Saturday, February 14, 2026

இந்தில பேசினா தப்பாத்தான் வரும்

 


இனிமேல் தமிழ்நாடு, பாண்டிச்சேரி எல்லைக்குள் இந்தியில் பேசக் கூடாது என்று ஜண்டா அமித்ஷா முடிவெடுத்திருப்பார். கீழேயுள்ள காணொளியை பாருங்கள், அமித்ஷா யாரை திட்டுகிறார் என்பதும் தெரியவில்லை, புதுவை முதல்வர் யார் என்பதும் தெரியவில்லை. இதுதான் அங்கேயுள்ள பாஜகவினரின் அரசியல் தரம். 

சரியான காமெடி இது.



அந்த பதவிக்கு அவர் அருகதையில்லை . . .

 

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இது நாள் வரை இவ்வளவு மோசமான அவைத்தலைவரை பார்த்ததில்லை. 

அந்த பதவியில் இருந்தவர்கள் அனைவருமே தோழர் சோம்நாத் சட்டர்ஜி, திரு ஜி.எம்.சி.பாலயோகி, திரு மனோகர் ஜோஷி  நீங்கலாக  அனைவருமே எது ஆளும் கட்சியோ, அதைச் சேர்ந்தவர்கள்தான்.

ஆளும்கட்சி சார்பாகத்தான் அவர்கள் செயல்பட்டிருந்தாலும் கொஞ்சமாவது நடுநிலையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை சொல்ல கொஞ்சமாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஓம் பிர்லா?

ஒரு சபாநாயகரின் முதல் கடமை - துணை சபாநாயகர் தேர்வு. 

12 வருடங்களாக நடக்கவில்லை. இவருக்கு முன்பிருந்த சுமித்ரா மகாஜன் அம்மையாரும் சரி, இவரும் சரி, அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.

அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதில்களை இவரே சொல்லி விடுகிறார். 

எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து அதில் மகிழ்ச்சி அடைபவர், அப்போதுதானே அவர்கள் அரசை விமர்சிக்க முடியாது.

இதில் மிக மிக மோசமான நடவடிக்கைதான் பெண் எம்.பி க்கள் மோடியை தாக்கவிருப்பதாக பழி போட்டது. மோடியை விட கற்பனை வளத்தில் சிறந்தவராக இருக்கிறார்.

அவரை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகவும் சரியானது. அது தோற்றுப் போகும். ஆனால் ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது வரலாற்றில் பதிவாகிறதல்லவா! அது போதும்.

பிகு: எழுதி இரண்டு நாளான பதிவு இது. ஓம் பிர்லா பல்பு வாங்கிய ஒரு சம்பவம் சிரிப்பைத் தந்தது. அது கீழே . . 


 

Friday, February 13, 2026

5000 ரூபாயால் சங்கிகள் கதறல் . . .

 


மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது ஒரு அதிரடி யுக்தி. பாஜக-அதிமுக கூட்டணி சதி செய்தார்களோ, சதி செய்யவில்லையோ, இந்த முடிவால் அவர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

பீகாரிலும் மகாராஷ்டிராவிலும் பாஜக பயன்படுத்திய ஆயுதம் அவர்களையே தமிழ்நாட்டில் திரும்பத் தாக்கியுள்ளது.

பாஜகவினரின் கதறல் ஓசை காதுக்கு இனிமையாக இருக்கிறது என்பதும் உண்மை.

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகளின் கதறலை கீழே பாருங்கள்.












சங்கிகளிடம் இயல்பாகவே இருக்கிற பெண்களுக்கு எதிரான மனப்பான்மையையும் நாம் மறந்து விடக் கூடாது.

தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நிலைமையை மாற்ற பாஜக-அதிமுக கூட்டணி எந்த அளவிற்கும் கீழிறங்கும். கலவரத்தை தூண்டினால் கூட ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. 

பருத்தியில் சிக்கிக்கொண்ட மோடி மந்திரி

 


அமெரிக்காவுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட அடிமாட்டு, அடிமை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று புரோக்கர் மந்திரி பியூஷ் கோயல் கதை விட்டுக் கொண்டிருந்தார். 

ஆனால் அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து "இந்திய விவசாயிகளின் நலனை அமெரிக்க கட்டளைக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து விட்டோம்" என்று ஒப்புக் கொண்டு விட்டார்.

இந்திய ஆடைகளின் இறக்குமதிக்கு 18 % வரி விதிக்கும் அமெரிக்கா, வங்க தேச ஆடைகளின் இறக்குமதிக்கு 0 % வரி மட்டுமே விதித்துள்ளதே, அதனால் இந்திய ஆடைத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்களே என்று கேள்வி கேட்டதற்கு 

"வங்க தேசம் போல நாமும் மூலப் பொருளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து அதனை பதப்படுத்தி, ஆடையாக்கி ஏற்றுமதி செய்யும் போது நமக்கும் 0 % வரிதான் விதிக்கப்படும். இதற்கான உடன்பாடு விரைவிலேயே எட்டப் படும்? 

