Tuesday, November 30, 2021

திரிபுரா - அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்

 தீயில் எரியும் திரிபுரா



 மூன்று நாட்களுக்கு முன்பு எழுதிய “தக்காளி இல்லா வெங்காய சட்னி” என்ற பதிவில் செல்வகுமார் என்பவர் திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அகர்தலா மாநகராட்சியில் சி.பி.ஐ(எம்) ஒரு இடம் கூட பெறாதது குறித்தும் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்.

 பதிவிற்கு தொடர்பில்லாத பின்னூட்டமென்பதால் நீக்கியிருந்தேன். ஆனால் திரிபுரா பற்றி விரிவாக எழுதுவேன் என்று கூறியிருந்தேன். அந்த அடிப்படையில்தான் இந்த பதிவு.

 திரிபுராவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக பாஜகவிற்கு அமைப்பு என்பதோ உறுப்பினர் பலம் என்பதோ கிடையாது. அங்கே எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஒட்டு மொத்தமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியாக மாறினார்கள். அப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினராக மாறியவர்களை நல்ல விலை கொடுத்து பாஜகவாக மாற்றிக் கொண்டார்கள்.

 மற்ற இடங்களில் தேச பக்தி வேடம் போடும் பாஜக, திரிபுராவில் தனி நாடு கேட்கும் அமைப்போடு கூட்டணி வைத்துக் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது. இடது முன்னணி ஆட்சியைப் பற்றி எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்க முடியாததால் மத்தியில் ஆட்சி செய்யும் ஆட்சியே மாநிலத்திலும் ஆட்சி செய்தால்தான் வளர்ச்சி சாத்தியம் என்று பிரச்சாரம் செய்தது. பிரிவினைவாத சக்திகளால் மோதல்களிலும் தாக்குதல்களிலும் மூழ்கிக் கிடந்த மாநிலத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியது இடது முன்னணிதான் என்ற வரலாறு தெரியாத இளைஞர்கள் பாஜகவின் பொய் முழக்கங்களில் ஏமாந்து பாஜகவை வெற்றி பெறச் செய்து பிப்ளப் தேவ் எனும் கோமாளியை முதல்வராக்கினார்கள்.

 அப்போது முதல் திரிபுராவில் நடைபெறுவது ரௌடிகள் ராஜ்ஜியமே. அகர்தலாவில் லெனின் சிலை வீழ்த்தப்பட்டதை நம்மால் மறந்து விட முடியுமா?

 எதிர்க்கட்சிகள், அவர்கள் நடத்தும் இயக்கங்கள் மீது கொலை வெறித் தாக்குதல்கள் நடத்துவது என்பது இயல்பான நடவடிக்கையாகி விட்டது.

 ஆட்சியாளர்களின் செயலின்மையைக் கண்டித்து மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செப்டம்பர் மாதம் கண்டனப் பேரணிகள் நடத்திய போது பாஜகவைச் சேர்ந்த ரௌடிகள் வெறித் தாக்குதல்கள் நடத்தினார்கள். காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவலர்களாக மாறினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தை காவல் காத்தவர்கள் திரும்பப் பெறப்பட்டு குண்டர்கள் அலுவலகத்தை தாக்கினார்கள்.

 அப்போதைய புகைப்படங்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும்.
















 உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிய நிலைமையில் வங்க தேசத்தில் நடந்த சம்பவங்கள் அவர்களுக்கு ஊக்கமளித்தது. துர்கா பூஜை பந்தலொன்றில்  குரான் நூலொன்றை காளி சிலை அருகில் வைக்க இந்துக்களுக்கு எதிராக கலவரம் வெடித்து அவர்கள் தாக்கப்பட்டார்கள்.  வங்க தேச அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகள் காரணமாக ஓரிரு நாளில் இயல்பு நிலை திரும்பியது. சமூக அமைதியைக் கெடுப்பதற்காக இச்சதிச்செயலில் ஈடுபட்டவர்களையும் கண்டு பிடித்து கைது செய்தார்கள்.

 இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு திரிபுரா மாநிலத்தில் பாஜக ரௌடிகள் இஸ்லாமியர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதல்கள் உள்ளாட்சித் தேர்தல் வரை தொடர்ந்தது. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. பல வேட்பாளர்கள் ஆயுதங்கள் மூலம் மிரட்டப்பட்டு வேட்பு மனுவை திரும்பப் பெற வைத்தார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வாய்ப்புண்டு என்று கருதப்பட்டவர்கள் எல்லாம் வாக்குச்சாவடிக்கு அருகில் செல்லக் கூட அனுமதிக்கவில்லை.

