Thursday, February 5, 2026

ஓடி ஓளிவதைத் தவிர மோடிக்கு வேறு வழியில்லை . . .

 


குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி சொல்லும் தீர்மானம் பிரதமர் பதில் அளிக்காமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

சீனப் படைகள் முன் வந்த போது முடிவெடுக்க திராணியில்லாமல் நடுங்கியதை சொல்லும் ராணுவத் தளபதியின் புத்தகத்தைக் கொடுக்க ராகுல் காந்தி காத்திருக்கிறார்.

எங்கய்யா போச்சு உன் 56 இஞ்ச் மார்பு என்று எதிர்க்கட்சிகள் குடைவார்கள்.

டொனால்ட் ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து அவர் அடிமையாய் மாறி விட்டாயே என்ற கேள்விகள் வேறு.

இதைத் தவிர மோடிதான் முஜ்ரா நடனம்  (விபரங்களுக்கு  இந்த இணைப்பை பார்க்கவும்)   ஆடினார் என்று எப்ஸ்டீன் கோப்புகள் சொல்வதாக வேறு ஒரு தகவல்.

இப்படிப்பட்ட சூழலில் அவர் எப்போதுமே வெறுக்கும் நாடாளுமன்றத்திற்கு மோடி எப்படி வருவார்? 

ஓடி ஓளிவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.


அதற்கு ஓம் பிர்லா (சபாநாயகர் என்றெல்லாம் அந்த சங்கிக்கு மரியாதை அவசியமில்லை) சொல்லியுள்ள காரணம்.

வழக்கமான பாஜக அயோக்கியத்தனம்.

நாடாளுமன்றம் கூட பாதுகாப்பில்லை என்றால் உள்துறை அமைச்சர் பதவி எதற்கு? அமித் ஷா ராஜினாமா செய்யட்டும். 

பிகு : நான் பனையூரிலேயே பதுங்கி இருப்பதைப் பற்றி பாஜகவினர் யாரும் பேச முடியாது என்று விஜய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும். 

ஆஹா! அருமை!! அற்புதம் !!!

 


முக நூலில் பார்த்த ஒரு காணொளியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


அழுத்தம் திருத்தமாக உணர்வுபூர்வமாக பாடும் அந்த மழலையை பாராட்ட பொருத்தமான வார்த்தைகள் என்னிடம் இல்லை.

எதிர்காலத்தில் சிறப்பாக வளரட்டும்.

மார்க்சியமே வெல்லும் . . .

அவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்களா?

 


நேற்று மணிப்பூரில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

யும்மாம் கேம்சந்த்சிங் என்ற மெய்தி இனத்தவர் முதலமைச்சராகவும் நிம்சேன் கிப்கேன் என்ற குக்கி இனப் பெண் எம்.எல்.ஏ வும் லோசில் டிகோ என்ற நாகா இனத்தவரும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். 

மணிப்பூரில் உள்ள அனைத்து குக்கி மற்றும் நாகா அமைப்புக்கள், அரசில் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இணையக்கூடாது என்றும் தாங்கள் வாழும் பகுதியை தனியான யூனியன் பிரதேசமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அவர்களை பாஜக அரசு தாக்கியதன் ஒடுக்கியதன் விளைவு அது. மத்திய அரசின் மீதும் மோடியின் மீதும் அவர்கள் எப்போதோ நம்பிக்கை இழந்து விட்டனர். புதிதாக உருவான அமைச்சரவை ஒரு வெத்து வேட்டு என்பதையும் அவர்கள் அறிவார்கள். 

அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள், பெண்களுக்கு ஏற்பட்ட அராஜகங்கள், இழந்த உயிர்கள், அழிந்த உடமைகள் அப்படிப்பட்ட நிலைமைக்கு அவர்களை தள்ளியுள்ளன.

இந்த சூழலில் குக்கி இனத்தையும்  நாக இனத்தையும் சேர்ந்தவர்களை துணை முதலமைச்சராக்கினால் பிரச்சினை தீரும் என்று சாணக்கியத்தனமாக முடிவெடுத்துள்ளதாக  பாஜக  கருதுகிறது.

நிம்சேன் கிப்கேனும்  லோசில் டிகோவும் குக்கி, நாகா இனத்தவர்கள்தான். ஆனால் அந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களா? அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுத்தவர்களா? அம்மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களா?

இல்லை,

இல்லவே இல்லை.

இதுதான் யதார்த்தம். 

அந்த இனங்களை சேர்ந்தவர்களை துணை முதல்வராக்குவது என்பது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது அல்ல. எப்படி ராம்நாத் கோவிந்த் ஒரு பொம்மையாக இருந்தாரோ, எப்படி திரௌபதி முர்மு பொம்மையாக இருக்கிறாரோ, அது போன்ற பொம்மைகளாக இருக்க பதவி கொடுக்கப்பட்டவர்கள். 

அதனால் அமைதிக்கு வாய்ப்பில்லை.

பிகு: நேற்று மாநிலங்களவையில் கமலஹாசனின் உரை நன்றாக இருந்தது என்பதை இரண்டு மூன்று முறை பார்த்து கேட்ட பின்பே புரிந்தது. எளிய மொழியில் நேரடியாக இருந்திருந்தால் வீச்சு இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.

ஒரு குழப்பமான தலைப்பை வைக்க அவரது உரையே காரணமாக இருந்தது. 

 

Wednesday, February 4, 2026

தற்காலிக நீதிபதிகள் - அராஜகம்

 


நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு (Collegium) மிக மிக மோசமான முடிவொன்றை எடுத்துள்ளது.

