Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Wednesday, May 13, 2026

பயம் பிடிச்சிருக்கு விஜய்

 


நீங்கள் கட்சி ஆரம்பித்த பிறகு இந்த டெம்ப்ளேட்டை எந்த பதிவிற்கும் பயன்படுத்தவேயில்லை. உங்களுக்கே அது பயன்படும் என்றும் எதிர்பார்க்கவில்லை.

உங்கள் ஆட்சியின் அபத்தமான ஜோசியர் பணி நியமன முடிவை நீங்கள் வெற்றிகரமாக திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளீர்கள்.

எதிர்க்கட்சிகளின், மக்களின் கடுமையாக எதிர்ப்பிற்கு நீங்கள் பயப்பட்டது நிஜமாகவே பிடித்துள்ளது.

எதிர்காலத்திலும் இந்த பயம் உங்களுடனேயே இருக்கட்டும். 

Tuesday, May 12, 2026

உண்ணி கிருஷ்ண பணிக்கரும் ஜெ வும் உயிருடன் இருந்திருந்தால்?

 


இன்று விஜய் செய்துள்ள ஒரு பணி நியமனம் ஒரு கேலிக்கூத்து.  கேவலமானது.  தேவையில்லாத ஆணி.


ஏ1 ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் "எனக்கு ஏன் இப்படி ஒரு அரசுப் பணி தரவில்லை?" என்று உண்ணிகிருஷ்ண பணிக்கர் கேட்டிருப்பார் இல்லையா! எனக்கு இது தோன்றாமல் போய் விட்டதே என்று ஜெயலலிதா கூட யோசித்திருப்பார் அல்லவா!

நல்லா நடக்குது மதச்சார்பற்ற அரசு!

மூன்றாவது நாளிலேயே இப்படி என்றால் போகப் போக ????

அச்சமாய் இருக்கிறது. 

Sunday, May 10, 2026

ரெவியின் சிரிப்புச்சத்தம் கேட்கிறதா?

 

ஆரெஸெஸ் ரெவி ஆட்டுத்தாடியாக இருந்த போது சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும், பிறகுதான் தமிழ்த்தாய் வாழ்த்து என்று அடம் பிடிக்க, நிகழ்வின் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவில்தான் தேசிய கீதம் என்ற தமிழ்நாட்டின் மரபைத்தான் பின்பற்றுவோம் என திமுக அரசு உறுதியாக நிற்க, அது கடுமையான சர்ச்சையாக மாறியது.

இன்று புதிய முதல்வர் பதவியேற்பில் 

முதலில் வந்தே மாதரம்,
இரண்டாவதாக தேசிய கீதம்
கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து.

மேற்கு வங்க தேர்தலுக்காக வங்க மக்களை உசுப்பேற்ற மோடி கையில் எடுத்ததுதான் வந்தே மாதரம்.

அந்த அரசியலை அப்போதே மக்களவையில் தோழர் சு.வெங்கடேசன் பேசினார். அந்த அற்புதமான உரையை 


எந்த மேற்கு வங்க மக்களை ஏமாற்ற வந்தே மாதரப் பாடலை தூசி தட்டி எடுத்தார்களோ, அதே மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்படவில்லை. இத்தனைக்கும் அங்கே ரெவிதான் ஆளுனர்.

ஆனால் தமிழ்நாட்டிலோ நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே வந்தே மாதரமும் தேசிய கீதமும் பாடப்படுகிறது.

ஆரெஸெஸ் ரெவி தமிழ்நாட்டைப் பார்த்து நக்கலாக சிரிக்கும் சத்தம் உங்களுக்கும் கேட்கிறதா? 

பாஜகவின் அஜெண்டா, பாஜக ஆதரவு தெரிவிக்காத அரசால் அமலாக்கப் படுகிறது. இது தொடக்கம்தான். இன்னும் தொடரும் மோசமாக. 

Wednesday, May 6, 2026

அப்போதே ஒழிந்து போயிருக்கலாமே ராகுல்

 


இந்திய அரசியல் எத்தனையோ கேவலமான காட்சிகளை பார்த்துள்ளது. புதிதாக பார்த்த கேவலம் காங்கிரஸ் கட்சி, தவெக கூட்டணிக்கு தாவியது.

