Monday, March 9, 2026

பப்புவாகவே இருந்தால் எப்படி ராகுல்?

 


ராகுல் காந்தியை அவரது எதிரிகள் பல ஆண்டுகளாகவே "பப்பு" என்றுதான் அழைத்து வருகின்றார்கள்.

இத்தனை ஆண்டுகளில் அரசியல் முதிர்ச்சி பெற்றுள்ளார் என்று நினைக்கும் வண்ணம் அவரது சில மக்களவை உரைகள் அமைந்திருந்தன. 

ஆனால் தேர்தல் என்று வருகின்ற போதோ, கூட்டணிகள் அமைக்கும் போதோ அவர் இன்னும் பப்புவாகவே இருக்கிறாரோ என்ற சந்தேகம் அவ்வப்போது உருவாகும்.

டெல்லி சட்டமன்ற தேர்தல், பீகார் சட்டமன்ற தேர்தல், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெற்ற தோல்விகளுக்கு நிச்சயம் ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மைதான் முக்கியமான காரணம்.

தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி அமைவதற்கு முன்பாக மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களை விட்டு பேச வைத்ததும் விஜயுடன் பின்புறத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்ததும் எரிச்சலை ஊட்டியது.

இதோ நேற்று கேரளாவில் பேசியது அவர் இன்னும் பப்புவாகவேதான் இருக்கிறார் என்பதை உணர்த்தியுள்ளது.

கேரளாவில் இடது முன்னணியை வீழ்த்த காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது?

சபரிமலை பிரச்சினையில் பாஜகவுடன் கரம் கோர்த்துக் கொண்டு இடதுசாரிகளுக்கு எதிராக மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றியது காங்கிரஸ் கட்சி.

திருச்சூர் மக்களவை தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி எம்.பி ஆக யார் காரணம்?

 இடது முன்னணி 2019 ல் பெற்ற வாக்குகளை விட 2024 ல் அதிகம் பெற்றது. ஆனால் காங்கிரஸின் வாக்குகள் அப்படியே பாஜகவிற்கு மாறி சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இப்போது திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலிலும் இடது முன்னணி வாக்குகள் அதிகரித்து காங்கிரஸின் வாக்குகள் கள்ளத்தனமாக மாற்றப்பட்டு பாஜக வென்றது.

உங்களுக்கும் உங்கள் கட்சித்தலைவருக்கும் அழைப்பில்லாத போதே புதினுக்கு வைத்த விருந்தில் கலந்து கொண்டது உங்கள் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர்தானே!

நாடாளுமன்ற மக்களவையில் மோடியை தண்ணீர் குடிக்க வைப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி தோழர் சு.வெங்கடேசன் என்றால் மாநிலங்களவையில் பாஜகவை அலர வைப்பது கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி தோழர் ஜான் பிரிட்டாஸ்தானே!

மிகப்பெரிய வெள்ளம், வயநாடு நிலச்சரிவு போன்ற பேரழிவுகளில் மாநிலத்திற்கு நிதி ஒதுக்காமல் மோடி அரசு கழுத்தறுப்பது கேரளாவில் முதல்வராக இருப்பது தோழர் பினராயி விஜயன் என்பதால்தானே! பெரு வெள்ளம் சமயத்தில் வெளி நாடுகளிலிருந்து வர இருந்த நிதியை மோடி தடுத்தாரே, அது எதனாலே?

அந்த சமயங்களில் எல்லாம் கேரளாவிலிருந்து அதிகமான எம்.பி க்களை பெற்றிருந்த உங்கள் காங்கிரஸ் கட்சி என்ன கிழித்தது? யாராவது ஒருவராவது வாய் திறந்தீர்களா? இடது முன்னணிக்கு பிரச்சினை வர வேண்டும் என்பதுதானே உங்கள் கள்ள மவுனத்திற்கான காரணம்!

கேரளாவில் உங்கள் காங்கிரஸ் கட்சிதான் பாஜகவுடன் கள்ளத்தனமாக கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுகிறது. சசி தரூர், சதீசன் ஆகியோர் யார் கட்டளைப்படி செயல்படுகிறார்கள் என்பது கேரளா அறிந்த அதிசயம்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.

கூட்டணிகளுக்கு உங்கள் கட்சி உண்மையாக இருக்கிறதா? மேற்கு வங்கத்தில் இடது முன்னணியோடு காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது. கம்யூனிஸ்டுகளின் வாக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சென்றது. காங்கிரஸ் கட்சியினர் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தார்களா? பாரதீய ஜனதாவிற்கு வாக்களித்தார்களா?

