சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள பேய்கள் இந்தியாவுக்கு வரும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமல்லவா!
அடுத்தவன் காசை அடிக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள பேய்கள் இந்தியாவுக்கு வரும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமல்லவா!
அடுத்தவன் காசை அடிக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
"காலிஃப்ளவர் சாகுபடிக்கு பீகார் ஒப்புதல் அளித்து விட்டது"
இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களின் கண்டன அறிக்கைதான் அந்த காலிஃப்ளவர் சாகுபடியின் விபரீத அர்த்தத்தை உணர்த்தியது.
இஸ்லாமியர்களை கொன்றதற்கும் அவர்கள் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தை காலிஃப்ளவர் பயிரிட்டு மறைத்தமைக்கும் பீகார் மக்கள் ஒப்புதல் அளித்து விட்டார்கள் என்று தேர்தல் முடிவுகளுக்கு விபரீத அர்த்தம் சொல்லும் அந்த சங்கி ஒரு சாதாரண முரட்டு, முட்டாள் சங்கி மட்டுமல்ல, அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்.
தாங்கள் செய்யும் கொலைகளுக்கு காலிஃப்ளவரை சங்கிகள் இழுப்பது இது முதல் தடவை அல்ல.
மாவோயிஸ்டு முத்திரை குத்தி போலி மோதல்கள் மூலம் சத்திஸ்கர் மாநிலத்தில் மனித வேட்டை நடந்த போது கர்னாடக பாஜக ட்விட்டரில் ஒரு பதிவு போடுகிறது. அதிலே கொலைகார அமித்ஷா கையில் காலிஃப்ளவர்.
தங்களின் அரசியல் எதிரிகளை கொலை செய்து அதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் போக்கு இருக்கிறதே, அது மிகவும் மோசமானது, அபாயகரமானது, அனைவரையும் அச்சுறுத்துவது.
சங்கிகள் கொலை பாதகப்பாவிகள் என்பதற்கு அவர்களே தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களை வெறுத்து ஓதுக்கித் தள்ள வேண்டிய மக்கள் ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வைக்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் பெரும் துயரம்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளரும் தற்போதைய துணைத்தலைவருமான தோழர் கே.சாமுவேல்ராஜ் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நீதித்துறை மீது அவ்வப்போது நம்பிக்கை இது போன்ற தீர்ப்புக்கள் அளிக்கிறது.
சாதி வெறியன் தண்டபாணிக்கு
![]() |
தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு,
வாக்குத் திருட்டு,
மத வெறி பிரச்சாரம்,
தேர்தலுக்கு முதல் நாள் வெடித்த வெடிகுண்டு,
தமிழ்நாட்டில் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதை பிச்சை கொடுப்பது என்று இழிந்து பேசிக் கொண்டே பத்தாயிரம் ரூபாய் அளித்தது,
என்று ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதெல்லாம் நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்வதாகத்தான் இருக்கும்.
அயோக்கியத்தனம் செய்வதையே வாழ்வியலாகக் கொண்டவர்களால் மீண்டும் மீண்டும் வாக்குகளைக் குவிக்க முடிகிறது என்றால்
நம் மக்களிடமும் ஏதோ கோளாறு இருக்கிறது. தங்கள் வாழ்வைப் பறிக்கிறவர்களையே விரும்புகிற அளவிற்கு மோசமாகி விட்டார்கள்.
அவர்களின் நம்பிக்கையை "இந்தியா" எப்படி வெல்லப் போகிறது?
இப்போது இந்திய ஜனநாயகத்தின் நிலைமை தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக உள்ளது. அது மீளுமா அல்லது மீளாத்துயரை நமக்கு அளிக்குமா?
சிகிச்சை தர வேண்டிய பொறுப்பில் உள்ள "இந்தியா" அணி தங்களுக்குள் உண்மையான பரிசீலனை செய்ய வேண்டும்.
அநேகமாக "இந்தியா" அணியின் அனைத்து கட்சிகளுக்குள்ளும் சங்கிகள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுறுவியுள்ளனர். அவர்கள் கண்டறியப்பட்டு தூக்கி வீசப்பட வேண்டும்.
பல கட்சிகளிலும் (இடதுசாரிகள் உட்பட) களைகள் மண்டிக் கிடக்கின்றன. கொஞ்சம் கூட தயவு தாட்சண்யமின்றி அந்த களைகள் அகற்றப்பட வேண்டும்.
மக்களின் உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து கொண்டு அவற்றின் தீர்வுக்கான போராட்டங்களை நடத்த வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்தால் ஜனநாயகம் பிழைக்கும். இல்லையென்றால் புலம்பலே வாழ்வாகும்.
நேற்று ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி ஒன்று.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை "தேசியத் தலைவர்" என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளதாம்.
காமராஜர் பற்றி தவறாக சித்தரித்துள்ளதால் அத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு நாடார் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை செய்யக் கோரியுள்ளது என்பதுதான் அந்த செய்தி.
அப்படி என்ன தவறான செய்தி அத்திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்?
அந்த காலத்தில் தேர்தலில் நிற்க சொத்து வேண்டுமாம். காமராஜரிடம் எதுவும் சொத்து கிடையாது. காமராஜரின் அன்னை பெயரில் இருந்த நிலத்தை காமராஜர் பெயருக்கு மாற்றித் தர தேவர் சொன்ன போது அவர் தன் மகள் திருமணத்துக்கு அந்த நிலம் தேவை என்பதால் மறுத்து விட்டாராம். ஏனவே முத்துராமலிங்க தேவர் காமராஜருக்காக ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி அதற்கு காமராஜர் பெயரில் ரசீது வாங்கினார். அந்த அடிப்படையில்தான் காமராஜர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இந்த தகவலை இதற்கு முன்பு வாட்ஸப்பில் உலா வந்திருக்கிறது.
இந்த தகவல் பொய்யானது, ஆதாரமற்றது, காமராஜர் மீது அவதூறு பரப்புகிறது என்பது வழக்கின் மையக்கருத்து.
நான் கூட
தலித் தலைவர் இமானுவேல் சேகரன் கொலை தொடர்பாக முதல்வராக இருந்த காமராஜர் முத்து ராமலிங்கத் தேவரை கைது செய்ய உத்தரவிட்டது,
முதுகளத்தூர் கலவரங்களை அடக்காமல் வேடிக்கை பார்த்தது.
கீழ்த்தூவல் என்ற இடத்தில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் கண்களைக் கட்டி போலீஸ் சுட்டது என்ற குற்றச்சாட்டு ஆகியவை பற்றிதான் திரைப்படம் காமராஜரை உண்மயாகவோ, தவறாகவோ சித்தரித்துள்ளதோ என்று நினைத்தேன்.
கடைசியில் பார்த்தால் "ஆட்டுக்குட்டி" பிரச்சினை!
பிகு: மேலே உள்ள படத்தில் ஆட்டுக்குட்டியை கையில் வைத்துள்ள ஆள்தான் டுபாக்கூர் என்பது இன்றைய நிலவரம் என்றால் அந்த காலத்திலும் ஆட்டுக்குட்டி கதை டுபாக்கூர்தான் போல . . .
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொன்னதை "ஒப்புதல் வாக்குமூலம்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.