Saturday, April 11, 2026

சீமான் அவ்வளவு நல்லவரில்லையே!

 


கீழேயுள்ள காணொளியை பாருங்கள். நீங்களும் கண்டிப்பாக சிரிப்பீர்கள். 


2000  கோடி ரூபாயும் துணை முதல்வர் பதவியும் கிடைப்பதாக இருந்தால் முதலில் ஓடிப் போய் அந்த புரவலர்களோடு கை கோர்த்துக் கொண்டிருப்பார். இப்போதும் அவர் ஏதோ வஜனம் பேஸ்ய்கிறாரே தவிர, அவற்றையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்பது உலகறிந்த உண்மை. 

எரிந்த ரூபாய் நோட்டுக்களும் புனிதமாகும் முயற்சியும்

 


டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த தீ விபத்தின் போது சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. 

அவரை இடை நீக்கம் செய்வதற்குப் பதிலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.

உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையை நாடாளுமன்றம் தொடங்கியது. இதில் ஏதோ சிக்கல் வர துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தாங்கர் பதவி விலகினார். அந்த மர்மம் என்ன என்பதை இன்று வரை தெரியவில்லை.

இப்போது தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தன் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் விவரித்து ஜனாதிபதிக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் காரணங்களை தெரிவிக்கவில்லை என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளாராம்.

இது அவர் தன்னை ஒரு புனிதனாக காண்பித்துக் கொள்ளும் முயற்சி.  எந்த கேள்விக்கும் விசாரணைக்கும் உட்படாமல் தப்பித்துக் கொள்வதற்கான உத்தி.

ஜனாதிபதி இந்த ராஜினாமாவை நிராகரிக்க வேண்டும். ஏற்றுக் கொண்டால் யஷ்வந்த் வர்மாவின் புரவலர்கள் மோடி வகையறாக்கள், மோகன் பகவத் கூட்டத்தினர் என்பது தெளிவாகும்.

Friday, April 10, 2026

எச்.ராசா அரசியலிலிருந்து விலகலா?


 மேலே உள்ள படத்திற்கு என்ன அவசியம்?

கீழேயுள்ள செய்தியை பாருங்கள்.


மிகவும் பழைய செய்திதான் இது. இதை வைத்துக் கொண்டு பலர், எச்.ராசா ஏதோ அரசியலிலிருந்தே விலகி விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் நான்கு முறை மக்களவைத் தேர்தலிலும் நான்கு முறை சட்டப்பேரவை தேர்தலிலும்  போட்டியிட்டு ஏழு முறை தோற்றுப் போயுள்ளார். ஒரே ஒரு முறை கலைஞர் புண்ணியத்தில் எம்.எல்.ஏ ஆனார். சாரணர் அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பரிதாபமாக தோற்றுப் போனார். போன முறை சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சி கொடுத்த காசை செலவழிக்காமல் ஆடம்பர மாளிகை கட்டி விட்டதாக சொந்தக்கட்சிக்காரர்களே போராட்டம் நடத்தினார்கள். அதனால் அப்போது வஜனம் பேசியிருப்பார் போல . . .

அப்போது அவர் மனதில் என்ன நினைத்திருப்பார் என்பதுதான் மேலே உள்ள படம். 

கலவர அரசியலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை!


பொய்ப்பிரச்சாரமா மாலன்?????

 


நேற்று முகநூலில் பார்த்த ஒரு செய்தி. ஒரு வயதானவர், அவருக்கு திராவிட இயக்கமும் பிடிக்காது, சங்கிகளையும் பிடிக்காது. மோடியை திட்டுவார். அதை விட அதிகமாக தந்தை பெரியாரை திட்டுவார். கருத்துக் கணிப்புக்கள் என்ன சொல்கிறது என்று அவர் கேள்வி கேட்க, மூத்த்த்த்த்ஹ்த்த்த்த்த்த்த்த  பத்திரிக்கையாளர் என்று கருதப்படுகிற மாலன் உடனடியாக ஒரு பட்டியலை போடுகிறார்.

பாஜக கூட்டணிதான் வெற்றி பெறப்போவதாக எல்லா தொலைக்காட்சிகளும் சொல்வதாக அந்த பட்டியலில் இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இன்னொரு சங்கி உடனடியாக அதை மறுத்து அது பொய் செய்தி என்றும் ஒரு தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு திமுக கூட்டணி வெல்லும் என்று போட்ட பட்டியலை பகிர்ந்தார்.


செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இப்படி கருத்துத்திணிப்பு பொய்ப்பிரச்சாரம் செய்யலாமா மிஸ்டர் மாலன்? இது கேவலமாக இல்லையா? காலம் போல காலத்தில் ஓய்வெடுக்காமல் இவ்வளவு தரம் தாழ்ந்து போகலாமா? 

Thursday, April 9, 2026

திருப்பரங்குன்றம் - தீர்ப்புகள் திசை மாறுது

 


திருப்பரங்குன்றத்தை முன்வைத்து தமிழ்நாட்டை கலவர பூமியாக்க சங்கிகள் எடுத்த முயற்சிகள் மதுரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நடத்திய போட்டோ ஷூட் கூட வழக்கம் போல காமெடி ஷோ வாகத்தான் முடிந்து போயிருந்தது.

ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத தீர்ப்பாளர் மட்டும் அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

நேற்றும் இன்றும் அதே உயர் நீதி மன்றத்தில் வந்த தீர்ப்புகள், அந்த மிரட்டலுக்கும் இனி அவசியம் இருக்காது என்பதை உணர்த்தியுள்ளது.

நேற்று வந்த தீர்ப்பு, தீர்ப்பாளர்  இனிமே வழக்கை விசாரிக்க தடை போட்டு விட்டது, அவர் கொடுத்த தீர்ப்புக்களுக்கும் கூட. . .


தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட புது வழக்கை "வேற பிழைப்பே உங்களுக்கு இல்லையாடா" என்ற ரேஞ்சில் திட்டி ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து துரத்தி விட்டு விட்டார்கள். இது நடந்தது இன்று.


திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தி ஆக்கும் முயற்சியை இனியாவது சங்கிகள் கை விடுவார்கள். உடனடி வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததால்தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. எப்போதும் போல தோற்கப் போகும் போலிப் பேராசிரியன் காம.சீனிவாசனுக்குக் கூட திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தைரியம் இல்லை.

ஆனாலும் சங்கிகள் மீண்டும் முயற்சிப்பார்கள்.

மீண்டும் தோற்றுப் போவார்கள்.

உங்களைத்தாண்டா மக்கள் மன்னிக்க மாட்டாங்க


 சங்கிகள் தாங்கள் அடி முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள் என்பதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இரான்-அமெரிக்கா போரைப் பொறுத்தவரை இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இது சற்று ஆசுவாசமளிக்கிற செய்தி.

இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்துள்ளது. பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியே இந்த போர் நிறுத்தம்.

இதனை டொனால்ட் ட்ரம்பும் ஒப்புக் கொண்டுள்ளார். இரானும் ஒப்புக் கொண்டுள்ளது.



மேலே உள்ள செய்தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.

உலகமே இன்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஒரு முயற்சிக்கு பாகிஸ்தான் காரணம் என்று திமுக எம்.பி சல்மா கருத்து சொல்லி விட்டாராம்.  அதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று சங்கிகள் குதிக்கிறார்கள்.


சங்கிகளின் அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது.

சரியானதொரு கருத்தை வெளியிட்ட சல்மாவை கைது செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்கிறது?

மோடிதான் விஸ்வகுருவாக இருந்து போரை முடித்து வைப்பார் என்று இவர்களாகவே முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தது நடக்காமல் அந்த பெயர் பாகிஸ்தானுக்கு போய் விட்டதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மணிப்பூரிலேயே மத்தியஸ்தம் செய்ய முடியாத டம்மி பீஸ் மோடி.

இரண்டாவது இவர்கள் சல்மாவை மதக்கண்ணால்தான் பார்க்கிறார்கள்.

அதனால் சங்கிகளின் அயோக்கியத்தனத்தைத்தான் மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். 

Wednesday, April 8, 2026

இரான் - இருளில் ஒளி

 சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் சிறப்பான ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். இரான் மக்களின் மன உறுதிக்கு சான்றாக இப்பதிவு அமைந்துள்ளது.




ஈரானிய மக்கள் உலகிற்கு காட்டிய வெளிச்சம்...