இப்படிப்பட்ட சூழலில் மோடியின் கட்டளைப்படி தோழர் பினராயி விஜயன் செயல்படுகிறார் என்பதும் சிஜேபி என்பதும் அபத்தமானது, சிறுபிள்ளைத்தனமானது, பைத்தியக்காரத்தனமானது, முட்டாள்தனமானது, ஏன் அயோக்கியத்தனமானதும் கூட.

உங்களை "பப்பு" என்று சொல்லக்கூடாது என்று இத்தனை காலம் பொறுமையாக இருந்த என்னையே உங்களை பப்பு என்று சொல்ல வைத்து விட்டீர்கள்.


இந்தியாவை வழி நடத்தும் தகுதியை இழந்த நீங்கள், உங்கள் கட்சியின் தலைமையிலிருந்து விலகுங்கள். இல்லையென்றால் மகாத்மா காந்தி சொன்னது உங்கள் காலத்தில் நிகழும். 



Sunday, March 8, 2026

"ஒர்த்" தெரியுமா விஜய்?

 தன் மனைவியை "ஒர்த் இல்லை" என்று சொன்ன தற்குறி விஜய்க்கு மகளிரின் "ஒர்த்" என்ன என்று எங்கள் தென் மண்டல கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் கே.சுவாமிநாதன் எடுத்த வகுப்பு கீழே . . .



பாலின சமத்துவம் நோக்கிய பயணம் தொடரட்டும்

 


பாலின சமத்துவத்திற்காக,
மகளிர் உரிமைகளுக்காக,

உண்மையாக 

தொடர்ந்து போராடும், பாடுபடும் 
அனைவருக்கும் 

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். 

படம் "காப்பீட்டு ஊழியர்"  இதழிலிருந்து எடுக்கப்பட்டது

Saturday, March 7, 2026

சோ.அதர்மனை கேட்டது விகடனின் கொழுப்பு

 


ஜெயமோகனுக்கு  பாத பூஜை செய்து,  தந்தை பெரியார், அறிஞர் அன்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரை வசை பாடவே ஒரு நாவல் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்று,.   அந்த கெத்தை விடாமல் தக்க வைக்க கிறிஸ்துவர்களை இழிவு செய்து இன்னொரு நாவல் எழுதி, தான் இழிவு படுத்திய கலைஞரின் மகனிடமிருந்தே வீட்டிற்கான பத்திரத்தை வெட்கமே இல்லாமல் வாங்கிக் கொண்ட சோ.அதர்மன் போட்ட முகநூல் பதிவு கீழே.


ஒரு மிகப் பெரிய மக்கள் தலைவரை, சுதந்திரப் போராட்ட வீரரை, பொதுவுடமை போராளியைப் பற்றி  சங்கிகளுக்கு சேவகம் செய்வதையே பிறவிக்கடனாக நினைத்திருக்கும் அதர்மனிடம் கேட்டது விகடனின் கொழுப்பு. 

திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர், இப்போது பக்கவாதம் வந்துள்ள ஐகோர்ட் எச்.ராசா ஆகியோரைப் பற்றி கேட்டிருந்தால் சந்தோஷமாக வெண்முரசு அளவிற்கு விஷயங்களை அள்ளி வீசியிருப்பார். 

மிகச் சரியான ஒரு மனிதரைப் பற்றி தவறான மனிதனிடம் கேட்டால் இப்படித்தான் திமிர்த்தனமாக பதில் வரும். 

பிகு 1 : அவருக்கு அங்கேயே சூடாக பதில் கொடுத்தேன்.

பிகு 2 : சோ.அதர்மனின் பதிவுக்கு விருப்பக்குறி கொடுத்திருந்த பேராசிரியர் தோழர் ராஜன்குறை கிருஷ்ணன், தோழர் நல்லக்கண்ணுவிற்கு அஞ்சலி பதிவும் எழுதியிருந்தார். அஞ்சலியும் எழுதி விட்டு அதர்மனுக்கு விருப்பக்குறி இட்டதும் வினோதமாக உள்ளது என்று அங்கே எழுதியிருந்தேன். வாய்ப்பில்லையே என்றார். ஸ்க்ரீன் ஷாட்டை போட்டதும் அகற்றி விட்டு, இந்த தவறு எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை என்று பதில் போட்டிருந்தார்.

பிகு 3 : அதர்மனுக்கு விருப்பக்குறி இட்ட இன்னொரு பிரபலம் கவிஞர் தாமரை - அவருக்கு தோழர் நல்லக்கண்ணு மேல் என்ன வெறுப்போ?

