Wednesday, March 25, 2026

கடுப்பிலிருந்து விடுபட விவால்டி அற்புதம்

 


மாறுதலாக ஒரு இசைப் பதிவு.

முகநூலில் பார்த்த ஒரு அருமையான காணொளியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.




வளர்ந்த வயலின் கலைஞர்களுக்கு நிகராக அந்த சிறுவன் பியானோ வாசிப்பது அற்புதமாக உள்ளது.

அவர்கள் வாசிக்கும் இசைக் கோர்வை, பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த அண்டோனியா விவால்டி எனும் இசைக் கலைஞர் அமைத்த "விவால்டி" என்பதாகும். 

எரிச்சலான ஒரு தருணத்தில் ( பத்து கொடுத்த கடுப்புதான்) மனதை மாற்ற இந்த காணொளி  உதவிகரமாக இருந்தது.

பிகு: மேலே எதற்கு ஒரு சட்டையின் புகைப்படம்? 

விவால்டி என்றதும் அந்த காலத்தில் பாம்பே டையிங் கம்பெனி வெளியிட்ட பிராண்டட் ஷர்ட்டுகள்தான் நினைவுக்கு வந்தது. இன்னமும் அது இருக்கிறது என்பதும் இப்போது தெரிந்தது. 

விவால்டி என்றொரு ப்ரௌசர் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது.

Tuesday, March 24, 2026

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் க்யானேஷ்

 


தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு கடிதத்தில் கேரள பாஜகவின் முத்திரை இருப்பதும் அது அலுவலக ரீதியிலான தவறு என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததும்தான் இன்றைய பரபரப்புச் செய்தி.



எனக்கு சில உண்மைகள் தெரிஞ்சாகனும், மோடியால் பொறுக்கி எடுக்கப்பட்டு தலைமை தேர்தல் ஆணையரான மிஸ்டர் க்யானேஷ் குமார்.

பாஜக சீல் உங்கள் அலுவலகத்தில் உள்ளதா?

அல்லது

உங்கள் கடிதங்கள் பாஜக அலுவலகத்தில்தான் தயாரிக்கப்படுகிறதா?

ஆமாம்.

ஏழு வருடத்துக்கு முந்தைய கடிதம் இப்போது ஏன் சுற்றுக்கு வந்து கவனம் பெற்றது? 

உங்கள் அலுவலகத்தில் கூட நேர்மையான ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது இருக்கிறார்களா,  என்ன?

புதுவையில் அடி வாங்கும் காங்கிரஸார்.

 


புதுவை முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமிக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படாததால் அவரது ஆதரவாளர்கள், புதுவையின் தற்போதைய மக்களவை உறுப்பினரும், முன்னாள் முதல்வரும் தற்போதைய புதுவை காங்கிரஸ் தலைவருமான வி.வைத்தியலிங்கம் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தி காவல்துறையால் கலைக்கப்பட்டுள்ளனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.  அப்போது எழுதிய பதிவு கீழே நீல நிறத்தில் . . .

அடி வாங்கிய ஆளும் கட்சியினர்



ஒரு வழியாக புதுச்சேரி முதல்வர் யாரென்பது முடிவாகி விட்டது. மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து தெரிவிப்பது கிடையாது என்ற கொள்கை எனக்கு உள்ளதால் அது பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை.

இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத கட்சிக்காரர்கள் கல் வீசி  பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்க, காவல்துறை அவர்களை துரத்தி துரத்தி தடியால் அடித்திருக்கிறது.

இந்தியாவிலேயே ஆளும்கட்சியினர் அடி வாங்கியது முதன் முதலாக புதுச்சேரியில் என்றுதான் நினைக்கிறேன். 

ஆரம்பம் அமோகமாக இருக்கிறது. 

பின் குறிப்பு : ஒரு பிளாஷ்பேக். புதுவையில் திரு சண்முகம் என்பவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்கு வசதியாக தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய யாரும் தயாராக இல்லாததால் ஆறு மாதத்தில் ராஜினாமா செய்து விட்டார். 

இதில் என்ன வேடிக்கை என்றால் நாராயணசாமியை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அன்று காங்கிரஸார் போலீஸிடம் அடி வாங்கினார்கள் (அப்போது அடி வாங்கிய நமச்சிவாயம் வகையறாக்கள் பின்னாளில் பாஜகவிற்கு தாவி விட்டார்கள் என்பது வேறு விஷயம்.) இப்போது நாராயணசாமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அடி வாங்கினார்கள்.


Monday, March 23, 2026

8931 நாட்கள் வேதனைதான் சங்கிகளே

 


ஏதோ 1983 உலகக் கோப்பையில் கபில்தேவ் 175 ரன் அடித்து உலகச் சாதனையை உருவாக்கியது போல 

ஏதோ ஒரு சாதனை படைத்ததாக சங்கிகள் இன்று பீற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் முதல்வராகவும் இந்திய பிரதமராகவும் அவர் 8931 நாட்கள் பதவியில் இருந்து சாதனை படைத்ததாக பீற்றிக் கொள்கிறார்கள்.

குஜராத் முதல்வராகவோ அல்லது இந்திய பிரதமராகவோ அவர் எதுவும் கிழிக்கவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை.

