Showing posts with label சனாதனம். Show all posts
Showing posts with label சனாதனம். Show all posts

Friday, March 20, 2026

பிரதமர்-ஜனாதிபதி. தூரத்திற்கான காரணம் என்ன?

 


இறையாண்மை கொண்ட சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசான இந்தியாவின் ஜனாதிபதி நேற்று அயோத்தி சென்று அங்கே ராமர் கோயிலில் வழிபட்டு, அதற்கான வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாள் பாக்கியம் என்று சொன்னதாக இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன்.

ஜனாதிபதி கோயிலில் வழிபடும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் பார்த்தேன். குடியரசுத்தலைவரின் ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த புகைப்படம் கீழே


மனதுக்குள் ஏதோ மணி அடித்தது.

கோயில் திறப்பு விழா புகைப்படங்களை தேடினேன்.




மோடியும் ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்தும் எங்கே நிற்கிறார்கள் பாருங்கள்.

ஜனாதிபதி எங்கே நிறுத்தப்பட்டுள்ளார் என்று பாருங்கள். 

மோடி பிரதமர், மோகன் பகவத் எந்த அரச பதவியிலும் இல்லாதவர். அவர்கள் ராம் லல்லா விக்கிரகத்தின் அருகாமையில் நிற்க இந்தியாவின் முதல் குடிமகளான ஜனாதிபதி சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மட்டுமல்ல, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்குக் கூட அழைக்கப் படவில்லை.

காரணம் அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்.

அதனால்தான் சனாதனம் அவரை தூரத்தில் நிறுத்தி வைத்தது. 

Tuesday, February 17, 2026

மோடியின் ஆளும் மோடி மாதிரிதானே பேசுவான்!

 


பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் விஜய்யை மட்டம் தட்டுவதாக நினைத்து த்ரிஷாவை இழிவு படுத்தி பேசினார்.

அந்த சர்ச்சை அடங்கும் முன்பே பாஜகவின் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், ஒரு பொதுக்கூட்டத்திலேயே கரூர் காங்கிரஸ் எம்.பி செல்வி ஜோதிமணியை ஆபாசமாக பேசுகிறார்.

இவர்கள் இப்படி பேசியது எனக்கு ஆச்சர்யமாகவோ அல்லது அதிர்ச்சியாகவோ இல்லை. 

சில காலம் முன்பாக பத்திரிக்கையாளர்களை மிக மிக கேவலமான, ஆபாசமான வார்த்தையில் ஆட்டுக்காரன் பேசியது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து தைரியம் வருகிறது?

கண்டிப்பாக மோடியிடமிருந்துதான்.

பாஜக கொலைகாரர்களால் துரத்தப்பட்டு வேறு வழியின்றி இஸ்லாமியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமை "குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை" என்று நக்கல் செய்ததையும் சோனியா காந்தியை கொச்சையான வார்த்தை கொடுத்து விவரித்ததையும் மறந்து விட முடியாது.

மோடியை அப்படி பேச வைப்பது எது?

அவர்களின் டி.என்.ஏ வில் ஊறியுள்ள ஆணாதிக்க சிந்தனை. அதை அவர்களுக்கு ஊட்டி வளர்ப்பது 

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

அதுதான் 

சனாதனம் . . .

Thursday, January 29, 2026

அரசியல் சாசனத்தை மதிக்க மாட்டீங்களா ஜட்ஜய்யா?

 


நம்ம திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் உதிர்த்த லேட்டஸ்ட் அரிய முத்து கீழே உள்ளது.


பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே பேதம் கற்பிக்கிற, பெண்களை ஒடுக்குகிற, ஜாதிய சிந்தனையை ஊக்குவிக்கிற, அறிவியல் சிந்தனைக்கு எதிரான சனாதன தர்மம், அடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவேன் என்று வெளிப்படையாகவே சொல்கிற திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர், நீதிபதி பதவியில் நீடிக்க அருகதை அற்றவர்.

கார் விபத்து வழக்கில் தன் சகோதரிக்காக ஆள் மாறாட்டம் செய்த குற்றவாளியை, அவர் வேதம் அறிந்தவர் என்பதால் விடுதலைக்கு வழி வகுத்தேன் என்று சொன்னவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


Thursday, January 22, 2026

தீர்ப்பு அபத்தமானது.