திமுக கூட்டணியில் பல வருடங்கள் இடம் பெற்று, அக்கூட்டணியின் பலத்தால் மக்களவையில் எம்.பி, க்களை பெற்றீர்கள். உங்கள் கட்சித் தலைவர்களே உங்களை பிரதமர் வேட்பாளர் என்று கருத தயாராக இல்லாத போது மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இந்த சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற உங்களுக்கு ஏனோ விருப்பமில்லை.  குரங்கு குட்டியை வைத்து ஆழம் பார்த்தது போல உங்கள் நண்பர் மாணிக்கம் தாகூரை  கலகம் செய்ய வைத்தீர்கள். மேலிடச் சில்லறைகள் பிரவீண் மற்றும் கோவா டுபாக்கூரை வைத்து சீன் போட்டீர்கள்.

ஆட்சியதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் சொன்னதால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்தீர்கள். 

கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலிருந்தும் உங்கள் கட்சி துடைக்கப்பட்டு விட்டது. கர்னாடகத்தில் நடக்கும் கோஷ்டி மோதலால் அடுத்த தேர்தலில் ஆட்சியை பறி கொடுப்பீர்கள்.

பாஜகவுடன் வைத்துக் கொண்டுள்ள கள்ள உறவால் கேரளாவில் ஜெயித்துள்ளீர்கள். முதலமைச்சர் போட்டியே உங்களை வீழ்த்தும்.

இப்படிப்பட்ட நிலைமை உள்ள போது உங்கள் வலிமைக்கு மீறி சீட்டுக்களை கேட்டீர்கள், அதிலே வெற்றியும் பெற்றும் 28 சீட்டுக்களை பெற்றீர்கள். கூட்டணி இல்லாமல் உங்கள் கட்சியால் அந்த ஐந்து எம்.எல்.ஏ க்களை பெற்றிருக்க மாட்டீர்கள். 

கூட்டணியின் தயவால் பெற்ற அந்த ஐந்து எம்.எல்.ஏ க்களை இப்போது விஜய்க்கு கை மாற்றிக் கொடுப்பது மிகவும் கேவலம். கொஞ்சம் கூட நெறிமுறையற்ற செயல்.

தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைத்த மையை அவர்களின் முகத்தில் பூசியுள்ளீர்கள். அவர்கள் அளித்த வாக்குக்கு எதிராக செயல்பட்டுள்ளீர்கள். 

ஒன்றும் தெரியாத பப்பு என்று உங்களை சொல்வார்கள். நீங்கள் பப்பு அல்ல, அமித்ஷா போல ஆபத்தான கிரிமினல்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களை இப்போது விஜய்யிடம் விற்பதற்கு பதிலாக அப்போதே கூட்டணியை விட்டு வெளியேறி விஜய் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கலாம். 

அப்படி செய்திருந்தால் முடிவுகளே கூட மாறி இருக்கலாம்.

உங்களை தமிழ்நாடு இனி துரோகி என்றே பார்க்கும்.

இந்த ஆடம்பரத்துக்கெல்லாம் ஜெ பாணி நடவடிக்கைதான் சரி


 என்னைப் போன்ற வயதானவர்களுக்கு ஒரு விஷயம் நினைவிருக்கலாம். ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தமைக்காக திரையுலகம் ஒரு பாராட்டு விழா நடந்தது. அதிலே கமலஹாசன், ரஜினிகாந்த், பாரதிராஜா, பாக்யராஜ் ஆகிய நான்கு  பேர் சேர்ந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய ரோஜா மாலையை அணிவிப்பார்கள். ஆளுயுர மாலை எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு அப்போதுதான் முதல் முறையாக பார்த்தது.

நேற்று வேலூரில் ஒரு காட்சியை பார்த்தேன். வேலூர் க்ரீன் சர்க்கிள் அருகிள் தவெகவினர் நின்று விசில் ஊதிக் கொண்டிருந்தனர். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். புல்டோசரில் ஒரு பிரம்மாண்ட மாலையை தூக்கி வைத்திருந்தார்கள்.

யாருக்கு போடுவதற்காக அந்த மாலையோ?

வேலூரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ விற்காகக் கூட இருக்கலாம். 