பூஜ் நில நடுக்கத்தின் போது அன்றைய முதல்வர் கேசுபாய் பட்டேல் மீது ஏற்பட்ட  அதிருப்தி காரணமாக யானை மாலை போட்டு ...............அரசன் ஆன கதையாக அவர் முதலமைச்சர் ஆனார்.

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்றதுதான் அவருடைய ஒரே சாதனை. 

அவருடைய செல்வாக்கு சரியும் போதெல்லாம் போலி எண்கவுண்டர்கள் செய்தது இன்னொரு சாதனை.

அவருடைய சாதனைகள் தொடர்பாக அவர் முதல்வராக இருக்கும் போதே எழுதிய மூன்று பதிவுகளை படியுங்கள்.

உங்கள் மகன் மோடி போல இருப்பதை அனுமதிப்பீர்களா?

குஜராத் கோயபல்ஸ்கள்

டாடா நானோ -மேற்கு வங்கத்திலும் குஜராத்திலும்

பிரதமராக என்ன கிழித்தார் என்பதை நிறைய நிறைய எழுதியுள்ளேன். எதற்கும் லாயக்கில்லாத, ஊதிப் பெருக்கப்பட்ட வெற்று பிம்பம் மோடி.

அவருடைய ஆட்சிக்காலம் அவருடைய ஊதாரித்தனமான சொகுசு வாழ்விற்கு உதவியுள்ளது. எஜமானர்கள் அதானி, அம்பானி வகையறாக்கள் செல்வம் பெருக வழி வகுத்துள்ளது.  ட்ரம்ப், நெதன்யாகு போன்ற எஜமானர்கள்  அடி பணிந்து கிடப்பதே சொர்க்கமாய் நினைக்கிறார்.

மோடி குஜராத் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் கொடுத்தது

8931 நாட்கள் வேதனை மட்டுமே. 

அசிங்கப்படுத்தும் சங்கிப் பெண்ணின் நேர்மை


 கீழே உள்ள பதிவை எழுதிய பெண்மணி பாஜகவின் மகளிர் அணி பொறுப்பாளர். ஆபாசமாகவும் அசிங்கமாகவும் எழுதக்கூடியவர். 

கௌசல்யா சங்கர், ஃபாத்திமா பாபு ஆகிய பெண் ஆளுமைகளை இழிவு படுத்தி வாங்கிக் கட்டிக் கொண்டார். வாச்சாத்திப் போராளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களை அசிங்கமாக ஒருமையில் எழுதிய போது நான் சூடாக பதிலடி கொடுத்தேன்.

நேற்று முகநூல் இந்த அம்மையாரின் பதிவொன்றை மெனக்கெட்டு எனக்கு காண்பித்தது.


தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குஷ்புவை உருவக்கேலி செய்த அவருக்கு நான் எழுதிய பின்னூட்டம் கீழே . . .


ஆமாம் இவர் இவ்வளவு தெனாவெட்டாக எழுதுவதற்கான காரணம் என்ன? எங்கிருந்து தைரியம் வருகிறது?

சனாதனம் கொடுக்கும் தைரியம், மேட்டிமை புத்தி கொடுக்கும் திமிர்.

 தோழர் பெ.சண்முகமும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சங்கரை மணம் செய்து அவரை பறி கொடுத்து ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நிற்பவர் கௌசல்யா. ஃபாத்திமா பாபுவும் குஷ்புவும் இஸ்லாமியர்கள். அதனால்தான் அவர்கள் மீதெல்லாம் இந்த சங்கிப் பெண்மணி வெறுப்பைக் கக்குகிறார்.

Sunday, March 22, 2026

மீண்டும் மஞ்சுமல் பாய்ஸ் வேண்டாம்

 


மலையாளத் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கேரளாவிலிருந்து கொடைக்கானல் உல்லாசப் பயணம் வந்து "குணா" குகையில் விழுந்து உயிர் தப்பிய இளைஞனின், அவனை மீட்ட நண்பர்களின் கதை.

கேரள் வாலிபர்களை குடிகாரர்கள், இத்யாதி, இத்யாதி என ஜெயமோகன் திட்டி அதனால் பாட்டு வாங்கியதும் "கண்மணி அன்போடு" பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு போட்டதும் கிளைக் கதைகள்.







மேலே உள்ள அழகிய படங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலையின் அற்புதக் காட்சிகள்.


நேற்று முன் தினம் அங்கே ஒரு வாலிபன் செல்ஃபி எடுக்கும்  மோகத்தில் வேகத்தில் கால் தவறி விழ நூறு அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டான்.

ராணுவத்தினர் வந்து சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளனர்.


இன்று செல்பி மோகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

புகைப்படங்கள் எடுங்கள். 

ஆனால் உயிரைப்பற்றியும் கவலைப்படுங்கள்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது.

இன்னும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் அனுபவம் வேண்டாமே 


Saturday, March 21, 2026

நிலமே நடுங்கிப் போச்சு டாக்டரய்யா

 


நேற்று தமிழ்நாடு முழுதிலும் சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தீர்களா?

ஆமாம்.

நான் கூட நடுங்கிப் போய் விட்டேன்.

காரணம் தெரியுமா?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

இதோ பாருங்கள்


இந்த தேர்தலின் முதல் காமெடி இது.

இன்னும் என்னென்ன வருமோ? ஆட்டுக்காரன் தயவு செய்தால் நிறைய காமெடி கிடைக்கும்.