அ.முத்துக்கிருஷ்ணன்
8:00 மணி என்றால் இந்தியரக்ளுக்கு பொதுவாகவே ஒரு பயம் தான், இரவு 8 மணிக்கு ஒருவர் தொலைக்காட்சியில் வரப்போகிறார் என்றாலே தொட்டியில் போட்டு தாய்மார்கள் குழந்தைகளை கூட தூங்கவைத்து விடுவந்து இந்திய வழக்கமாகவே 2014க்கு பிறகு மாறியுள்ள நிலையில் அதே போல் ஒரு 8 மணி மிரட்டலை ஈரான் நாட்டிற்கு விடுத்தார் ஒருவர்.
விளக்குகள் எல்லாம் அணைந்து விடும், நாடே இருளில் மூழ்கும், ஒரு நாகரீகமே அழிந்துவிடும் என்ற ஏக வசனங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிந்து, உலகையே பதட்டம் கொள்ளச் செய்தார். நிச்சயம் நேற்றைய இரவு எனக்கு மட்டும் அல்ல நண்பர்கள் பலருக்குமே தூக்கமில்லா இரவு தான் ஆனால் ஈரான் மக்கள் பயத்தின் இருளுக்குள் சென்றிடவில்லை, ஒரு துளியும் பின்வாங்கவில்லை.
அவர்கள் தாங்கள் தான் ஈரான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உலகிற்கே உணர்த்தினார்கள். நேற்றைய இரவின் பொழுதில் அவர்கள் காட்டிய வீரம் என்பது வரலாற்று நிகழ்வாகவே எனக்கு படுகிறது.
இஸ்பஹானின் மூடுபனியில் இருந்து தப்ரிஸ் நகரின் தொழில்துறை பகுதிகள் வரை, வரலாறு எழுதப்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் மனித மதில் சுவர்களாக மாறினார்கள், தாக்குதலுக்கான இலக்குகளாக உருமாற்றம் பெற்றார்கள்,
தேஹ்ரானில், தபியத் பாலம் "நள்ளிரவு கீதத்தின்" மேடையாக மாறியது; அங்கு தார் இசையின் தாளங்களூக்கு கலைஞர்கள் நடமனாடினார்கள். உலகமே பதட்டத்தில் உறைந்து கிடக்கும் நேரம் அவர்கள் இசையும் நடனமுமாக லயித்திருந்தார்கள்.
"முழுமையான அழிவு" என்ற அச்சுறுத்தலுக்கு எதிரான பண்பாட்டு எழுச்சி. மின் நிலையங்களை ஒளிக் காட்சியகங்களாகவும், பாலங்களை மனித சங்கிலிகளாகவும் மாற்றிய மக்கள், "Power Plant Day" என்ற தாக்குதல் தர்க்கத்தை மக்கள் தைரியத்தின் ஒளியால் செயலிழக்கச் செய்தனர்.
ஈரான் முழுவதுமே எதிர்ப்பு பல்வகைமைகள் கொண்டாதாக, விரிவானதாக ஒன்றை விட ஒன்று வீரியமானதாகவே இருந்தது; ஒவ்வொரு நகரமும் தேசிய பாதுகாப்பின் ஓர் நூலாக தன்னை நெய்தது. புஷேர் நகரின் தெற்கில், மாணவர்களும் தொழிலாளர்களின் குடும்பங்களும் அணு நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் பெரிய சுவரோவியங்களை வரைந்தனர்; அவை மேலே பறக்கும் விமானிகளுக்கும் செயற்கைக்கோள்களுக்கும் அமைதியின் செய்திகளை வெளிப்படுத்தின.
கெர்மான்ஷா மற்றும் அஹ்வாஸ் நகரங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி, மருத்துவமனைகளையும் வீடுகளையும் சுற்றி அரன் அமைத்தனர். தங்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தும் மின் நிலையங்களின் வாயில்களை விட்டு நகர மறுத்தனர்; இவை "Shields of Light/ ஒளியின் கவசங்கள்" என அழைக்கப்பட்டன. வீதிகள் எங்கும் உணவின் மணமும், கவிதை வாசித்தலின் ஓசையும் காற்றில் நிரம்பியிருந்தது.
அலி காம்சாரி மற்றும் பென்யாமின் பகதூரி போன்ற கலைஞர்கள் சாதாரண மக்களுடன் தோளோடு தோள் நின்று, "நூர் பர் தரிகி"—இருளில் ஒளி—என்ற முழக்கத்தை எழுப்பினார். மக்களின் இதயத் துடிப்பு உலகம் முழுவதிலும் கலைஞர்கள் ஒலிக்கச் செய்தார்கள்.
இந்த வரலாற்றுச் செயல்பாடு ஒரு தற்காலிக பாதுகாப்பை விட ஒரு படி மேலே சென்றது; இது அந்த மக்களின் மரபு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இரு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும், "நாகரிகத்தை முடிவுக்கு கொண்டுசெல்லும்" முடிவுகள் இரு வாரங்களுக்கு மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவே மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஒன்றரை கோடி பேர் ஒரு இரவில் தங்களின் நாட்டை காக்க முதல் முறையாக கூடியிருக்கிறார்கள், இரவெல்லாம் இந்த வரலாற்றை நான் ஒவ்வொரு நொடியாக நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஈரான் மக்கள் ஒன்றுகூடிய அந்த தருணம் 21ஆம் நூற்றாண்டின் மறக்க முடியாத நிகழ்வாகும். "எங்கள் பாலங்கள், எங்கள் மின் இணைப்புகள்" என்ற அவர்களின் முழக்கம், நேரடி பதிலாக அமைந்தது.
கலை மூலம் தெருக்களையும், இசை மூலம் தொடுவானத்தையும் நிரப்பிய ஈரானியர்கள், போர் இயந்திரங்களுக்கு எதிராக தங்களின் அசாத்திய எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள்.
போர்களை இந்த உலகம் மறுபரீசீலனை செய்ய வேண்டும் அதுவே கலையும் கலைஞர்களும் எளிய மக்களும் இந்த உலகிற்கு விடுக்கும் செய்தி, உலகம் முழுவதும் நடைபெற்ற எல்லா போர்களிலும் எளிய மக்களும் அவர்களது உடமைகளும் அவர்களது வாழ்வாதாரமுமே முதன்மையாக பாதிக்கப்பட்டு அவர்கள் வாழ்வு தான் மிகுதியாக சிதைந்துள்ளது.
இந்த இரவு என் வாழ்வின் மகத்தான இரவும் கூட.... மறக்க முடியாத இரவும் கூட....