வழக்கமாக ஆளுயுர மாலை எப்படி இருக்குமோ, அது போல நான்கைந்து மடங்கு பெரிதாக இருக்கும். அந்த மாலையை  யானைக்கு போட்டால்  அதன் கழுத்து எலும்பே உடைந்து விடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

யானையே தாங்காது எனும் போது மனிதனால் ஒரு நொடி கூட அந்த மாலையை போட்டுக் கொள்ள முடியாது. எம்.எல்.ஏ ஆக இருந்தால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல்தானா?

யாருக்கும் பயனில்லாத அந்த பிரம்மாண்டமான மாலை எல்லாம் அவசியமா?

வெட்டி ஆடம்பரம் மட்டுமே!

இது போன்ற ஆடம்பரங்கள் செய்பவர்களை டீல் செய்ய ஜெயலலிதா பாணிதான் சரியாக இருக்கும்.

அது என்ன என்று கேட்கிறீர்களா?

அய்யாறு வாண்டையார் என்ற தஞ்சாவூர் நிலப்பிரபுத்துவ குடும்ப வாரிசு. பாரம்பரிய காங்கிரஸ்காரர் அதிமுகவிற்கு தாவுகிறார். திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.  ஜெயலலிதா அவரை இந்து அறநிலையத்துறை அமைச்சராக்குகிறார். அந்த பதவி ஒரு வாரம் கூட தாங்கவில்லை. 

தூக்கப்பட்டார்.

ஏன்?

அமைச்சராக பதவியேற்ற பின் அவர் சொந்த ஊருக்குச் செல்கிறார். தஞ்சை ரயிலடியிலிருந்து அவரது கிராமத்துக்கு செல்லும் வழியில் பண்ணையார்த்தனமான வரவேற்பு. குதிரைகள் பூட்டிய தேரில் அவர் உட்கார, அனைத்து வகை ஆட்டக் கலைகளோடு ஊர்வலம் நிதானமாக ஊர்ந்து செல்கிறது. தகவல் ஏ1 காதிற்கு செல்ல, அய்யாறு வாண்டையார் வீட்டிற்குச் செல்லும் முன்னே அவரது பதவி பறிக்கப்பட்டு விட்டது.

அப்படியென்றால் ஜெ ஆடம்பரத்தை விரும்பாதவர் என்று சொல்கிறீர்களா என்று கேட்கிறீர்களா?

நோ, நெவர்.

வளர்ப்பு மகன் திருமணத்தை மறக்க முடியுமா?

ஜெயலலிதா பயங்கர ஈகோ பிடித்தவர். தன் கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் ஆடம்பர சீன் போடுவதை அவர் விரும்ப மாட்டார்.

அவ்வளவுதான் . . .

Wednesday, April 29, 2026

இதுவும் திமுக சதிதானே விஜய்?

 


சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சி.சி.டிவி மையம் அமைத்துள்ள ஒப்பந்ததாரரின் பதிவை முகநூலில் யாரோ பகிர்ந்திருந்தார்கள்.


இது மிகப் பெரிய விதி மீறலாயிற்றே! கைது கூட செய்வார்களே என்று நினைத்தேன்.

கைது செய்யப்பட்டு விட்டார் என்று இன்றைய நாளிதழ் செய்தி சொன்னது. பார்க்கும் பணியின் தீவிரத்தன்மை கூட புரியாமல் அதன் விளைவுகளைப் பற்றிக் கூட கவலைப்படாதவர்களாகத்தான் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்த சம்பவம்.

இந்த கைதைக் கூட விஜய்யும் அவர் கட்சி தொண்டர்களும் "என்ன ஸ்டாலின் சார் பயமா? வாக்கு எண்ணும் மையத்திலிருந்து என் கட்சிக்காரரை வெளியே அனுப்ப சதி செய்யறீங்களா?" என்று வீர வஜனம் பேசுவார்களே என்பதுதான் என் கவலை.

Wednesday, April 22, 2026

விஜய் ரசிகர்கள் -திருத்தப்பட வேண்டியவர்கள்

 


கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்.


என்ன?

மிகவும் எரிச்சலாக இருக்கிறதா?

இவர்களையெல்லாம் போட்டு வெளுக்க வேண்டுமென்று கோபம் வருகிறதா?

ஆம்.

எனக்கும் அப்படித்தான் வந்தது.

ஆனால்

அது அவர்களின் குற்றமா?

