Showing posts with label வேலூர். Show all posts
Showing posts with label வேலூர். Show all posts

Sunday, April 19, 2026

மகளிர் மசோதா-சரியாகத்தான் சொன்னார் பேரா.காதர் மைதீன்

 


மகளிர் இட ஒதுக்கீட்டை அமலாக்காமல் திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் தடுத்து பாவம் செய்து விட்டார்கள் என்று பொய்யாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளிக்கச் சொல்லி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கச் சொல்லி எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறைகூவல் கொடுத்தது. (மகளிர் மசோதாவிற்காக எங்கள் சங்கம் நடத்திய இயக்கங்கள் பற்றி மட்டுமே தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். ஒரு நூலுக்காக தொகுத்தது உள்ளது. அதனால் பகிர்வது சுலபம்)

வேலூர் எம்.பி யாக இருந்த முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் அவர்களை சந்தித்தோம்.



அப்போது அவர் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொன்னார்.

காங்கிரஸ், பிஜேபி என்றெல்லாம் இல்லை, எல்லா கட்சிகளிலும் உள்ள ஆண் எம்.பி க்கள் மகளிருக்கான இட ஒதுக்கீடு வருவதை அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுடைய தொகுதி பெண்களுக்கான தொகுதியாக மாறினால் அவர்களின் அரசியல் முடிந்து போகும் என்ற அச்சம் உள்ளது. எல்லாராலும் லாலு தன் மனைவியை முதல்வராக்கியது போல மனைவியை எம்.பி யாக்க முடியாதல்லவா! அதனால் வாய்ப்பு குறைவுதான் என்று சொன்னவர் இன்னொரு ஆலோசனையையும் சொன்னார்.

டி.கே.ரங்கராஜன் என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜ்யசபையில் இருக்கிறார். அவரை பாருங்கள். அந்த கட்சி வேண்டுமானால் இதற்காக குரல் கொடுப்பார்கள் என்பதுதான் அவர் ஆலோசனை.

மோடிக்கும் அமித்ஷாவிற்கும் எதிர்க்கட்சிகள் பேசினால் முகத்தை கடுப்பாகவே வைத்துக் கொள்ளும் சபாநாயகர் ஓம் பிர்லா, ஆவேசமாக பேசிய பிஞ்சிலே வெம்பிப் போன தேஜஸ்வி சூர்யா ஆகியோருக்கு மகளிர் இட ஒதுக்கீட்டில் ஆர்வம் இருந்தால் இப்போதுள்ள 543 என்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப 33 % இட ஒதுக்கீட்டை அளிக்கலாமே! 

திமுக எம்.பி வில்சன் தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளாரே, அதை பாஜக ஆதரிக்கலாமே!

செய்வார்களா?

பிகு: இந்த பதிவிற்கு தொடர்பில்லையென்றாலும் இன்றுள்ள சூழலில் இதனையும் பதிவு செய்வது மிகவும் அவசியம்.

நாங்கள் திரு காதர் மைதீன் அவர்களை சந்திக்க சென்ற போது அவர் வாசித்துக் கொண்டிருந்தது "திருவாசகம்" 

அவர் மேஜையில் இருந்த இன்னொரு நூல் "நாலாயிர திவ்விய பிரப்பந்தம்" 


Wednesday, April 8, 2026

கறி விருந்திற்கு வாய்ப்பில்லை சுந்தர்.சி

 


புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்தி தொகுதியில் போட்டியிடும் பாஜக பொறுப்பாளர் குஷ்புவின் கணவர், இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி, தான் எம்.எல்.ஏ ஆனால் மதுரை மத்திய தொகுதியில் அசைவ விடுதிகளை மூடி மீனாட்சி அம்மன் கோயில் புனிதத்தை பாதுகாப்பேன் என்று பேசியதாக ஒரு செய்தி உலாவியது.

பிரபலமான அசைவ விடுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மதுரையில் இப்படியெல்லாம் பேசுமளவிற்கு சுந்தர்.சி மோசமான சங்கியா என்று சின்ன சந்தேகம் வந்தாலும் அந்த செய்தியை உறுதிப்படுத்தாமல் பதிவு எழுத வேண்டாம் என்றிருந்தேன்.