 

சனாதன ஒழிப்பு தொடர்பான் தீர்ப்பின் விபரங்களை படிக்கும் போதே மிகவும் அபத்தமாக இருப்பதாக தோன்றியது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு, இத்தீர்ப்பை அபத்தமானது என்ற வார்த்தையை பயன்படுத்தி எதிர்வினை ஆற்றிய போது மனதுக்குள் கொஞ்சம் நிறைவாகவே இருந்தது.

நீதிபதி அவர்களிடன் நானும் கொஞ்சம் கேள்விகளை கேட்க வேண்டும்.

அவை நாளை . . .




சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது!


பாஜக BJP Tamilnadu தலைவர் அமித் மாளவியாவின் வன்முறை தூண்டும் பேச்சுக்கு எதிராகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

"சனாதன ஒழிப்பு" பற்றி தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் Udhayanidhi Stalin அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் முற்போக்கு மற்றும் எழுத்தாளர் சங்க தமுஎகச மாநிலக்குழு மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய அமித் மாளவியா 80 சதவிகிதமான மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா? என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிராகவே முதல் தகவல் அறிக்கை திருச்சி நகர காவல் துறையால் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி அத்தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள் நீதி சார்ந்ததாகவோ, சமூக யதார்த்தங்களை உள்வாங்கியதாகவோ, அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு உட்பட்டதாகவோ இல்லையென்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறோம். மிகவும் தவறான, ஆபத்தான விளக்கத்தை நீதிபதி முன்வைத்து இருக்கிறார்.

“முழு வழக்கும் ‘ஒழிப்பு’ (ozhippu) என்ற சொல்லைச் சுற்றியே அமைகிறது; அந்தச் சொல் மிகவும் முக்கியமானது. ‘அழித்தல்’ (abolish) என்ற சொல், ஏற்கனவே உள்ள ஏதோ ஒன்று இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. இதை தற்போதைய வழக்கிற்கு பொருத்தினால், சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும். சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள்குழு இருக்கக் கூடாது என்றால், அதற்கான சரியான சொல் ‘இனப்படுகொலை’ (genocide) ஆகும். சனாதன தர்மம் ஒரு மதமாக இருந்தால், அது ‘மதப்படுகொலை’ (religicide) ஆகும். மேலும், சூழல் அழிப்பு (ecocide), உண்மையழிப்பு (factocide), பண்பாட்டு அழிப்பு, பண்பாட்டு இனப்படுகொலை (culturicide) ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு முறைகள் மற்றும் தாக்குதல்களின் மூலம் மக்களை ஒழிப்பதையும் இது குறிக்கிறது. எனவே, ‘சனாதன ஒழிப்பு’ என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாகவே ‘இனப்படுகொலை’ அல்லது ‘பண்பாட்டு அழிப்பு’ என்பதையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரின் பேச்சை கேள்விக்குள்ளாக்கிய மனுதாரரின் பதிவை வெறுப்பு பேச்சாகக் கருத முடியாது” என்ற நீதிபதியின் மேற்கண்ட விளக்கங்கள் மிகவும் அபத்தமானது.

ஒரு பிற்போக்கு சித்தாந்தத்தை, மக்களை சாதிகளாகப் பிரித்து உயர்வு தாழ்வு கற்பிக்கும் கருத்தியலை, சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துபவர்களுக்காக சமூக ஏற்பை விதைப்பதற்கான ஒரு கருத்தாக்கத்தை ஒழிப்பது என்பது, எப்படி அதைப் பின்பற்றுபவர்களை ஒழிப்பதாக மாறும்? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் "சாதி ஒழிப்பு" பேசினார். அதன் பொருள் என்ன? சமூகத்தில் மனிதரை மனிதர் இழிவுப்படுத்துகிற, பாகுபடுத்துகிற, வேறுபடுத்துகிற சாதி என்கிற கட்டமைப்பு உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுதானே. ஒழிப்பு என்பதாலேயே படுகொலைக்கான தூண்டுதல் என்று சொன்னால் ஏற்க முடியுமா? வறுமை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு என்று கூறுவதெல்லாம் சம்பந்தப்பட்ட மக்களை ஒழித்துக் கட்டுவது என்று பொருள் கொண்டால் அமைச்சர்களே இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவது குற்றம் என்றாகிவிடும்.