அவர்களை உரிய முறையில் நெறிப்படுத்தாத அந்த கட்சித் தலைமையின் குற்றம்.

41 உயிர்கள் பறி போவதற்கு தன் சோம்பேறித்தனமும் தேவையின்றி செய்த தாமதமும்தான் காரணம் என்பதைப் பற்றிய குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாத விஜய், ஆணவமும் பொறுக்கித்தனமுமே குணாம்சமாக கொண்ட ஆதவ் அர்ஜுனா, சுயநலமே வடிவான புஸ்ஸி ஆனந்த், இந்த மடம் இல்லையென்றால் அடுத்த மடம் என்று தாவும் வாச்சாத்தி குற்ற பிரபலம் செங்கோட்டையன் இன்னும் பல உதிரித்தலைவர்கள் ஆகியோரைப் பார்த்து வளரும் இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்!

விஜய்யின் பொறுப்பற்ற திரைப்பட வசன பாணி பேச்சுக்களைத்தைத்தான் அரசியல் என்று கருதிக் கொள்பவர்களும் அது போலத்தானே இருப்பார்கள்!

இவர்கள் எதிர்பார்ப்பது போல விஜய் நிச்சயமாக பெரிய வெற்றி எல்லாம் பெற்று முதலமைச்சர் எல்லாம் ஆகப் போவதில்லை.

அப்படிப்பட்ட சூழலில் இவர்களின் மன நிலை என்ன ஆகும்? இவர்கள் எப்படியெல்லாம் செயல்படுவார்கள் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

தற்குறிகள், பைத்தியங்கள் என்று ஒதுக்கித் தள்ளிப் போவதை விட இவர்களோடு பேசுவதும் உண்மைகளை உணர வைப்பது, சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதுமே முக்கியமான பணியாகும்.

அந்த பணியை செய்யும் தார்மீகத் தகுதி இடதுசாரிகளுக்கு மட்டுமே இருக்கிறது.

அவர்களால் மட்டுமே இது சாத்தியம்.

Tuesday, April 21, 2026

ஆஸ்பிடல் சீனையாவது காப்பியடிக்க வேண்டாம் விஜய்

 


ஊடகவியலாளர் தோழர் கவின்மலர் அவர்களின் முகநூல் பதிவும் அவர் பகிர்ந்த புகைப்படங்களும் கீழே உள்ளது.

பவன் கல்யாண் என்னென்னவெல்லாம் செய்தாரோ அவற்றை எல்லாம் ஜெராக்ஸ் எடுத்ததுபோல செய்து வந்தார் விஜய். பவன் கல்யாண் பரப்புரையில் எடுத்த படங்கள் வீடியோக்களையும் விஜய் பரப்புரையில் நடந்தவற்றையும் ஒப்பிட்டு நிறைய பேர் ஆதாரங்களோடு எழுதிவிட்டார்க்கள்.




1) கூலிங் கிளாஸ்
2) இளநீர்
3) கூல் ட்ரிங்க்ஸ் கேட்ச்
4) வில் அம்பு
5) சைக்கிள்
6) புதுமண ஜோடிக்கு பிரசார வாகவனத்தில் ஆசி
7) சிறுவனை தோளில் தூக்குதல்
விடுபட்டவை இருக்கலாம்.
இதுவரை விஜய் செய்யாதது ஒன்று மிச்சமுள்ளது. பவன்கல்யாண் தேர்தலுக்கு முன் உடல்நலக்குறைவு எனச் சொல்லி மருத்துவமனையில் சேர்ந்தார். Series of incidents பார்க்கையில் இதுவும் நடந்தாலும் ஆச்சரியமில்லை.

நடந்தாலும் நடக்கலாம் என்று ஒருவர் அதற்கான பின்னூட்டத்தில் ஒரு புகைப்பட மாதிரியை பகிர்ந்திருந்தார். அதை நான் பகிர்ந்து கொள்ளவில்லை.

தோழர் கவின்மலர் பதிவில் விடுபட்ட விஷயம் ஒன்று உண்டு.

அதுதான் சர்ச்சில் போட்ட சீன்



ஐயா விஜய், இது நாள் வரை காப்பியடித்தது போது. குறைந்த பட்சம் ஆஸ்பிட்டல் சீனை மட்டுமாவது காப்பியடிக்காமல் இருக்கவும்.