அந்த செய்தி சரியில்லை என்றும் தன் வெற்றிக்குப் பிறகு அச்செய்தியை பரப்பியவர்களுக்கும் சேர்த்து கறி விருந்து கொடுப்பேன் என்று சுந்தர்.சி பேசியுள்ளார்.

ஆனால் திரு சுந்தர் அவர்களே, நீங்கள் வெற்றி பெறப் போவதுமில்லை. யாருக்குமே கறி விருந்துமே தரப் போவதில்லை.

இந்த தேர்தல் காரணமாக கமலஹாசன் தயாரித்து, ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்து விட்டேனே என்று நீங்கள் புலம்பப் போவது மட்டுமே நடக்கப் போகிறது.

பாவம் ஏ.சி.சண்முகம்! இது நாள் வரை வேலூர் மக்களவை தொகுதியில் அவர் போட்டியிட்டு கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளார், அதனை மாணவர்களிடமிருந்து வசூலித்து விடுவார் என்பது வேறு. 

தனக்காக பணத்தை இழந்த அவர், முதல் முறையாக உங்களுக்காக பணத்தை இழக்கப் போகிறார். 

Sunday, March 1, 2026

அவசரம் ஏன் தோழர்?


 இன்றைய காலைப் பொழுது ஒரு துயரச் செய்தியோடு விடிந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர், கட்சியின் முன்னாள் மாவட்டச்செயலாளர், தற்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.டி.சங்கரி அவர்களின் கணவரரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.தயாநிதி நேற்று நள்ளிரவு காலமானார்.

கடந்த ஜனவரி மாதம் இதய பை பாஸ் சர்ஜரி செய்து கொண்ட தோழர் தயாநிதி அவர்களை கடந்த புதன் கிழமையன்றுதான் நாங்கள் (இன்சூரன்ஸ் ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள்) சந்தித்து நலன் விசாரித்து வந்தோம்.

மிகுந்த நம்பிக்கையோடு பேசிய தோழர் தயா விரைவிலேயே எப்போதும் போல இயக்கங்களுக்கு, களத்திற்கு வருவேன் என்று தெரிவித்தார். ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துப் போனது கொடுமை. 63 வயது என்பது இறப்பதற்கான வயதா என்ன? 

நான் வேலூருக்கு வந்த காலம் முதல் அறிவேன்.  எங்களது எத்தனையோ கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.  களத்தில் கடுமையாக உழைப்பவர், ஒன்றிணைந்த வேலூர் மாவட்டத்தை அங்குலம் அங்குலமாக அறிந்தவர்.  துல்லியமான திட்டமிடல் அவரது சிறப்பு. 

மிகச் சிறந்த ஓவியர். 1996 ல் எங்கள் தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்ற போது அனைத்து விளம்பரப் பணிகளையும் அவர்தான் செய்தார். பிரம்மாண்டமான பேனர்கள், அலங்காரமான, அழகான பின்புலம், டயர் தட்டிகள் என்று பல வடிவங்களில் அவர் கைவண்ணம் மிளிர்ந்தது.

நல்ல வாசிப்பாளர். கடைசி சந்திப்பின் போது கூட தான் அப்போது படித்து முடித்த நூல்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

வேலூர் மாவட்ட கட்சிக்கென ஒரு மாதாந்திர செய்தி மடல் வெளியிட வேண்டும் என்பது அவர் நீண்ட நாள் விருப்பம். நாம் இது தொடர்பாக உட்கார்ந்து விவாதிக்க வேண்டும் என்று பலமுறை சொல்லியுள்ளார். அது ஏனோ கைகூடவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது உண்மையான செயல் வீரரை இழந்துள்ளது,  வாழ்வுக்குப் பிறகும் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க, மக்களுக்கு பயன் கிடைக்கும் வண்ணம் தோழர் தயா உடல் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட உள்ளது. 

செவ்வணக்கம் தோழர் தயாநிதி . . .

பிகு: எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத் திறப்பு விழாவில் தோழர் தயாநிதி வாழ்த்துரை வழங்கிய போது எடுக்கப்பட்ட படம் மேலே உள்ளது. 

