ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, May 9, 2026
Friday, May 8, 2026
கூவாத்தூர் புராணத்தின் துவக்கப்புள்ளி
தங்கள் கட்சி மக்கள் பிரதிநிதிகள் எங்கே தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு மாற்றுக் கட்சிக்கு தாவி விடுவார்களோ என்ற அச்சம் நம்பிக்கை தீர்மானம் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் சமயத்தில் வந்தால் அந்த எம்.எல்.ஏ, எம்.பி க்களை பாதுகாப்பாக வைத்திருக்க இப்போதெல்லாம் ஏதாவது சொகுசு ரிசார்ட்டுக்கு மாற்றி விடுவார்கள். இதிலே மிகவும் பிரசித்தி பெற்றது ஏ2 அதிமுக எம்.எல்.ஏ க்களை கூவாத்தூரில் வைத்திருந்ததுதான்.
இந்த நடைமுறை எப்போது துவங்கியது?
ஆந்திராவின் முதலமைச்சர்களை காங்கிரஸ் தலைமை தொடர்ந்து அவமதித்த நிலையில் என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சியை 1982 ல் துவக்குகிறார். அவருக்கு உதவியாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவியிலிருந்து கழட்டி விடப்பட்ட பாஸ்கர் ராவ்.
ஜனவரி 1983 ல் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. பிரம்மாண்டமான வெற்றி பெற்று முதலமைச்சராகிறார். அப்படி ஒன்றும் பெரிய சூப்பர் ஆட்சியெல்லாம் கொடுக்கவில்லை.
இதய அறுவை சிகிச்சைக்கு 1984 ல் அவர் அமெரிக்கா போகிறார். என்.டி.ஆர் ஆட்சியில் பெரிதாக எந்த பலனும் கிடைக்கவில்லை என்று பாஸ்கர் ராவிற்கும் சில எம்.எல்.ஏ க்களுக்கும் வருத்தம். அந்த வருத்தம் ஆட்சியை கலைக்கும் அளவிற்கு சென்றது. அவர்கள் ஆளுனரிடம் கடிதம் கொடுக்க ஆளுனர் என்.டி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டு பாஸ்கர் ராவை முதல்வர் பதவி ஏற்க அழைத்து பதவி பிரமாணமும் செய்து வைக்கிறார்.
என்.டி.ஆருக்கு ஆதரவாக நாடெங்கிலும் குரல் எழுகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு ஒரு நாள் பாரத் பந்த் வேறு நடக்கிறது.
இந்த காலகட்டத்தில்தான் என்.டி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏ க்களை காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது பாஸ்கர் ராவிடமோ செல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியம் வருகிறது. அவர்கள் அத்தனை பேரையும் வேறு மாநிலத்தில் ஒரே இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று துக்ளக் சோ ஆலோசனை சொல்ல, எங்கள் மாநிலத்துக்கு வாருங்கள் என்று அப்போதைய கர்னாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே உத்தரவாதம் கொடுக்க மைசூர் நந்தி ஹில்ஸில் இருந்த ஒரு விடுதியில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ க்கள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டார்கள்.
கவர்னர் மாற்றப்படுகிறார். புதிய கவர்னர் பாஸ்கர் ராவை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி அது முடியாத காரணத்தால் அவரை டிஸ்மிஸ் செய்து விட்டு என்.டி,ராமராவை மீண்டும் ஆட்சி அமைக்க அழைத்து அவரும் மீண்டும் முதல்வராகிறார்.
ஆக ரிசார்ட் கலாச்சாரத்தை இந்திய ஜனநாயகத்திற்கு அளித்த கொடையாளர்கள் சோ, ஹெக்டே மற்றும் என்.டி.ஆர்
இந்த பதிவை இத்தோடு முடித்து விட முடியாது.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக என்.டி.ராமராவ் வீதிக்கு வந்தார். அவரே பல மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டினார். மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பேன். எனக்காக மற்ற கட்சிகள், அதிலும் என்னோடு கூட்டணியில் இல்லாத, நான் தீய சக்தி என்று வர்ணித்த கட்சியோடு கூட்டணியில் இருந்த கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் இல்லை.
