Saturday, February 21, 2026

தர்மசங்கடமான நிலை! என்ன செய்வது?

 


சில நாட்களாகவே ஒரு குழப்பம்.

பல தோழர்கள் ஒரு நூலை சிலாகித்து எழுதியதை படிக்க நேர்ந்தது.


மேலே உள்ள புத்தகம்தான் அது. நீதியரசர் சந்துரு கூட நூலைப் பற்றி எழுதியுள்ளது அட்டையில் உள்ளது.

வழக்கமாக இது போன்ற அறிமுகங்களை படித்தால் உடனடியாக அந்த நூலை வரவழைத்து விடுவேன்.

ஆனால் இந்த நூலை வரவழைப்பதில் மட்டும் ஏனோ ஒரு மனத்தடை.

ஏன்?

அதனை வெளியிடுவது பத்ரி சேஷாத்ரியின் கிழக்கு பதிப்பகம். கடைந்தெடுத்த மக்கள் விரோதி, மத அடிப்படைவாதி, பிற்போக்கு சக்தி. 

சென்னை புத்தக விழாவிற்கு வருடம் தோறும் செல்வேன். ஆனால் கிழக்கு பதிப்பகத்திற்குள் மட்டும் நுழைய மாட்டேன். அதே போல  கிழக்கிலிருந்து பிரிந்து  தனியாக கடை திறந்த ஹரன் பிரசன்னாவின் சுவாசம் பதிப்பகத்திற்கும் செல்லக்கூடாது இன்று இந்த வருடம் கறாராக இருந்தேன். 

அதனால்தான் நம்முடைய பணம் பத்ரி சேஷாத்ரிக்கு செல்ல வேண்டுமா என்ற ஒரு கேள்வி, அது புத்தகம் வாங்குவதற்காக இருந்தாலும், மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. நல்ல நூலை தவற விடுகிறோமோ என்ற கேள்வியும் எழுகிறது.

என்ன செய்வது? ஒரே டெலிகேட் பொசிஷன் . . .

வேள்பாரி பாண்டியன் அரண்மனையும் நாடாளுமன்றக் கட்டிடமும் . . .

 


மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அளித்த ஒரு புதிய தகவல் கீழேயுள்ள காணொளியில் உள்ளது. அரசியல்வாதியை மீறி எழுத்தாளர் கம்பீரமாய் நிற்கும் தருணம் இது. 






Friday, February 20, 2026

புதிய பாபர் மசூதியைக் கூட . . .


 சங்கிகளால் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போல ஒரு மசூதியை மேற்கு வங்கத்தில் உருவாக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயுன் கபீர் அறிவித்து அந்த பணிகள் துவங்கியுள்ளன. அவரை மம்தா கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளார். மம்தாவிற்கு விழும் முஸ்லீம் வாக்குகளை திசை திருப்ப சங்கிகளால்  ஏவி விடப்பட்டுள்ளவர் ஹுமாயுன் கபீர் என்பது அவரது சந்தேகம்.  ஒவைஸி உதாரணம் வேறு இருக்கிறதல்லவா! ரகசியம் விரைவில் தெரிய வரும்.

நிற்க

மேற்கு வங்கத்தில் கட்டப்படும் மசூதிக்கு பாபரின் பெயரை வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேவகி நந்தன் பாண்டே என்றொருவர் பொது நல வழக்கு தொடுக்க இன்று அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக பாபர் மசூதியை இடித்த கூட்டத்திற்கு பாபரின் பெயரில் இந்தியாவின் வேறு மூலையில் இன்னொரு மசூதி ஏற்படுவதை ஏற்க முடியவில்லை போல . . .

பிகு: புதிய மசூதி கட்ட அயோத்தியில் இடம் ஒதுக்கப்பட்டதே, அங்கே புதிய மசூதி கட்டியுள்ளார்களா? நாளை பார்ப்போம்.

பழம் நழுவி பாலில் விழ பத்தாண்டுகள்

 


தேமுதிக இப்போது திமுக கூட்டணியில் இணைந்து விட்டது. என்ன பேரம் என்பது தெரியவில்லை. சிவராத்திரி அன்று பாஜகவின் ராஜ்நாத்சிங், அதிமுகவின் தங்கமணி ஆகியோரோடு ஜக்கியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இரண்டு தினங்களுக்குள் அறிவாலயம் வந்து விட்டார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது பத்தாண்டுகளுக்கு முன்பாக கலைஞர் கூறியதுதான் நினைவுக்கு வந்தது.

"பழம் நழுவி பாலில் விழுந்து விடும்" என்று எதிர்பார்ப்பதாக அவர் பல முறை கூறிக்கொண்டிருந்தார். ஆனால் திமுக கூட்டணிக்கு வராத விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியோடு கரம் கோர்த்துக் கொண்டார். அதுதான் மக்கள் நலக்கூட்டணிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக போனது.

சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, மதிமுக, விசிக ஆகிய நான்கு  கட்சிகள் இணைந்து பல கூட்டியக்கங்கள் நடத்தி பின்பு அந்த போராட்ட ஒற்றுமை மக்கள் நலக் கூட்டணியாக மலர்ந்த போது மக்கள் ஆதரவு இருந்தது. ஊடகங்களும் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தது.

