Friday, April 26, 2024

மோடின்னா பயமா EC???

 


தேர்தல் பிரச்சாரத்தின் போது அநாகரீகமாக, ஆபாசமாக, வெறுப்புப் பேச்சு யாராவது பேசினால் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கும்.

மோடி தொடர்ந்து செய்து வரும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டித்து நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கடிதம் அனுப்பி அழுத்தம் கொடுத்த பின்னர் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் மோடிக்கு அல்ல.

பாஜக தலைவர் பதவியில் உட்கார்ந்திருக்கும் பொம்மை நட்டாவிற்கு.

அதிலும் கூட மோடியின் பெயர் இல்லை. உங்கள் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் என்றுதான் சொல்கிறது கடிதம்.

கட்சித்தலைவருக்கு கடிதம் அனுப்பியது மோடிக்காக மட்டும் இல்லை என்று காண்பிக்க "மோடி பொய் பேசுகிறார்" என்று ராகுல் காந்தி சொன்னதற்கு மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நட்சத்திரப் பேச்சாளர் என்ற மறைப்பு எல்லாம் இல்லை. நேரடியாக ராகுல் காந்தி என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏன்யா தேர்தல் ஆணையர்களா, மோடி என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? அந்தாளு பெயரை சொல்றதுக்கு இப்படி பயப்படறீங்க?

மோடி பொறுக்கி எடுத்து பதவி கொடுத்த விசுவாசமா? எலும்புத்துண்டு போட்டவனுக்கு விசுவாசமா ஏதோ ஒன்னு வாலை ஆட்டுமே, அது மாதிரி . . 

கொண்டையையும் மறைக்கலை, மையையும் மறைக்கல . ..

 


அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்பது சினிமா டயலாக்.

அசிங்கப்பட்டான் ஆட்டுக்காரன் என்பது நிஜம், யதார்த்தம்.

ஆமாம். வாக்குகள் அகற்றப்பட்டது என்று ஆட்டுக்காரன் கட்டி விட்ட கதைக்கு ஒரு பில்ட் அப் கொடுக்க  வாக்குகள் அகற்றப்பட்டவர்கள் என்ற போர்வையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

அதில் காமெடி என்னவென்றால் அத்தனை பேர் கையிலும் ஓட்டு போட்ட மை இருக்கிறது.



ஒரு தாத்தா பாட்டி இருக்கிறார்கள். ஒரு போலியான போராட்டத்தில் கடுமையான வெயில் காலத்திலும் கலந்து கொள்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு மோசமான சங்கிகளாக இருக்க வேண்டும்.

உண்மையில் பெரிய காமெடி எது தெரியுமா?

"நான் உயிரோடு இருக்கிறேன், என் வோட்டு எங்கே?" என்ற அட்டையை பிடித்து நிற்பவர் கையிலும் மை இருப்பதுதான்.

கவுண்டமணி பாணியில் 

"இப்படியெல்லாம் பொய் பேசி அசிங்கப்பட்டுக்கிட்டு நீயெல்லாம் எதுக்குடா உயிரோட இருக்கே?"

இந்த கவுண்டமணி கேள்வி ஆட்டுக்காரனுக்கும் பொருந்துமல்லவா? 


Thursday, April 25, 2024

காரணம் கண்டுபிடித்த ஆட்டுக்காரன்

 


கோடி கோடியாய் கொட்டியிருந்தாலும் மோடியே சாலை சீன் போட்டிருந்தாலும் கோவையில் ஆட்டுக்காரன் வெல்ல வாய்ப்பில்லை.

 அந்த உண்மை ஆட்டுக்காரனுக்கும் புரிந்து விட்டது.

 கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காண்பிக்க, தன் தோல்விக்கு ஆட்டுக்காரன் கண்டுபிடித்த காரணம்தான் ஒரு லட்சம் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர் என்று அடித்து விட்டுள்ள புதிய அளப்பு.

 


இதையெல்லாம் சங்கிகள் நம்புகிறார்களே, அவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

 இதைத்தவிர இன்னொரு கதையும் சுற்றிக் கொண்டிருக்கிறது..

 அது பற்றி மாலையில்

Wednesday, April 24, 2024

மோடியை அனுப்பி வையுங்கள்

 


பாஜக கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

உங்கள் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் பேசும் பேச்சுக்களை கேட்கையில் அவர் மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

அவரை உடனடியாக நல்ல மன நல மருத்துவரிடம் காண்பியுங்கள்.

உங்கள் காலதாமதம் அவரை பாண்டிமடம், குணசீலம், ஏர்வாடி போன்ற இடங்களில் சங்கிலியால் பிணைத்து வைக்கும் அளவிற்குச் செல்லும்.

இல்லையென்றால் மெக்கானிக் முருகன் போல

ஞைஞைஞைஞைஞைஞைஞைஞை 



என்று திரியும் நிலை வரலாம்.

அதனால் அவரை உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். வெயில் வேறு அதிகமாக இருக்கிறது.

