Wednesday, April 8, 2026

இரான் - இருளில் ஒளி

 சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் சிறப்பான ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். இரான் மக்களின் மன உறுதிக்கு சான்றாக இப்பதிவு அமைந்துள்ளது.




ஈரானிய மக்கள் உலகிற்கு காட்டிய வெளிச்சம்...

அ.முத்துக்கிருஷ்ணன்
8:00 மணி என்றால் இந்தியரக்ளுக்கு பொதுவாகவே ஒரு பயம் தான், இரவு 8 மணிக்கு ஒருவர் தொலைக்காட்சியில் வரப்போகிறார் என்றாலே தொட்டியில் போட்டு தாய்மார்கள் குழந்தைகளை கூட தூங்கவைத்து விடுவந்து இந்திய வழக்கமாகவே 2014க்கு பிறகு மாறியுள்ள நிலையில் அதே போல் ஒரு 8 மணி மிரட்டலை ஈரான் நாட்டிற்கு விடுத்தார் ஒருவர்.
விளக்குகள் எல்லாம் அணைந்து விடும், நாடே இருளில் மூழ்கும், ஒரு நாகரீகமே அழிந்துவிடும் என்ற ஏக வசனங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிந்து, உலகையே பதட்டம் கொள்ளச் செய்தார். நிச்சயம் நேற்றைய இரவு எனக்கு மட்டும் அல்ல நண்பர்கள் பலருக்குமே தூக்கமில்லா இரவு தான் ஆனால் ஈரான் மக்கள் பயத்தின் இருளுக்குள் சென்றிடவில்லை, ஒரு துளியும் பின்வாங்கவில்லை.
அவர்கள் தாங்கள் தான் ஈரான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உலகிற்கே உணர்த்தினார்கள். நேற்றைய இரவின் பொழுதில் அவர்கள் காட்டிய வீரம் என்பது வரலாற்று நிகழ்வாகவே எனக்கு படுகிறது.
இஸ்பஹானின் மூடுபனியில் இருந்து தப்ரிஸ் நகரின் தொழில்துறை பகுதிகள் வரை, வரலாறு எழுதப்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் மனித மதில் சுவர்களாக மாறினார்கள், தாக்குதலுக்கான இலக்குகளாக உருமாற்றம் பெற்றார்கள்,
தேஹ்ரானில், தபியத் பாலம் "நள்ளிரவு கீதத்தின்" மேடையாக மாறியது; அங்கு தார் இசையின் தாளங்களூக்கு கலைஞர்கள் நடமனாடினார்கள். உலகமே பதட்டத்தில் உறைந்து கிடக்கும் நேரம் அவர்கள் இசையும் நடனமுமாக லயித்திருந்தார்கள்.
"முழுமையான அழிவு" என்ற அச்சுறுத்தலுக்கு எதிரான பண்பாட்டு எழுச்சி. மின் நிலையங்களை ஒளிக் காட்சியகங்களாகவும், பாலங்களை மனித சங்கிலிகளாகவும் மாற்றிய மக்கள், "Power Plant Day" என்ற தாக்குதல் தர்க்கத்தை மக்கள் தைரியத்தின் ஒளியால் செயலிழக்கச் செய்தனர்.
ஈரான் முழுவதுமே எதிர்ப்பு பல்வகைமைகள் கொண்டாதாக, விரிவானதாக ஒன்றை விட ஒன்று வீரியமானதாகவே இருந்தது; ஒவ்வொரு நகரமும் தேசிய பாதுகாப்பின் ஓர் நூலாக தன்னை நெய்தது. புஷேர் நகரின் தெற்கில், மாணவர்களும் தொழிலாளர்களின் குடும்பங்களும் அணு நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் பெரிய சுவரோவியங்களை வரைந்தனர்; அவை மேலே பறக்கும் விமானிகளுக்கும் செயற்கைக்கோள்களுக்கும் அமைதியின் செய்திகளை வெளிப்படுத்தின.
கெர்மான்ஷா மற்றும் அஹ்வாஸ் நகரங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி, மருத்துவமனைகளையும் வீடுகளையும் சுற்றி அரன் அமைத்தனர். தங்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தும் மின் நிலையங்களின் வாயில்களை விட்டு நகர மறுத்தனர்; இவை "Shields of Light/ ஒளியின் கவசங்கள்" என அழைக்கப்பட்டன. வீதிகள் எங்கும் உணவின் மணமும், கவிதை வாசித்தலின் ஓசையும் காற்றில் நிரம்பியிருந்தது.
அலி காம்சாரி மற்றும் பென்யாமின் பகதூரி போன்ற கலைஞர்கள் சாதாரண மக்களுடன் தோளோடு தோள் நின்று, "நூர் பர் தரிகி"—இருளில் ஒளி—என்ற முழக்கத்தை எழுப்பினார். மக்களின் இதயத் துடிப்பு உலகம் முழுவதிலும் கலைஞர்கள் ஒலிக்கச் செய்தார்கள்.
இந்த வரலாற்றுச் செயல்பாடு ஒரு தற்காலிக பாதுகாப்பை விட ஒரு படி மேலே சென்றது; இது அந்த மக்களின் மரபு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இரு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும், "நாகரிகத்தை முடிவுக்கு கொண்டுசெல்லும்" முடிவுகள் இரு வாரங்களுக்கு மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவே மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஒன்றரை கோடி பேர் ஒரு இரவில் தங்களின் நாட்டை காக்க முதல் முறையாக கூடியிருக்கிறார்கள், இரவெல்லாம் இந்த வரலாற்றை நான் ஒவ்வொரு நொடியாக நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஈரான் மக்கள் ஒன்றுகூடிய அந்த தருணம் 21ஆம் நூற்றாண்டின் மறக்க முடியாத நிகழ்வாகும். "எங்கள் பாலங்கள், எங்கள் மின் இணைப்புகள்" என்ற அவர்களின் முழக்கம், நேரடி பதிலாக அமைந்தது.
கலை மூலம் தெருக்களையும், இசை மூலம் தொடுவானத்தையும் நிரப்பிய ஈரானியர்கள், போர் இயந்திரங்களுக்கு எதிராக தங்களின் அசாத்திய எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள்.
போர்களை இந்த உலகம் மறுபரீசீலனை செய்ய வேண்டும் அதுவே கலையும் கலைஞர்களும் எளிய மக்களும் இந்த உலகிற்கு விடுக்கும் செய்தி, உலகம் முழுவதும் நடைபெற்ற எல்லா போர்களிலும் எளிய மக்களும் அவர்களது உடமைகளும் அவர்களது வாழ்வாதாரமுமே முதன்மையாக பாதிக்கப்பட்டு அவர்கள் வாழ்வு தான் மிகுதியாக சிதைந்துள்ளது.
இந்த இரவு என் வாழ்வின் மகத்தான இரவும் கூட.... மறக்க முடியாத இரவும் கூட....