இது உங்கள் மீதான அக்கறை எல்லாம் ஒன்றுமில்லை. தெலுங்கு படங்களை காப்பியடித்துத்தான் உங்களுடைய நிறைய படங்கள் அமைந்திருந்தது.

தமிழ்நாட்டு அரசியல்வாதி, ஆந்திரா அரசியல்வாதியை காப்பி அடித்து அரசியல் சீன் போட்டார் என்று தமிழ்நாட்டுக்கு அவப்பெயர் வரக்கூடாது என்ற அக்கறைதான்.

Monday, April 20, 2026

சபாஷ் விஜய், சரியான வேட்பாளர்

 


விஜய்க்கு பாராட்டுக்கள். மிகச் சிறப்பான வேட்பாளரை சென்னை துறைமுகம் தொகுதியில் நிறுத்தியுள்ளார்.

அப்படியென்ன சிறப்பு?

நீங்களே காணொளியை பாருங்கள்.



மக்கள் இவரையெல்லாம் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பினால் டாஸ்மாக் பார் காட்சிகளை சட்ட சபையிலேயே அன்றாடம் பார்க்கலாம்.

பிகு: மற்ற கட்சி வேட்பாளர்கள் மிகவும் யோக்கியமா என்றெல்லாம் யாரும் அனாமதேயமாக வந்து பின்னூட்டமிட வேண்டும். இது போன்ற மோசமானவர்கள், கம்யூனிஸ்டு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். (தவறிழைப்பவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் நடவடிக்கை எடுத்து நீக்கி விடும்) ஆனால் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ்வளவு மோசமாக யாரும் நடந்து கொண்டதில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் கௌதம் கம்பீர் கூட ஒரு டூப்பைத்தான் தனக்கு பதிலாக ஜீப்பில் நிற்க வைத்தாரே தவிர, வழக்கமான மோசமான மிரட்டல் மொழியில் பேசவில்லை.

Sunday, April 12, 2026

பிரகாஷ்ராஜ் சீனை கிறுக்குத்தனமாய் காப்பியடித்த விஜய்

 


"கோ" திரைப்படத்தில் ஒரு காட்சியில் காரில் வரும் முதலமைச்சர் பிரகாஷ்ராஜ், பேட்டியெடுக்கும் கார்த்திகாவிடம் கடுப்படித்தபடி சாலையில் இறங்கி நடக்கத் தொடங்குவார். மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் உருவாகும். "என் கெத்தை பாத்தியா, மக்கள் மத்தியில எனக்கு இருக்கிற மரியாதையை கவனிச்சியா" என்ற படி மீண்டும் காரில் உட்கார்ந்து கொள்வார்.

அது திரைப்படக் காட்சி.

அந்த காட்சியை இன்று காப்பியடித்தார் தமிழக ரத்துக் கழகத்தின் தலைவர் விஜய்.

திடீரென (முன் கூட்டியே திட்டமிட்ட படி) சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து விட்டார்.


கேரவனில் போனாலே பின்னால் தொடரும் மூட ரசிகர்கள் கூட்டம் சைக்கிளில் போனால் சும்மா விடுமா?

விபத்துக்களும் நெரிசல் மரணங்களும் நடப்பதற்கான வாய்ப்புக்கள் தோன்றினாலும் அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை.

சினிமா சீன் போல கிறுக்குத்தனம் செய்த விஜயின் சைக்கிள் பயணம், அவரது தற்குறிகளில் ஒருவர் பட்டாசு கொளுத்துப் போக அவர் பயந்து போய் கேரவனில் ஏற நிறைவுக்கு வந்தது.

துரதிர்ஷ்டவசமாக ஏதாவது நடந்திருந்தால் தன் கிறுக்குத்தனத்தை மூடி மறைக்க திமுக மீது பழி போட்டிருப்பார் விஜய். 

தமிழ்நாட்டு அரசியலின் துயரம் விஜய்

விஜய் கட்சியின் பெயர் இனி . . .

 தனியாக விளக்கம் அவசியமில்லை. படமே போதும் . . .



