Tuesday, April 7, 2026

மம்தா அண்ணன் மகன் செஞ்சதுதான் விஜய்

 


தன்னைப் போன்ற உருவச்சிலைகளை செய்து அவற்றை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுதான் விஜய் இன்று கொடுத்துள்ள கண்டெண்ட்.


எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ க்கள் வரிசையாக நிற்பது போல விஜய் சிலைகள் நிற்பதைப் பார்த்தால் காமெடியாகத்தான் இருக்கிறது.


ஆனால் இது ரொம்பவே பழைய டெக்னிக்.

2019 மக்களவைத் தேர்தலின் போதே மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி கடைபிடித்த டெக்னிக்தான். 

அப்போது எழுதிய பதிவு உங்கள் தகவலுக்காக.

Monday, April 29, 2019

பிரச்சாரத்துக்கே இப்படி! ஜெயிச்சா எப்படி?



அபிஷேக் பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர். டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடும் இவர் மம்தா பானர்ஜியின் சொந்தக் காரரும் கூட.

பிரச்சாரத்தில் வெயிலில் அலைய முடியவில்லை என்பதற்காக அவருடைய சிலை ஒன்றை ப்ளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்து, அந்த சிலையை ஜீப்பில் வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

பிரச்சாரத்தின் போது ஓட்டு கேட்பதற்காகக் கூட மக்களை சந்திக்க வராத இந்த சொகுசுப் பேர்வழி எல்லாம் ஜெயிச்சால் மட்டும் என்ன பிரயோஜனம்?

அந்த தொகுதி மக்களுக்கு இதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு சொரணை இருக்குமா?

விஜய் அவருடைய லெவலுக்கு இன்னும் புதுமையாய் ஏதாவது யோசித்திருக்கலாம்.

பிகு: அதே 2019 தேர்தலின் போது டெல்லியில் ஒரு வேட்பாளர், அவருக்கு பதிலாக டூப் ஒருவரை வேனில் நிற்க வைத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அது டூப்பெல்லாம் இல்லை, நான் ஜீப்பிற்குள் ஓய்வு எடுத்த போது அவர் சும்மா மேலே நின்று வாக்காளர்களைப் பார்த்து சும்மா வேட்பாளர் போல சும்மா கை காட்டினார் என்று அந்த ஒரிஜினல் வேட்பாளர் சமாளித்தார். 

அவர் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சங்கி கௌதம் கம்பீர் . . . .

ஜெமோ நீடூழி வாழட்டும், மற்றவர்கள் கூடுதலாகவே

 


நாய் வால் நிமிராது என்பதை புளிச்ச மாவு ஆஜான் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அஞ்சலி குறிப்பு மூலம் இறந்தவரை அசிங்கப்படுத்துவது என்பது அவரது இயல்பாகி விட்டது.

சமீபத்தில் மறைந்த காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் பற்றி அவருடன் பழகிய எண்ணற்றவர்கள் தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

ஜெயமோகன் மட்டும் வழக்கம் போல தன் வன்மத்தை கொட்டியுள்ளார். அவர் எழுதியதை படியுங்கள்.

தார்ஷியா என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிக்கொண்டிருந்த டி..அரவிந்தனின் தந்தைதான் எனக்கு முதலில் அறிமுகம்அதன்பின்னர் அன்று மாணவராக இருந்த அவரை அறிமுகம் செய்துகொண்டேன்அச்சகங்களில் வெட்டிப்போட்டபின் மிஞ்சும் விளிம்புத்தாள்களை சேகரித்து குறிப்பேடுகள் தயாரிப்பவர்களிடம் விற்கும் தொழிலை அன்று செய்துகொண்டிருந்தார். அவர் கடுமையான உடலுழைப்புக்கு இயலாத சிறிய உடற்குறைபாடு கொண்டிருந்தாலும் அன்று மிகக்கடினமான அப்பணியைச் செய்யவேண்டியிருந்ததது.

