Showing posts with label டுபாக்கூர். Show all posts
Showing posts with label டுபாக்கூர். Show all posts

Wednesday, February 25, 2026

கல்கோட்டியா நாய் ரோபோ - வட போச்சே மோடி

 


சீனாவிலிருந்து இறக்குமதி செய்த நாய் ரோபோவை தங்களுடைய திறன் மையம் உருவாக்கியது என்ற டுபாக்கூர் பீற்றல் அம்பலப்பட்டு அசிங்கப் படாமல் போயிருந்தால் ????

இது என் கற்பனை . . .

ஏஐ மாநாட்டின் இறுதி நாளன்று கல்கோட்டியா பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை கொடுத்திருப்பார்கள்.

எங்கள் ஓரியான் நாய் ரோபோவை கண்டு பிடித்த விஞ்ஞானி யார் தெரியுமா? 

"பனிரெண்டாம் வகுப்பு படிக்கையிலேயே ரோபோவை உருவாக்கிய பிரதம மந்திரிதான் இந்த ரோபோவையும் வடிவமைத்தார்"

அரங்கம் எப்படி அதிர்ந்திருக்கும்!

சங்கிகள் எப்படியெல்லாம் கூச்சலிட்டிருப்பார்கள்!

அது மட்டுமா?

மோடியின் கண்டுபிடிப்புக்கள் என்று எவ்வளவு பெரிய பட்டியல் வந்திருக்கும்?



எந்திரன் சிட்டியைக் கூட அவர்தான் தயாரித்தார் என்று ஷங்கரைக் கூட சொல்ல வைத்திருக்கலாம்.

டுபாக்கூர் பல்கலைக்கழகம் மாட்டிக் கொண்டதால்

மோடி பாவம்! 

வட போச்சே !!!!

Monday, February 3, 2025

சிகண்டி - மோடி - டுபாக்கூர்- முடியல

 


நேற்று மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி சங்கியுடன் நடத்திய உரையாடல் கீழே . . .

மோடியைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லவும் என்று அந்த சிகண்டி கேட்டதற்கு அளித்த பதிலில் தொடங்கியது உரையாடல்.





Monday, July 31, 2023

15 லட்சம் – இதற்கென்ன விளக்கம்?

 


   

ஒன்பதாண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வெற்றி பெற டிமோ சொன்ன ஏராளமான பொய்களில் முக்கியமான பொய் “கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவேன்: என்பதுதான்.

 டிமோ ஒரு பொய்யன், மோசடிப் பேர்வழி, ஃப்ராடு பார்ட்டி என்பதற்கான சான்றுகளில் இந்த வாக்குறுதியும் ஒரு சான்று.

 15 லட்சத்துக்கு இப்போது ஆட்டுக்காரன், வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோர் வினோதமான விளக்கங்களை கொடுத்து வருகின்றனர். 15 லட்ச ரூபாய் எங்கே என்று முன்பு கேட்ட ட்வீட்டை அழிக்க குஷ்பு மறந்து விட்டார் என்பது வேறு கதை.

 


“இந்தியர்கள் வெளி நாடுகளில் ஏராளமான கோடி ரூபாய் கருப்புப் பணத்தை பதுக்கி   வைத்துள்ளார்கள். அதையெல்லாம் நாம் மீட்பேன். அந்த தொகை ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தும் அளவிற்கான தொகை” என்றுதான் சொன்னார். எவ்வளவு ரூபாய் கருப்புப் பணம் வெளி நாட்டில் உள்ளது என்பதை சுலபமாக புரிய வைக்கவே அப்படி சொன்னாரே தவிர வங்கிக் கணக்கில் போடுவேன் என்று இவர்கள்  முட்டு கொடுத்துளார்கள்.

 

இவர்களிடம் என் முதல் கேள்வி

 

15 லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவேன் என்று சொன்னதெல்லாம் “தேர்தல் காலத்து ஜும்லா”  என்று அமித் ஷாவும்

 


தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று நம்பியதால் நிறைவேற்ற வாய்ப்பில்லாத இந்த வாக்குறுதியை அளித்தோம் என்று மந்திரி நிதின் கட்காரியும்

 

சொன்னதற்கு என்ன அர்த்தம்?

 

இரண்டாவது கேள்வி

 

வங்கியில் செலுத்துவதென்பது ஒரு புறம் இருக்கட்டும்.

 

வெளி நாடுகளில் இருந்து எத்தனை ரூபாய் கருப்புப் பணத்தை மீட்டுள்ளார்? 

 

பிகு: ரொம்ப நாள் முன்னாடி எழுதி ட்ராப்டிலேயே இருந்தது.

Thursday, July 27, 2023

ஒரிஜினலும் டுபாக்கூரும்

 

தோழர் கருப்பு அன்பரசன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து சுட்டது.



இந்த மனிதன் வாழ்க்கையில் ஒரு நொடியாவது நேர்மையாக நடந்திருக்க வாய்ப்புண்டா?