Tuesday, April 7, 2026

மம்தா அண்ணன் மகன் செஞ்சதுதான் விஜய்

 


தன்னைப் போன்ற உருவச்சிலைகளை செய்து அவற்றை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுதான் விஜய் இன்று கொடுத்துள்ள கண்டெண்ட்.


எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ க்கள் வரிசையாக நிற்பது போல விஜய் சிலைகள் நிற்பதைப் பார்த்தால் காமெடியாகத்தான் இருக்கிறது.


ஆனால் இது ரொம்பவே பழைய டெக்னிக்.

2019 மக்களவைத் தேர்தலின் போதே மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி கடைபிடித்த டெக்னிக்தான். 

அப்போது எழுதிய பதிவு உங்கள் தகவலுக்காக.

Monday, April 29, 2019

பிரச்சாரத்துக்கே இப்படி! ஜெயிச்சா எப்படி?



அபிஷேக் பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர். டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடும் இவர் மம்தா பானர்ஜியின் சொந்தக் காரரும் கூட.

பிரச்சாரத்தில் வெயிலில் அலைய முடியவில்லை என்பதற்காக அவருடைய சிலை ஒன்றை ப்ளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்து, அந்த சிலையை ஜீப்பில் வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

பிரச்சாரத்தின் போது ஓட்டு கேட்பதற்காகக் கூட மக்களை சந்திக்க வராத இந்த சொகுசுப் பேர்வழி எல்லாம் ஜெயிச்சால் மட்டும் என்ன பிரயோஜனம்?

அந்த தொகுதி மக்களுக்கு இதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு சொரணை இருக்குமா?

விஜய் அவருடைய லெவலுக்கு இன்னும் புதுமையாய் ஏதாவது யோசித்திருக்கலாம்.

பிகு: அதே 2019 தேர்தலின் போது டெல்லியில் ஒரு வேட்பாளர், அவருக்கு பதிலாக டூப் ஒருவரை வேனில் நிற்க வைத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அது டூப்பெல்லாம் இல்லை, நான் ஜீப்பிற்குள் ஓய்வு எடுத்த போது அவர் சும்மா மேலே நின்று வாக்காளர்களைப் பார்த்து சும்மா வேட்பாளர் போல சும்மா கை காட்டினார் என்று அந்த ஒரிஜினல் வேட்பாளர் சமாளித்தார். 

அவர் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சங்கி கௌதம் கம்பீர் . . . .

Wednesday, April 1, 2026

தவெக தற்குறிகளும் காக்கா பிரியாணியும்

 


தங்களை தற்குறிகள் என்று அழைத்தால் தவெகவினர் வருத்தப்படுகிறார்களாம்.  

கீழேயுள்ள பதிவுகளை பாருங்களேன்


ஒரு வாக்காளரால் இரண்டு தொகுதிகளில் வாக்களிக்க முடியாது என்றும் அப்படி வாக்களித்தால் அது கள்ள ஓட்டாக மட்டுமே இருக்க முடியும் என்பது கூட தெரியாமல், திருவல்லிக்கேனி-சேப்பாக்கம் என்பது ஒரே தொகுதி என்ற விஷயமும் கூட தெரியாமல் பதிவெழுதுகிற ஒரு ஆளை தற்குறி என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்! 

சரி கவுண்டம்பாளையம் விஜயகுமாருக்கு வாக்கு எங்கே இருக்கிறது? கவுண்டம்பாளையத்திலா? பெரம்பூரிலா அல்லது திருச்சியிலா?

அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இருந்தால் மோடி,அமித்ஷா வகையறாக்கள் நடத்திய SIR கூட வெறும் ஜும்லாதானா? 



Monday, March 30, 2026

சினிமா காமெடியை நிஜமாக்கிய விஜய்

 


கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் டெல்லி கணேஷ், தன் மனைவி, மகன், மகள் ஆகியோருக்காக செலவு செய்த தொகையை கணக்கு எழுதி அதை சொல்லி குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார். தான் செலவு செய்த பணத்தை மகனின் கல்யாணத்திற்கு வரதட்சணையாக வசூல் செய்ய துடிப்பார். சமைத்துப் போட்டதற்கான பணத்தை கழித்துக் கொண்டு மீதத் தொகையை கொடுத்து விட்டு அம்மா வீட்டிற்குப் போகச் சொல்லி மிரட்டுவார்.

இது திரைப்படக் காட்சி.