நான் தொடர்பு கொண்டிருந்த விஜயபாரதம் அச்சகத்திற்கு காகிதம் சேகரிக்கும் பொருட்டு வந்தவர் நான் புதுமைப்பித்தனை கல்கியுடன் ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு என்னிடம் உரையாடினார். அவர் கல்கியை அப்போதுதான் வாசித்திருந்தார். ஒரு நாள் சில கதைகளை என்னிடம் அளித்தார். அவற்றை செம்மை செய்து வெளியிட்டேன். அதன்பின் அவர் இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார். 

ஓர் ஐந்தாண்டுக்காலம் அவருடன் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்தது. புதிய காலச்சுவடு அணியுடன் அவர் இணைந்த பின் அந்த தொடர்பு இல்லாமலாகிஎன் மேல் அவர் முழுமையான ஓர் எதிர்மனநிலையில் நீடித்தார். எப்போதாவது ரயில் நிலையங்களில் தற்செயலாகச் சந்தித்துக்கொண்டால் ஒரு சில சொற்களை பெரும்பாலும் நானே சென்று பேசுவதுடன் தொடர்பு நின்றதுசென்ற டிசம்பரில் ரயிலில் சந்தித்தபோது நாகர்கோயிலில் இருப்பதாகச் சொன்னார். 

அவருடைய மறைவு திகைப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறதுஇத்தகைய தருணங்களில் மிக இளைஞராக அவரைச் சந்தித்த முகம்தான் நினைவிலெழுகிறதுஅஞ்சலி.

இறந்தவரின் பொருளாதார நிலை,

உடல் குறைபாடு,

அவர்களின் வாசிப்பனுபவம் பற்றிய அலட்சியம்,

அவர்களுக்கு தான் செய்த உதவிகள்,

அடுத்தவர் உதவியில்லாமல் அவர்கள் முன்னேற முடியாது,

அவர்கள் பகைவர்களாக இருப்பினும் தான் ரொம்ப நல்லவன் என்று காண்பிப்பது.

இவையெல்லாம் அவரது அஞ்சலி வன்மக் குறிப்புகளில் வழக்கமாக இருக்கும். அரவிந்தனுக்கான குறிப்பிலும் இதெல்லாம் இருக்கிறது. அவற்றை அடிக் கோடிட்டுள்ளேன்.

இன்னும் கூட ஒரு மோசமான விஷயத்தை முதலில் எழுதியிருந்தார். பிறகு அதனை மட்டும் நீக்கி விட்டார். மற்ற விஷமெல்லாம் அப்படியேதான் இருக்கிறது. 

ஜெயமோகனை என்ன சொல்வது? 

ஜெயமோகன் நீடூழி வாழட்டும். மற்ற இலக்கியவாதிகள், பதிப்பாளர்கள் ஆகியோரெல்லாம் ஜெயமோகனை விடவும் கூடுதல் காலம் வாழட்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஜெமோ அஞ்சலி குறிப்பு எழுதும் வாய்ப்பு கிடைக்காது. 

பிகு 1 : அசோகமித்திரனை பேச அருகதையற்ற ஜெமோ - நாளை

பிகு 2 : ஜெயமோகனை விமர்சிப்பவர்களை வெட்டி ஆபீசர்கள் என்று சொல்கிறார் கவிஞர் போகன் சங்கர். அவரைப் போல முட்டு கொடுப்பவர்களை முட்டாள் ஆபீசர்கள் என்று சொல்லலாமா? 


Monday, April 6, 2026

போலீஸிற்கு மரண பயத்தை கொடுத்த தீர்ப்பு

 


மிகவும் கேவலமாக இன்று பேசிக் கொண்டிருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் நடந்த மிகப் பெரிய அராஜகச் செயல்களில் ஒன்று சாத்தான்குளம் லாக்கப் கொலைகள்.

ஜெய்பீம் படத்தில் காண்பித்த போலீஸ் சித்திரவதைகள் எல்லாம் ஒன்றுமே கிடையாது என்பது போலத்தான் சாத்தான்குளம் சம்பவம் அமைந்திருந்தது. 

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஒன்பது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை கூடாது என்ற கொள்கை நிலையில் பார்க்கும் போது மரணம் வரை சிறைத்தண்டனை என்று கொடுத்திருக்கலாம். இறுதித் தீர்ப்பில் ஒரு வேளை மரண தண்டனை குறைக்கப்படலாம்.