என்று பியூஷ் கோயல் சொல்லியுள்ளார்.

ஆடைக்கான மூலப் பொருள் எது?

பருத்தி.

பியூஷ் கோயல் சொல்லியபடி அமெரிக்கப் பருத்தியை நாம் இறக்குமதி செய்யப் போகிறோம்.

அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்வதால் இந்திய பருத்தி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இந்தியாவில் பருத்தி முக்கியமான பணப் பயிர்.

130 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இந்தியாவில் பருத்தி பயிரிடப் படுகிறது. பத்து மாநிலங்களில் 60 லட்சம் விவசாயிகள், பருத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உள் நாட்டு ஆடை உற்பத்திக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பயன்படத்தப்படும் என்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியின் நிலை என்ன? இந்திய பருத்தி விவசாயிகளின் நிலை என்ன ஆகும்?

ஆக இந்திய பருத்தி விவசாயிகளின் நலனை பின்னுத் தள்ளி அமெரிக்காவிலிருந்து பருத்தி வாங்கப் போகிறது மோடி அரசு. 

வங்கதேசத்தில் கூட  பருத்தி விளைகிறதே! அந்த விவசாயிகளுக்கு பாதிப்பு கிடையாதா என்று எவனாவது மூடச்சங்கி அனாமதேயமாக ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவான். அந்த அனாமதேயம் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

வங்க தேசத்தில் வெறும் 45000 ஹெக்டேர் நிலத்தில்தான் பருத்தி விளைகிறது.  அதிலும் 1,70, 000 விவசாயிகள்தான் ஈடுபடுகின்றனர். வங்க தேச ஆடைத்தொழில் எப்போதுமே இறக்குமதி செய்யப்படும் பருத்தியை நம்பித்தான் இருக்கிறது.

ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல

என்பது போல

மோடி அரசுக்கு துரோகங்கள் புதிதல்ல . . .

Thursday, February 12, 2026

தெனாலி கமல் என்னை மன்னிக்க

பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பணியில் இருக்கும் போது சரி, பணி ஓய்விற்குப் பிறகும் என்ன எழுதுவதாக இருந்தாலும் அவர்கள் அதனை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அரசு அதனை படித்து ஒப்புதல் கொடுத்த பிறகுதான் வெளியிட வேண்டும். இது மோடி அரசு நேற்று போட்டுள்ள உத்தரவு.

இந்த உத்தரவே  முன்னாள் ராணுவத் தளபதி இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற நூலைக் கண்டு மோடி நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்று.

மோடியின் பயங்களை நினைத்தேன். தெனாலி படத்தில் கமல் பட்டியலிடும் பயங்கள்தான் நினைவுக்கு வந்தது. வேறு வழியில்லை. அந்த காட்சியைத்தான் சுட வேண்டியிருந்தது.



 

இன்று ஏன் வேலை நிறுத்தம்?

 


இன்று இந்தியா முழுதும் இந்தியாவை நேசிக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி போன்ற மத்திய தொழிற்சங்கங்களும் இன்சூரன்ஸ், வங்கி, தொலை தொடர்பு போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அகில இந்திய அமைப்புக்களும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.

என்ன கோரிக்கைகள்?

காலம் காலமாக உழைப்பாளி மக்கள் போராடிப் பெற்ற பல்வேறு உரிமைகளை பறிக்கின்றன மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கள்.

சிக்காகோ தொழிலாளர்கள் உயிர் கொடுத்து வென்றெடுத்த எட்டு நேர வேலை நேரத்தை காவு கொடுக்கிறார்கள்.

நிரந்தர வேலை என்பதையே கடந்த காலமாக மாற்றி ஒப்பந்த தொழிலாளர்கள் முறையும் குறிப்பிட்ட கால நிர்ணய பணி என்பதும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்கும் செயலாகும்.

வங்கி, இன்சூரன்ஸ் மற்றுமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்பது இந்தியப் பொருளாதாரத்தை பாழுங்கிணறுக்குள் தள்ளும் மூடத்தனம்.

இந்திய உழைப்பாளிகளை சுரண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாக, அவர்கள் என்ன தவறு செய்தாலும் சட்டப்படியே கண்டு கொள்ளாத கேவலமான நிலையை உருவாக்கியுள்ளது மோடி அரசு.

இதற்கு எதிராகத்தான் இன்று வேலை நிறுத்தம்.