கறி விருந்திற்கு வாய்ப்பில்லை சுந்தர்.சி

 


புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்தி தொகுதியில் போட்டியிடும் பாஜக பொறுப்பாளர் குஷ்புவின் கணவர், இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி, தான் எம்.எல்.ஏ ஆனால் மதுரை மத்திய தொகுதியில் அசைவ விடுதிகளை மூடி மீனாட்சி அம்மன் கோயில் புனிதத்தை பாதுகாப்பேன் என்று பேசியதாக ஒரு செய்தி உலாவியது.

பிரபலமான அசைவ விடுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மதுரையில் இப்படியெல்லாம் பேசுமளவிற்கு சுந்தர்.சி மோசமான சங்கியா என்று சின்ன சந்தேகம் வந்தாலும் அந்த செய்தியை உறுதிப்படுத்தாமல் பதிவு எழுத வேண்டாம் என்றிருந்தேன்.

அந்த செய்தி சரியில்லை என்றும் தன் வெற்றிக்குப் பிறகு அச்செய்தியை பரப்பியவர்களுக்கும் சேர்த்து கறி விருந்து கொடுப்பேன் என்று சுந்தர்.சி பேசியுள்ளார்.

ஆனால் திரு சுந்தர் அவர்களே, நீங்கள் வெற்றி பெறப் போவதுமில்லை. யாருக்குமே கறி விருந்துமே தரப் போவதில்லை.

இந்த தேர்தல் காரணமாக கமலஹாசன் தயாரித்து, ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்து விட்டேனே என்று நீங்கள் புலம்பப் போவது மட்டுமே நடக்கப் போகிறது.