பெரும்பான்மை என்.டி.ஆரிடமிம் இருந்தது. அதனால் அவர் போராடினார். அவர் தன்னுடைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரவில்லை. ஒரு வேளை அப்படி அவர் கேட்டிருந்தால் "இவர் என்ன பைத்தியக்காரரா?" என்று மக்கள் கேட்டிருப்பார்கள். இன்றைக்கு சில அதி மேதாவிகள் விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்று சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, விசிக ஆகியோரை மிரட்டி, அந்த இயக்கங்களுக்குள்ளேயே இரண்டு கருத்துக்கள் வருவது போல செய்திருக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற பாஸ்கர்ராவ் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்க முடிந்த என்.டி.ராமராவ், இறுதியில் வீழ்ந்தது அவரது மருமகனான, அவர் மகளை மணந்த சந்திரபாபு நாயுடு செய்த கலகத்தினால்தான்.
Thursday, May 7, 2026
புதுவைக்கு மாறிய கூவாத்தூர்
எந்த கொள்ளி கேரளா சிஎம்?
கேரளா முதல்வர் என்று தலைப்பில் எழுதி விட்டு படத்தில் ஏன் ரகுவரனையும் சத்யராஜையும் சூர்யாவையும் போட்டுள்ளேன் என்று யோசிக்கிறீர்களா?
சமீப காலத்தில் தமிழ்த் திரைப்படத்தில் கொடூர வில்லன்களாக யாரை சொல்வீர்கள்?
பாட்சா படத்து மார்க் ஆண்டனி,
அமைதிப்படையின் அமாவாசை,
விக்ரம் 2 படத்தின் ரோலெக்ஸ்.
இப்போது கேரள முதல்வருக்கான கோஷ்டிப்பிரச்சினையில் முன்னணியில் இருப்பவர்கள் மூவர்.
கே.சி.வேணுகோபால் - பொதுச்செயலாளர், காங்கிரஸில் இருக்கும் தீவிர சங்கி. தொகுதி மறுவரையறை பிரச்சினையில் கூட தடுமாற்றத்தை காண்பித்த மோடி ஆதரவாளர்.
வி.டி.சதீசன் - எதிர்க்கட்சித் தலைவர். தங்கக் கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி. வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் சார்ட்டர்ட் விமானத்தில் இன்னொரு குற்றவாளியோடு மங்களூர் சென்று யாரையோ சந்தித்தார். யாரை சந்தித்தார்? ப்ளேனுக்கு காசு யார் கொடுத்தது என்ற கேள்விகளுக்கு பதில் இன்னும் வரவில்லை.
ரமேஷ் சென்னித்தலா : அந்த காலத்து ரௌடி.
மூன்று பேருமே எரிகிற கொள்ளிகள்.
அதிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று முடிவு செய்துதான் கேரளா ஒரு முதல்வரை பார்க்கப் போகிறது.
தோழர் ஈ.எம்.எஸ், ஈ.கே.நயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், பினராயி விஜயன் ஆகியோர் இருந்த இடத்தில் மூன்றில் ஒரு தறுதலை உட்காரப் போகிறது.
Wednesday, May 6, 2026
அப்போதே ஒழிந்து போயிருக்கலாமே ராகுல்
இந்திய அரசியல் எத்தனையோ கேவலமான காட்சிகளை பார்த்துள்ளது. புதிதாக பார்த்த கேவலம் காங்கிரஸ் கட்சி, தவெக கூட்டணிக்கு தாவியது.
திமுக கூட்டணியில் பல வருடங்கள் இடம் பெற்று, அக்கூட்டணியின் பலத்தால் மக்களவையில் எம்.பி, க்களை பெற்றீர்கள். உங்கள் கட்சித் தலைவர்களே உங்களை பிரதமர் வேட்பாளர் என்று கருத தயாராக இல்லாத போது மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இந்த சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற உங்களுக்கு ஏனோ விருப்பமில்லை. குரங்கு குட்டியை வைத்து ஆழம் பார்த்தது போல உங்கள் நண்பர் மாணிக்கம் தாகூரை கலகம் செய்ய வைத்தீர்கள். மேலிடச் சில்லறைகள் பிரவீண் மற்றும் கோவா டுபாக்கூரை வைத்து சீன் போட்டீர்கள்.
ஆட்சியதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் சொன்னதால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்தீர்கள்.
கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலிருந்தும் உங்கள் கட்சி துடைக்கப்பட்டு விட்டது. கர்னாடகத்தில் நடக்கும் கோஷ்டி மோதலால் அடுத்த தேர்தலில் ஆட்சியை பறி கொடுப்பீர்கள்.