இப்படிக் கூறிய நீதிபதி "80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய சொல்கிறீர்களா?" என்று அமித் மாளவியா கேட்டது குற்றமல்ல. அவர் எழுப்பியது கேள்விதான். அவர் போராட்டம் எதையும் தூண்டவில்லை என்றெல்லாம் விளக்கம் கொடுத்து இருப்பது விந்தையாக உள்ளது. சனாதன தர்மத்திற்கும் நால்வர்ண முறைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? நால்வர்ண முறை தங்களை இழிவு செய்கிறது என்று கருதுபவர்கள் அத்தகைய முறை இருக்கக் கூடாது என்று பேசக் கூடாதா? "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது" என்று அரசியல் சாசனம் கூறியது சனாதன தர்மத்திற்கு எதிரான பிரகடனம் இல்லையா?

சனாதனம் என்றால் நித்தியமானது, அழிவற்றது என்று கூறுவதே அறிவியலுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடை அல்லவா? இந்த கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் பெண் கல்வி சாத்தியம் ஆகி இருக்குமா? சாதாரண அலுவலக ஊழியரில் துவங்கி நீதிபதிகள் வரை பெண்கள் அமர்ந்திருப்பது சனாதன கருத்தியலை எதிர்த்த போராட்டத்தின் விளைவு தானே.

ஆகவே, இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. நீதிபதியின் கருத்துக்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, திரும்பப் பெறப்பட தேவையான நடவடிக்கைகளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPIM Tamilnadu கேட்டுக் கொள்கிறது.



(பெ.சண்முகம்)

மாநில செயலாளர்

Monday, March 3, 2025

டவுட்டா இருக்கே ஆரெஸெஸ்.ரெவி

 


காதலன் வில்லன் காகர்லா சத்யநாராயணா, தன்னால் கொல்லப்பட்டவர்களுக்கு காசியில்  தர்ப்பணம் கொடுக்கும் காட்சியை வைத்து மோடியும் இது போல யாருக்கு தர்ப்பணம் கொடுத்திருப்பார் என்று சில நாட்கள் முன்பு கேட்டிருந்தேன்.

யாருக்கு தர்ப்பணம் செய்தீர் மோடி ? என்ற பதிவின் இணைப்பு இது . . . 

 இப்போது ஆரெஸெஸ் ரெவியே காசியில் குளிக்கும் காட்சியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன்.

 காகர்லா சத்யநாராயணாவுக்கு கொஞ்சமும் சளைக்காத கிரிமினல் ஆரேஸெஸ்.ரெவி. இப்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை சீர்குலைக்கும் வகையில் பல கொலை, பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  356 பிரிவை பயன்படுத்தி தமிழ்நாட்டு அரசை கலைக்க வேண்டும் என்று வேறு சங்கிகள் பேசத் தொடங்கி விட்டனர்.

 அதனால் அதற்கு உதவ ரெவியே பல கிரிமினல் செயல்களை தூண்டி விட்டு அதற்கான பிராயசித்தமாக காசியில் தர்ப்பணம் செய்தாரோ என்று டவுட் வருகிறது. கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்று ஒரு சொலவடை இருப்பது நமக்கு தெரியும். கிரிமினல் வேலைகளை செய்து விட்டு தர்ப்பணம் செய்தால் அந்த பாவம் போய் விடும் என்று சனாதன தர்மத்தில் சொல்லியிருக்கிறதோ என்னவோ!

 பிகு: ஒரு வாரம் முன்னாடி எழுதின பதிவு.

 

Wednesday, January 29, 2025

தமிழக அரசால் உ.பி யில் முடியுமா?

 


தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையால் உத்திர பிரதேச மாநிலத்தின் நகரங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் “ சமூக நீதியின் பெருமை – தந்தை பெரியாரின் தமிழ்நாட்டு மண்” என்று ஹிந்தியில் தந்தை பெரியார் படத்தோடு பேனர் வைக்க முடியுமா?

 பின் என்ன எழவிற்கு சனாதன தர்மத்தின் பெருமை என்று மொட்டைச் சாமியார் படத்துடன் பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும்?

 


எஸ்.வி.சேகர் அப்பாவின் பெயரை தெருவுக்கு சூட்டியதை விட கொடுமை இது.

