ஏதோ 1983 உலகக் கோப்பையில் கபில்தேவ் 175 ரன் அடித்து உலகச் சாதனையை உருவாக்கியது போல
ஏதோ ஒரு சாதனை படைத்ததாக சங்கிகள் இன்று பீற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
குஜராத் முதல்வராகவும் இந்திய பிரதமராகவும் அவர் 8931 நாட்கள் பதவியில் இருந்து சாதனை படைத்ததாக பீற்றிக் கொள்கிறார்கள்.
குஜராத் முதல்வராகவோ அல்லது இந்திய பிரதமராகவோ அவர் எதுவும் கிழிக்கவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை.
பூஜ் நில நடுக்கத்தின் போது அன்றைய முதல்வர் கேசுபாய் பட்டேல் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக யானை மாலை போட்டு ...............அரசன் ஆன கதையாக அவர் முதலமைச்சர் ஆனார்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்றதுதான் அவருடைய ஒரே சாதனை.
அவருடைய செல்வாக்கு சரியும் போதெல்லாம் போலி எண்கவுண்டர்கள் செய்தது இன்னொரு சாதனை.
அவருடைய சாதனைகள் தொடர்பாக அவர் முதல்வராக இருக்கும் போதே எழுதிய மூன்று பதிவுகளை படியுங்கள்.
உங்கள் மகன் மோடி போல இருப்பதை அனுமதிப்பீர்களா?
டாடா நானோ -மேற்கு வங்கத்திலும் குஜராத்திலும்
பிரதமராக என்ன கிழித்தார் என்பதை நிறைய நிறைய எழுதியுள்ளேன். எதற்கும் லாயக்கில்லாத, ஊதிப் பெருக்கப்பட்ட வெற்று பிம்பம் மோடி.
அவருடைய ஆட்சிக்காலம் அவருடைய ஊதாரித்தனமான சொகுசு வாழ்விற்கு உதவியுள்ளது. எஜமானர்கள் அதானி, அம்பானி வகையறாக்கள் செல்வம் பெருக வழி வகுத்துள்ளது. ட்ரம்ப், நெதன்யாகு போன்ற எஜமானர்கள் அடி பணிந்து கிடப்பதே சொர்க்கமாய் நினைக்கிறார்.
மோடி குஜராத் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் கொடுத்தது
8931 நாட்கள் வேதனை மட்டுமே.





















