அலெண்டாவும் சிவந்த சிலியும்
லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் மீண்டும் இடதுசாரி ஆட்சி அமைந்துள்ளது. தோழர் டேனியல் போரிக் புதிய ஜனாதிபதியாகிறார்.
சிலி முதல் முறையாக இடது திசை வழியில் செல்லவில்லை.
இதற்கு முன்பே 1970 ல் சோஷலிஸ்ட் கட்சியின் சால்வடார் ஆலண்டே தேர்தலில் வெற்றி பெற்று சிலியின் ஜனாதிபதியானார்.
அவர் அங்கே சோஷலிச ஆட்சி முறையைக் கொண்டு வந்தார். அமெரிக்க கம்பெனிகள் இயற்கை வளங்களை கொள்ளையடித்ததை தடுத்து நிறுத்தினார். மக்கள் சார்ந்த திட்டங்களை அமலாக்கினார். அனைவருக்கு கல்வி என்பதை நோக்கி பயணித்தார்.
இது பொறுக்குமா அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு?
சி.ஐ.ஏ களமிறங்கியது. 1973 ல் கலவரத்தைத் தூண்டியது. ஆட்சியைக் கவிழ்த்தது. ஆலண்டேவை சரணடையச் சொன்னது. அதிபர் இல்லம் சுற்றி வளைக்கப்படுகிறது. ஆலண்டே கொல்லப்படுகிறார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள். அவராக சுட்டுக் கொண்டாரா இல்லை அமெரிக்கா சுட்டுக் கொன்றதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
தோழர் ஃபிடல் கேஸ்ட்ரோவை கொல்ல நடைபெற்ற பல முயற்சிகள் தோற்றுப் போனாலும் அமெரிக்கா வெற்றிகரமாக நடத்திய முதல் அரசியல் படுகொலை சால்வடார் ஆலண்டேவுடையதுதான்.
அதற்குப் பிறகுதான் அமெரிக்கா
பனாமா கால்வாயைக் கைப்பற்ற பனாமா அதிபர் டோரிஜாஸ்,
இரானின் எண்ணெய் வளத்தை சுரண்ட மொகமது
மொசாதக்
என்ற அரசியல் படுகொலை கணக்குகளை தொடர்ந்தது.