Friday, July 26, 2024

முட்டாள்களே நம்புவார்கள்

 


மன்னராட்சியின்  அடையாளமான செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மைய மண்டபத்தின் மையப் பகுதியில் எழுந்தருள வைத்து விட்டு


குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள இந்த ஆடம்பர அரங்கின் பெயரை "தர்பார் ஹால்" என்பதிலிருந்து "ஜன தந்திரிக் மண்டப்" என்று பெயர் மாற்றியதற்கு "மன்னராட்சியின் அடையாளமாக தர்பார் என்ற பெயர் இருப்பதுதான் காரணம் என்று சங்கி அரசு சொல்வதௌ முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்.


"அசோகா ஹால்"  என்ற இந்த அரங்கின் பெயரை "அசோகா மண்டப்" என்று மாற்றியதன் மூலம் மன்னராட்சி, மக்களாட்சி என்பதெல்லாம் உடாப்ஸ், இந்தித் திணிப்புக்கு இப்படி குடியரசு முலாம் பூசி விட்டார்கள் என்பது நன்றாக புரிகிறது.  

எத்தனை சிறுத்தைகளைத்தான் கொல்வீர்கள்?

 


போன வருடம் மோடி பிறந்த நாளுக்காக நமீபியாவிலிருந்து 12 சிறுத்தைகளை வரவைத்து அவர் அவற்றை மத்தியப் பிரதேச காட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

அவற்றில் எட்டு சிறுத்தைகள் இறந்து விட்டது. இவற்றுக்கு பிறந்த மூன்று குட்டிகளும் இறந்து விட்டது.

என்ன காரணம்?

ஆப்பிரிக்க் சிறுத்தைகளுக்கு இந்திய தட்ப வெப்ப சூழல் ஒத்து வரவில்லை.

சரி, இப்போ என்ன?

அடுத்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து இன்னும் 12 சிறுத்தைகளை கொண்டு வந்து குஜராத் காட்டுக்குள் விடப் போகிறார்களாம்.

ஒரு முறை பட்டும் அறிவில்லாமல் அதே தவறை மறுபடியும் செய்வது முட்டாள்தனம். முட்டாளின் ஆட்சியில் புத்திசாலித்தனமாக எதுவும் நடக்காது. இந்த முட்டாள்தனத்தால் சிறுத்தைகள் கொல்லப்படும் என்பதுதான் கொடுமை. 

Thursday, July 25, 2024

"பக்கா"வா? "பக்கோடா"வா? - சுவெ

 




*நாளொரு கேள்வி: 24.07.2024*


தொடர் எண் : *1516*

இன்று நம்மோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் *சு வெங்கடேசன்*
##########################

*"பக்கா" வேலை எவ்வளவு?* *"பக்கோடா வேலை" எவ்வளவு?*

கேள்வி: நாலு கோடி வேலை, பதினோரு லட்சம் கோடி ஆதாரத் தொழில் வளர்ச்சி என்றெல்லாம் பட்ஜெட்டில் ஆரவார அறிவிப்புகள் உள்ளனவே! 

*சு.வெங்கடேசன்*

* பட்ஜெட்டில் ஆரவாரமான அறிவிப்புகள். ஆனால் எங்கே இருந்து நிதி ஆதாரங்கள் என்பதே கேள்வி! உலகம் முழுவதும் செல்வ வரி, வாரிசுரிமை வரி, கார்ப்பரேட் வரி உயர்வுகள் பற்றிய விவாதம். ஆனால் இந்திய பட்ஜெட்டில் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுகிற கார்ப்பரேட் வரி 40% லிருந்து 35 % ஆகக் குறைப்பு. தேசியம் பேசுகிற அரசாங்கத்தின் அளவற்ற அன்னிய பாசம்.

* விவசாயிகளுக்கு விளைச்சல் செலவினத்தை விட 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு என நிதி அமைச்சர் அறிவிப்பு. மறைந்த விவசாய அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்த C 2 + 50 % ஆ அரசால் தரப்படுகிறதா? பதினோராவது ஆண்டாக ஆட்சியில் தொடர்கிற நீங்கள் இப்போதும் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்து போகிறீர்களே இது ஏமாற்று அல்லவா!

* 4 கோடி வேலை வாய்ப்பு என்று அதிரடியாய் அறிவிப்பு. 2014இல் 10 கோடி என்று அறிவித்த அதிரடி என்ன ஆனது! உங்கள் அதிரடி அறிவிப்பு எல்லாம் இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்பில் பேரிடியாக மாறியது தானே அனுபவம்!உங்கள் 4 கோடி அறிவிப்பில் "பக்கா" வேலை எவ்வளவு? "பக்கோடா வேலை" l எவ்வளவு?