எப்போது விஜயகாந்தும் ஜி,கே.வாசனும் வந்தார்களோ, அதற்கு பிறகு எல்லாமே தலை கீழாக மாறியது. சமூல வலைத்தளங்களின் துவக்க காலமாக இருந்தாலும் அவையும் ஊடகங்களும் அக்கூட்டணியை ஒரு கேலிப் பொருளாக மாற்றி ஒரு மாற்று அரசியல் சக்தி உதயமாவதை கருக்கி விட்டார்கள்.

கலைஞர் காலத்தில் பால் கிண்ணத்தில் விழாத பழம் பத்தாண்டுகளுக்குப் பின்பு மு.க.ஸ்டாலின் காலத்தில் விழுந்து விட்டது.

Thursday, February 19, 2026

இந்தியாவை இழிவு படித்திய சங்கிப் பல்கலைக்கழகம்

 


சீனாவிலிருந்து காசு கொடுத்து வாங்கி வந்த ரோபோ நாயை, தங்கள் பல்கலைக்கழகத்தின் திறன் மையத்தில் கண்டுபிடித்தோம் என்று உத்திரப்பிரதேசத்தில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைகழகம், புதுடெல்லியில் நடைபெற்ற AI மாநாட்டில் பீற்றிக் கொள்ள அந்த பொய் மறு நாளே அம்பலமானது.

அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் மட்டும் அசிங்கப் படவில்லை. ஒட்டு மொத்த  இந்தியாவும் அசிங்கப்பட்டது. இந்திய அறிவியல் திறன் அசிங்கப்பட்டது. இந்தியாவின் சுயசார்பு உற்பத்தித் துறை அசிங்கப்பட்டது.

இந்த அசிங்கத்தைத்தான் ஓவியர் தோழர் ரவி பாலேட் அட்டகாசமான கார்ட்டூனாக மாற்றி விட்டார்.

இப்படி ஒரு வேலையைச் செய்ய அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக் கழகத்திற்கு எப்படி தைரியம் வந்தது?

கீழே உள்ள படங்கள் உண்மையைச் சொல்லும்.




இந்த புகைப்படங்களை வைத்து மட்டும் அது ஒரு சங்கிப் பல்கலைக்கழகன் என்று சொல்லி விட முடியுமா?

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அந்த பல்கலைக்கழகம், தன் மாணவர்களை வைத்து பாஜகவிற்கு ஆதரவாகவும் இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் பிரச்சாரப் பேரணி நடத்தியுள்ளார்கள்.



அறிவியலோ, அறவியலோ, இந்தியாவிற்கு எப்போதும் இழிவு சங்கிகளால்தான். 

C.B.I கரடியே காரி உமிழ்ந்த . . .

 


நான்காண்டுகளுக்கு முன்பாக ஆட்டுக்காரன் ஒரு மாணவியின் தற்கொலையை மத மாற்றத்தினால் நிகழ்ந்தது என்று கொளுத்திப் போட்டு கலவரத்துக்கு அடி போட, சங்கிகள் அனைத்து வித பொய்களையும் கட்டவிழ்த்து விட, திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் வழக்கம் போல சங்கிகள் விருப்பத்திற்கேற்ப சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கடைசியில் சி.பி.ஐ விசாரித்து முடித்து அறிக்கையும் கொடுத்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறிக்கை விபரத்தைச் சொல்கிறது.


ஆனால் ஆட்டுக்காரனெல்லாம் மன்னிப்பு கேட்பான் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் சங்கிகளுக்கு வெ.மா.ரோ.சூ.சொ எதுவும் கிடையாது.

பிகு : அந்த சமயத்தில் நான் எழுதிய மூன்று பதிவுகள் கீழே உள்ளது.

அண்ணாமலையை கைது செய்யவும் என்ற பதிவின் இணைப்பு இங்கே

அண்ணாமலை, வானதி, சங்கிகள் கவனத்திற்கு என்ற பதிவின் இணைப்பு இங்கே

பொய் சொல்லி, பயந்தாங்குளி வானதி அம்மையார் என்ற பதிவின் இணைப்பு இங்கே

Wednesday, February 18, 2026

நாங்களும் முதலமைச்சர்கள்தான் . . .


 திரு பர்கலா பிரபாகர் எழுதி ஃப்ரண்ட்லைன் இதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் தமிழாக்கம் செய்த "புதிய இந்தியா எனும் கோணல் மரம்"  நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். முழுமையாக முடித்த பின்பு விரிவாக எழுதுவேன். "வச்சு செய்யறது" என்பதற்கு உதாரணம் இந்த நூல்.




அந்த நூலிலே "அசாதாரணமாக்கு, காட்சிப்படுத்து" என்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் கீழே உள்ளது.





இந்த செய்தியை இதற்கு முன்பு கூட படித்த நினைவு. ராஜ்நாத்சிங்கோ, அருண் ஜெய்ட்லியோ சொன்னார்கள் என்று நினைவு.


மொரார்ஜி தேசாய் மஹாராஷ்டிர (முந்தைய பம்பாய் மாநிலம்) மாநில முதலமைச்சராகவும்

சவுத்ரி சரண் சிங்கும், விஸ்வநாத் சிங்கும் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராகவும்

பி.வி.நரசிம்மராவ் ஆந்திராவின் முதல்வராகவும்

ஹெச்,டி,தேவே கௌடா, கர்னாடகாவின் முதல்வராகவும்

இருந்திருக்கிறார்கள்.

மோடியை உயர்த்திப் பிடிப்பதற்காக அவர்கள் எப்படி வரலாற்றை மறைக்கிறார்கள் பாருங்கள்! 

இதை மூடச்சங்கிகள் நம்ப வேறு நம்புவார்கள்.