Showing posts with label வரி. Show all posts
Showing posts with label வரி. Show all posts

Saturday, February 7, 2026

ஏலம் போகுது A1 மாளிகை

 


மேலே உள்ள மாளிகை யாருடையது தெரியுமா?

கீழே உள்ள படத்தை பாருங்கள்

இப்போது தெரிந்ததா?

ஆம்.

A1 ஆட்சி செய்த சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் மாளிகைதான் அது.

ஜெ இறந்த பிறகு அந்த மாளிகை அவரது அண்ணன் மகன், மகள் ஆன தீபக், தீபா ஆகியோர் வசம் சென்றது.

1991-92 நிதியாண்டு தொடங்கி 2006-2007 நிதியாண்டு வரை கட்ட வேண்டிய வருமான வரி, 1992-93 நிதியாண்டு தொடங்கி 2015-2016 வரை கட்ட வேண்டிய சொத்து வரி ஆகியவற்றின் பாக்கி, அதற்கான அபராத வட்டி எல்லாமுமாக சேர்த்து 13.69 கோடி கட்ட வேண்டும்.

சொத்துக்களின் வாரிசுகளான தீபக்கையும் தீபாவையும் கட்டச் சொன்னார்கள்.

ஆளுக்கு பாதியாக பிரிக்க வேண்டும், தவணை முறையில் கட்ட வேண்டும் என்று தீபக் நீதிமன்றம் செல்ல, தீர்ப்பும் அப்படியே வந்தது.

தான் கட்ட வேண்டிய தொகையில் இரண்டு தவனைகளோடு தீபக் நிறுத்திக் கொள்ள, தீபாவோ ஒரு பைசா கூட கட்டவில்லை.

அதனால் நீதிமன்ற அனுமதியோடு போயஸ் கார்டன் மாளிகையை ஏலம் போடப் போகிறார்கள்.

ஜெ அதிகாரம் செய்த இடம், ஊழல் செய்து வாங்கிய நகைகள் முதற்கொண்டு செருப்புகள் வரை அடுக்கி வைத்திருந்த இடம். வெள்ளத்தில் சென்னை மிதக்கும் நிலை  வந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த இடம். ரஜினிகாந்தை நடந்து போகச் சொன்ன இடம்.

"ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள் போன கதை தெரியுமா?" என்று ஒரு சூர்யா பாட்டு உண்டு.

அதில் ஒரு கதை தான் ஜெ வின் கதை.

இப்போது ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி வகையறாக்களும் விஜய் வகையறாக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவம். 



Thursday, March 27, 2025

பைக், விஸ்கி இப்போ பேட்டரி . . .

 


சாம்சங்கிற்கு சுங்க வரி மோசடிக்காக 5000 கோடி அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக நேற்று எழுதினேன். அது அமலாகுமா என்ற ஐயத்தையும் தெரிவித்திருந்தேன்.

ஏன்?

அபராத செய்தி வந்த அதே நாள் நிர்மலா அம்மையார் தயாள குணத்தோடு அறிவித்த சலுகைகள் பற்றிய அறிவிப்பும் வந்திருந்தது.

மோடி அமெரிக்கா செல்லும் முன்பு ட்ரம்பிற்கான பரிசாக "ஹார்லி டேவிட்சன்" பைக்கிற்கும் போர்பன் விஸ்கிக்கும் (இந்த போர்பன் விஸ்கி குறித்து சமீபத்தில் கேட்ட ஒரு தகவலை தனி பதிவாக எழுதுகிறேன்)  இறக்குமதி வரியை குறைத்தார்.

ட்ரம்பிற்கு இதெல்லாம் திருப்தியளிக்கவில்லை.

அதனால்  எலக்ட்ரிக்  வாகனத்திற்கான பேட்டரி, மொபைல் பேட்டரி ஆகையவை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் உட்பட 35 பொருட்களின் சுங்க வரியை குறைத்துள்ளார் நிர்மலா அம்மையார். அவர் நேற்று முன் தினம் அறிவித்தார். நாளை அமெரிக்காவிலிருந்து ஒரு குழு சுங்கவரி குறித்து விவாதிக்க வருகிறது. அம்மையார் அறிவிப்பிற்கும் அமெரிக்க குழு வருவதற்கும் சம்பந்தமில்லையாம்.

35 பொருட்களின் சுங்க வரியை குறைத்த நிர்மலா அம்மையார், சாம்சங்கும் அம்பானியும் அபராதம் கட்ட விடுவாரா? எந்த பொருட்களை இறக்குமதி செய்ததில் பிரச்சினையோ அவற்றுக்கான சுங்கவரியை முன் தேதியிட்டு அகற்றி விட மாட்டாரா!

அப்படி செய்தால் என்ன செய்யும் சுங்கத் துறை?

அப்படி நடக்காது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?