* இந்திய வளர்ச்சி "பளிச்சிடும் முன்னுதாரணம்" என்று தங்களுக்கு தானே பாராட்டி கொள்ளும் அரசே! உலகின் அதிகமான ஏற்றத் தாழ்வு கொண்ட தேசம் இந்தியாதான் என்ற சாதனையே உங்கள் வளர்ச்சியின் குணம் என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே! வளர்ச்சி யாருக்கு... பில்லியனர்களுக்கா? ஏழை, நடுத்தர மக்களுக்கா?

* 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு. இந்த 500 பெரிய நிறுவனங்களில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது? ஆண்டு வாரியாக எவ்வளவு வேலை வாய்ப்புகள் உயர்ந்தன? டாப் 100 நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உயரவே இல்லை என தொழிலதிபர் சுனில் பாரதி மிட்டல் கூறினாரே! அந்த நிலைமை மாறிவிட்டதா?இன்டர்ன்ஷிப் பெறுபவர்கள் அங்கே வேலைவாய்ப்பு பெறுவார்களா? இல்லை அவர்களின் வேலையை மலிவான ஊதியத்திற்கு வாங்குகிற ஏற்பாடா?

* பீகார் ஆந்திரா சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு... 10 ஆண்டுகளாக எவ்வளவு புறக்கணித்தீர்கள் என்பதன் ஒப்புதலா?உங்கள் அரசை இழுக்கும் இரட்டை என்ஜின்களை கழட்டி விடும் வரை இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளிவருமோ!

* தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே! நிதியமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் இல்லையே!

* ஆதார தொழில் வளர்ச்சிக்காக மூலதன செலவு 11 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் அறிவிப்பு. ஆதார தொழில் வளர்ச்சிக்கு அமுத சுரபியாக உள்ள எல்.ஐ.சி யை பலப்படுத்துவோம் என்று அறிவிக்க வேண்டாமா?எல்.ஐ.சியின் பங்கு விற்பனையை தொடர மாட்டோம் என்று அறிவிக்க வேண்டாமா? இல்லையெனில் ஆதார தொழில் வளர்ச்சிக்கு எங்கே இருந்து வரும் பணம்!

*செவ்வானம்*

Wednesday, July 24, 2024

சங்கிகள் இல்லை, அமைதியாய் கடந்த யாத்திரை

 


ஹரியானாவில் பிரிஜ் மண்டல் யாத்திரை என்ற பக்தர்களின் யாத்திரை கடந்தாண்டு நடைபெற்ற போது "நூ" என்ற ஊரில் கலவரம் வெடித்து எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது எழுதிய ஹரியானா கலவர அரசியல் என்ற பதிவை இணைப்பின் மூலமாக படியுங்கள்

அதே யாத்திரை இந்த வருடம் "நூ" வைக் கடந்தது. அப்போது இஸ்லாமிய மக்கள், பக்தர்களை வரவேற்று குளிர் நீர் கொடுத்து ரோஜா இதழ்களை தூவி வரவேற்றனர்.

எங்கள் கிராமத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை பல்லாண்டுகளாக கட்டுக்கோப்பாக உள்ளது. வெளியாட்களினால் கடந்த ஆண்டு கலவரம் வெடித்து எங்கள் ஊருக்கே களங்கம் ஏற்பட்டு விட்டது. அதனால் இந்துக்களும் முஸ்லீம்களும் பேசி இந்த வருடம் வரவேற்பு கொடுப்பது என்றும் எந்த வெளியாளையும் அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்தோம் என்று கிராமத்தினர் மகிழ்ச்சியோடு சொல்கின்றனர்.

சங்கிகளை அகற்றினால் அமைதி நிச்சயம் என்று நிரூபித்த "நூ" மக்களுக்கு பாராட்டுக்கள் . . .


Tuesday, July 23, 2024

காவடி யாத்திரையில் கலவரத்துக்கு விதையா?

 



வட இந்தியாவில் கான்வர் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. நம்ம ஊர் காவடி போலத்தான் அதுவும்.