Tuesday, December 10, 2024

வேலூரில் சந்திர மண்டலம்

 



மேலே உள்ள படங்கள் ஒன்றும் சந்திர மண்டலத்தில் எடுக்கப்பட்டது இல்லை. இரண்டு நாட்கள் முன்பாக எங்கள் பகுதியில் போடப்பட்ட கான்கிரீட் சாலை.

சாலை போட முடிந்தவர்களால் மாடுகளை அந்த பகுதிக்கு வராமல் தடுக்க முடியவில்லை போலும்! அந்த அளவிற்கு தெரு மாடு பிரச்சினை வேலூரில்.

கீழேயுள்ள படம் இன்னொரு கொடுமை

இரண்டு தெருக்களுக்கும் நடுவில் உள்ள ஒரு சின்ன பகுதி. அதை மட்டும் அம்போ என்று விட்டு விட்டார்கள். அந்த பகுதிக்கு எப்போது விடிவுகாலம் பிறக்குமோ?

Sunday, November 24, 2024

நான் வேலூர் எம்.பி. Meta AI காமெடி

 


முகநூலைப் பார்த்தால் ஒரே Meta AI யிடம் தங்களைப் பற்றி கேள்வி கேட்டு அது சொல்லும் பதிலை பதிவு செய்வதுதான்.

ஆசை யாரை விட்டது!

நானும் முயற்சி செய்தேன்.

அது சொன்ன பதிலை பாருங்கள்

இதில் மிகப் பெரிய காமெடி என்னவென்றால் 2009 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறவே இல்லை. திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் வேட்பாளராக நின்ற எம்.அப்துல்ரஹ்மான் வெற்றி பெற்றார். 

பெயர், கட்சி என்று எதுவுமே சரியில்லை. இந்த நுண்ணறிவை முழுமையாக எதற்கும் நம்ப வேண்டாம் என்றுதான் சொல்ல விழைகிறேன்.

Meta இத்தேர்தல் குறித்த சில நினைவுகளை கிளறி விட்டது.

2009 மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு நுண் பார்வையாளராக சென்றிருந்தேன். நான் அமர்ந்திருந்த மேஜையில் மொத்தம் 18 சுற்றுகளில் முதல் சுற்றில் மட்டும்தான் அதிமுக வேட்பாளர் எல்.கே.எம்.பி வாசு முன்னிலை பெற்றிருந்தார். மற்ற அனைத்து சுற்றுக்களிலும் முஸ்லீம் லீக் வேட்பாளர்தான் முன்னிலை பெற்றார்.

சில மோசடிப்பேர்வழிகள் தேர்தலை பயன்படுத்தி அவரிடமிருந்து லம்பாக ஒரு தொகையை ஆட்டையப் போட்டிருந்தார்கள் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். பாவம் அவர்!

பிகு: Meta AI ஐ ஏன் நம்ப வேண்டாம் என்பதற்கு இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். வாட்ஸப்பில் அறிமுகமான போது அதை கேட்ட கேள்விக்கு அப்போது சொன்ன பதிலும் அதே கேள்விக்கு இப்போது சொன்ன பதிலும் கீழே






Sunday, November 17, 2024

தமிழ்நாட்டில் முதல் முறையாக . . .

 



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட மாநாடு நேற்றும் இன்றும் திருப்பத்தூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக தோழர் எஸ்.டி.சங்கரி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 

தமிழ்நாட்டில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தோழர், தோழர் சங்கரிதான். அந்த பெருமை வேலூர் மாவட்டத்திற்கு கிட்டியுள்ளது என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொறுப்பாளராக, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக முத்திரை பதித்துள்ள தோழர் எஸ்.டி.சங்கரி, இப்புதிய பொறுப்பிலும் மிளிர்வார் என்பது நிச்சயம்.

தோழர் சங்கரி அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.


பிகு : மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி எங்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் தோழர் எஸ்.டி.சங்கரி சிறப்புரையாற்றிய போது எடுத்த புகைப்படங்கள் மேலே உள்ளது. 

Saturday, November 2, 2024

மோசடிப்பேர்வழிகளின் சதுரங்க வேட்டை ஓயாது.

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி.

