பாஜகவுடனான
உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்தமைக்காக எடப்பாடிக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமோ!
ஆனால் இந்த ஊடல் எப்போது வேண்டுமானாலும் கூடல் ஆகலாம் என்பதால் அவசரப்பட்டு ஒரு வாழ்த்தை விரயம் செய்ய விரும்பவில்லை.
அடுத்த
கூடலுக்கு முன்பு முதலில் என் கேள்விகளை கேட்டு விடுகிறேன்.
பாஜகவிலிருந்தும்
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவது என்று அறிக்கை சொல்கிறது. பாஜக கூட்டணியிலிருந்து
அல்லது என்.டி.ஏ விலிருந்து வெளியேறுகிறது என்றால் சரியாக இருக்கும். அதென்ன பாஜகவிலிருந்து
வெளியேறுவது? ஒரு வேளை இரட்டை உறுப்பினராக இரண்டு கட்சிகளிலும் இருந்தீங்களா எடப்பாடி?
கூட்டணியை
முறித்துக் கொண்டு டிமோவின் அதிருப்திக்கு
ஆளாகியுள்ள எடப்பாடியாரே, உங்கள் வீட்டுக்கு புதிய விருந்தினர்களாக அமலாக்கத்துறை,
சி.பி.ஐ, வருமான வரித்துறை ஆகியோர் வருவார்களே! எதுவும் கிடைக்காத படி எல்லாவற்றையும்
பத்திரமாக பதுக்கி விட்டீர்களா?