ஆட்டுக்காரன் விடுத்திருந்த இந்த வீர தீர சவாலை இப்போதுதான் பார்த்தேன்.
இந்த ராசியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. மோடி துவக்கி வைக்கும் திட்டங்களில் எல்லாம் சொதப்பல் ஏற்படுவதால் சிலர் அவரை பீடை, அவருடைய ராசியால்தான் பாலம் இடிகிறது, ரோடு பிளக்கிறது, வந்தே பாரத் விபத்துக்குள்ளாகிறது என்று திட்டுவார்கள். அது மோடி பீடை என்பதால் அல்ல, மோடிக்காக காண்பிக்கிற அவசரத்தின் விளைவு, அதனால் செய்யப்படும் தரமற்ற கட்டுமானம், ஊழல் என்று சொல்வேன்.
ஆனால் ஆட்டுக்காரனின் ராசி மீது நம்பிக்கை வைக்கலமா என்று தோன்றுகிறது.
மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள கமா, புள்ளி யைக் கூட மாற்ற முடியாது என்று சொன்ன மறு நாளே, அவற்றை மோடி திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்.
அடுத்த படியாக அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் நான் தலைவர் பதவியிலிருந்து செல்ல மாட்டேன் என்றார். ஆனால் அவரால் தற்குறி என்று திட்டப்பட்ட எடப்பாடியின் நிபந்தனைக்காக ஆட்டுக்காரனின் மாநிலத் தலைவர் பதவி மட்டும் பறி போகவில்லை, எம்.எல்.ஏ சீட் கூட கொடுக்கப்படவில்லை.
இப்போ லேட்டஸ்டாக தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது என்று சொல்ல அந்த மசோதா பரிதாபமாக தோற்றுப் போய் விட்டது.
செந்தில் ஊளையிடுவதை பார்த்து விட்டு போனால் வடக்குப்பட்டி ராமசாமி வாங்கிய கடனை வசூலித்து விடலாம் என்று நம்பிப் போன கவுண்டமணியின் நிலைமையில் உள்ளது பாஜக.
அதனால் ஆட்டுக்காரன் அவர்களே,
மோடிதான் எங்கள் நிரந்தரப் பிரதமர் என்று சொல்லுங்களேன்.
துரத்தி விடப்பட்ட நிதீஷ்குமார் ஏதாவது செய்கிறாரா என்று பார்ப்போம்.