பாஜகவுடன் வைத்துக் கொண்டுள்ள கள்ள உறவால் கேரளாவில் ஜெயித்துள்ளீர்கள். முதலமைச்சர் போட்டியே உங்களை வீழ்த்தும்.
இப்படிப்பட்ட நிலைமை உள்ள போது உங்கள் வலிமைக்கு மீறி சீட்டுக்களை கேட்டீர்கள், அதிலே வெற்றியும் பெற்றும் 28 சீட்டுக்களை பெற்றீர்கள். கூட்டணி இல்லாமல் உங்கள் கட்சியால் அந்த ஐந்து எம்.எல்.ஏ க்களை பெற்றிருக்க மாட்டீர்கள்.
கூட்டணியின் தயவால் பெற்ற அந்த ஐந்து எம்.எல்.ஏ க்களை இப்போது விஜய்க்கு கை மாற்றிக் கொடுப்பது மிகவும் கேவலம். கொஞ்சம் கூட நெறிமுறையற்ற செயல்.
தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைத்த மையை அவர்களின் முகத்தில் பூசியுள்ளீர்கள். அவர்கள் அளித்த வாக்குக்கு எதிராக செயல்பட்டுள்ளீர்கள்.
ஒன்றும் தெரியாத பப்பு என்று உங்களை சொல்வார்கள். நீங்கள் பப்பு அல்ல, அமித்ஷா போல ஆபத்தான கிரிமினல்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களை இப்போது விஜய்யிடம் விற்பதற்கு பதிலாக அப்போதே கூட்டணியை விட்டு வெளியேறி விஜய் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கலாம்.
அப்படி செய்திருந்தால் முடிவுகளே கூட மாறி இருக்கலாம்.
உங்களை தமிழ்நாடு இனி துரோகி என்றே பார்க்கும்.
இந்த ஆடம்பரத்துக்கெல்லாம் ஜெ பாணி நடவடிக்கைதான் சரி
Tuesday, May 5, 2026
என்னய்யா செய்யப்போறே ஆரென்.ரெவி?
மேற்கு வங்கத்தில் நடந்தது தேர்தல் அல்ல. பேய்க்கும் பேய்க்கும் சண்டை.
"பரிபர்த்தன் (மாற்றம்) என்ற சொல்லுக்கு மயங்கி திரிணாமுல் காங்கிரஸ் என்றொரு பேயை நாற்காலியில் உட்கார வைத்த மேற்கு வங்க மக்கள் மீண்டும் இன்னொரு முறை "பரிபர்த்தன் (மாற்றம்) என்ற பெயரில் இன்னொரு பேயான பாஜகவை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள்.
நான் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று மம்தா அம்மையார் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்கு ஆட்டுத்தாடியாகப் போன ஆரென்.ரெவிக்குத்தான் இப்போது சிக்கல்.
அவர் என்ன செய்யப் போகிறார்?
மம்தாவை டிஸ்மிஸ் செய்யலாம். அது மட்டும்தான் முடியும்.
அதற்குப் பிறகு?
மேற்கு வங்கத்தின் வீதிகளில் இரண்டு கட்சிகளின் குண்டர்களும் மோதுவார்கள். ரத்த ஆறு ஓடும்.
அதற்குப் பின்?
சட்ட சபை????
தேசிய கீதத்தை முதலில் ஒலிக்கவில்லை என்று தமிழ்நாட்டில் சீன் போட்டது போல அங்கே சீன் போட மாட்டார். பாஜக அரசும் அவருக்கு சிக்கலை உண்டாக்காது.
சட்ட சபை வந்த ரெவியை தமிழ்நாட்டில் கண்ணியமாக திருப்பி அனுப்பினார்கள்.
மம்தா கட்சியினர் அப்படிப்பட்ட கண்ணியமான ஆட்கள் கிடையாது. ஏற்கனவே மேற்கு வங்க சட்ட சபையில் ரௌடித்தனம் செய்து எல்லாவற்றையும் உடைத்துத் தகர்த்தவர்கள்.
மேற்கு வங்கம் மட்டுமல்ல இந்தியாவே விந்தையான காட்சிகளை பார்க்கப் போகிறது.







.jpg)





