ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, March 13, 2026
ஆரம்பிச்சிட்டாங்கய்யா, முடக்க ஆரம்பிச்சிட்டாங்க
கண்ணதாசன் பாடலால் கதையளந்த மோடி
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் எண்ணற்ற உருட்டுக்களை அர்ப்பணித்த மோடி, ஒரு கதை ஒன்றையும் அளந்துள்ளார்.
அதென்ன கதை?
மதுரை விவசாயி காலையில் விளைவிக்கும் மல்லியை மாலையிலேயே நியூயார்க்கிலும் பாரீஸிலும் விற்பது சாத்தியமா?
இப்போது சென்னையிலிருந்து நியூயார்க்கிற்கும் பாரீஸிற்கும் விமானங்கள் செல்கின்றன. அதன் பயண நேரம் என்ன என்பதை கீழே பாருங்கள். சென்னை நேரத்திற்கும் மதுரை நேரத்திற்கும் வித்தியாசம் அதிகபட்சம் ஒரு மணி நேரம் இருக்கலாம். அது கூட பயண நேரம் அதிகம்தான் ஆகும்.
சென்னையிலிருந்து நியூயார்க் செல்ல குறைந்த பட்சம் 23 மணி நேரமும் பாரீஸ் செல்ல குறைந்த பட்சம் 18 மணி நேரமும் ஆகிறது.
பிறகு எப்படி காலையில் விளைவித்தது மாலையிலேயே விற்பனை ஆகும்?
ஆனால்
தவறு மோடியுடையது அல்ல.
மோடிக்கு பேச்சு எழுதிக் கொடுக்கும் பூத எழுத்தாளர் (GHOST WRITER) யாரோ, மூத்த்த்த்தவர் மாலனோ?) அவருக்கு "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் வரும் "எங்கேயும் எப்போதும்" பாடலில் வரும் "காலை ஜப்பானில் காஃபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி" வரிகள் நினைவுக்கு வந்து அந்த அடிப்படையில் மோடிக்கு உரை எழுதிக் கொடுத்திருப்பார்.
பாவம் மோடி, அவரை திட்டாதீங்க . . .
Thursday, March 12, 2026
நன்றி கெட்ட, துரோக மோடி அரசு . . .
சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிற ஒரு செய்தி கீழே உள்ளது.
இந்த செய்தியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
அதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்.
இரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மறைவிற்கு மோடி ஒரு இரங்கல் செய்தி கூட விடுக்கவில்லை.
இரானின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவை கண்டிக்கவில்லை, கண்டிப்பதற்கான தைரியம் மோடிக்கு கிடையாது என்பது நாமறிந்த உண்மைதான். போரை நிறுத்துங்களேன் என்று ஒரு சின்ன வேண்டுகோள் கூட விடுக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் இந்தியக் கப்பல்களுக்கு இரான் அனுமதி கொடுத்தது என்றால் அது இரானின் பெருந்தன்மை. பாரம்பரியமாக நட்பு பாராட்டும் இந்திய மக்கள் மீது கொண்டுள்ள மரியாதை.
இந்திய அரசின் சிக்கலுக்கு தீர்வு கொடுத்த இரானுக்கு இந்தியா செய்த பதில் மரியாதை என்ன?
இரான் மீதான கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் வழிமொழிந்து இஸ்ரேல்-அமெரிக்கக் களவாணிகள் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மோடி. இதையும் கூட ராஜதந்திரம் என்று வெட்கமே இல்லாமல் பீற்றிக் கொள்வார்கள் சங்கி மூடர்கள்.
உதவிக்கரம் நீட்டுபவரின் முதுகில் குத்தும் நன்றி கெட்டவர்களின் ஆட்சியில் வாழ்கிறோம் என்று நினைக்கவே கடுப்பாக இருக்கிறது.
ஆட்சியாளர்களின் துரோகத்தால் நாம் என்னென்ன பிரச்சினைகளை அனுபவிக்கப்போகிறோமோ?
அமெரிக்க ஜனாதிபதியாக? இந்திய பிரதமராக?