பாவம் ஏ.சி.சண்முகம்! இது நாள் வரை வேலூர் மக்களவை தொகுதியில் அவர் போட்டியிட்டு கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளார், அதனை மாணவர்களிடமிருந்து வசூலித்து விடுவார் என்பது வேறு. 

தனக்காக பணத்தை இழந்த அவர், முதல் முறையாக உங்களுக்காக பணத்தை இழக்கப் போகிறார். 

Tuesday, April 7, 2026

மம்தா அண்ணன் மகன் செஞ்சதுதான் விஜய்

 


தன்னைப் போன்ற உருவச்சிலைகளை செய்து அவற்றை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுதான் விஜய் இன்று கொடுத்துள்ள கண்டெண்ட்.


எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ க்கள் வரிசையாக நிற்பது போல விஜய் சிலைகள் நிற்பதைப் பார்த்தால் காமெடியாகத்தான் இருக்கிறது.


ஆனால் இது ரொம்பவே பழைய டெக்னிக்.

2019 மக்களவைத் தேர்தலின் போதே மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி கடைபிடித்த டெக்னிக்தான். 

அப்போது எழுதிய பதிவு உங்கள் தகவலுக்காக.

Monday, April 29, 2019

பிரச்சாரத்துக்கே இப்படி! ஜெயிச்சா எப்படி?



அபிஷேக் பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர். டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடும் இவர் மம்தா பானர்ஜியின் சொந்தக் காரரும் கூட.

பிரச்சாரத்தில் வெயிலில் அலைய முடியவில்லை என்பதற்காக அவருடைய சிலை ஒன்றை ப்ளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்து, அந்த சிலையை ஜீப்பில் வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

பிரச்சாரத்தின் போது ஓட்டு கேட்பதற்காகக் கூட மக்களை சந்திக்க வராத இந்த சொகுசுப் பேர்வழி எல்லாம் ஜெயிச்சால் மட்டும் என்ன பிரயோஜனம்?

அந்த தொகுதி மக்களுக்கு இதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு சொரணை இருக்குமா?

விஜய் அவருடைய லெவலுக்கு இன்னும் புதுமையாய் ஏதாவது யோசித்திருக்கலாம்.

பிகு: அதே 2019 தேர்தலின் போது டெல்லியில் ஒரு வேட்பாளர், அவருக்கு பதிலாக டூப் ஒருவரை வேனில் நிற்க வைத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அது டூப்பெல்லாம் இல்லை, நான் ஜீப்பிற்குள் ஓய்வு எடுத்த போது அவர் சும்மா மேலே நின்று வாக்காளர்களைப் பார்த்து சும்மா வேட்பாளர் போல சும்மா கை காட்டினார் என்று அந்த ஒரிஜினல் வேட்பாளர் சமாளித்தார். 

அவர் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சங்கி கௌதம் கம்பீர் . . . .

ஜெமோ நீடூழி வாழட்டும், மற்றவர்கள் கூடுதலாகவே

 


நாய் வால் நிமிராது என்பதை புளிச்ச மாவு ஆஜான் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அஞ்சலி குறிப்பு மூலம் இறந்தவரை அசிங்கப்படுத்துவது என்பது அவரது இயல்பாகி விட்டது.

சமீபத்தில் மறைந்த காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் பற்றி அவருடன் பழகிய எண்ணற்றவர்கள் தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

ஜெயமோகன் மட்டும் வழக்கம் போல தன் வன்மத்தை கொட்டியுள்ளார். அவர் எழுதியதை படியுங்கள்.

தார்ஷியா என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிக்கொண்டிருந்த டி..அரவிந்தனின் தந்தைதான் எனக்கு முதலில் அறிமுகம்அதன்பின்னர் அன்று மாணவராக இருந்த அவரை அறிமுகம் செய்துகொண்டேன்அச்சகங்களில் வெட்டிப்போட்டபின் மிஞ்சும் விளிம்புத்தாள்களை சேகரித்து குறிப்பேடுகள் தயாரிப்பவர்களிடம் விற்கும் தொழிலை அன்று செய்துகொண்டிருந்தார். அவர் கடுமையான உடலுழைப்புக்கு இயலாத சிறிய உடற்குறைபாடு கொண்டிருந்தாலும் அன்று மிகக்கடினமான அப்பணியைச் செய்யவேண்டியிருந்ததது.