பிகு 4 : சோ.அதர்மனோ இல்லை பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணனோ,  அவர்களது பதிவுகளில் நான் நேரடியாக ஒளிந்து கொள்ளாமல்தான் பதிவிடுகிறேன். என் பதிவுகளில் வந்து ஒளிந்து கொண்டு ஆபாச வார்த்தைகளில் பேசும் அனாமதேயங்களுக்கு மட்டும் ஏன் அந்த நேர்மை கிடையாது? மொட்டைக்கடிதங்களில் வாழும் கேடு கெட்ட ஜென்மங்கள் சாகும் வரை ஒளிந்து கொண்டுதான் வசை பாடும்.


மோடி, உமக்கு தகுதி கிடையாதய்யா

 



கீழேயுள்ள செய்தியை சங்கிகள் நேற்றிலிருந்து பரப்பி மிகவும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.


இப்படியெல்லாம்  இரானின் கருணையைப் பெற இந்திய அரசுக்கு (மக்களுக்கு அல்ல) தகுதி இருக்கிறதா?

வரலாற்று ரீதியாக இரானோடு நட்புறவு பாராட்டிய இந்தியா, அதன் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் தொடுத்த போது ஏன் ஒளிந்து கொண்டது?

இரானின் உச்ச தலைவர் மறைவிற்கு ஒரு அஞ்சலி தெரிவிக்கக்கூட மோடிக்கு ஏன் மனது வரவில்லை?

இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த இரானின் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த  கொடுமைக்கு ஏன் வாய் திறக்கவில்லை?

இரானின் எதிர்வினைக்காக கவலைப்பட்ட மோடி, ஏன் இரான் தாக்குண்டது பற்றி மௌனமாகவே இருக்கிறார்?

அயத்துல்லா காமெனி மரணத்திற்கு இந்தியா அஞ்சலி தெரிவித்துள்ளது. அதுவும் யார் தெரிவித்தது? எப்போது? 



"செத்ததுக்கு வா ன்னா, பத்துக்கு வந்திருக்க" என்பது போல 28.02.2026 அன்று கொல்லப்பட்ட அயத்துல்லா காமெனிக்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் 05.03.2026 அன்று இந்தியாவில் உள்ள இரானின் தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் அஞ்சலி குறிப்பு எழுதி வந்துள்ளார்.

மோடி பத்துக்கும் போக மாட்டார்.

இப்படிப்பட்ட நிலையில் இரானின் நல்லெண்ணத்தை பெறவும் அதை மோடியின் ராஜதந்திரம் என்று பீற்றிக் கொள்ளவும் அவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்ன?


Friday, March 6, 2026

இது இந்தியாவின் அசிங்கம் மோடி

 


ட்ரம்பின் உத்தரவுக்கு அடிபணிந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா  எண்ணெய் வாங்குவதை குறைத்து கிட்டத்தட்ட நிறுத்தும் நிலைக்கு எடுத்துச் சென்றார் மோடி.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா என்ணெய் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை முப்பது நாட்களுக்கு தளர்த்துவதாக அமெரிக்க சொல்லியுள்ளது.



இந்தியா யாரோடு, என்ன வணிகம் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அமெரிக்கா கட்டளையிடுவது எப்பேற்பட்ட அசிங்கம்! இப்படிப்பட்ட இழிநிலைக்கு இந்தியாவை கொண்டு வந்த நிறுத்தியுள்ள மோடி மிகப் பெரிய அசிங்கம் , , ,

போகாதே போகாதே ஆரென் ரெவி

 


சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அமித்ஷா இப்படி ஒரு வேலையை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. 

தன் ஒவ்வொரு சொல், ஒவ்வொரு செயல் மூலம் மோடி அரசுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருந்த ஆரெஸெஸ் ரெவியை இப்படி மேற்கு வங்கத்திற்கு மாற்றுவார் என்று எதிர்பார்க்கவேயில்லை. பாஜக-அதிமுக கூட்டணியில் கூட யாரோ ஒரு புத்திசாலி இருக்கின்றார். ரெவி இருந்தால் திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் பெருகும் என்று எச்சரித்ததால்தான் இந்த மாற்றம்.

தேர்தல் முடிந்து திரு மு.க.ஸ்டாலினுக்கு பதவியேற்பை நடத்தி விட்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலிருது ஓடி வந்த பிறகு அவர் மாற்றப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

அமித்ஷாவிற்கு ரெவி மேல் ஏதோ கடுப்பு இருக்கிறது.

ரௌடிகள் ராஜ்ஜியம் நடத்தும் மம்தாவின் மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இங்காவது கலாய்த்து விட்டு துரத்துவார்கள். அங்கே அடித்துத்தான் துரத்துவார்கள். 

நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்து ரெவி, அடி தாங்கனும்ல . . .