Tuesday, April 23, 2024

பாடல் படிக்க வைத்த நூல்

 



 அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள். வாசிப்பை நேசிக்கும் எனக்கு வாழ்த்து சொல்லும் அருகதை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

 சமீபத்தில் படித்த ஒரு நூல் பற்றிய பகிர்வு.

 ஆடு ஜீவிதம்.

 நூல் வாங்கி இரண்டு வருடங்களுக்கு மேலான பின்பும் படிக்காமல் இருந்த நூல்களின் பட்டியலில் இருந்த நூல் இது.

 இதுவே திரைப்படமாக வெளிவரும் முன்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் “பெரியோனோ, என் ரஹ்மானே” என்ற பாடலைக் கேட்டேன். அநேகமாக மீண்டும் மீண்டும் கேட்ட புதிய பாடல் இதுதான். இதற்கு முன்பாக அப்படி கேட்டது பொன்னியின் செல்வன் 2 படத்தின் “வீரா தீரா” பாடல்.

 அந்த பாடலை கேட்டவுடன் பயணப் பையில் இந்நூலை எடுத்து வைத்துக் கொண்டேன்.

 இம்மாத துவக்கத்தில் ஒரு இரண்டு மணி நேர பயணம். சென்ற இடத்தில் ஒரு மூன்று மணி நேரம் காத்திருந்து போன வேலை நடக்காமல் வெட்டியாய் திரும்பி வந்தேன்.

 ஆனாலும்  அந்த பயணத்தை பயனுள்ளதாய் மாற்றியது ஆடு ஜீவிதம்.

 திரைப்படமாக வந்ததால் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் சுருக்கமாக சொல்லியாக வேண்டும்.

 குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்து வளமான வாழ்வு வாழலாம் என்ற நம்பிக்கையோடு சவுதிக்குப் புறப்படுகிறான் நஜீப். அவனுக்கான முதல் அதிர்ச்சி விமான நிலையத்தில் கிடைக்கிறது. ஒரு மோசமான ஓட்டை வாகனத்தில் நாற்றமடிக்கும் உடை அணிந்த ஒருவன் அவனை அழைத்துச் செல்கிறான்.

 எங்கே? எதற்கு?

 பாலைவனத்துக்கு நடுவில் இருக்கிற ஆட்டுத் தொழுவத்திற்கு. ஆடு மேய்க்கும் வேலைக்கு.

 பயிர்கள் இல்லாத பாலைவனத்தில் ஆடுகள் எதை மேயும் என்ற கேள்வி வருகிறதல்லவா?

 ஆடுகளை தொழுவத்திலிருந்து நடக்க வைத்து பின் கூட்டி வருவதுதான் வேலை. அப்படி நடக்காவிட்டால் ஆடுகளுக்கு நோய்கள் வருமென்பதால் அந்த ஏற்பாடு.

 நஜீபோடு இன்னொரு பணியாள். அவனும் அழுக்கான ஆடைகளோடு பார்க்கக் கொடூரமாக இருக்கிறான். சில நாட்கள் கழித்து காணாமல் போகிறான்.

 முகம் கழுவ தண்ணீரை பயன்படுத்தியதெற்கெல்லாம் பெல்ட்டால் அடித்து சாப்பாடு கொடுக்காமல் எஜமானன் செய்யும் சித்திரவதைகளை முதலில் தாங்க முடியாத நஜீபிற்கு பின் அதுவே பழகி விடுகிறது. ஆடுகளை நேசிக்க தொடங்குகிறான். பெயர் வைக்கிறான். அவை வெட்டுக்கூடத்திற்கு செல்லும் போது கலங்குகிறான்.

 வாழ்நாள் முழுதும் பாலைவனத்திலேயே முடிந்து விடுமோ என்று அஞ்சும் நஜீபிற்கு தப்பித்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. பாலைவனத்தில் நடந்து நடந்து நடந்து நடந்து ஒரு வழியாக நகரத்தை வந்தடைகிறான். தாய்நாடு திரும்புவதற்கான வழிமுறையாக தானே கைதாகிறான்.

 தப்பித்துச் சென்ற வேலையாட்களை சிறையில் முதலாளிகள் தேடிப்பிடுத்து மீண்டும் இழுத்துச் செல்வார்கள், குறிப்பிட்ட காலம் வரை யாரும் வராவிட்டால் தூதரகம் மூலம் தாய்நாடு திரும்பி விடலாம். இந்த நாள் கழிந்து விட்டாக் சுதந்திரம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் நஜீபின் கனவுகளை தகர்க்கும் வண்ணம் அன்றுதான் நஜீப்பை  விமான நிலையத்திலிருந்து இழுத்துச் சென்ற மனிதன் வருகிறான். நஜீபின் இதயம் துடிக்கிறது. அவன் கண்டுகொள்ளவில்லை. ஒரு வழியாய் துயரம் முடிந்து போகிறது.