 அகர்தலா உயர் நீதிமன்றம் தலையிட்டும் கூட மாநில தேர்தல் ஆணையமும் காவல் துறையும் வேடிக்கை பார்த்தது.

 இப்படிப்பட்ட சூழலில் திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி என்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த தோல்வியே. இந்த அராஜகத்திற்கு காலம் பதில் சொல்லும்.

 தோல்விக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வெட்கப்பட வேண்டியதில்லை.  கீழ்த்தரமான முறையில் வெற்றி பெற்றதற்காக பாஜகதான் வெட்கப்பட வேண்டும்.

 ஆனால் இந்த நிலைமை தொடர அனுமதிக்க முடியுமா?

 தோழர் பி.சீனிவாச ராவ் சொன்ன வழிமுறையை திரிபுரா மாநில மக்கள் கையிலெடுத்தால் மட்டுமே அராஜகம் நிற்கும்.

 

வாழைப்பழ தேசத்தில் தோற்ற. . .

 தோழர் இ.பா.சிந்தன் அவர்களை பகிர்ந்து கொள்கிறேன்.


இந்தியாவிலும் பாசிஸம் நிச்சயமாக தோற்கும்.



ஹோண்டுரஸ் என்கிற நாட்டின் சுருக்கமான வரலாற்றையும், அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு மிகப்பெரிய நாயகனாக உருவாகிக்கொண்டிருந்த மேனுவேல் செலயாவை அமெரிக்கா சதித்திட்டம் தீட்டி நாட்டைவிட்டே கடத்திக்கொண்டு போய் வெளியேற்றியது குறித்தும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். 


பின்னர் அக்கட்டுரையை தன்னுடைய “உணவு யுத்தம்” நூலில் எழுத்தாளர் எஸ்.ரா. மேற்கோளாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். (ஒரு வலதுசாரியாக அரசியல் வாழ்க்கையைத் துவங்கிய மேனுவேல் செலயா இடதுசாரியாக மாறி, இடதுசாரிக் கட்சியொன்றை உருவாக்கிய வரலாறேகூட சுவாரசியமானது தான். அதனையும் அக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தேன்.) "இந்த வாழைப்பழ யுத்தம் பற்றி சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் இபா.சிந்தன். அவரது, ‘மீண்டுவருமா வாழைப்பழ தேசம்?’ என்ற வரலாற்றுத் தொடரில் ஹோண்டுரஸில் எப்படி அமெரிக்கா வாழைப்பழத் தோட்டங்களைக் கைப்பற்றி அரசை வீழ்த்தியது என்ற வரலாறு தெளிவாகக் கூறப்படுகிறது...." - எஸ்.ரா. 


 இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், அமெரிக்காவுக்கு மிக அருகிலே இருக்கிற ஒரு மிகச்சிறிய தேசமான ஹோண்டுரசில் தன்னுடைய மேலாதிக்கத்தை செலுத்திவந்த அமெரிக்காவை மீறி, அந்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று இன்று ஹோண்டுரசின் அதிபராக வெற்றிவாகை சூடியிருக்கும் சியோமாரா காஸ்ட்ரோ வேறு யாருமல்ல. அமெரிக்காவால் கடத்தப்பட்டு நாடுகடத்தப்பட்ட மேனுவேல் செலயாவின் மனைவி. 


 ஹோண்டுரசை கொலைகார தேசமாகவும், போதைக்கடத்தல் நாடாகவும் வைத்திருந்த அமெரிக்காவின் பேராதரவைப் பெற்ற தேசியக் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. ஆனானப்பட்ட அமெரிக்காவையே அதன் காதருகே இருக்கிற ஒரு நாடு வெல்லமுடியும் என்று காட்டியதன் மூலம், உலகின் எந்த மூலையிலும் பாசிஸ்ட்டுகள் வெல்லமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹோண்டுரஸ் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்…

ஜெய்பீம் படம் குறித்த கூட்டறிக்கை.

 சனநாயக இயக்கத்தினர், எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பெண்ணிலைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரது கூட்டறிக்கை.