ஆனாலும் இத்தீர்ப்பு

தன் ஸ்டேஷனுக்கு வருபவர்களை மனிதராக மதிக்காமல் மிருகத்தனமாக சித்திரவதை செய்யும் போலீசாருக்கு மரண பயத்தை அளித்துள்ளது.

இனியாவது இன்னொரு லாக்கப் மரணம் நடக்காமல் இருக்கட்டும். இத்தீர்ப்பு கெட்ட போலீஸிற்கு அச்சத்தை அளிக்கட்டும். 


தமிழே இல்லாமல் தமிழ் எப்படி வாழும் ஜெமோ?

 


புளிச்ச மாவு ஜெயமோகன், நியூயார்க்கில் ஒரு திருவிழா நடத்தி உள்ளார். 


Living Tamil LitFest என்ற பெயரில் அந்த விழாவை அவர் யாருக்காக நடத்தினார்? 

அந்த நிகழ்வின் புகைப்படங்களை அவர் முகநூலில் பகிர்ந்திருந்தார். 

அந்த நிகழ்வின் ஒரு பின் திரையிலும் தமிழ் கொஞ்சம் கூட இல்லை.

ஜெமோ ஆற்றிய உரை கூட தமிழில் இல்லை.

புகைப்படங்களில் உள்ள முகங்களைப் பார்க்கையில் எல்லாம் தமிழ் முகங்கள்தான். 

பிறகு ஏன் தமிழ் அங்கே இல்லை.

வாழும் தமிழ் இலக்கியத் திருவிழா என்று பின் திரையில் சின்னதாக போடக் கூட முடியாதவர்களா தமிழை வாழ வைக்கப் போகிறார்கள்?

தமிழுக்கென்று தனியாக எழுத்துரு (FONT) அவசியமில்லை. ஆங்கிலத்திலேயே THAMIZH EZHUTHU என்றொரு கருத்தை திணிக்க முயன்ற தமிழ்த்துரோகி ஜெயமோகன் என்பதை நாம் எக்காலத்திலும் மறந்து விடக்கூடாது.

பிகு : இந்த நிகழ்வில் ஜெமோ ஒரு அயோக்கியத்தனம் செய்துள்ளார். 

அது நாளை . . .


Sunday, April 5, 2026

மாட்டுக்கறி மட்டும் அவங்களுக்குத்தானாம்

 


அஸ்ஸாமில் அமித்ஷா கொடுத்துள்ள தேர்தல் ஜூம்லா கீழே உள்ளது. ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்போம் என்ற வாக்குறுதியை ஜூம்லா என்று சொன்னது அவர்தானே!



இதை படிக்கையில் மனதில் தோன்றியது  . . .

தேர்தல் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற மாட்டோம்.

அப்படி தப்பித்தவறி யாராவது சிலருக்கு கொடுத்தால் அவர்கள் அந்த மாட்டிலிருந்து பால் வேண்டுமானால் கறந்து கொள்ளலாம்.

ஆனால் மாட்டுக்கறியை அவர்கள் சாப்பிடக்கூடாது. அதை பாஜகவிற்கு தாராளமாக நிதியளிக்கும் மாட்டுக்கறி ஏற்றுமதி கம்பெனிகளுக்கு கொடுத்து விட வேண்டும்.

ஆமாம். அமித்ஜி, மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்களில் பல இஸ்லாமிய பெயர்களில் இருந்தாலும் அவற்றின் உரிமையாளர்கள் பூண்டு, வெங்காயம் கூட சாப்பிடாத ஜெய்ன்கள்தானாமே! 

அது சரி நாய் விற்ற பணம் குரைக்காதல்லவா! 

சாதாரண மனிதர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால்தான் அடித்துக் கொல்வீர்கள்! அதை செல்வந்தர்கள் வெளி நாட்டினர் சாப்பிட ஏற்றுமதி செய்வது பொருளாதார நடவடிக்கை அல்லவா!