 முன்பின் தெரியாத இடத்தில் சிக்கிக் கொண்டும் தப்பிக்கும் போதும்  பல சித்திரவதைகள் அனுபவித்தாலும் வாழ வேண்டும் என்ற வேட்கை நஜீபிற்கு குறையவே இல்லை.  அந்த வேட்கைத்தான் நஜீபை காப்பாற்றியது. பிரச்சினைகள் எதுவானாலும் நம்பிக்கையோடு எதிர்கொண்டால் அதிலிருந்து வெளி வர முடியும் என்பதுதான் நூல் சொல்லும் செய்தி. முக்கியமான செய்தி.

 ஒரு உண்மை நிகழ்வை பென் யாமின் நாவலாக கொடுத்துள்ளார். விலாசினி ரமணி நூலின் உணர்வுகளை படிப்பவர்கள் நெஞ்சு படபக்கும் படி தமிழாக்கம் செய்துள்ளார். இருவருக்கும் பாராட்டுக்கள். ஒரு நிமிடம் கூட சலிப்பு வராமல் நூலின் நடை உள்ளது. அதனால்தான் பயணம் வெட்டியாக முடிந்தாலும் எரிச்சல் இல்லாமல் நேரம் கழிந்தது.

 நூல் படித்து கிடைத்த உணர்வை இழக்க விரும்பாததால் திரைப்படத்திற்குச் செல்லவில்லை.

பிகு : 

பாடலையும் கேட்டு விடுங்களேன்.



மோடியின் "படுத்தே விட்டானய்யா" மொமெண்ட்

 


தன்னைப் போல ஒரு கேவலமான, அற்பத்தனமான, கேடு கெட்ட ஜந்துவை உலகம் பார்த்திருக்க முடியாது என்பதை ஒவ்வொரு நாளும் நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது பிரதமர் என்ற பெயரில் இந்தியாவுக்கு நிகழ்ந்த துரதிர்ஷ்ட விபத்து.

நேற்று முன் தினம் கான்பூரில் பேசுகையில் 

"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியைக் கூட பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள்" 

என்று அயோக்கியத்தனமாக பேசிய அதே ஜந்து

நேற்று அலிகாரில் பேசுகையில்

"அதிகமான எண்ணிக்கையில் முஸ்லீம்கள் ஹஜ் போக நாந்தான் சவுதி இளவரசரோடு பேசினேன். ஆண் துணை இல்லாமல் பெண்களும் தனியாக போக வழி செய்தேன், முத்தலாக்கை ஒழித்து முஸ்லீம் பெண்களின் ஆசியைப் பெற்றேன் (இவரால் தள்ளி வைக்கப்பட்டு வாழ்விழந்த யஷோதா பென் நினைவுக்கு வருகிறார்)"

என்றெல்லாம்  பேசி விட்டு போயுள்ளார்.



இதனால் இந்த ஜந்து திருந்தி விட்டதா என்றெல்லாம் சிந்திக்காதீர். எந்த அடிப்படை அறமும் இல்லாமல் பதவிக்காக எந்த அளவும் கீழிறங்கும் தரங்கெட்ட ஜந்து.

"படுத்தே விட்டானய்யா" மொமெண்ட் நேற்று. 

இன்று எங்கே என்ன விஷத்தை கக்குகிறது என்பது மாலைக்குள் தெரிந்து விடும்.


Monday, April 22, 2024

மோடியின் பேச்சு அயோக்கியத்தனமாது.

 


தோல்வி பயம் மோடிக்கு வந்து விட்டது.

 முதல் முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்.

 புல்வாமாவில் எல்லைப் பாதுகாப்புப்ப்டை வீரர்கள் கொல்லப்படுவதை அனுமதித்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார்.

 இனி பொய்களையும் அள்ளி விட முடியாது. ராணுவ வீரர்களையும் சாகடிக்க முடியாது.

 அதனால் மோடி கையிலெடுத்திருப்பது மத வெறிப் பேச்சு.

 “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  நாட்டு மக்களுடைய செல்வத்தை எல்லாம் பிடுங்கி  இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள்”

 காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பேசினார்கள், தேர்தல் அறிக்கையில் உள்ளது என்று அவர் சொல்லும் விஷயங்களுக்கு அவரிடம் எந்த தரவுகளோ, ஆதாரங்களோ கிடையாது.

 வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார். ஆனால் அது ஆபத்தானது. பிளவு படுத்தும் நோக்கமுடையது. ஒற்றுமையை குலைக்கக் கூடியது. வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை  உருவாக்கக்கூடியது. வெறுப்பை விதைக்கும் விஷம். மொத்தத்தில் அயோக்கியத்தனமானது.

 இந்த அயோக்கியத்தனமான பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் போதாது. மோடியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மோடியால் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் அதை செய்ய மாட்டார்கள். அதனால் மக்கள்தான் மோஈடியை முறியடிக்க வேண்டும்.