*
வணக்கம்.
சமூகநீதி அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து வெளியான ஜெய் பீம் திரைப்படம், தமிழக மக்களின் பரவலான ஏற்பைப் பெற்று மிகப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.
தமிழ்த் திரை உலகின் நட்சத்திர நடிகரான சூர்யா அவர்கள் நடித்த ஜெய்பீம் படத்தை த.செ. ஞானவேல் அவர்கள் இயக்கியிருக்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வு, மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களின் துயர் சூழ்ந்த வாழ்வு ஆகியவை பற்றியது ஜெய் பீம் திரைப்படம்.
சமூக நீதி பற்றிய இந்த ஜெய் பீம் திரைப்படம், தமது சாதிக்கு எதிரானது எனத் தமிழகத்தில் உள்ள ஒரு சாரார், இந்தப் படத்திற்கும், இதன் இயக்குனர் த.செ. ஞானவேல் அவர்களுக்கும், ஜெய் பீம் படத்தைத் தயாரித்து நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்கள்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள், ஒரு சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் இத்தகைய அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் இப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்பே ஜெய் பீம் படத்தின் இயக்குனர்
த. செ. ஞானவேல் அவர்கள், தாமாகவே முன்வந்து ஆட்சேபத்திற்கு உரியது எனச் சொல்லப்படுகிற குறியீட்டுப் பிம்பத்தை அகற்றி இருக்கிறார்.
இதற்குப் பின்னும் ஜெய் பீம் படக் கலைஞர்கள், அவர்தம் குடும்பத்தினர் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சார்ந்தவர்கள், பொது ஊடகங்களில் தொடர்ந்து பேசியும், நிர்பந்தித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்கள்.
வன்முறையான அழுத்தங்கள் தருவதன் மூலம் கலைஞர்களைப் பணியைச் செய்வது என்பது, எதிர்காலத்தில் இனி எந்தக் கலைஞரையும் சுதந்திரமாகப் படைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுவதினின்றும் முடக்கி விடும் ஆபத்துக் கொண்டது என நாங்கள் கருதுகிறோம்.
இத்தகைய போக்கு, சாதி மத பேதங்கள் கடந்த, பொதுச் சமூகத்தின் சொத்தான கலைஞர்களின் சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல, குடிமைச் சமூக உரிமைகளுக்கே எதிரானது எனவும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
தவிரவும் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை வலியுறுத்தி நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளன என்பதையும் இத்தருணத்தில் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழகத்தின் சமூகநீதிக்கும், சமூக அமைதிக்கும் எதிரான வன்முறையைத் தூண்டும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைச் சனநாயக இயக்கத்தினர், மனித உரிமையாளர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பெண்நிலைவாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்களான நாங்கள் கண்டனம் செய்கிறோம்.
நீதியான, சமத்துவமான, அமைதியான தமிழகத்தை விழைகிற அனைவரும் இத்தகைய வன்முறைக்கு எதிராக, எம்முடன் இணைந்து சனநாயகக் கடமையாற்ற வருமாறு கனிவுடன் அழைக்கிறோம்.
நன்றி.
*
தமிழக ஒருங்கிணைப்பு
கண. குறிஞ்சி
தமிழ்நாடு மக்கள்உரிமைப் பேரவை
*
தமிழ்நாடு
வசந்தி தேவி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்
எஸ்.வி.ராஜதுரை
மார்க்சிய / பெரியாரிய ஆய்வாளர்
பெருமாள்முருகன்
எழுத்தாளர்
ச.தமிழ்ச்செல்வன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
சொக்கலிங்கம்
தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம்
