ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, February 21, 2026
தர்மசங்கடமான நிலை! என்ன செய்வது?
வேள்பாரி பாண்டியன் அரண்மனையும் நாடாளுமன்றக் கட்டிடமும் . . .
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அளித்த ஒரு புதிய தகவல் கீழேயுள்ள காணொளியில் உள்ளது. அரசியல்வாதியை மீறி எழுத்தாளர் கம்பீரமாய் நிற்கும் தருணம் இது.
Friday, February 20, 2026
புதிய பாபர் மசூதியைக் கூட . . .
பழம் நழுவி பாலில் விழ பத்தாண்டுகள்
தேமுதிக இப்போது திமுக கூட்டணியில் இணைந்து விட்டது. என்ன பேரம் என்பது தெரியவில்லை. சிவராத்திரி அன்று பாஜகவின் ராஜ்நாத்சிங், அதிமுகவின் தங்கமணி ஆகியோரோடு ஜக்கியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இரண்டு தினங்களுக்குள் அறிவாலயம் வந்து விட்டார்.
அந்த புகைப்படத்தை பார்க்கும் போது பத்தாண்டுகளுக்கு முன்பாக கலைஞர் கூறியதுதான் நினைவுக்கு வந்தது.
"பழம் நழுவி பாலில் விழுந்து விடும்" என்று எதிர்பார்ப்பதாக அவர் பல முறை கூறிக்கொண்டிருந்தார். ஆனால் திமுக கூட்டணிக்கு வராத விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியோடு கரம் கோர்த்துக் கொண்டார். அதுதான் மக்கள் நலக்கூட்டணிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக போனது.
சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, மதிமுக, விசிக ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து பல கூட்டியக்கங்கள் நடத்தி பின்பு அந்த போராட்ட ஒற்றுமை மக்கள் நலக் கூட்டணியாக மலர்ந்த போது மக்கள் ஆதரவு இருந்தது. ஊடகங்களும் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தது.
எப்போது விஜயகாந்தும் ஜி,கே.வாசனும் வந்தார்களோ, அதற்கு பிறகு எல்லாமே தலை கீழாக மாறியது. சமூல வலைத்தளங்களின் துவக்க காலமாக இருந்தாலும் அவையும் ஊடகங்களும் அக்கூட்டணியை ஒரு கேலிப் பொருளாக மாற்றி ஒரு மாற்று அரசியல் சக்தி உதயமாவதை கருக்கி விட்டார்கள்.
கலைஞர் காலத்தில் பால் கிண்ணத்தில் விழாத பழம் பத்தாண்டுகளுக்குப் பின்பு மு.க.ஸ்டாலின் காலத்தில் விழுந்து விட்டது.
Thursday, February 19, 2026
இந்தியாவை இழிவு படித்திய சங்கிப் பல்கலைக்கழகம்
சீனாவிலிருந்து காசு கொடுத்து வாங்கி வந்த ரோபோ நாயை, தங்கள் பல்கலைக்கழகத்தின் திறன் மையத்தில் கண்டுபிடித்தோம் என்று உத்திரப்பிரதேசத்தில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைகழகம், புதுடெல்லியில் நடைபெற்ற AI மாநாட்டில் பீற்றிக் கொள்ள அந்த பொய் மறு நாளே அம்பலமானது.
அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் மட்டும் அசிங்கப் படவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவும் அசிங்கப்பட்டது. இந்திய அறிவியல் திறன் அசிங்கப்பட்டது. இந்தியாவின் சுயசார்பு உற்பத்தித் துறை அசிங்கப்பட்டது.
இந்த அசிங்கத்தைத்தான் ஓவியர் தோழர் ரவி பாலேட் அட்டகாசமான கார்ட்டூனாக மாற்றி விட்டார்.
இப்படி ஒரு வேலையைச் செய்ய அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக் கழகத்திற்கு எப்படி தைரியம் வந்தது?
கீழே உள்ள படங்கள் உண்மையைச் சொல்லும்.
இந்த புகைப்படங்களை வைத்து மட்டும் அது ஒரு சங்கிப் பல்கலைக்கழகன் என்று சொல்லி விட முடியுமா?
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அந்த பல்கலைக்கழகம், தன் மாணவர்களை வைத்து பாஜகவிற்கு ஆதரவாகவும் இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் பிரச்சாரப் பேரணி நடத்தியுள்ளார்கள்.
அறிவியலோ, அறவியலோ, இந்தியாவிற்கு எப்போதும் இழிவு சங்கிகளால்தான்.
C.B.I கரடியே காரி உமிழ்ந்த . . .
நான்காண்டுகளுக்கு முன்பாக ஆட்டுக்காரன் ஒரு மாணவியின் தற்கொலையை மத மாற்றத்தினால் நிகழ்ந்தது என்று கொளுத்திப் போட்டு கலவரத்துக்கு அடி போட, சங்கிகள் அனைத்து வித பொய்களையும் கட்டவிழ்த்து விட, திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் வழக்கம் போல சங்கிகள் விருப்பத்திற்கேற்ப சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
கடைசியில் சி.பி.ஐ விசாரித்து முடித்து அறிக்கையும் கொடுத்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறிக்கை விபரத்தைச் சொல்கிறது.
ஆனால் ஆட்டுக்காரனெல்லாம் மன்னிப்பு கேட்பான் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் சங்கிகளுக்கு வெ.மா.ரோ.சூ.சொ எதுவும் கிடையாது.
பிகு : அந்த சமயத்தில் நான் எழுதிய மூன்று பதிவுகள் கீழே உள்ளது.
அண்ணாமலையை கைது செய்யவும் என்ற பதிவின் இணைப்பு இங்கே
அண்ணாமலை, வானதி, சங்கிகள் கவனத்திற்கு என்ற பதிவின் இணைப்பு இங்கே
பொய் சொல்லி, பயந்தாங்குளி வானதி அம்மையார் என்ற பதிவின் இணைப்பு இங்கே

















