Sunday, August 30, 2020

என்னத்த சொல்ல? சங்கி . . .

 


மேலே உள்ள மீமை சில நாட்கள் முன்பாகத்தான் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இப்போது இச்செய்தியை வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

தாலித்திருடனின் கதை!


கோவையில் நேற்று தாலியறுத்தல், கொள்ளை சம்பவத்தில் கைதாகியுள்ள சரவணக்குமார் எனும் நபர் ஆர்.எஸ்.எஸ் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றிவருகிறான்.


இவனின் தந்தை அரசாங்க போக்குவரத்தில் ஊழியராக பணியாற்றியிருக்கிறார். நடுத்தரக்குடும்பத்தைச்சார்ந்த இவனை B.E வரை கடினப்பட்டு படிக்கவைத்திருக்கிறார் அவர் தந்தை!


B.E படித்த முடித்த உடன், இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் இங்கிலாந்தில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேருகிறான்.


அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கோவைக்கு திரும்பி, அவன் அப்பாவிடம் 16 லட்சம் ரூபாய் பெற்று, காரமடை பகுதிக்குட்பட்ட வெள்ளியங்காடு என்ற இடத்தில் 56 பசுமாடுகளை கொண்டு ஒரு மாட்டுப்பண்ணை அமைத்திருக்கிறான்.


மோடி அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட நெருக்கடிகளினால் அதில் 16 பசுமாடுகள் இறந்ததால் நஷ்டத்தில் சிக்கியுள்ளான்.


சங்கீகளின் அரசின் தவறான பொருளாதார கொள்கை சங்கீகளையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்துள்ளது என்பதுதான் மோடி அரசின் 6 ஆண்டு சாதனைகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை!


மோடி அரசின் ஊரடங்கு நிலையால் பாதிக்கப்பட்ட இவன், அந்த நட்டத்தை சரிசெய்ய, மக்கள் பணத்தையும், உடமையையும் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளான்.


இந்த நிலையில், காரமடை பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்தி மற்றும் அரிவாள் காட்டி மிரட்டி நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்துவந்துள்ளான்.


கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனிதா என்ற இளம்பெண்ணை தாக்கி 9 சவரன் நகை கொள்ளையடித்துள்ளான். இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறைக்கு, இவனின் கொள்ளை சம்பவம் தெரிய வந்திருக்கிறது.


இவன் தலைமையிலான கும்பல், சிறுமுகை பகுதியில் பர்னீச்சர் கடையில் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துள்ளது.


இவன் தலைமையிலான கூட்டத்தில் 5 பேரை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள். பலரை தேடி வருகிறார்கள்.


இவன் 17/06/2017 அன்று கோவை மாவட்ட மார்க்ஸிஸ்ட் கட்சி அலுவலத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் கைது செய்யப்பட்டு, வழக்கில் பிணையில் வந்துள்ளான்.


மார்க்ஸிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இவனை "தேசபக்தன்" என ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கொண்டாடின. அவனுக்கு நேரடியாக ஆதரவு அளித்தன.


இப்போது, இந்த திருடனுக்கு கண்டனமும் தெரிவிக்காமல், அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதிக்காக்கின்றன. இது அந்த அமைப்புகளின் வழக்கமான ஒன்றுதான்.


யோக்கியன்களுக்கு சங்கபரிவார அமைப்புகளில் எந்த தொடர்பும் இருக்காது என்பது சமீபத்தில் பாஜகவில் இணைந்த கல்வெட்டு ரவி(57 வழக்கு), அறம் ராஜா(46 வழக்கு), அபின் கடத்திய அடைக்கலராஜ் ஆகியோரும், இந்த கொள்ளைக்கும்பல் உள்ள பாஜகவில் தன்னையும் ஐக்கியப்படுத்திக்கொண்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையும் வாழும் உதாரணங்கள்.


பெரிய சங்கீகள் பதவியில் அமர்ந்துகொண்டு, நாட்டை கொள்ளையடிப்பதும், பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பதுமாக செய்துவரும் நிலையில், அவர்களின் அடிமை சங்கீகள், நாட்டு மக்களிடம் திருடியும், கொள்ளையடித்தும் மக்களை ஏய்த்துப்பிழைக்கிறார்கள்






இச்செய்தியை முன்னாள் ஐ.பி.எஸ் ஸிற்கு டேக் செய்தார். ரோஷக்கார போலீஸ் உடனே எதிர்வினையாற்றி விட்டார். நீக்கி விட்டார். 

தாலித் திருடனை அல்ல. தோழர் பிரதாபனின் பதிவை. 

என்னத்த சொல்ல?

சங்கி . . .

No comments:

Post a Comment