நான் தொடர்பு கொண்டிருந்த விஜயபாரதம் அச்சகத்திற்கு காகிதம் சேகரிக்கும் பொருட்டு வந்தவர் நான் புதுமைப்பித்தனை கல்கியுடன் ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு என்னிடம் உரையாடினார். அவர் கல்கியை அப்போதுதான் வாசித்திருந்தார். ஒரு நாள் சில கதைகளை என்னிடம் அளித்தார். அவற்றை செம்மை செய்து வெளியிட்டேன். அதன்பின் அவர் இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார். 

ஓர் ஐந்தாண்டுக்காலம் அவருடன் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்தது. புதிய காலச்சுவடு அணியுடன் அவர் இணைந்த பின் அந்த தொடர்பு இல்லாமலாகிஎன் மேல் அவர் முழுமையான ஓர் எதிர்மனநிலையில் நீடித்தார். எப்போதாவது ரயில் நிலையங்களில் தற்செயலாகச் சந்தித்துக்கொண்டால் ஒரு சில சொற்களை பெரும்பாலும் நானே சென்று பேசுவதுடன் தொடர்பு நின்றதுசென்ற டிசம்பரில் ரயிலில் சந்தித்தபோது நாகர்கோயிலில் இருப்பதாகச் சொன்னார். 

அவருடைய மறைவு திகைப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறதுஇத்தகைய தருணங்களில் மிக இளைஞராக அவரைச் சந்தித்த முகம்தான் நினைவிலெழுகிறதுஅஞ்சலி.

இறந்தவரின் பொருளாதார நிலை,

உடல் குறைபாடு,

அவர்களின் வாசிப்பனுபவம் பற்றிய அலட்சியம்,

அவர்களுக்கு தான் செய்த உதவிகள்,

அடுத்தவர் உதவியில்லாமல் அவர்கள் முன்னேற முடியாது,

அவர்கள் பகைவர்களாக இருப்பினும் தான் ரொம்ப நல்லவன் என்று காண்பிப்பது.

இவையெல்லாம் அவரது அஞ்சலி வன்மக் குறிப்புகளில் வழக்கமாக இருக்கும். அரவிந்தனுக்கான குறிப்பிலும் இதெல்லாம் இருக்கிறது. அவற்றை அடிக் கோடிட்டுள்ளேன்.

இன்னும் கூட ஒரு மோசமான விஷயத்தை முதலில் எழுதியிருந்தார். பிறகு அதனை மட்டும் நீக்கி விட்டார். மற்ற விஷமெல்லாம் அப்படியேதான் இருக்கிறது. 

ஜெயமோகனை என்ன சொல்வது? 

ஜெயமோகன் நீடூழி வாழட்டும். மற்ற இலக்கியவாதிகள், பதிப்பாளர்கள் ஆகியோரெல்லாம் ஜெயமோகனை விடவும் கூடுதல் காலம் வாழட்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஜெமோ அஞ்சலி குறிப்பு எழுதும் வாய்ப்பு கிடைக்காது. 

பிகு 1 : அசோகமித்திரனை பேச அருகதையற்ற ஜெமோ - நாளை

பிகு 2 : ஜெயமோகனை விமர்சிப்பவர்களை வெட்டி ஆபீசர்கள் என்று சொல்கிறார் கவிஞர் போகன் சங்கர். அவரைப் போல முட்டு கொடுப்பவர்களை முட்டாள் ஆபீசர்கள் என்று சொல்லலாமா? 


Monday, April 6, 2026

போலீஸிற்கு மரண பயத்தை கொடுத்த தீர்ப்பு

 


மிகவும் கேவலமாக இன்று பேசிக் கொண்டிருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் நடந்த மிகப் பெரிய அராஜகச் செயல்களில் ஒன்று சாத்தான்குளம் லாக்கப் கொலைகள்.

ஜெய்பீம் படத்தில் காண்பித்த போலீஸ் சித்திரவதைகள் எல்லாம் ஒன்றுமே கிடையாது என்பது போலத்தான் சாத்தான்குளம் சம்பவம் அமைந்திருந்தது. 