அதை தவெக தற்குறிகளின் தலைவன் விஜய் நிஜமாக்கி விட்டார்.

ஆமாம், அவர் இன்று தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் மனைவி, மகன், மகள் மட்டுமல்ல அப்பா, அம்மாவிற்குக் கூட கடன் கொடுத்ததாக கணக்கு காண்பித்துள்ளார்.


விஜய் தினம் ஒரு கண்டெண்ட் கொடுப்பார் என்பது நிச்சயம். சார் நான் மத்த விஷயங்களும் எழுதனும், அதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டெண்ட் கொடுங்க, போதும்.

Sunday, March 29, 2026

காமெடிக்கு அவங்க கியாரண்டி

 


தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. விறுவிறுப்பான காட்சிகள், திருப்பு முனைக் காட்சிகள், கண்ணீர் ததும்பும் செண்டிமெண்ட் காட்சிகள் மட்டுமல்ல காமெடிக் காட்சிகளும் நிறைந்ததாக மட்டும் தேர்தல் இருக்கப் போவதில்லை. காமெடி காட்சிகளும் நிறையவே இருக்கப் போகிறது. அப்படிப் பட்ட காமெடி காட்சிகளை வழங்குவதில் முக்கிய பாத்திரம் விஜய்க்கும் அவரது தவெக தற்குறிகளுக்கும்தான் இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் மேலே உள்ள படம். 

Thursday, March 19, 2026

தவெக தொண்டர்களும் செந்தில் காமெடியும்

 


தற்போது தவெகவில் வாயை விற்றுக் கொண்டிருக்கிற நாஞ்சில் சம்பத் (ஆமாம், இங்கே இன்னோவா கார் கொடுத்தாங்களா?) தவெக தொண்டர்களின் செயல்திறன் (!) பற்றி வர்ணித்ததை படித்ததும் "நட்புக்காக" படத்தில் மலையை தூக்குவேன் என்று சொல்லி வசூல் செய்து பின்பு என் கையில் தூக்கி வையுங்கள், தூக்குவேன் என்று சொல்லி அடி வாங்குவார். அப்படி அடி வாங்குபவரை காப்பாற்றுகிற சாமியர் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொல்லும் வசனம்தான் நினைவுக்க்கு வந்தது. 


இதைக் கேட்டு உசுப்பேறி தவெக தற்குறிகள் மின்னலை பிடிக்க உலகம் சுற்றும் வாலிபன் முருகன் போல முயற்சித்தோ, மின்சார வயரைப் பிடித்தோ கருகிப் போகக்கூடாது என்பதுதான் என் விருப்பம். 

Sunday, March 8, 2026

"ஒர்த்" தெரியுமா விஜய்?

 தன் மனைவியை "ஒர்த் இல்லை" என்று சொன்ன தற்குறி விஜய்க்கு மகளிரின் "ஒர்த்" என்ன என்று எங்கள் தென் மண்டல கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் கே.சுவாமிநாதன் எடுத்த வகுப்பு கீழே . . .



Tuesday, February 24, 2026

சிந்துபைரவி பென்ஷன் காமெடியும் தவெக தற்குறிகளும்

 


சிந்துபைரவி திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியை முதலில் பாருங்கள்.


மத்தியரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ள எட்டாவது ஊதியக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளில் (TERMS OF REFERENCE) என்பதில் ஓய்வூதியங்களை மாற்றி அமைப்பது என்பது இடம் பெறவில்லை. அதனை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய தர்ணாவில் வேலூரில் நான் பங்கேற்றேன். தர்ணாவை நிறைவு செய்து பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

அப்போது நான் இந்த திரைப்படக் காட்சியை குறிப்பிட்டு நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படத்தில் பென்ஷனை நிறுத்துவது என்ற கருத்து நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ அதனை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு மோசமானவர்கள் என்று பேசினேன்.

நேற்று வேறொரு காணொளியைக் கண்டேன்.

அது எங்கள் வேலூரில் சொல்லப்பட்டது என்பது ஒரு பெரிய கொடுமை.

அந்த கொடுமையை நீங்களும் பாருங்கள்.


