பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை முதலில் படியுங்கள்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை முதலில் படியுங்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில்
பழனி தொகுதியில் தோழர் என்.பாண்டி,
கீழ்வேளூர் தொகுதியில் தோழர் டி.லதா,
கந்தர்வகோட்டை தொகுதியில் தோழர் எம்.சின்னதுரை,
பத்மநாபபுரம் தொகுதியில் தோழர் ஆர்.செல்லசுவாமி,
திருவொற்றியூர் தொகுதியில் தோழர் எல்.சுந்தரராஜன்
ஆகியோர் போட்டியிடவுள்ளனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவர்களின் குரல் உழைக்கும் மக்களின் குரலாக, ஜனநாயகத்தின் குரலாக, மத நல்லிணக்கத்தின், மதச்சார்பின்மையின் குரலாக தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்கும்.
இந்த பதிவை படிப்பவர்களில் இத்தொகுதிகளின் வாக்காளர்கள் யாராவது இருப்பின் அவர்களை
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் டெல்லி கணேஷ், தன் மனைவி, மகன், மகள் ஆகியோருக்காக செலவு செய்த தொகையை கணக்கு எழுதி அதை சொல்லி குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார். தான் செலவு செய்த பணத்தை மகனின் கல்யாணத்திற்கு வரதட்சணையாக வசூல் செய்ய துடிப்பார். சமைத்துப் போட்டதற்கான பணத்தை கழித்துக் கொண்டு மீதத் தொகையை கொடுத்து விட்டு அம்மா வீட்டிற்குப் போகச் சொல்லி மிரட்டுவார்.
இது திரைப்படக் காட்சி.
அதை தவெக தற்குறிகளின் தலைவன் விஜய் நிஜமாக்கி விட்டார்.
ஆமாம், அவர் இன்று தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் மனைவி, மகன், மகள் மட்டுமல்ல அப்பா, அம்மாவிற்குக் கூட கடன் கொடுத்ததாக கணக்கு காண்பித்துள்ளார்.
நேற்று நீதா அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான ஐ.பி.எல் போட்டியை என் மகன் பார்த்துக் கொண்டிருந்த போது எட்டாண்டுகள் முன்பாக 30, மே, 2018 அன்று எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. "முற்றுகை" எழுத தரவுகள் சேகரிக்க கொல்கத்தா போயிருந்த போது பார்த்த சம்பவத்தை பதிவாக எழுதியிருந்தேன்.
இரு அணிகளிலும் முதலாளிகள் அப்படியே தொடர்கிறார்கள். ரசிகர்களும் தங்கள் மாநிலத்து அணி என்ற விசுவாசத்தோடுதான் உள்ளனர். கொல்கத்தா போல மும்பையில் சண்டை நடந்ததா என்று தெரியவில்லை.
இதோ பதிவுக்கு செல்கிறேன்.
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. விறுவிறுப்பான காட்சிகள், திருப்பு முனைக் காட்சிகள், கண்ணீர் ததும்பும் செண்டிமெண்ட் காட்சிகள் மட்டுமல்ல காமெடிக் காட்சிகளும் நிறைந்ததாக மட்டும் தேர்தல் இருக்கப் போவதில்லை. காமெடி காட்சிகளும் நிறையவே இருக்கப் போகிறது. அப்படிப் பட்ட காமெடி காட்சிகளை வழங்குவதில் முக்கிய பாத்திரம் விஜய்க்கும் அவரது தவெக தற்குறிகளுக்கும்தான் இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் மேலே உள்ள படம்.
முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ்.
இவர் விஜய் ரசிகைகளை மிகவும் கீழ்த்தரமான வார்த்தை மூலம் கொச்சையாக திட்டியுள்ளார். சில விஜய் ரசிகைகள் பேசுவது எரிச்சலூட்டும் என்பது வேறு விஷயம். அவர்களை தற்குறிகள் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றால் அவர்கள் முதிர்ச்சியில்லாமல் பேசுவது கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று.
அதற்காக ஒட்டுமொத்தமாக அனைத்து விஜய் ரசிகைகளையும் கேவலமாக சித்தரிப்பதும், சர்ச்சை உருவான பிறகும் வருத்தம் தெரிவிக்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதம் பிடிப்பதும் மோசமான அணுகுமுறை.
அப்துல் கலாம் அவர்களோடு நெருக்கமாக இருந்ததாக பொன்ராஜ் சொல்வார். அப்துல் கலாமிடமிருந்து எதுவும் கற்கவில்லை போல . அப்துல் கலாம் உயிரோடு இருந்திருந்தால் இவரது செய்கையை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.
இவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ட்ரம்ப் உதிர்த்த லேட்டஸ்ட் முத்து கீழே உள்ளது.
ட்ரம்ப் சொன்னதை இரான் மறுத்துள்ளதாக அதே செய்தி சொல்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நாந்தான் என்று ட்ரம்ப் அன்றாடம் சொன்னாலும் ஒரு வார்த்தை கூட மறுத்து பேச மோடி அரசால் ஏன் முடியவில்லை?