ஓய்வு பெற்ற ஐந்து நீதிபதிகளை அலகாபாத் நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதிகளாக இரண்டாண்டு காலத்திற்கு நியமித்துள்ளார்கள்.

இதன் பொருள் என்ன?

புதிதாக நீதிபதிகளை தீர்ந்தெடுக்க உங்களுக்கு மனமில்லையா இல்லை புதிய நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதி உள்ளவர்கள் மொட்டைச் சாமியாரின் உபி மாநிலத்தில் யாரும் இல்லையா?

மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துப் போகக் கூடிய நீதிபதிகளை புதிதாக கண்டுபிடித்து பயிற்சி கொடுப்பதற்கு பதிலாக பழையவர்களே வசதி என்று நினைத்தார்களோ!

ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை கொடுப்பது என்பது அரசுத் துறையோ இல்லை  வேறு நிறுவனமோ  மிக மிக மோசமானது. இளைஞர்களுடைய வாய்ப்பை பறிக்கிற அராஜகம்.

இது மிக மிக மோசமான உதாரணம். . . .


எடப்பாடி துரத்தும் முன்பு ஆட்டுக்காரனே . . .

 


தன் தந்தையின் உடல் நலனை கவனித்துக் கொள்வதற்காக தெர்தல் பொறுப்புக்களிலிருந்து விலகுவதாக ஆட்டுக்காரனின் அறிவிப்பு வெளி வந்துள்ளது.


எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஆட்டுக்காரனை தலைவர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்ற எடப்பாடியின் நிபந்தனைக்கு பாஜக ஏற்கனவே அடி பணிந்திருந்தது.

ஆனாலும் ஆட்டுக்காரனின் அல்லக்கைகள் ஆட்டுக்காரனை அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சில் பில்ட் அப் கொடுத்த வந்த போதே சிக்கல் வரும் என்று எதிர்பார்த்தேன்.

வந்து விட்டது என்றே தோன்றுகிறது.

 ஆட்டுக்காரனை கட்சியிலிருந்தே தூக்க வேண்டும் என்று எடப்பாடி வெளிப்படையாக சொல்வதற்கு முன்பாக, ஆட்டுக்காரனே உஷாராகி விலகியதுதான் யதார்த்தம் என்று சின்னக்குழந்தைகளுக்குக் கூட தெரியும்.


Tuesday, February 3, 2026

மீண்டும் மோடியை சிறைப்படுத்திய ட்ரம்ப்

 


இந்தியாவை மோடி மீண்டும் அமெரிக்காவிடம் அடமானம் வைத்துள்ளார். 

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதை நிறுத்தியதற்காகவும்
அமெரிக்காவிடமிருந்தும் எதிர்காலத்தில் வெனிசுலாவிடமிருந்து வாங்க ஒப்புக் கொண்டதற்காகவும்,
அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை பூஜ்ஜியமாக்குவதற்கு ஒப்புக் கொண்டதற்காகவும்

அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கான வரியை மனமிறங்கி 25 % லிருந்து  18 % ஆக குறைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதை ட்ரம்ப் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இதெல்லாம் ஒரு டீலா மோடி?

இப்படி இந்திய நலனுக்கு எதிராக செயல்பட வெட்கமில்லையா?

இதிலே 56 இஞ்சர் என்று பெருமை வேறு.

அதாம்லே நிர்மலா சீத்தாராமன் !

 


நிர்மலா அம்மையார் பட்ஜெட்டில் கொடுத்துள்ள ஒரு அறிவிப்பு கீழே உள்ளது.


கடலே இல்லாத வாரணாசியிலும் பாட்னாவிலும் கப்பல் ரிப்பேர் மையம் எப்படி சாத்தியம் என்று எல்லோரும் கிண்டலடித்துள்ளார்கள்.

ஐடியா இல்லாத ஆளுங்க!

அவங்களுக்கு நிர்மலா அம்மையாரின் ப்ளானே தெரியலை.

வாரணாசியிலும் பாட்னாவிலும் கப்பல் ரிப்பேர் சென்டருக்கு கப்பல் வர வேண்டும். அதனால் அருகிலிருந்த கடலிருந்து கப்பல்கள் செல்லும் அளவிற்கு மிகப் பெரிய கால்வாய்கள் தோண்டப்படும். சேது சமுத்திர திட்டத்தை இவர்கள் சீரழித்தாலும் இதனை செயல்படுத்துவார்கள். 

அந்த கால்வாய்கள் தோண்டுவதற்கான ஒப்பந்தம் அதானி, அம்பானிக்கு வழங்கப்படும்.

அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக அதானி, அம்பானிக்கு ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகள் கடன் தரும்.

எப்படி விமான நிலையங்களும் துறைமுகங்களும் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அது போல கப்பல் ரிப்பேர் சென்டர்களும் அதானிக்கு வழங்கப்படும். 

அதை வாங்குவதற்கான பணம்?

எதற்கு இருக்கின்றன அரசு வங்கிகள்!

வாங்கிய கடனை அதானி எப்படியும் திருப்பி கட்ட மாட்டார். அதனால் சில வருடங்கள் கழித்து அனைத்து கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். 

அதானி, அம்பானிக்கு கொடுக்க எதுவும் இல்லாத போது இப்படி எதையாவது புதிதாக உருவாக்கித்தானே தர வேண்டும்!

அதனால்தான் கப்பல் ரிப்பேர் சென்டர்.

அங்கதான் நிக்கறாங்க நிர்மலா சீத்தாராமன்.