Sunday, March 15, 2026

திராட்சை கிட்டா நரியான ஜெமோ

 


நேற்றைய பதிவில் சொன்னது போல தமிழ் இலக்கிய உலகில் பெரிய ரத்தக்களறி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தால் இந்த சர்ச்சை பின்னுக்குப் போகும்.

வைரமுத்து ஞானபீடம் பெறுவதை நான் கேலிச்ச்சிரிப்புடன் பார்க்கிறேன். அதற்கான காரணங்கள்.

பல வருடங்களாக முயற்சி செய்து வாங்கப்பட்ட விருது.

இந்த விருது பெறுவதற்கான முயற்சிகளில் ஒன்றாக தருண் விஜய் என்ற பெரிய சங்கிக்கு தமிழ்நாட்டில் ரத்தினக் கம்பளம் விரித்து இறுதியில் திருவள்ளுவரின் சிலையை கறுப்பு ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஹரித்வாரின் ஒரு சாக்கடை ஓரத்தில் கிடத்திய இழிவுக்கு காரணம் வைரமுத்து.

அவர் மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்கள். (அவர் மோசமாக நடந்து கொண்ட பின்னும் எதற்கு திருமணத்திற்கு அழைத்து காலில் விழ வேண்டும் என்ற கேள்வி சின்மயியைப் பார்த்து கேட்கப்படும்,)  ஆனால் மற்றவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள்? 

ஜெயகாந்தன் கடைசியாக எழுதியது என்னை பாராட்டித்தான் என்றொரு நாடகம் போட அந்த கதையை ஜெயகாந்தனின் மகள் தோழர் தீபலட்சுமியே தகர்த்தெறிந்தார்.

அவரது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. வியர்வையின் பெருமையை போற்றி எழுதுபவர் இவர். ஒரு தொலைக்காட்சி கேமரா உதவியாளரின் நெற்றி வியர்வையில் ஒரு சொட்டு இவரது சட்டையில் மைக் பொருத்துகையில் சிந்திய காரணத்தால் அவரை கன்னத்தில் அடித்து விட்டு தன் கையை டெட்டால் போட்டு கழுவிய சம்பவத்தை பல்லாண்டுகள் முன்பே பதிவு செய்துள்ளேன். 

"நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல " என்று நிர்மலா அம்மையாரை வர்ணித்ததை எல்லாம் மறந்து விட முடியவில்லை.

நான் எதிர்பார்த்தது போல மிகக் கடுமையான கண்டன இயக்கத்தை முன்னெடுத்துள்ளது புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகன்தான்.

அவரது கண்டனத்தை அப்படியே பகிர்ந்து உங்களை கொடுமை செய்ய நான் ஒன்றும் இரக்கமில்லாத கொடூரன் அல்ல.

அவரின் வெறுப்பின் பின்னணி என்பதை அவரது குண்டர் படை தளபதி போதைக்கவி லச்சூவின் பதிவு சொல்கிறது.


ஜெயமோகனின் அல்லக்கையே அவரை அற்பன் என்று விளிக்கும் நேரத்தில் ஜெமோ தன் பதிவில் தன்னை பாஜக, ஆர்.எஸ்.எஸ் அதிகார வட்டங்களுக்கு எதிரானவன் என்று சித்தரித்துக் கொள்ளும் சீன் மூலம் நம்மை சிரிக்கை வைத்து, அவரது கண்டனம், திராட்சை கிட்டா நரியின் புலம்பல் என்று அவரே நிரூபித்து விடுகிறார்.

அநேகமாக ஜெயமோகனுக்கு ஏதாவது பெரிய விருது கொடுங்கய்யா, புக்கர் விருது, மாகஸேசே விருது இப்படி ஏதாவது, இல்லையென்றால் அவரது புலம்பல் காதைகளிலிருந்து தமிழ்நாடு தப்ப முடியாது.


