Wednesday, March 22, 2023

தூக்கு தண்டனையையே மாத்துங்க ஜட்ஜய்யா . . .

 


நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனையைக் காட்டிலும் வலி குறைவான வேறு கொலை வடிவம் உண்டா என்பதை ஆராய்ந்து சொல்லுமாறு நீதியரசர்கள் அரசுக்கு உத்தரவு போட்டுள்ளனர்.

விஷ ஊசி போடுவதோ, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதோ பயனளிக்காது என்ற விவாதமும் நடந்துள்ளது.

தூக்கு தண்டனை என்ற வடிவத்தை மாற்றுவதற்கு பதிலாக மரண தண்டனை கொடுப்பது என்பதையே மாற்றுவது என்பது பற்றி ஆராயுங்களேன் ஐயாக்களே!

ஆயுள் காலம் வரை சிறை, குறிப்பிட்ட வயது வரை சிறை என்று தண்டனைகளையே மாற்றலாம்.

உயிர் பறிக்கிற மரண தண்டனை இப்போதும் அவசியமா?


Tuesday, March 21, 2023

மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 



 

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜகவினர் நாடாளுமன்றத்தில் கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்திய ஜனநாயகத்தைப் பற்றி அவர் வெளி நாட்டில் பேசியதாக அவர்கள் காரணம் சொல்கிறார்கள்.

 

ராகுல் பேசியது வெளிநாடாக இருக்கலாம்.

 

இதோ உள்நாட்டிலேயே இந்திய ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது என்று நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்.

 

கீழே உள்ள பத்திகளை முதலில் படியுங்கள்.

 

********************************************************************************************

 

 ஆட்சியாளர்களால் இந்திய ஜனநாயகம் கடுமையாக தாக்கப்பட்டு வருகிறது. மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஜனநாயக அமைப்புக்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. சில அமைப்புக்களோ தங்களை ஆட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திக் கொண்டு விட்டன. முதலாளிகள் கட்டளையிடும் செயல்திட்டங்களை எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றும் இடமாகவே நாடாளுமன்றம் மாறி விட்டது. நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆட்சியாளர்கள் அடிப்படை உரிமைகளை முடக்குவதால் இந்திய அரசியல் சாசனமே கறை படிந்து காட்சியளிக்கிறது

 

**************************************************************************************

 

பண மதிப்பிழப்பு மற்றும் அவசர கதியிலான ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவற்றில் இருந்தே இந்தியப் பொருளாதாரம் சரிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. 2019-20 ஆண்டின் 3.1% உயர்வுதான் ஆறரை ஆண்டுகளின் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம்தான். மதியற்ற, பயனற்ற  கதவடைப்பு முடிவின் காரணமாக, பொருளாதாரம் சரியத் தொடங்கியது. அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் முடக்கப்பட்டதால் 2020-21 ல் ஒட்டு மொத்த உற்பத்தியில் 7 % சுருங்கியது. பண மதிப்பிழப்பு ஜி.எஸ்.டி ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சிறுதொழில் துறை ஒழுங்காக திட்டமிடப்படாத கதவடைப்பின் மூலம் முற்றிலுமாக அழிந்து போனது. லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்தனர்.

 

 **************************************************************************************

 

ஜனநாயகம் என்பது வெறுமனே தேர்தல்களை நடத்துவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் முகப்பில் சொல்லப்பட்டுள்ள  சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவையே உண்மையான ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம் என்பது முடிவெடுக்கும் நடைமுறைகளில் மக்களையும் ஈடுபடுத்துவதாகும்.உண்மையான ஜனநாயகம் என்பது ஆட்சியில் உள்ளவர்களை கேள்வி கேட்பதும் அவர்களின் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பாக்குவதாகும். உண்மையான ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களையும் சமமாக கருதுவதும் யாருக்கும் சிறப்பு அந்தஸ்து தராமல் இருப்பதுமாகும்.

 

 

ஜனநாயகம் இன்று பல முனைகளிலிருந்தும் தாக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. அனைத்து மசோதாக்களும் ஆளும் கட்சியின் மிருக பலம் மற்றும் மோசடி உத்திகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்கும் வாய்ப்பே தரப்படாமல் நிறைவேற்றப்படுகின்றன. இதன் மூலம் முடிவெடுக்கும் நடைமுறையில் மக்களின் பங்கேற்பு நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது. எந்த வித பாகுபாடும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக தேர்தல்களை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் எடுக்கிற பல முடிவுகள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு சாதகமாகவே அமைகிறது. பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தாமல் தவிர்த்து வரும் உச்ச நீதிமன்றத்தின் போக்கு அவ்வமைப்பின் பாகுபாடற்ற தன்மை குறித்தே சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற ஊடகங்கள், அவை அச்சு ஊடகங்களோ அல்லது காட்சி ஊடகங்களோ பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. அவை ஆளும் கட்சிக்கு சேவை செய்வதையும் எதிர்கட்சிகளை சிறுமைப்படுத்துவதையுமே வழக்கமாகக் கொண்டுள்ளன.

 

 

இந்த ஜனவரி மாதம், கொல்கத்தாவில் நடைபெற்ற  எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26 வது பொது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பகுதிகள்தான் மேலேயுள்ள  பத்திகள்.

 

இவற்றில் எதையாவது மோடியாலோ அல்லது முட்டாள் சங்கிகளாலோயோ மறுக்க முடியுமா?

