Saturday, April 18, 2026

76 லட்ச ரூபாய் தாமோதர்தாஸ் சொத்தா மோடி?

 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசு 76 லட்ச ரூபாய் அளவில் விளம்பரங்கள் கொடுத்துள்ளது என்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.


ஏன் மிஸ்டர் மோடி,

ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு.

இரண்டு முறை தடை செய்யப்பட்ட அமைப்பு.

இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பு.

பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் குரு பீடமாக ஆர்.எஸ்.எஸ் இருக்கலாம். ஆனால் அதற்காக அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன?

தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக முதலாளிகளிடமிருந்து மிரட்டி கொள்ளையடித்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!

பி.எம். கேர்ஸ் என்ற பெயரில் மக்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏமாற்றி சேர்த்து வைத்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!

ஒரு வேளை நீங்கள் கொடுத்த அந்த 76 லட்ச ரூபாய், உங்கள் அப்பா தாமோதர் தாஸ் சம்பாதித்த சொத்துக்களிலிருந்து கொடுத்ததா?

Friday, April 17, 2026

சதி தோற்றது -சுடச்சுட செய்தி சு.வெ யிடமிருந்து

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன், மக்களவையிலிருந்து பகிர்ந்து கொண்ட செய்தி.

இந்திய ஜனநாயகத்திற்கும், தென்னிந்திய மாநில நலன்களுக்கும், தமிழ் நாட்டின் உரிமைக்கும் பா.ஜ.க. உண்டாக்கிய அச்சுறுத்தலை நாடாளுமன்றத்தில் வீழ்த்தினோம்.

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை தற்போது இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையிலேயே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திகிறோம்.

மகளிர் மசோதாவை கெடுத்து விட்டார்கள் என்ற அவதூறை பரப்புவார்கள். அதனையும் முறியடிப்போம்.

எடப்பாடி இழிவுபடுத்தப்படாமல் தடுத்திடுவோம்.


 மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்க்க சிவசேனை கட்சியை உடைக்க ஏக்நாத் ஷிண்டேவை தூண்டி அதற்கான ஊக்கப் பரிசாக அவரை முதலமைச்சராக்கியது.

சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகி ஷிண்டேவை துணை முதல்வராக்கி விட்டார்கள்.

பீகாரில் ஐக்கிய ஜனதாதள் கட்சியின் நிதீஷ்குமாரைத்தான் முதலமைச்சராக்கினார்கள். இப்போது அவரை மாநிலங்களவைக்குத் துரத்தி விட்டு பாஜகவின் கல்வித்தகுதி மோசடி சாம்ராட் சவுத்ரியை முதல்வராக்கி விட்டார்கள்.

நாளை அதிமுக வென்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானால் கூட பின்பு அவரை கழற்றி விட்டு தமிழிசையையோ, ஆட்டுக்காரனையோ, எச்.ராசாவையோ ஏன் கே.டி.ராகவனையோ கூட பாஜக முதல்வராக்கி விட்டு எடப்பாடியை துணை முதல்வராக்கி விடுவார்கள்.

அப்படிப்பட்ட இழி நிலை எடப்பாடிக்கு வரலாமா?

அதை நாம் அனுமதிக்கலாமா?

அதனால்

இப்போதே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (அதிமுக கூட்டணி என்று எடப்பாடிதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபாலகிருஷ்ணன் கிடையாது சப்பாணிதான் என்று பாஜக என்.டி.ஏ என்றே சொல்கிறார்கள்) முற்றிலுமாக தோற்கடிக்க வேண்டும். 

நிர்மலா அம்மையாரின் கணவர் பரகால பிரபாகர் "ஜீரோ பாஜக" என்றொரு முழக்கத்தை கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது 

ஜீரோ என்.டி.ஏ, ஜீரோ பாஜக, ஜீரோ அதிமுக, ஜீரோ பாமக, ஜீரோ தவெக

என்றே அமைய வேண்டும்.

தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்திடுவோம். 

எல்.முருகன் எங்கே அமித்ஷா??????

 


மோடியின் தொகுதி மறுசீரமைப்பு மோசடி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி தோழர் சு.வெங்கடேசன், எப்போதும் போல ஒரு அழுத்தமான உரையை அற்புதமாக நிகழ்த்தியுள்ளார். 

அந்த உரையின் காணொளி கீழே உள்ளது.


வலதுசாரிகள் எப்போதுமே பெண்களை பணயம் வைக்கிறார்கள் என்று திரௌபதியை உதாரணம் காண்பித்ததை ஆளும் கட்சியினராலும் தாங்க முடியவில்லை. அவைத்தலைவர் பொறுப்பில் இருந்தவராலும் முடியவில்லை. முழுமையாக பேசும் முன்பே முடிக்க வைத்து விட்டார்கள்.

ஆவேசமான உரையில் அவர் ஒரு கேள்வி கேட்டார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எல்.முருகன் எங்கே?

தோற்றுப் போவதற்காக ஏன் அவர் பிரச்சாரம் செய்கிறார்?

ஆமாம் மோடி, எல்.முருகன் தோற்றுப் போனாலும் அமைச்சராக தொடர்வாரா? 

Thursday, April 16, 2026

ஆட்டுக்காரன் பேச்சைக் கேட்டால் சொத்து நாசம்

 


வாக்குப் பதிவு இயந்திரத்தின் பட்டம் உடையும் வரை பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டுமாம். இது ஆட்டுக்காரன் உதிர்த்த முத்து.

ஒரு படத்தில் பேருந்தில் எழுதப்பட்டுள்ள "இது உங்கள் சொத்து" என்ற வாசகத்தைக் காண்பித்து அதை விற்க முயற்சிப்பார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்படாவிட்டாலும் அது நம் சொத்து, மக்கள் சொத்து, இந்தியாவின் சொத்து.

அதனால் பாஜகவிற்கு ஓட்டு போட்டு பட்டனை உடைத்தால் நம்முடைய சொத்து நாசமாகும்.

அதனால் பாஜகவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஓட்டு போடாமல் நம்முடைய சொத்துக்களை பாதுகாப்போம்.



ரஜினி&கமல் - பாஜக காப்பி

 


ஸ்டிக்கர் ஒட்டுவது என்ற கலாச்சாரம் சென்னை பெரு மழையின் போது ஏ1 ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தது.

திமுக அரசோ இல்லை வேறு எந்த மாநில அரசோ எந்த ஒரு புதிய மக்கள் நலத் திட்டத்தை அறிமுகம் செய்தாலும் அவர்கள் எங்களைப் பார்த்து காப்பி அடித்து விட்டார்கள், ஸ்டிக்கர் ஒட்டி விட்டார்க்ள் என்று கதை விடுவார்கள், மோடிக்கும், மோடி வகையறாக்களுக்கும் மக்கள் நலன் என்பதற்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது என்றாலும். 

அப்படி மற்றவர்களை ஸ்டிக்கர் பாய்ஸ் என்று சொல்பவர்கள் காப்பி அடித்த கதைதான் இந்த பதிவு.

ரஜினியும் கமலும் மீண்டும் இணையவுள்ள படத்திற்கான ப்ரோமா வீடியோ வைரலான ஒன்று.

அதை அப்படியே காப்பியடித்து கமலஹாசன், ரஜினிகாந்திற்கு பதிலாக பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகளை கொண்டு வந்துள்ளனர்.




மோடி சொல்லும் வளர்ச்சி என்பது இன்னும் வரவில்லை என்பதையும் அதற்கு இன்னும் 21 ஆண்டுகள் ஆகும் என்று தமிழ்நாடு பாஜகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டது.