உங்களின் தவறுதான் ஸ்டாலின்

 


எடப்பாடிக்கு இத்தேர்தலில் அரசியல் செய்ய எதுவுமே கிடைக்கவில்லை போல. அதனால் "கலைஞரின் இறுதிக்காலத்தில் அவரை மு.க.ஸ்டாலின் கைதியாக அடைத்து வைத்திருந்தார், அவரது மரணம் சந்தேகத்திற்குரியது. தான் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பேன்"  என்றெல்லாம் பேசி வருகிறார்.

சிரிப்பும் எரிச்சலும் வருகிற குற்றச்சாட்டு இது.

இறுதியில் மருத்துவமனை செல்கிற வரை பொது வெளியில் இயங்கியவர் கலைஞர். மருத்துவமனையில் அவர் இருந்த சூழலில் பல தலைவர்களும் அவரை சென்று சந்தித்தனர்/பார்த்தனர். காவேரி மருத்துவமனையில் எந்த மர்மக் காட்சிகளும் நடைபெறவில்லை. அதனால் எடப்பாடியின் குற்றச்சாட்டு அபத்தமானது.

அதே நேரம்

ஏ1 ஜெயலலிதா எப்போது, என்று, எப்படி இறந்தார்?

அப்பல்லோ பிரதாப் ரெட்டி, ஏ2 சசிகலா என்ற இருவரைத் தவிர வேறு யாருக்காவது இந்த உண்மை தெரியுமா?

வித்யாசாகர் என்ற ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி பொறுப்பு கவர்னராக இருந்தாரே, அவர் கூட அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றாரே தவிர, ஜெ வை பார்க்கவில்லை.

ஏ1 ஜெயலலிதா மரண மர்மத்தையும் பின்பு ஏ1, ஏ2 ஆகியோர் அத்து மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாங்கிய கொட நாட்டு மர்ம மாளிகை தொடர் கொலைகள் தொடர்பாக இந்த ஐந்தாண்டுகளில் முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததுதான் மு.க.ஸ்டாலின் செய்த மிகப் பெரிய தவறு.

அப்படி செய்திருந்தால் இன்று கலைஞர் மரணம் பற்றி பேசும் தைரியம் எடப்பாடிக்கு வந்திருக்குமா? அதைப்பற்றி பேச தனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று வெட்கப்பட்டிருக்க மாட்டாரா? 

யார் கண்டது ! குற்றவாளியாக எடப்பாடியே கூட ஜெயிலில் இருந்திருக்கலாம்.

ஆகவே முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே அடுத்த ஆட்சிக்காலத்திலாவது

ஏ1 ஜெயலலிதா மர்ம மரணம்,

கொட நாட்டு மாளிகை தொடர் கொலைகள்

தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ளுங்கள். 

Saturday, April 4, 2026

புளிச்சமாவு ஆஜானும் வசூல் ராஜா வார்ட் பாயும்

 


என்னத்தான் தேர்தல் நேர பரபரப்பாக இருந்தாலும் புளிச்ச மாவு ஆஜானை கலாய்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இழக்க முடியுமா?

கீழே உள்ள செய்தி புதிதல்ல. ஆஜான் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பதுதான்.


இதனை படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்த வசூல் ராஜா படக் காட்சியைத்தான் மேலே உள்ள படத்தில் பகிர்ந்துள்ளேன்.

ஜெயமோகனை தன்னை சிறந்த படைப்பாளி என்று வேண்டுமானால் கதையளிக்க முடியுமே தவிர, சிறந்த மனிதன் என்று சொல்லிக்கொள்ள முடியுமா? வன்மமும் வக்கிரமும் நிறைந்த அவரால் அது இயலாது என்பது அவருக்கே தெரியும். 

பிகு: இன்னும் கொஞ்ச நாளைக்கு சமூக வலைத்தளங்களில் ஆஜான் புகழ் சத்தமாகவே ஒலிக்கும்.

ஆமாம். முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியவாதிகளை அமெரிக்காவிற்கு கூட்டிப் போயுள்ளார். அதற்கான நன்றியை எதிரொலிக்க வேண்டுமல்லவா!