மண்ணுளிப் பாம்பை நான்கு கோடி ரூபாய்க்கு விற்கும் வேளையில் ஐவரை காவல்துறை கைது செய்துள்ளது. இது நேற்று வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலை அடிவார கிராமம் ஒன்றில் நடந்துள்ளது.

மண்ணுளி பாம்பு விற்பனை என்ற மோசடி பற்றிய செய்திகள் சமீப காலமாக வரவில்லை. சதுரங்க வேட்டை திரைப்படம் கொடுத்த விழிப்புணர்வு என்று நினைத்திருந்தேன். அப்படியெல்லாம் ஒரு மண்ணும் உருவாகவில்லை என்பது இந்த செய்தி உணர்த்துகிறது.

ஆமாம். உண்மைதான்.

வாயை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் மோசடிப் பேர்வழிகள் உலகெங்கும் பரவியுள்ளனர். அவர்கள் மோடி போல பிரதமராகவும் இருக்கலாம், உங்களை ஏமாற்றிய/ஏமாற்றிக் கொண்டிருக்கிற நண்பனாக உலாவிய துரோகியாகவும் இருக்கலாம்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களின் சதுரங்க வேட்டை நடந்து கொண்டுதான் இருக்கும்.


மேலே உள்ளதுதான் நான்கு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட மண்ணுளி பாம்பு. இதற்கு என்ன பெயர் வைத்திருந்தார்களோ? 

விஜய்/ரஜினி/கமல்/அஜித்/சூர்யா/விக்ரம்/சிவ கார்த்திகேயன்/தனுஷ்/சிம்பு?

Saturday, October 5, 2024

ஏ.டி.எம் மில் கைது செய்த நாய்கள்

 

நேற்று முன் தினம் எழுதிய  காரில் நாய்களுக்கு என்ன ஆய்வு?  என்ற பதிவின் தொடர்ச்சி இது.

 நேற்று காலை எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்மிற்கு சென்றிருந்தேன்.

 பணத்தை எடுத்து விட்டு வெளியே வர முடியவில்லை.

 



ஏ.டி.எம் வாசலில் இரண்டு நாய்கள் படுத்துக் கொண்டு எழ  மறுக்கின்றன. கதவை திறக்க முடியவில்லை. கதவை சற்று தள்ளினால் ஆவேசமாக குரைக்க தொடங்கி விட்டன. குரைத்து விட்டு மீண்டும் கதவின் மீது சாய்ந்து படுத்துக் கொண்டு விட்டன. அந்த நேரத்தில் அந்த நாய்களை துரத்த வேறு எந்த வாடிக்கையாளர்களும் கூட வரவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் இப்படியே கடந்தது.  போலீஸ் லாக்கப்பில் இருந்த  ஒரு  ஃபீலிங்.                                                                                                                                                                                                                                                                                                                                                       

 

நல்ல வேளையாக மூன்றாவதாக ஒரு நாய் வர, அந்த நாயோடு இந்த இரண்டு நாய்களும் சண்டை போட செல்ல, ஒரு வழியாக வெளியே வந்தேன், விடுதலையாகி.

 

வாஜ்பாய் ஆட்சியில்  நாய்க்கடிக்கான மருந்து உற்பத்தி லவ்பெல்லால் தனியாருக்கு அளிக்கப்பட்டதையும் அதே வாஜ்பாய் ஆட்சியில் தெருநாய்களை கொல்லக் கூடாது என்று மேனகா காந்தி சட்டம் போட்டதையும் இணைத்து பாருங்கள்.

 

தனியார் உற்பத்தி செய்யும் நாய்க்கடி மருந்து விற்க நாமெல்லாம் நாய்க்கடி பெற வேண்டும்.

 

இந்த வாஜ்பாய் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக வேறு கொண்டாடுகிறார்கள். கொடுமை.

Thursday, October 3, 2024

காரில் நாய்களுக்கு என்ன ஆய்வு?

 


கடந்த வாரம் சென்னை சென்று இரவு திரும்பும் போது வீட்டு வாசலில் மாநாடு நடத்திக் கொண்டிருந்த நாய்கள் பிறகு காரை சூழ்ந்து கொண்டு என்னமோ ஆய்வு நடத்திக் கொண்டிருந்தன.

 



அப்படி என்ன ஆய்வு செய்து என்ன கண்டு பிடித்திருக்கும்.