 

Tuesday, December 17, 2024

தடைகளை தகர்த்து கிருஷ்ணாவுக்கு விருது

 


சனாதனக் கூட்டம் டி.எம்.கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப் படக் கூடாது என்று எத்தனையோ சதிகள் செய்து பார்த்தது. கர்னாடக சங்கீத உலகைத் தாண்டி யாருமே அறியாத ரஞ்சனி-காயத்ரி  சகோதரிகள் முகநூல் மூலம் கலகம் செய்து மூக்குடைபட்டார்கள். மீ டூ குற்றச்சாட்டு காரணமாக மியூசிக் அகாடமியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சித்ர வீணா ரவி கிரண் தான் முன்பு பெற்றிருந்த சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுத்து சர்ச்சையாக்க முனைந்தார். அவருடைய லீலைகள்தான் வெளியாகி அசிங்கப்பட்டார்.

அடுத்து உயர் நீதிமன்றத்தில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் முறையில் உள்ள ஒருவரை பிடித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட வைத்து தடை உத்தரவு வாங்கினார்கள்.

ஆனால் உயர் நீதிமன்ற பெஞ்ச் அந்த தடையை நீக்கி விட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, தன் பெயரில் விருதோ அல்லது பண முடிப்போ கொடுக்கக் கூடாது என்று தன் உயிலில் எதுவும் சொல்லவில்லை என்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெயரில் சங்கீத கலாநிதி விருது பெறுபவருக்கு 2005 ம் ஆண்டு முதல் ஒரு லட்ச ரூபாய் பண முடிப்பு தரப்படுகிறது. இத்தனை நாள் தூங்கிக் கொண்டிருந்தாயா என்று கேட்டு அந்த பேரன் வகையறாவை துரத்தி விட்டார்கள். இத்தீர்ப்பு வந்தது வெள்ளிக்கிழமை காலை.

மத்தியரசின் தலைமை வழக்கறிஞரே வழக்கு நடத்தப் போகிறார். அதனால் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மதியமே உச்ச நீதிமன்றத்தில் முறையிட அப்படி ஒன்றும் இது தலை போகிற அவசர வழக்காக எடுக்கும் அளவிற்கு வொர்த்தில்லை என்று அங்கேயும் துரத்தி விட்டார்கள்.

 

சனாதனக் கூட்டம் முட்டுச்சந்தில் முழித்துக் கொண்டிருக்க டி.எம்.கிருஷ்ணா, கம்பீரமாக சங்கீத கலாநிதி விருதை ஞாயிறு அன்று பெற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக சங்கீத கலாநிதி விருது பெற்ற திருமதி பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் திருமதி சௌம்யா ஆகியோர் மேடையில் இருந்ததே சங்கீத உலகின் ஆதரவுக்கான சான்று.

 

சனாதனக் கூட்டம் ஏன் டி.எம்.கிருஷ்ணாவை எதிர்க்கிறது?

 

முன்பு எழுதிய  “ஒரு விருதும் போலிப் புனிதங்களும்ன்” என்ற பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 

ஒரு விருதும் போலிப்புனிதங்களும்

 


கர்னாடக சங்கீத அளவில் ஒரு குட்டிக்கலகம் நடந்து கொண்டிருக்கிறது. STORM IN A CUP என்று ஆங்கிலத்தில் சொல்வது போல ஒரு கோப்பைக்குள் வீசும் சூறாவளி என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு ஒரு குட்டிக் கலகம்.

சங்கீத வித்வத் சபை என்று அழைக்கப்படுகிற மியூசிக் அகாடமி இந்த ஆண்டு அதன் சங்கீத கலாநிதி விருதை இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு அறிவித்திருப்பதற்கு ஒரு கோஷ்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் தாங்கள் மியூசிக் அகாடமியில் பாட மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். முகநூலிலும் பதிவிட்டுள்ளனர்.

ME TOO புகாருக்கு உள்ளானதால் கச்சேரி நிகழ்த்த அனுமதி மறுக்கப்பட்ட ரவிகிரண் அவருக்கு அளிக்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

பிற்போக்குச் சிந்தனைகளை கதாகாலட்சேபம் வழியாக விதைக்கும் விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர் போன்றோரும் எதிர்த்துள்ளனர். அபஸ்வரம் ராம்ஜி நக்கலடித்து ஸ்லோ பாய்சன் கொடுக்கிறார்.