கொளத்தூர் மணி
திராவிடர் விடுதலைக் கழகம்
கு. இராமகிருஷ்ணன்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
இரா. அதியமான்
ஆதித்தமிழர் பேரவை
தியாகு
தமிழ்த்தேச விடுதலைஇயக்கம்
ப.பா.மோகன்
மூத்த வழக்குரைஞர்
இந்திரன்
எழுத்தாளர்
பொழிலன்
தமிழக மக்கள் முன்னணி
வழ. ஹென்றி திபேன்
மக்கள் கண்காணிப்பகம்
திருமுருகன் காந்தி
மே 17 இயக்கம்
நாகை திருவள்ளுவன்
தமிழ்ப் புலிகள் கட்சி
ட்ராட்ஸ்கி மருது
ஓவியக்கலைஞர்
மாலதி மைத்ரி
எழுத்தாளர்
கார்முகில்
தமிழ்நாடு மார்க்சிய இலெனினியக் கட்சி
குடந்தை அரசன்
விடுதலைத் தமிழ்ப்புலிகள்
கட்சி
வி.பி.குணசேகரன்
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்
அருண்
தமிழ் ஸ்டுடியோ திரைப்பட இயக்கம்
வாலாசா வல்லவன்
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி
பேரா. சரசுவதி
அன்னையர் முன்னணி -- தமிழ்நாடு
பாலமுருகன்
மக்கள் சிவில் உரிமைக் கழகம்
மீ. தா. பாண்டியன்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
கயல் (எ) அங்கயற்கண்ணி
தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்
ஆழி செந்தில்நாதன்
மொழி நிகர்மை உரிமைப் பரப்பியக்கம்
சுப்ரபாரதிமணியன்
எழுத்தாளர்
பாலன்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
புலியூர் முருகேசன்
எழுத்தாளர்
நிலவழகன்
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
வீ. அரசு
தமிழ் ஆய்வாளர்
செந்தில்
இளந்தமிழகம்
கோவன்
மக்கள் கலை இலக்கியக் கழகம் --- தமிழ்நாடு
பா. செயப்பிரகாசம்
எழுத்தாளர்
வ.கீதா
எழுத்தாளர்
கவிதா முரளீதரன்
ஊடகவியலாளர்
திவ்யபாரதி
ஆவணப்பட இயக்குநர்
கவின்மலர்
ஊடகவியலாளர்
இரா. பாரதிநாதன்
எழுத்தாளர்
கீற்று நந்தன்
ஊடகவியலாளர்
சுதிர் செந்தில்
ஆசிரியர் - உயிர் எழுத்து
நா. பெரியசாமி
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம்
சுதா இராமலிங்கம்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
பிரின்சு கஜேந்திரபாபு
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
சுப. உதயகுமாரன்
பச்சைத் தமிழகம் கட்சி
இராசேந்திர சோழன்
எழுத்தாளர்
சே. வாஞ்சிநாதன்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
பொதியவெற்பன்
எழுத்தாளர்
அஜீதா
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
பாமரன்
எழுத்தாளர்
மணா
பத்திரிகையாளர்
த. செயராமன்
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்
இரா. முருகவேள்
எழுத்தாளர்
சாவித்திரி கண்ணன்
பத்திரிகையாளர்
ஜமாலன்
எழுத்தாளர்
புனித பாண்டியன்
ஆசிரியர் -- தலித் முரசு
மதிவண்ணன்
எழுத்தாளர்
கோபாலகிருஷ்ணன்
எழுத்தாளர்
கே. பாலகிருஷ்ணன்
சுயஆட்சி இயக்கம்
வளர்மதி
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்
பாத்திமா பாபு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்
நிழல்வண்ணன்
மொழிபெயர்ப்பாளர்
மருதுபாண்டியன்
சோசலிச மையம்
தி. அரசு
நிழல் திரைப்பட இயக்கம்
கி.நடராசன்
சாதி ஒழிப்பு இயக்கம்
கி.வே.பொன்னையன்
தற்சார்பு விவசாயிகள் சங்கம்
பரிமளா
ஐ.டி. ஊழியர் சங்கம்
ஆர்.ஆர்.சீனிவாசன்
ஆவணப்பட இயக்குனர்
செல்வி
மனிதி
லட்சுமி
அனைத்திந்தியப் புரட்சிகரப் பெண்கள் இயக்கம்
இரா. முரளி
உயர் கல்விப் பாதுகாப்பு இயக்கம்
பா.ஜீவசுந்தரி
பெண்ணியச் செயற்பாட்டாளர்
எச்.பீர்முகமது
எழுத்தாளர்
இராமசாமி துரைபாண்டி
தமிழ்க் கணியாளர்
க.பூர்ணசந்திரன்
எழுத்தாளர்
பால் மைக்கேல்
சமூகச்சிந்தனையாளர்
வீ.ந.சோமசுந்தரம்
திருச்சி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்
