Tuesday, September 26, 2023

இரண்டே கேள்வி எடப்பாடி

 



பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்தமைக்காக எடப்பாடிக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமோ! ஆனால் இந்த ஊடல் எப்போது வேண்டுமானாலும் கூடல் ஆகலாம் என்பதால்  அவசரப்பட்டு ஒரு வாழ்த்தை விரயம் செய்ய விரும்பவில்லை.

 

அடுத்த கூடலுக்கு முன்பு முதலில் என் கேள்விகளை கேட்டு விடுகிறேன்.

 


பாஜகவிலிருந்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவது என்று அறிக்கை சொல்கிறது. பாஜக கூட்டணியிலிருந்து அல்லது என்.டி.ஏ விலிருந்து வெளியேறுகிறது என்றால் சரியாக இருக்கும். அதென்ன பாஜகவிலிருந்து வெளியேறுவது? ஒரு வேளை இரட்டை உறுப்பினராக இரண்டு கட்சிகளிலும் இருந்தீங்களா எடப்பாடி?

 

கூட்டணியை முறித்துக் கொண்டு டிமோவின்  அதிருப்திக்கு ஆளாகியுள்ள எடப்பாடியாரே, உங்கள் வீட்டுக்கு புதிய விருந்தினர்களாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை ஆகியோர் வருவார்களே! எதுவும் கிடைக்காத படி எல்லாவற்றையும் பத்திரமாக பதுக்கி விட்டீர்களா?

 

Monday, September 25, 2023

திருந்தவே மாட்டானுங்க

 

பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதிவு செய்த ட்வீட் கீழே உள்ளது.


இவனுங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொண்டு எதையாவது பிதற்றுவதுதான் இந்த கயவர்களின் பிழைப்பாகி விட்டது.

புரட்டாசி மாதத்தில் நீ அசைவ உணவு சாப்பிடவில்லையென்றால் அது உன் விருப்பம். உன் வாயில் யாரும் அதை திணிக்கவில்லை. அப்படிப்பட்ட திணிப்பை செய்வது நீங்களும் உங்களும் சனாதனமும், புரட்டாசி மாதம் என்பதால் வீட்டில் கட்டுப்பாடு செய்கிறார்களே என்று புலம்பி வெளியில் சாப்பிடுபவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா சேகரு?

எவ்வளவு அடிவாங்கினாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். ஏனென்றால் இவர்களும் நாயின் வாலும் ஒன்று. 


Saturday, September 23, 2023

முன் பனியா? முதல் மழையா?



சூர்யா நடித்த நந்தா திரைப்படத்தில் வரும் "முன் பனியா? முதல் மழையா?" பாடலின் வயலின் வடிவம்  என் மகனின் முயற்சியில் . . .

யூட்யூப்  இணைப்பு கீழே . . .

https://youtu.be/WkvSt8rUw6w?si=x4C1p0maRK6Uv7AL

Friday, September 22, 2023

துப்பாக்கி ஜோடியும் தமிழ்நாட்டுக் கூட்டணியும்

 


கள்ளக்குறிச்சியில் நாளையும் நாளை மறுநாளும் எங்கள் கோட்டத்தின் 36 வது பொது மாநாடு. அறிக்கையை இறுதிப்படுத்தும் பணியை அச்சகத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த போது அங்கே வந்த ஒரு தோழமைச் சங்கத் தோழர் ஒரு கேள்வி கேட்டார்.

"அதிமுக - பாஜக  சண்டை பற்றி ஏன் தோழர் எழுதவில்லை?"

அவருக்கு நான் அளித்த பதில் . . .

"மாநாட்டுப் பணிகள் காரணமாக நேரம் அவ்வளவாக கிடைக்கவில்லை. மேலும் பாஜக- அதிமுக கூட்டணி என்பது துப்பாக்கி படத்தில் வரும் விஜய்-காஜல் அகர்வால் ஜோடி போல. படத்தில் அவர்கள் காதலிப்பார்கள், ப்ரேக் அப் செய்வார்கள், மறுபடி காதல், ப்ரேக் அப் என்று போகும். கடைசியில் சுபம். அது போலத்தான் இந்த கூட்டணியும். அதனால் இதிலே கருத்து சொல்ல பெரிதாக ஏதுமில்லை"

என்ன? நான் சொல்றது சரிதானே?

Thursday, September 21, 2023

பயம். மகிழ்ச்சி, மோசடி

 


எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல டிமோவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது நன்றாகத் தெரிகிறது.

அதனால் மகளிர் மசோதா நிறைவேறியது மகிழ்ச்சி.

ஆனால் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகுதான் அமலாகும் என்பது வழக்கமான பாஜக மோசடி.

எனவே 2024 ல் இவர்களை துரத்தாவிட்டால் சட்டம் அமலாகுமா என்பது கேள்விக்குறியே!

Tuesday, September 19, 2023

வினாயகருக்கும் விடுதலை . ..

 


வினாயகர் சதுர்த்தியின் போது வழக்கமாக எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வைக்கும் வினாயகர் சிலை இந்த வருடம் இல்லை.

அதனால் நாள் முழுதும் குத்து பாடல்களை மட்டும் கேட்கும் அவஸ்தையில் இருந்து எங்களுக்கு விடுதலை.

எங்களுக்கு மட்டுமா விடுதலை?

வினாயகருக்கும்தான்.

குத்து பாடல்களை  கேட்பதிலிருந்து மட்டுமல்ல, பிள்ளையார் சிலையை திரை போட்டு மூடி விட்டு அங்கேயே டாஸ்மாக் சரக்குகளை அடிப்பதை வேடிக்கை பார்ப்பதிலிருந்து கூட.

ஆனால் இந்த விடுதலை எல்லோருக்கும் கிடைக்கவில்லை.

சங்கப்பணியாக நேற்று மாலை அலுவலகம் சென்ற போது ஒரு கோயிலிலும் இன்னும் இரண்டு இடங்களிலும் பிள்ளையார் சிலை இருந்தது.

கோயிலில் இருந்து மட்டும் "ஒன்பது கோள்களையும் ஒன்றாய் காண" வரச்சொல்லும் பாடல். மற்ற இடங்களில்?

காவாலய்யா, நூ காவாலய்யா, ஆஆஆஆஆ
அலப்பறை அலப்பறை சூப்பர் ஸ்டாரு.

திரும்பி வருகையில் ஒலித்த பாடல்கள் சத்தியமாக புரியவே இல்லை. பாவம் பிள்ளையார் . . . .

Saturday, September 16, 2023

மாலன் சொன்னதாலேயே . . .

 


மூத்த்த்த்த்த்த்த்த எழுத்து வியாபாரி இந்தியாவின் பெயரை ஏன் பாரதம் என்று மாற்ற வேண்டுமென விரிவாக எழுதியுள்ளாராம். அவர் தன் முகநூல் பக்கத்தை பூட்டி வைத்துள்ளதால் அவர் உதிர்த்த முத்துக்கள் என்னவென்று அறிய முடியவில்லை.

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்ன அந்த எழுத்து வியாபாரி வாங்கிய காசுக்கு மேலேயே கூவியிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

மாலன் எழுதியதாலேயே நிச்சயம் சொல்லலாம்.

"பாரதம் என்பது தேவையில்லாத ஆணி"