயர் இல்லை, மொட்டைக் கடிதம் போல.

அதன் பின்பு ஒரு பதில் எழுதினேன்.

சர்சங்சாலக் பற்றிய பதிவு தொடர்பாக மிரட்டியுள்ள சங்கிக்கு ஒரு தகவல். அந்த தகவல் தவறென்றால் அதற்கு பொறுப்பு சங்கிப் பத்திரிக்கையான தின மலர் தான். அதிகம் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பல சங்கிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். அதனால் இது சங்கிகளின் நிலைப்பாடுதான். எனக்கு எந்த பயமும் இல்லை. அதனால்தான் வெளிப்படையாக பதிவிட்டுள்ளேன். என்னை மிரட்டிய சங்கிதான் அனாமதேயமாக ஒளிந்து கொண்டு விட்டது.

அதன் பின்பு அந்த சங்கியிடமிருந்து எந்த பின்னூட்டமும் இதுவரை இல்லை. 

பாவம் அந்த சங்கி தன் அமைப்பைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள் போல. 

அது அனுப்பிய கடிதத்தையும் அதற்கான எதிர்வினையையும் நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.

மோகன் பகவத் சொன்னதாக நான் எழுதியிருந்தது பொய்ச் செய்தியா?

நான் அதனை எடுத்ததே தின மலரின் ட்விட்டர் (X) பக்கத்திலிருந்துதான்.

அந்த பக்கத்திற்கெல்லாம் நானாக செல்வதில்லை. ட்விட்டரே காண்பிப்பதுதான்.

ட்விட்டரில் மட்டும் தின மலர் வெளியிடவில்லை. தினமலர் தன் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருந்தது.



இத்தோடு நிற்கவில்லை.

தின மலரின் இணைய தளத்திலும் இருக்கிறது.


ஆகவே இந்த செய்தி பொய்ச்செய்தி என்றால் அந்த சங்கி தினமலர் மீதுதான் வழக்கு போட வேண்டும். 

நான் சொன்ன பக்கங்களில் தேடிப்பார்த்து வழக்கு போடட்டும்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, இஸ்லாமியர்களை குறி வைத்து சுட்ட காணொளியை அஸ்ஸாம் மாநில பாஜக நீக்கியது போல தின மலரும் நீக்கியிருந்தால் . . .

அந்த அனாமதேயேம் தன் உண்மையான அடையாளத்துடன் என்னை அணுகினால் நான் வேண்டுமானால் நான் எடுத்து வைத்துள்ள ஸ்க்ரீன் ஷாட்டுக்களை அனுப்பி வைக்கிறேன்.

சங்கிப் பத்திரிக்கை தின மலர் மீது வழக்கு தொடுக்கும் தைரியம் அந்த அனாமதேய சங்கிக்கு உண்டா அல்லது அது முறையிட்டுள்ள பாஜக ஐ.டி விங்கிற்குத்தான் உண்டா?

பைத்தியக்காரப் பசங்க!!!!

என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது !!

 


இது சொந்தக் கதை, சோகக் கதை அல்ல. மர்மக்கதையோ என்றொரு சந்தேகம்.

வழக்கமாக வலைப்பக்கத்தின் பார்வைகள் (HITS) ஒரு நாளைக்கு சராசரியாக 800 லிருந்து 900 வரை செல்லும். 

ஆனால் நேற்று முன் தினம் 3081 பார்வைகள். நேற்று இரவு 8.30 மணிக்கு 3163. 




எங்கிருந்து பார்க்கிறார்கள்  என்று ஆராய்ந்து பார்த்தால்



சிங்கப்பூரிலிருந்தும் சீனாவிலிருந்தும்தான் அதிகமான பார்வைகள் வந்துள்ளதாக ப்ளாக்ஸ்பாட் சொல்கிறது. அதை ஒப்பிட்டால் இந்தியாவில் பார்வைகள் குறைவுதான்.



இப்போது காலை 10.10 மணிக்கு பார்த்தால் நேற்றைய பார்வைகளின் எண்ணிக்கை 4891 ஆகவும் இன்று இது வரை 1018 பார்வைகள் (வலைப்பக்கத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் என்பது காலை ஆறு மணிக்குத்தான் தொடங்கும்) வந்துள்ளது. 


ப்ளாக்ஸ்பாட் கொடுக்கும் தகவல்களை எப்படி சேகரிக்கப்படுகிறது என்று தெரியவில்லை.

அது தெரியும் வரை அது மர்மக்கதைதான். 

பிகு: மூடச்சங்கியால் மிரட்டப்பட்ட கதை - மாலையில் , , , ,

Tuesday, February 10, 2026

சங்கிகளின் நடையே தனி!!!

 


முக நூலில் பார்த்து சிரித்த ஒரு காணொளியை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நேரடி பிரதிநிதியாக தமிழ்நாடு பாஜகவின் அமைப்புச் செயலாளராக இருந்த கேசவ வினாகத்தை அந்த பதவியிலிருந்து தூக்கியுள்ளார்கள். அதெல்லாம் அவர்களின் உட்கட்சி விஷயங்கள். அந்தாள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக நிச்சயம் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். காரணம் BJP என்பதன் விரிவே B.JOLLU.P தான்.



துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பது போல பதவி பறிப்புதான் இந்த கிறுக்கு நடைக்கு காரணமாக இருக்குமோ?

மூவரைப் பெற்றால் சர்சங்சாலக் சோறு போடுவாரா?