 வேலூர் மேயரம்மா, தெரு நாய் தொல்லைக்கு தீர்வே கிடையாதா?

 பிகு: இப்படியெல்லாம் ஒரு பதிவு அவசியமா என்று யோசித்தேன். இன்று காலை ஏற்பட்ட அனுபவம் எழுத வைத்து விட்டது. அப்படியென்ன அனுபவம்? அது ஸ்பெஷல். நாளை . . . .

 

Wednesday, July 10, 2024

மலர் வளையத்துடன் வீர வணக்கம்

 





அடிமைத்தளையை அறுத்தெரிய,

சுதந்திரக்காற்றை சுவாசிக்க
மத ஒற்றுமையின் அடையாளமாய்
குருதி சிந்தி  இன்னுயிர் நீத்த
வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு
சுதந்திரப் போர் தியாகிகளுக்கு
216 வது வருட நினைவு தினமான இன்று
சிப்பாய் புரட்சி தியாகிகள் நினைவுச்சின்னத்தில்
எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில்
மலர் வளையம் வைத்து
வீர வணக்க முழக்கமிட்டு

அஞ்சலி செலுத்தினோம்.

Tuesday, February 27, 2024

வேலூரில் நல்ல வேட்டை

 


வேலூரில் புத்தக விழா என்ற அறிவிப்பைப் பார்த்தது முதலே சென்று வர வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அதற்காக துவக்கப்பட்ட ஒரு வாட்ஸப் குழுவில் வேறு இணைத்து அன்றாட நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் பதிவு செய்து கொண்டே இருந்தார்கள். ஆனால் தொடர்ச்சியான வேலைகள், பயணங்கள் காரணமாக அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.

இன்றுதான் விழாவின் இறுதி நாள் என்பதால் இன்று எப்படியாவது சென்றிட வேண்டும் என்ற வேகத்துடன், மதிய உணவு இடைவேளையின் போது வேகம், வேகமாக சென்று, அதை விட அதி வேகமாக அரங்குகளுக்குள் நுழைந்து புத்தகங்களை வாங்கி வந்தேன்.

செலவழித்த நேரம் குறைவென்றாலும் புத்தகங்கள் வாங்கியதில் குறையெதுவும் இல்லை. மனம் நிறைவடையக்கூடிய விதத்தில்தான் இருந்தது. ஞாயிறு கடலூர் சென்று திரும்பிய நேரத்தில் 256 பக்கங்கள் கொண்ட கள அனுபவ கட்டுரை நூலை படித்து முடிக்க முடிந்ததால் உருவான தைரியமே இந்த அளவு புத்தகங்களை வாங்க தூண்டியது.

இன்று வாங்கிய நூல்களின் பட்டியல் கீழே


எண்

நூல்

ஆசிரியர்

பக்கம்

1

தண்ணீர்

அசோகமித்திரன்

112

2

எரியும் மண் -மணிப்பூர்

கிர்த்திகா தரன்

83

3

நாடோடியாகிய நான்

சமுத்திரக்கனி

136

4

நரவேட்டை

சக்தி சூர்யா

280

5

நகலிசைக் கலைஞன்

ஜான் சுந்தர்

143

6

எதனையும் மறக்க இயலாது

நேஹால் அகமது - தமிழில் சுனந்தா சுரேஷ்

160

7

போராட்டம் தொடர்கிறது

பிரபீர் பூர்காயஸ்தா தமிழில் .சுப்பாராவ்

253

8

செயலற்ற அரசு

எம்.ராஜ்ஷேகர் - தமிழில் .சுப்பாராவ்

352

9

பேசும் பொம்மைகள்

சுஜாதா

230

10

திருடர்களின் கைகள் மென்மையானவை

கரங்கார்க்கி

103

11

மலரும் சருகும்

டி.செல்வராஜ்

198

12

சபக்தனி

சம்சுதீன் ஹீரா

272

13

தமிழ்ச் சினிமாவில் கம்யூனிசம்

பாலு மணிவண்ணன்

88

 

 

 

2410

 

பார்ப்போம், எவ்வளவு விரைவாக இவற்றையெல்லாம் வாசித்து முடிக்க முடிகிறதென்று.