காந்தியைச் சொன்னவர் ஏன் நேருவை சொல்லவில்லை மோடி?

 


கீழேயுள்ள படத்தில் உள்ள ஜந்துவின் பெயர் சுதான்ஷு திரிவேதி. பாஜகவின் மூத்த ஊடகத் தொடர்பாளர், உபியிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வான, பி.ஹெச்.டி பட்டம் பெற்றதாக சொல்லப்படும் முன்னாள் பேராசிரியர்.


எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரும் மந்திரி பூரியின் பெயரும் இருப்பது பற்றிய கேள்விக்கு அந்த ஜந்து 

"ராஜீவ் காந்தியின் பெயர் உள்ளது, சோனியா காந்தியின் பெயர் உள்ளது, ராகுல் காந்தியின் பெயர் உள்ளது, மகாத்மா காந்தியின் பெயரும் உள்ளது" 

என்று கோபமாக பதில் சொல்கிறது. 

ஆனாலும் இந்த மகாத்மா காந்தி மிகவும் மோசமானவர். 1953 ல் எப்ஸ்டீன் பிறப்பதற்கு ஐந்தாண்டுகள் முன்பே இறந்து போய் சுதான்ஷு திரிவேதியை காமெடி பீஸாக்கி விட்டார்.

ஆனால் சுதான்ஷு திரிவேதியும் பாவம்தான்.

மகாத்மா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடைய பெயரையெல்லாம் சொன்ன அந்த ஜந்து மோடியின் பரம வைரி ஜவஹர்லால் நேருவின் பெயரை மட்டும் சொல்லவில்லை.

அது மறதியா? இல்லை திட்டமிட்டு தவிர்த்தாரா?

மோடிக்கு இந்த விஷயம் தெரிய வரும் போது திரிவேதிக்கு "ராஜ குலோத்துங்க" வை விட்டுவிட்ட வாயிற்காப்பாளருக்கு இம்சை அரசன் 23ம் புலிகேசி கொடுத்த தண்டனைதான் கிடைக்கும். 


Saturday, March 14, 2026

ஞான பீட விருதும் நம்மவர் சீனும்

 


ஏனென்று தெரியவில்லை. வைரமுத்து ஞானபீட விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்ததும் மேலே உள்ள நம்மவர் படக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. அந்த தகவல் ஜெமோவிற்கு பயனளிக்கலாம். இன்னும் கொஞ்ச நாள் இலக்கிய உலகத்தில் ரத்த ஆறு ஓடப் போகிறது. தேர்தல் நேரத்தில் இந்த விருது திமுகவிற்கு ஒரு தேவையில்லாத ஆணி. 

போரில் ட்ரம்ப் இன்று 😆😆😆😆


சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்னன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த காணொளி கீழே உள்ளது. கடைசி வரை கண்டிப்பாக பார்க்கவும். நாளைக்கு மோடிக்கும் இதெ நிலை வரப்போகிறது.



Friday, March 13, 2026

ஆரம்பிச்சிட்டாங்கய்யா, முடக்க ஆரம்பிச்சிட்டாங்க

 


சமீப காலமாக ட்விட்டர் அக்கவுண்டில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

நன்றி கெட்ட துரோக மோடி அரசு    என்ற பதிவை நேற்று எழுதி ட்விட்டரிலும் பகிர்ந்து கொண்டிருந்தேன். வழக்கம் போல சில சங்கிகளின் பதிவுகளில் பகிர்ந்து கொண்டேன்.

எந்த சங்கி ரிப்போர்ட் செய்ததோ!

இன்று காலை ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக காண்பித்தது.
அதற்கு பிறகு அவர்கள் கேட்டது போல
 "ரோபோ இல்லை, மனிதன்" என்று நிரூபித்த பின்பு,
ஓடிபி யை சரியாக பதிவு செய்த பின்பு
மீண்டும் கதவுகள் திறந்தது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.






இப்படியெல்லாம் முடக்கினால் மோடி பற்றி எழுதாமல் முடங்கி விடுவேனா என்ன!

