நேற்றைய பதிவில் சொன்னது போல தமிழ் இலக்கிய உலகில் பெரிய ரத்தக்களறி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தால் இந்த சர்ச்சை பின்னுக்குப் போகும்.
வைரமுத்து ஞானபீடம் பெறுவதை நான் கேலிச்ச்சிரிப்புடன் பார்க்கிறேன். அதற்கான காரணங்கள்.
பல வருடங்களாக முயற்சி செய்து வாங்கப்பட்ட விருது.
இந்த விருது பெறுவதற்கான முயற்சிகளில் ஒன்றாக தருண் விஜய் என்ற பெரிய சங்கிக்கு தமிழ்நாட்டில் ரத்தினக் கம்பளம் விரித்து இறுதியில் திருவள்ளுவரின் சிலையை கறுப்பு ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஹரித்வாரின் ஒரு சாக்கடை ஓரத்தில் கிடத்திய இழிவுக்கு காரணம் வைரமுத்து.
அவர் மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்கள். (அவர் மோசமாக நடந்து கொண்ட பின்னும் எதற்கு திருமணத்திற்கு அழைத்து காலில் விழ வேண்டும் என்ற கேள்வி சின்மயியைப் பார்த்து கேட்கப்படும்,) ஆனால் மற்றவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள்?
ஜெயகாந்தன் கடைசியாக எழுதியது என்னை பாராட்டித்தான் என்றொரு நாடகம் போட அந்த கதையை ஜெயகாந்தனின் மகள் தோழர் தீபலட்சுமியே தகர்த்தெறிந்தார்.
அவரது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. வியர்வையின் பெருமையை போற்றி எழுதுபவர் இவர். ஒரு தொலைக்காட்சி கேமரா உதவியாளரின் நெற்றி வியர்வையில் ஒரு சொட்டு இவரது சட்டையில் மைக் பொருத்துகையில் சிந்திய காரணத்தால் அவரை கன்னத்தில் அடித்து விட்டு தன் கையை டெட்டால் போட்டு கழுவிய சம்பவத்தை பல்லாண்டுகள் முன்பே பதிவு செய்துள்ளேன்.
"நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல " என்று நிர்மலா அம்மையாரை வர்ணித்ததை எல்லாம் மறந்து விட முடியவில்லை.
நான் எதிர்பார்த்தது போல மிகக் கடுமையான கண்டன இயக்கத்தை முன்னெடுத்துள்ளது புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகன்தான்.
அவரது கண்டனத்தை அப்படியே பகிர்ந்து உங்களை கொடுமை செய்ய நான் ஒன்றும் இரக்கமில்லாத கொடூரன் அல்ல.
அவரின் வெறுப்பின் பின்னணி என்பதை அவரது குண்டர் படை தளபதி போதைக்கவி லச்சூவின் பதிவு சொல்கிறது.
ஜெயமோகனின் அல்லக்கையே அவரை அற்பன் என்று விளிக்கும் நேரத்தில் ஜெமோ தன் பதிவில் தன்னை பாஜக, ஆர்.எஸ்.எஸ் அதிகார வட்டங்களுக்கு எதிரானவன் என்று சித்தரித்துக் கொள்ளும் சீன் மூலம் நம்மை சிரிக்கை வைத்து, அவரது கண்டனம், திராட்சை கிட்டா நரியின் புலம்பல் என்று அவரே நிரூபித்து விடுகிறார்.
அநேகமாக ஜெயமோகனுக்கு ஏதாவது பெரிய விருது கொடுங்கய்யா, புக்கர் விருது, மாகஸேசே விருது இப்படி ஏதாவது, இல்லையென்றால் அவரது புலம்பல் காதைகளிலிருந்து தமிழ்நாடு தப்ப முடியாது.


