எல்.ஐ.சி யின் இன்னும் சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

மூன்றாம் பிரிவு, நான்காம்  பிரிவு பணிகளில் புதிய பணி நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பணிச்சுமை ஒரு புறம் அதிகரித்து வரும் வேளையில் மறு புறம் பணி ஓய்வுகளின் காரணமாக காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையை சரி செய்ய நிர்வாகம் சுணக்கம் காண்பிக்கிறது.

எல்.ஐ.சி யின் பங்குகளை விற்கக் கூடாது.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும்.

2010 க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷனே தரப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும். உழைப்பாளி மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடு கோடிக்கணக்கான தொழிலாளர்கள், போராட்ட களம் புகுகின்றனர். போராட்டங்கள் என்றைக்கும் தோற்றது கிடையாது.

பணி ஓய்வு பெற்றதால் நேரடியாக வேலை நிறுத்தப் பங்கேற்பு என்பது கிடையாது.  எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஊதியத்தை இழந்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் தோழர்களிடமிருந்து  உற்சாகத்தைப் பெற . . .

Wednesday, February 11, 2026

தின மலர் மீது கேஸ் போடுமா அனாமதேய சங்கி?

 


இந்துக்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் பேசியதை கண்டித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

நேற்று இரவு அதற்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. 

Any one can file case on this post, because you are posting some thing not verified and personal. I will forward this to bjp it cell for handling your fake messages.

மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு பின்னூட்டம். 

அந்த அனாமதேயம் பாஜக ஐ.டி விங்கிற்கு அனுப்பிய கடிதத்தை எனக்கு பின்னூட்டமாக போட்டிருந்தது. அந்த கடிதத்திலும் பெயர் இல்லை, மொட்டைக் கடிதம் போல.

அதன் பின்பு ஒரு பதில் எழுதினேன்.

சர்சங்சாலக் பற்றிய பதிவு தொடர்பாக மிரட்டியுள்ள சங்கிக்கு ஒரு தகவல். அந்த தகவல் தவறென்றால் அதற்கு பொறுப்பு சங்கிப் பத்திரிக்கையான தின மலர் தான். அதிகம் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பல சங்கிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். அதனால் இது சங்கிகளின் நிலைப்பாடுதான். எனக்கு எந்த பயமும் இல்லை. அதனால்தான் வெளிப்படையாக பதிவிட்டுள்ளேன். என்னை மிரட்டிய சங்கிதான் அனாமதேயமாக ஒளிந்து கொண்டு விட்டது.

அதன் பின்பு அந்த சங்கியிடமிருந்து எந்த பின்னூட்டமும் இதுவரை இல்லை. 

பாவம் அந்த சங்கி தன் அமைப்பைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள் போல. 

அது அனுப்பிய கடிதத்தையும் அதற்கான எதிர்வினையையும் நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.

மோகன் பகவத் சொன்னதாக நான் எழுதியிருந்தது பொய்ச் செய்தியா?

நான் அதனை எடுத்ததே தின மலரின் ட்விட்டர் (X) பக்கத்திலிருந்துதான்.

அந்த பக்கத்திற்கெல்லாம் நானாக செல்வதில்லை. ட்விட்டரே காண்பிப்பதுதான்.

ட்விட்டரில் மட்டும் தின மலர் வெளியிடவில்லை. தினமலர் தன் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருந்தது.



இத்தோடு நிற்கவில்லை.

தின மலரின் இணைய தளத்திலும் இருக்கிறது.


ஆகவே இந்த செய்தி பொய்ச்செய்தி என்றால் அந்த சங்கி தினமலர் மீதுதான் வழக்கு போட வேண்டும். 

நான் சொன்ன பக்கங்களில் தேடிப்பார்த்து வழக்கு போடட்டும்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, இஸ்லாமியர்களை குறி வைத்து சுட்ட காணொளியை அஸ்ஸாம் மாநில பாஜக நீக்கியது போல தின மலரும் நீக்கியிருந்தால் . . .

அந்த அனாமதேயேம் தன் உண்மையான அடையாளத்துடன் என்னை அணுகினால் நான் வேண்டுமானால் நான் எடுத்து வைத்துள்ள ஸ்க்ரீன் ஷாட்டுக்களை அனுப்பி வைக்கிறேன்.

சங்கிப் பத்திரிக்கை தின மலர் மீது வழக்கு தொடுக்கும் தைரியம் அந்த அனாமதேய சங்கிக்கு உண்டா அல்லது அது முறையிட்டுள்ள பாஜக ஐ.டி விங்கிற்குத்தான் உண்டா?

பைத்தியக்காரப் பசங்க!!!!