நாமர்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.


கண்ணதாசன் பாடலால் கதையளந்த மோடி

 


திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் எண்ணற்ற உருட்டுக்களை அர்ப்பணித்த மோடி, ஒரு கதை ஒன்றையும் அளந்துள்ளார்.

அதென்ன கதை?



மதுரை விவசாயி காலையில் விளைவிக்கும் மல்லியை  மாலையிலேயே நியூயார்க்கிலும்  பாரீஸிலும் விற்பது சாத்தியமா?

இப்போது சென்னையிலிருந்து நியூயார்க்கிற்கும் பாரீஸிற்கும் விமானங்கள் செல்கின்றன. அதன் பயண நேரம் என்ன என்பதை கீழே பாருங்கள். சென்னை நேரத்திற்கும் மதுரை நேரத்திற்கும் வித்தியாசம் அதிகபட்சம் ஒரு மணி நேரம் இருக்கலாம். அது கூட பயண நேரம் அதிகம்தான் ஆகும்.




சென்னையிலிருந்து நியூயார்க் செல்ல குறைந்த பட்சம்  23 மணி நேரமும் பாரீஸ் செல்ல குறைந்த பட்சம் 18 மணி நேரமும் ஆகிறது. 

பிறகு எப்படி காலையில் விளைவித்தது மாலையிலேயே விற்பனை ஆகும்? 

ஆனால்

தவறு மோடியுடையது அல்ல.

மோடிக்கு பேச்சு எழுதிக் கொடுக்கும் பூத எழுத்தாளர் (GHOST WRITER)  யாரோ, மூத்த்த்த்தவர் மாலனோ?) அவருக்கு "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் வரும் "எங்கேயும் எப்போதும்" பாடலில் வரும் "காலை ஜப்பானில் காஃபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி" வரிகள் நினைவுக்கு வந்து அந்த அடிப்படையில் மோடிக்கு உரை எழுதிக் கொடுத்திருப்பார்.

பாவம் மோடி, அவரை திட்டாதீங்க . . .

Thursday, March 12, 2026

நன்றி கெட்ட, துரோக மோடி அரசு . . .

 


சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிற ஒரு செய்தி கீழே உள்ளது.



இந்த செய்தியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

அதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்.

இரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மறைவிற்கு மோடி ஒரு இரங்கல் செய்தி கூட விடுக்கவில்லை.

இரானின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவை கண்டிக்கவில்லை, கண்டிப்பதற்கான தைரியம் மோடிக்கு கிடையாது என்பது நாமறிந்த உண்மைதான். போரை நிறுத்துங்களேன் என்று ஒரு சின்ன வேண்டுகோள் கூட விடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் இந்தியக் கப்பல்களுக்கு இரான் அனுமதி கொடுத்தது என்றால் அது இரானின் பெருந்தன்மை. பாரம்பரியமாக நட்பு பாராட்டும் இந்திய மக்கள் மீது கொண்டுள்ள மரியாதை.

இந்திய அரசின்  சிக்கலுக்கு தீர்வு கொடுத்த இரானுக்கு இந்தியா செய்த பதில் மரியாதை என்ன?

இரான் மீதான கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் வழிமொழிந்து இஸ்ரேல்-அமெரிக்கக் களவாணிகள் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மோடி. இதையும் கூட ராஜதந்திரம் என்று  வெட்கமே இல்லாமல் பீற்றிக் கொள்வார்கள் சங்கி மூடர்கள்.

உதவிக்கரம் நீட்டுபவரின் முதுகில் குத்தும் நன்றி கெட்டவர்களின் ஆட்சியில் வாழ்கிறோம் என்று நினைக்கவே கடுப்பாக இருக்கிறது.

ஆட்சியாளர்களின் துரோகத்தால் நாம் என்னென்ன பிரச்சினைகளை அனுபவிக்கப்போகிறோமோ?