Showing posts with label பாசம். Show all posts
Showing posts with label பாசம். Show all posts

Tuesday, February 26, 2013

நீங்களும் நிச்சயம் ..... நெகிழ்ந்து போவீர்கள்

முக நூலில் பார்த்தது.

என்னை நெகிழ வைத்தது.
அதனால் உங்களுடைய பார்வைக்கும்.

நன்றி திரு ஷாகுல் ஹமீது.


செல்ல பிராணிகள் விற்பனை செய்யும் கடை ஒன்று..
அங்கே நாய்க்குட்டிகள் பிரிவில் ஒரு சிறுவன் விற்பனையாளரை நோக்கி கேட்டான்..
"அந்த நாய்க்குட்டி எத்தனை ரூபாய்...?"
அந்த விற்பனையாளர்... "இங்கே எந்த நாய்க்குட்டியை எடுத்தாலும் 500 ருபாய் தான்.." என்றார்...
இடது பக்கம் ஒரு காலை இழந்த நொண்டி நாய்க்குட்டி ஒன்று
விளையாடிக்கொண்டு இருந்தது...சிறுவன் அந்த நாய்க்குட்டியை
கையில் எடுத்து முத்தமிட்டான்...

"இது..?" என்றான்..
"இது ஒரு காலை இழந்த நாய்க்குட்டி..
எனவே இது விற்பனைக்கு இல்லை... " என்றார் விற்பனையாளர்...

சிறுவன்... "ஐயா நான் இதையே எடுத்து கொள்கிறேன்...
இந்தாருங்கள் 500 ரூபாய்.." என்றான்..

விற்பனையாளர் சந்தேகம் கேட்டார்...
"தம்பி நல்ல நிலையில் பல நாய்குட்டிகள் இங்கே
விளையாடிக்கொண்டிருக்க...நீ இந்த நொண்டி நாய்க்குட்டியை
ஏன் தேர்ந்தெடுத்தாய்...?" என்று கேட்டார்..

உடனே சிறுவன் பதில் ஏதும் பேசாமல் தன் கால் சட்டையை
தூக்கி காட்டினான்..
ஒரு கால் மரக்கட்டையால் செய்யப்பட்டு
ஊனமாக இருந்தான் சிறுவன்...
விற்பனையாளர் கண்ணில் கண்ணீர்...