தப்பித் தவறி, ஒரு மோசமான விபத்தாக இந்தக் கூட்டம் ஆட்சிக்கு வருமானால்  வயதானவர்களின் வாக்குரிமையை மட்டுமல்ல உயிர் வாழும் உரிமையைக் கூட பறித்து விடும் போல . . .

இப்படிப்பட்ட மோசமான புரிதல் காரணமாகத்தான் விஜய்யையும் அவர் கூட்டத்தையும் தற்குறிகள் என்று சொல்கிறோம். தாங்கள் ஏன் தற்குறிகளாக இருக்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத தற்குறிகள் அவர்கள். 

Sunday, February 15, 2026

அடடே! இதுதான் தலைமைப்பண்பா விஜய் 😆😆😆😆


தவெக உறுப்பினர்களை தற்குறிகள் என்று சொல்வது மிகவும் சரி என்பதை கீழேயுள்ள காணொளி உணர்த்தும்.


நல்லா டான்ஸ் ஆடுவதுதான் தலைமைப் பண்பு என்றால் தமிழ்நாட்டில் தலைமைப் பண்பு கொண்டவர்கள் நிறைய பேற் இருக்கிறார்கள் அல்லவா! திரைத்துறையிலேயே விஜய்யை விட பிரபு தேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் கூடுதல் தலைமைப் பண்பு கொண்டவர்கள். பாவம் கே.பாக்கியராஜிற்குத்தான் தலைமைப் பண்பே கிடையாது அல்லவா 😜

விஜய் நன்றாக நடனமாடக்கூடிய ஒருவர் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். .  பிகில், மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களில் பாடல்கள் இல்லாமல் வெறும் இசைக்கு மட்டும் விஜய் ஆடிய நடனங்களை ஒப்பிட்டால் இந்த காணொளியில் மேடையில் ஆடும் நடனம் ரொம்பவே சுமார்தான். விஜயின் தலைமைப் பண்பு குறைந்து வருகிறது போல . . .

Saturday, February 7, 2026

ஏலம் போகுது A1 மாளிகை

 


மேலே உள்ள மாளிகை யாருடையது தெரியுமா?

கீழே உள்ள படத்தை பாருங்கள்

இப்போது தெரிந்ததா?

ஆம்.

A1 ஆட்சி செய்த சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் மாளிகைதான் அது.

ஜெ இறந்த பிறகு அந்த மாளிகை அவரது அண்ணன் மகன், மகள் ஆன தீபக், தீபா ஆகியோர் வசம் சென்றது.

1991-92 நிதியாண்டு தொடங்கி 2006-2007 நிதியாண்டு வரை கட்ட வேண்டிய வருமான வரி, 1992-93 நிதியாண்டு தொடங்கி 2015-2016 வரை கட்ட வேண்டிய சொத்து வரி ஆகியவற்றின் பாக்கி, அதற்கான அபராத வட்டி எல்லாமுமாக சேர்த்து 13.69 கோடி கட்ட வேண்டும்.

சொத்துக்களின் வாரிசுகளான தீபக்கையும் தீபாவையும் கட்டச் சொன்னார்கள்.

ஆளுக்கு பாதியாக பிரிக்க வேண்டும், தவணை முறையில் கட்ட வேண்டும் என்று தீபக் நீதிமன்றம் செல்ல, தீர்ப்பும் அப்படியே வந்தது.

தான் கட்ட வேண்டிய தொகையில் இரண்டு தவனைகளோடு தீபக் நிறுத்திக் கொள்ள, தீபாவோ ஒரு பைசா கூட கட்டவில்லை.

அதனால் நீதிமன்ற அனுமதியோடு போயஸ் கார்டன் மாளிகையை ஏலம் போடப் போகிறார்கள்.

ஜெ அதிகாரம் செய்த இடம், ஊழல் செய்து வாங்கிய நகைகள் முதற்கொண்டு செருப்புகள் வரை அடுக்கி வைத்திருந்த இடம். வெள்ளத்தில் சென்னை மிதக்கும் நிலை  வந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த இடம். ரஜினிகாந்தை நடந்து போகச் சொன்ன இடம்.

"ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள் போன கதை தெரியுமா?" என்று ஒரு சூர்யா பாட்டு உண்டு.

அதில் ஒரு கதை தான் ஜெ வின் கதை.

இப்போது ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி வகையறாக்களும் விஜய் வகையறாக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவம்.