ப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பக்கத்தில் பார்த்த காமெடி கீழே உள்ளது
அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன் என்று வெள்ளை மாளிகைக்கு ஒருவர் தொலைபேசியில் சொல்ல, "நீ என்ன பைத்தியமா?" என்று வெள்ளை மாளிகை ஊழியர் பதில் சொல்ல, முதலில் தொலைபேசி செய்தவர் கேட்கிறார் "அது கட்டாயமா?" என்று.
இதையே சில நாட்கள் முன்பாக வேறு மாதிரி படித்தேன்.
அடுத்த இந்தியப் பிரதமராக விரும்புகிறேன் என்று பிரதமர் அலுவலகத்திற்கு ஒருவர் தொலைபேசியில் கூற பிரதமர் அலுவலக அலுவலர் " நீ என்ன முட்டாளா?" என்று கேட்கிறார். பிரதமராக விரும்பியவர் கேட்கிறார் "அதுதான் அத்தியாவசிய தகுதியா" என்று.
டொனால்ட் ட்ரம்பும் மோடியும் அவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு மரியாதையே இல்லாமல் செய்து விட்டனர்,
Wednesday, March 11, 2026
உன் காலம் இருண்ட காலம்தான் ரெவி
கார்ட்டூனுக்கு அஞ்சும் மோடி
56 இஞ்ச் மார்பு கொண்ட வீரனாக தன்னைப் பற்றி பீற்றிக் கொண்ட மோடி கார்ட்டூனுக்கெல்லாம் அஞ்சி நடங்கும் கோழையாக உருவெடுத்துள்ளார். மோடி பயப்படும் கார்ட்டூன்களை முதலில் பாருங்கள்.
என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா?
இதோ இந்த கார்ட்டூன்களை வரைந்த திரு சதீஷ் ஆச்சார்யா சொல்வதை பாருங்கள்.
அவர் சொல்வது மிக மிக சரி.
தமிழிலேயே சமீபத்திய இரண்டு உதாரணங்கள் உண்டு. அதிகாரத்தை ஏவி முடக்க நினைத்தாலும் மக்கள் உற்சாகமாக பகிர்ந்து கொண்ட அந்த இரண்டு கார்ட்டூன்கள் கீழே
Tuesday, March 10, 2026
முட்டாள்தனமாய் அன்புமணி, ஆணவமாய் பத்ரி சேஷாத்ரி
அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போரின் காரணமாக இரான் மட்டும் பாதிக்கப்படவில்லை, பாதிப்பு இந்தியர்களையும் எட்டிப் பார்த்து விட்டது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடங்கி விட்டது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது யார் பொறுப்பு?
திமுக அரசுதான் தீர்வு காண வேண்டும் ஒருவர் சொன்னால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
மத்தியரசு தீர்க்க வேண்டிய பிரச்சினையை மாநில அரசை தீர்க்கச் சொல்கிறீர்களே, முட்டாள்தனமா இல்லையா என்றுதானே கேட்பீர்களே!
ஆமாம் என்று சொல்கிறீர்களா ! அப்படியானால் மீண்டும் ராஜ்யசபாவுக்கு மட்டம் போடப்போகும் அன்புமணியிடம் கேளுங்கள், நீர் என்ன முட்டாளா என்று.
பிரெட் கிடைக்காமல் பட்டினிக் கொடுமையில் அவதிப்பட்ட பிரான்ஸ் மக்களிடம் கேக் சாப்பிடச் சொன்னார் ராணி மேரி அண்டோனியா.
நான் வெங்காயம், பூண்டு சாப்பிடாததால் அவற்றின் விலை உயர்வு பற்றி எனக்கு தெரியாது என்றார் நிர்மலா அம்மையார்.
இந்த ஆட்களுக்கு இணையாக கேஸ் இல்லையென்றால் என்ன இன்டக்சன் ஸ்டவில் சமையுங்கள் என்று பிரச்சினையை திசை திருப்புகிறார் கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேஷாத்ரி.
அமெரிக்கா, இஸ்ரேல் மீது பழி வரக்கூடாது, மோடி மீது விமர்சனம் வரக்கூடாது என்றெல்லாம் எப்படி டிசைன் டிசைனாக மடை மாற்றுகிறார்கள் பாருங்கள்.
இவர்களை எல்லாம் எக்காலத்திலும் யாரும் நம்ப முடியாது.