வழ. ஆனந்தன்
எழுத்தாளர்
அமரந்த்தா
எழுத்தாளர்
கல்பாக்கம் நடராசன்
அறிவியலாளர்
பெ.விஜயகுமார்
இந்திய சமூக விஞ்ஞானக் கழகம்
இரா.செல்வம்
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு
ஷீலு பிரான்சிஸ்
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு
வெ. கோவிந்தசாமி
மொழிபெயர்ப்பாளர்
கோ. திருநாவுக்கரசு
தமிழ்நாடு உழவர் இயக்கம்
முத்தமிழ்
புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றம்
ஒப்புரவாளன்
தமிழ்நாட்டுக் கல்விஇயக்கம்
வழ.கு.ஞா. பகவத்சிங்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் -- போராட்டக் குழு
.
இரா.தெ. முத்து
எழுத்தாளர்
சங்கரலிங்கம்
சுய ஆட்சி இந்தியா
ரமணி
சாதி ஒழிப்பு முன்னணி
இரா. பாலு
சமூகச் செயற்பாட்டாளர்
வழ. பிரிட்டோ
மனித உரிமை ஆர்வலர்
ஆசீர்வாதம்
மக்கள் கண்காணிப்பகம்
சோ. பிலிப் சுதாகர்
குடிபெயரும் ஆதரவற்ற தொழிலாளர் நலப்பணிக்குழு
நலங்கிள்ளி
எழுத்தாளர்
வழ. தமயந்தி
புரட்சிகர விடியல் பெண்கள் மையம்
சிவகாமி
தமிழ்நாடு அறிவியல் மன்றம்
சிபிச்செல்வன்
கவிஞர்
கோச்சடை
சமூகச்செயற்பாட்டாளர்
சிவ. செந்தமிழ்வாணன்
தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்
வழ. தமிழ் இராசேந்திரன்
கரூர் மக்கள் மன்றம்
தேவநேயன்
குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர்
அரசெழிலன்
விழிக்கொடை விழிப்புணர்வு இயக்கம்
சுடரொளி
குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம்
வேலிறையன்
சமூகச்செயற்பாட்டாளர்
லிங்கன்
வழக்கறிஞர்
சிவ. செந்தில்நாதன்
த. மு. எ.க. ச.
அருள்
மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
வழ. செ. குணசேகரன்
அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச்சங்கம்
நா.அன்பழகன்
குறும்பட இயக்குநர்
கலைக்கோவன்
எழுத்தாளர்
கோ.வெ.குமணன்
தாய்த்தமிழ் கல்விப்பணி
அறிவன்
கவிஞர்
பொன். சந்திரன்
கோணங்கள் திரைக்கழகம்
விசுவநாதன்
தொழில் முனைவோர்
பூ.அ. இரவீந்திரன்
தமிழ்ச்சிற்றிதழ்கள் சங்கம்
தங்க. குமரவேல்
செவ்வானம் - யூ டியூப் சேனல்
இரவிச்சந்திரன் குமாரசாமி
கவிஞர்
பேரா. கு.பாலசுப்ரமணியன்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
நிலவன்
நீரோடை
இரா. தமிழ்ச்செல்வன்
தமிழர் கழகம்
எழில் சுப்பிரமணியன்
தாய்த்தமிழ்க் கல்விப்பணி அறக்கட்டளை
இரா. பாலு
சமூகச்செயற்பாட்டாளர்
கணேஷ் சீரங்கராஜ்
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்
பேரா.ஆர்.பாலகிருஷ்ணன்
எழுத்தாளர்
சிலம்புச் செல்வன்
சமூக ஆர்வலர்
செ. சண்முகசுந்தரம்
எழுத்தாளர்
அபிலாஷ் சந்திரன்
எழுத்தாளர்
பா. பிரபாகரன்
எழுத்தாளர்
*
புலம்பெயர் நாடுகள் ஒருங்கிணைப்பு
யமுனா ராஜேந்திரன்
இலண்டன்.
*
புலம்பெயர் நாடுகள்
கௌரி பரா
சமூக நீதிக்கான சட்ட ஆலோசகர், இங்கிலாந்து
ரூபன் சிவராஜா
எழுத்தாளர், நோர்வே
சுஜித் ஜி
திரைப்பட இயக்குனர்
இங்கிலாந்து
கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம்
நாடகநெறியாளர், நோர்வே
பா. நடேசன்
ஊடகவியலாளர்
இங்கிலாந்து
கவிதா லட்சுமி
கவிஞர், நோர்வே
சாரா ராஜன்
செயல்பாட்டாளர், இங்கிலாந்து
மு.புஷ்பராஜன்
கவிஞர், கனடா
மன்மதன் பாஸ்கி
திரைப்பட நடிகர், பிரான்ஸ்
புதியவன் ராசைய்யா
திரைப்பட இயக்குனர் இங்கிலாந்து
செல்வம்
இதழாசிரியர், கனடா
மீராபாரதி
எழுத்தாளர், கனடா
நா.வே. அருள்
கவிஞர், கனடா
அருள் பாரதி
பொறியாளர், கனடா.
*
கூட்டறிக்கையைப் பகிருமாறு நண்பர்களையும் தோழர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..