 

இந்திய ஜனநாயகம் இன்று கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளது.

 

அதனால் மன்னிப்பு கேட்க வேண்டியது மோடிதான் . . .

 

 

Monday, March 20, 2023

ஆட்டுக்காரன் எனும் பொய்யன்

 


வாயைத் திறந்தாலே பொய், பொய் மட்டுமே என்பது ஆட்டுக்காரனின் வாடிக்கையாகி விட்டது.

லேட்டஸ்ட் பொய் . . .

"தேர்தலில் செலவு செய்ததால் என் சேமிப்பெல்லாம் போய் கடன் காரனாக மாறி விட்டேன்"

ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்த அறிக்கையில்

"சொந்தப் பணத்தை செலவு செய்யவில்லை"


சொந்தப் பணத்தை செலவு செய்து கடன் காரனாகியிருந்தால் தேர்தல் ஆணையத்திடம் சொன்னது பொய்.

தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த அறிக்கைதான் சரியானது என்றால் நான் கடங்காரனாகி விட்டேன் என்று அனுதாபம் தேடிக் கொள்வது பொய்.

எப்படிப்பார்த்தாலும் ஆட்டுக்காரன் ஒரு பொய்யன் என்பது மட்டும்தான் உண்மை.

பிகு: ஆனாலும் "மத்யமர் ஆட்டுக்காரன்" குழு சங்கிகள் ஆட்டுக்காரனுக்கு கொடுக்கிற முட்டுக்கள் இருக்கே, அது வேற லெவல் . . .

ஆட்டுக்காரன் கட்சியிலதான் எல்லா . . .

 


கீழே உள்ள நான்கு செய்திகளும் நேற்று நடந்த சம்பவங்கள்.





எல்லா  கிரிமினல்களும் பாஜக அல்ல . . .

ஆனால் பாஜகவில் உள்ள அனைவரும் கிரிமினல்கள்தான் . . .

என்ன ஆட்டுக்காரா சரிதானே! நீயே மிகப் பெரிய பொய்யன், உன் லேட்டஸ்ட் பொய் பற்றி மாலை பார்ப்போம். . .

Sunday, March 19, 2023

மோடிக்கு இதெல்லாம் ஜூஜூபி . . .

 


மோடி கைய வச்சா எதுவும் உருப்படாதுன்னு கீழே உள்ள படத்தைப் போட்டு சில பேரு சொல்லிக்கிட்டு இருக்காங்க. . .


இதென்ன பிரமாதம்! மோடி பிரதமரான பின்பு இந்தியாவே உருப்படாமப் போச்சு என்ற உண்மையை உணர்ந்திருந்தால் இப்படியெல்லாம் பேசுவார்களா?

Saturday, March 18, 2023

பயம் இருக்கட்டும் ஆட்டுக்காரன் குழு ஆட்களே!

 


இன்று "மத்யமர் ஆட்டுக்காரன்" குழுவில் மதுரை மக்களவை உறுப்பினர் தோழர் சி.வெங்கடேசனையும் கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயனையும் ஒரு கெட்ட வார்த்தையில் திட்டி ஒரு சங்கி பதிவு போட்டிருந்தது.


அந்த வார்த்தையை காவி நிறத்தில் மறைத்து விட்டேன். 

பாஜக ஆதரவுக்குழு என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியாத உங்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்று ஒரு சர்ச்சையின் போது சொன்னதற்காக ஒரு மாடரேட்டர் "இந்த தளத்தின் மாண்பு பற்றி தெரியுமா" என்று பெரிதாக சொற்பொழிவு ஆற்றினார்.

எச்.ராசாவை ப்ரொபைல் படத்தில் வைத்த ஒரு சங்கி பல மாநில முதல்வர்களை உருவக் கேலி செய்த போது அந்த மாடரேட்டர் கண்டு கொள்ளவேயில்லை.

ஆனாலும் இப்போதும்  அந்த மாடரேட்டரை கேள்வி கேட்டேன்.



உடனடியாக இன்னும் இருவரும் எதிர்வினையாற்றினார்கள்.

பாவம், நடுநிலை நாடகத்தை தொடர வேண்டிய கட்டாயம் போல!

பதிவை நீக்கி விட்டார்கள்.

அந்த பயம் இருக்கட்டும், "மத்யமர் ஆட்டுக்காரன்" குழு அட்மின் மற்றும் மாடரேட்டர்களே!

"புலி" யால் சிக்கிக் கொண்டார்கள்

 


அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு புலிகள் சரணாலயத்தில் நீண்ட நாட்கள் கண்ணில் படாத ஒரு புலியை தேட வைத்த காமெராக்களில் அது தென் பட்டுள்ளது.

அதை தேடி வனத்துறை காட்டில் அலைய கிடைத்தது புலி அல்ல,

பிறகு?

யாரும் வர முடியாத காடு என்று அரசு நினைத்திருக்க, மரக் கொள்ளையர்களோ அங்கங்கே மர டெப்போக்களையே வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப் பட்ட மரங்களை வெளியே கொண்டு வர வாகனத்தில் ஏற்றி வைத்த நிலையில் பிடித்துள்ளார்கள்,


நல்ல வேளை, காட்டை முழுதுமாக மொட்டையடிக்கும் முன்பாக புலி உதவி விட்டது.