 


இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத, அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் உதிர்த்த முத்து கீழே உள்ளது.


அவர் சொல்லும் முதல் விஷயம் விஷம். வழக்கமான விஷம். மத வெறியை தூண்டுவதை மட்டுமே நூறாண்டுகளாக செய்து கொண்டிருக்கும் கேவலமான அமைப்பு இது.

கடந்த பல பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் சிறுபான்மையினரின் சதவிகிதம் அதிகரிக்கவே இல்லை என்பதுதான். அது மட்டுமல்ல, கடைசி இரண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புக்கள் இஸ்லாமியர்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இந்துக்களை விட குறைவாகவே இருந்திருக்கிறது. 

2021 ல் எடுக்கப்பட வேண்டிய மக்கட்தொகை கணக்கெடுப்பை இதுவரை துவக்காமல் இருப்பது கூட ஆர்.எஸ்.எஸ் அளந்து கொண்டிருக்கும் கட்டுக்கதை அவர்கள் ஆட்சியிலேயே அம்பலமாகி விடும் என்பதுதான்.

நிற்க

மூன்று பேரை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்கிற மோகன் பகவத் திருமணமாகாதவர். அவருக்கு குடும்பத்தை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தெரியாது. வெங்காயம் சாப்பிடாதாதால் எனக்கு வெங்காய விலை உயர்வு பற்றி தெரியாது என்று சொன்ன நிர்மலா அம்மையார் கேடகிரிதான் இவர்.

இவருக்கு குழந்தைகளை வளர்ப்பதற்காக ஆகும் உணவுச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு, திருமணச் செலவு ஆகியவற்றைப் பற்றி தெரியுமா?

வேலையின்மை பிரச்சினையைப் பற்றி தெரியுமா?

குடும்ப பாரம் சுமக்காத இவருக்கு குடும்பத்தை பெருக்கச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

மூன்று குழந்தைகளுக்கான செலவுகளை அரசு கொடுக்குமா? இது என்ன பழைய சோவியத் யூனியன் அரசா?

கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி கொழுத்துப் போயிருக்கும் பாஜக அளிக்குமா?

முடியாது அல்லவா?

SO SHUT UP MR MOHAN BHAGAWATH

Monday, February 9, 2026

மோடிக்கு இதெல்லாம் ஒரு பிழைப்பா சங்கிகளே?

 மலேசியாவில் மோடி தமிழை உயர்த்திப் பிடித்ததாக பாஜக ஐ.டி விங் எழுதிக் கொடுத்ததை அப்படியே பகிர்ந்து கொண்டு பீற்றிக் கொண்டிருக்கும் மருத்துவனையில் படுத்துக் கொண்டிருக்கும் ஹைகோர்ட் புகழ் எச்.ராசா உட்பட அனைத்து சங்கிகளுக்கும் கீழே உள்ள படம் சமர்ப்பணம். . . 



அஸ்ஸாம் முதல்வருக்கு கருணை கூடாது



 ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா - அஸ்ஸாமின் முதலமைச்சர், 2015 ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தவர். முதல்வர் கனவிலும் இருந்தவர். ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்களை பாஜக முன் வைக்க, பாஜகவிலேயே சேர்ந்து மோடி வாஷிங் மிஷின் மூலமாக புனிதராக மாறி பாஜக சார்பிலேயே முதலமைச்சராக ஐந்தாண்டுகளாக குப்பை கொட்டிக் கொண்டு இருப்பவர்.

அஸ்ஸாம் பாஜக நேற்று ஒரு காணொளி வெளியிட்டது. அந்த காணொளியில் ஹி.பி.சர்மா துப்பாக்கியால் சுடுகிறார். அவர் குறி பார்ப்பது இஸ்லாமியர்களை. NO MERCY கருணையே கிடையாது என்ற வாசகத்துடன் காணொளி முடிகிறது.



அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடான இந்த காணொளியை அஸ்ஸாம் பாஜக இப்போது நீக்கி விட்டது.

இப்படிப்பட்ட காணொளி மூலம் ஹி.பி.சர்மா தன் தொ/குண்டர்களுக்கு என்ன சொல்கிறார்?

இஸ்லாமியர்களை அழித்தொழியுங்கள் என்பதைத்தான் மிகவும் வெளிப்படையாக சொல்கிறார்.

இப்படிப்பட்ட முதல்வர் மீது மோடி நடவடிக்கை எடுக்க மாட்டார்.

தெருநாய் பிரச்சினை போல உச்ச நீதிமன்றமும் தன்னியல்பாக நடவடிக்கை எடுக்காது.

அஸ்ஸாம் மக்கள்தான் தெருவில் இறங்கி போராட வேண்டும்,  பதவி விலகும் வரை போராட வேண்டும். ஹி.பி,சர்மாவுக்கு அவசியமே இல்லை, கருணை . . .

Sunday, February 8, 2026

ட்ரம்ப் இடத்தில் மோடியை நினைத்தால்

 


காலையில் முகநூலில் பார்த்த காணொளி கீழே உள்ளது.


டொனால்ட் ட்ரம்ப் இடத்தில் மோடியை நினைத்து பாருங்கள்.

கலாய்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உண்டு.

ஆனால் அப்படி கலாய்ப்பவர்கள் செல்லும் இடம் திஹார் சிறையாகவோ அல்லது போலி எண்கவுண்டராகவோ இருக்கும்.