காப்பி காணொளியை தயாரித்தவர்கள் கொஞ்சம் புத்திசாலிகள். ஒரிஜினலில் வயதான ரஜினி, கமலைப் பார்த்து இளம் பெண்கள், அரைகுறை ஆடைகளோடு மெய்மறந்து பார்ப்பதாக, கொஞ்சம் கேவலமாகவே இருக்கும். காப்பியில் அதை வெட்டி விட்டார்கள். AI யில் தயார் செய்தபோது  அந்த இளம் பெண்களைப் பார்த்து வயதானவர்கள் ஜொள்ளு விடுவது போல அவர்களின் உண்மையான குணாம்சத்திற்கு ஏற்ப வந்திருக்கும் போல! அதனால் வெட்டியிருப்பார்கள். 

ஒரிஜினல் காணொளியில் "யார் ஹீரோ?" என்ற கேள்வி வரும். இங்கே அந்த கேள்விக்கே இடமில்லை. அப்படிப்பட்ட கேள்வி வருமானால் கேட்டவர்களின் பதவி அவ்வளவுதான். 

பிகு: எழுதி ரொம்ப நாளாச்சிதான். இன்று கருப்பு சட்டை அணியும் நாள் அல்லவா! அதனால் அமித்ஷா கருப்பு சட்டை போட்ட படம் உள்ளதால் இன்று பகிர்ந்து விட்டேன். 

Wednesday, April 15, 2026

மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில்

 


"நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க, இன்னிக்கு நீங்களும் என்னை மாதிரியே மாறிட்டீங்க, நான் செஞ்ச தவறிலயே பெரிய தவறு இதுதான்"

உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற ஊரின் முடிவை நிறைவேற்ற குளத்திற்குள் இறங்கும் முன்பு விஜயன் பேசும் வசனம் அது.

மகளிர் இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டுக்கிட்டு இருந்த உங்க எல்லாரையும் இன்னிக்கு மகளிர் இட ஒதுக்கீடு வேண்டாம்னு சொல்ல வச்சுட்யேன். நான் செஞ்சதுலயே மிகப் பெரிய சாதனை இதுதான்.

-இதுதான் மோடியின் மனதில் ஓடும் வசனமாக இருக்கும்.

நாளை மோடி கொண்டு வரப்போகும் மசோதாவால் தொகுதி எண்ணிக்கைகள் எப்படி மாறும் என்பதை கீழே உள்ள பட்டியல் உணர்த்தும். 


இப்போதுள்ள 545 என்ற எண்ணிக்கையின் விகிதத்தின் படி 850 ற்கு உயர்த்தினால் 203 இடங்களை பெற வேண்டிய தென்னிந்திய மாநிலங்கள் 166 இடங்களை பெறுவதும் 313 இடங்களை பெற வேண்டிய இந்தி பேசும் வட மாநிலங்களான உபி,மபி, பீகார், குஜராத், ராஜஸ்தான் 367 இடங்களை பெறும். 

இதை மோசடி என்றழைக்காமல் வேறென்ன சொல்வது?

இதனை கண்டிப்பாக முறியடிக்க வேண்டும். 

காங்கிரஸ் கட்சி என்ன செய்யப் போகிறது? 

அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது
மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன்
தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும்
அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும்
மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும்
மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும்
அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்

மேலே உள்ளது முன்னாள் ப.சிதம்பரம் சொன்னது. இவர் சொல் காங்கிரஸ் அம்பலம் ஏறுமா? பப்பு என்ற குற்றச்சாட்டை நிஜமாக்கிக் கொண்டிருக்கிற ராகுல் காந்தியும் அவரது ஆலோசகர்களான மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், ஜோதிமணி போன்ற பாஜக ஸ்லீப்பர் செல்களும் யோசிக்க விடுவார்களா?

மோடி செய்வது ஜனநாயகக் குற்றம் என்றால் அதை காங்கிரஸ் ஆதரித்தால் அது ஜனநாயகத் துரோகம்.

கடந்த கால அனுபவம் அந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதை காங்கிரஸார்தான் போக்க வேண்டும்.