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஒன்பது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை கூடாது என்ற கொள்கை நிலையில் பார்க்கும் போது மரணம் வரை சிறைத்தண்டனை என்று கொடுத்திருக்கலாம். இறுதித் தீர்ப்பில் ஒரு வேளை மரண தண்டனை குறைக்கப்படலாம்.

ஆனாலும் இத்தீர்ப்பு

தன் ஸ்டேஷனுக்கு வருபவர்களை மனிதராக மதிக்காமல் மிருகத்தனமாக சித்திரவதை செய்யும் போலீசாருக்கு மரண பயத்தை அளித்துள்ளது.

இனியாவது இன்னொரு லாக்கப் மரணம் நடக்காமல் இருக்கட்டும். இத்தீர்ப்பு கெட்ட போலீஸிற்கு அச்சத்தை அளிக்கட்டும். 


தமிழே இல்லாமல் தமிழ் எப்படி வாழும் ஜெமோ?

 


புளிச்ச மாவு ஜெயமோகன், நியூயார்க்கில் ஒரு திருவிழா நடத்தி உள்ளார். 


Living Tamil LitFest என்ற பெயரில் அந்த விழாவை அவர் யாருக்காக நடத்தினார்? 

அந்த நிகழ்வின் புகைப்படங்களை அவர் முகநூலில் பகிர்ந்திருந்தார். 

அந்த நிகழ்வின் ஒரு பின் திரையிலும் தமிழ் கொஞ்சம் கூட இல்லை.

ஜெமோ ஆற்றிய உரை கூட தமிழில் இல்லை.

புகைப்படங்களில் உள்ள முகங்களைப் பார்க்கையில் எல்லாம் தமிழ் முகங்கள்தான். 

பிறகு ஏன் தமிழ் அங்கே இல்லை.

வாழும் தமிழ் இலக்கியத் திருவிழா என்று பின் திரையில் சின்னதாக போடக் கூட முடியாதவர்களா தமிழை வாழ வைக்கப் போகிறார்கள்?

தமிழுக்கென்று தனியாக எழுத்துரு (FONT) அவசியமில்லை. ஆங்கிலத்திலேயே THAMIZH EZHUTHU என்றொரு கருத்தை திணிக்க முயன்ற தமிழ்த்துரோகி ஜெயமோகன் என்பதை நாம் எக்காலத்திலும் மறந்து விடக்கூடாது.

பிகு : இந்த நிகழ்வில் ஜெமோ ஒரு அயோக்கியத்தனம் செய்துள்ளார். 

அது நாளை . . .


Sunday, April 5, 2026

மாட்டுக்கறி மட்டும் அவங்களுக்குத்தானாம்

 


அஸ்ஸாமில் அமித்ஷா கொடுத்துள்ள தேர்தல் ஜூம்லா கீழே உள்ளது. ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்போம் என்ற வாக்குறுதியை ஜூம்லா என்று சொன்னது அவர்தானே!



இதை படிக்கையில் மனதில் தோன்றியது  . . .

தேர்தல் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற மாட்டோம்.

அப்படி தப்பித்தவறி யாராவது சிலருக்கு கொடுத்தால் அவர்கள் அந்த மாட்டிலிருந்து பால் வேண்டுமானால் கறந்து கொள்ளலாம்.

ஆனால் மாட்டுக்கறியை அவர்கள் சாப்பிடக்கூடாது. அதை பாஜகவிற்கு தாராளமாக நிதியளிக்கும் மாட்டுக்கறி ஏற்றுமதி கம்பெனிகளுக்கு கொடுத்து விட வேண்டும்.

ஆமாம். அமித்ஜி, மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்களில் பல இஸ்லாமிய பெயர்களில் இருந்தாலும் அவற்றின் உரிமையாளர்கள் பூண்டு, வெங்காயம் கூட சாப்பிடாத ஜெய்ன்கள்தானாமே! 

அது சரி நாய் விற்ற பணம் குரைக்காதல்லவா! 

சாதாரண மனிதர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால்தான் அடித்துக் கொல்வீர்கள்! அதை செல்வந்தர்கள் வெளி நாட்டினர் சாப்பிட ஏற்றுமதி செய்வது பொருளாதார நடவடிக்கை அல்லவா!