கங்கை நதி நீரை முக்கியமான தளங்களிலிருந்து காவடியில் உள்ள பானைகளில் சேகரித்து அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊரில் உள்ள சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்வார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மாதம் நடக்கும் இந்த யாத்திரை செல்லும் வழியில் உள்ள உணவகங்கள், கடைகளில் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில்  முதலாளிகளின் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று மொட்டைச் சாமியார் உத்தரவு போட்டுள்ளார்.

என்ன காரணம்?

இஸ்லாமியர்கள் தங்கள் கடைகளுக்கு பொதுவான பெயர்கள் வைக்கிறார்களாம். அப்படி இருக்கிற இஸ்லாமியர்களின் கடைகளில் சாப்பிட்டு யாத்திரை செல்பவர்களின் புனிதம் கெட்டு விடுமாம். இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க நினைக்கும் சில்லறை புத்தி இது.

இது மட்டுமா நோக்கமாக இருக்கும்?

மக்களவைத் தேர்தலில் வாங்கிய அடியை சட்டப்பேரவை தேர்தலில் சரி செய்ய இந்துக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி விடும் ஆபத்தான சதி இது.

இன்னும் கூட ஒரு காரணம் இருக்கும் என்று அனுமானிக்கிறேன்.

உணர்வுகளை தூண்டி விடுவது கலவரத்தை உருவாக்கவே! முசாபர்நகர் கலவரத்தை நடத்தித்தான் மொட்டைச்சாமியார் ஆட்சிக்கு வந்தார். இப்போது இன்னொரு கலவரம் அந்த கிரிமினல் சாமியாருக்கு தேவைப்படுகிறது. கடைகளில் பெயர்ப்பலகைகளில் இஸ்லாமியர்களின் பெயர் இருந்தால் அவர்களை தாக்குவது சுலபமாக இருக்கும் என்பதுவும் இந்த அறிவிப்பின் பின்னணியில் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.

உத்திரப்பிரதேச மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. . .

 பிகு: அயோக்கியத்தனமான உத்தரவை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது ஒரு நல்ல செய்தி

Monday, July 22, 2024

சேதி நிசமா ஆட்டுக்காரா?

 


உங்களுக்கு பொழுது போகவில்லையா? ரொம்பவே டல்லா இருக்கீங்களா? 

சமீபத்தில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட  கல்யாண்ராமன் மற்றும் திருச்சி சூர்யாவின் ட்விட்டர் பக்கத்திற்கு செல்லுங்கள்.

ஆட்டுக்காரன் மீது தொடர்ச்சியாக வெடிகுண்டுகள் வீசிக் கொண்டே இருப்பார்கள். அதிர வைக்கும் எந்த குற்றச்சாட்டிற்கும் ஆட்டுக்காரனோ, அல்லக்கைகளோ வாய் திறந்ததே கிடையாது.

இந்த வெடிகுண்டை பாருங்கள்


இதற்காவது ஆட்டுக்காரனோ, அல்லக்கைகளோ வாய் திறக்கும் வாய்ப்பு உண்டா?

Sunday, July 21, 2024

"நீட்" மோசடி நிரூபணமானது . . .

 


நீட் தேர்வு என்பது பயிற்சி மையங்களுக்கு கொட்டிக் கொடுக்க வசதியுள்ள பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கான தேர்வு என்பதைக் கடந்து மோசடியான வழிகளில் தேர்வாக லட்சங்களை கொடுக்கும் வல்லமை உடையவர்களுக்கான தேர்வு என்பதுதான் இப்போதைய யதார்த்தம்.

 உச்ச நீதிமன்றம் தேர்வு மையங்களின் அடிப்படையிலான முடிவுகளை வெளியிடச் சொல்லி உத்தரவிட அத்தகவல் மோசடியை நிரூபித்துள்ளது.

 அதிக மதிப்பெண் எடுத்தவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள்   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் என்ற சின்னஞ்சிறு ஊரிலிருந்துதான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதே போல மஹாராஷ்டிரா, குஜராத், பீகார், உ.பி ஆகிய மாநிலங்களில் உள்ள சில குறிப்பிட்ட மையங்களின் மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள்.  கேள்வித்தாள்கள் கசிவும் அங்கெல்லாம் நடந்துள்ளது. விபரங்கள் இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் உள்ளது.

 இப்படி மோசடிகளின் மொத்த வடிவமாக உள்ள “நீட்” தேர்வு இனியும் வேண்டுமா?

 தமிழ்நாட்டுடன் இந்திய மக்கள் அனைவரும் இணைந்து உரக்க குரல் கொடுக்க வேண்டும். . .

 BAN NEET