இத்தனை பேரும் எதிர்க்கும் அளவிற்கு டி.எம்.கிருஷ்ணா விருதுக்கு தகுதியற்ற மொக்கைப் பாடகரா? இசைத்திறன் கொஞ்சமும் இல்லாமல் ரெகமெண்டேஷனில் விருது பெறுகிறாரா?

இல்லை.
நிச்சயமாக இல்லை.

இவர்களின் எதிர்ப்பெல்லாம் இசையால் அல்ல, அதையும் தாண்டியது.

கர்னாடக சங்கீதத்தின் புனிதத்தை சிறுமைப்படுத்தியவராம். 
அதென்ன சிறுமைப்படுத்துதல்?
சபா மேடைகளைத் தாண்டி மீனவக் குப்பங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியது, மற்ற மதக் கடவுள்களைப் பற்றி பாடியது. 

ஐயப்பனைப் பற்றி கே.ஜே.யேசுதாஸ் பாடலாம், காசி விஸ்வநாதர் கோயிலில் பிஸ்மில்லாகான்  ஷெனாய் வாசிக்கலாம். ஆனால் டி.எம்.கிருஷ்ணா வேற்று மதக் கடவுளை பாடினால் தவறாம். 

கர்னாடக சங்கீதம் புனிதமானதா என்ற கேள்விக்கு கே.பாலச்சந்தர், அப்படி ஒரு புடலங்காயும் கிடையாது என்று முப்பத்தி ஐந்து வருடம் முன்பே உன்னால் முடியும் தம்பி படத்தில் சொல்லி விட்டார்.

"என்னமோ ராகம், என்னென்னமோ தாளம், தலையை ஆட்டும் புரியாத கூட்டம்"
என்ற வரியை நிலைக்க வைக்கும் முயல்பவர்கள் இவர்கள்.

"கவலை ஏதுமில்லை, ரசிக்கும் மேட்டுக்குடி, சேரிக்கும் சேர வேண்டும், அதுக்கும் பாட்டு படி"
என்பதற்கு பதற்றமாகி விடுகிறார்கள்.

புனிதத்தை சிறுமைப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டின் பின்னணி இதுதான்.

தியாகராஜரை விமர்சித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியை விமர்சித்தார் என்பது அடுத்த குற்றச்சாட்டு.

தியாகராஜரைப் பற்றி என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் தியாகராஜரைப் போல அன்றாட உணவுக்கு வீடு வீடாக உஞ்சவிருத்தி சென்று வசூலிக்கும் நிலையில் எந்த இசைக்கலைஞரும் இல்லை. "நிதி சால சுகமா?" என்ற பாடலை பாட கூசுபவர்கள்தான் இன்றைய வித்வான் சிரோண்மணிகள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அதிகமாக மார்க்கெட்டிங் உத்திகளால் முன்னிறுத்தப்பட்டவர் என்பதில் உண்மையில்லாமல் இல்லை. அதை அவர் செய்யவில்லை. செய்தவர் அவரது தந்திரக்கார கணவரான சதாசிவம். எங்கள் தோழர் ச.சுப்பாராவ் தமிழாக்கம் செய்த நூலை படியுங்கள் புரியும்.

ர,கா சகோதரிகளின் முகநூல் பதிவு அவர்களின் உண்மையான எரிச்சலை அம்பலப்படுத்தி விட்டது.

ஒரு சமுதாயத்தை அழித்தொழிப்பேன் என்று சொன்ன, அந்த சமுதாயப் பெண்களை இழிவு படுத்திய பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ரா வை இவர் பாராட்டுகிறார்.

பெரியார் மீது சொல்லப்பட்ட குறிப்பிட்ட இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் அபாண்டமானவை. அனந்தகிருஷ்ண்ன் பட்சிராஜன் என்ற நாஜிப் பெரியவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அவதூறு இது. 

மீ டூ சமயத்தில் பட்ட அசிங்கத்திற்கு இப்போது எதிர்வினையாற்றுகிறார் சபலப் பேர்வழி ரவி கிரண். 

டி.எம்.கிருஷ்ணா மீது இவர்களுக்கெல்லாம் வேறென்ன பிரச்சினை?

கலை, கலைக்கு என்ற நிலைக்கு பதிலாக கலை யாவும் மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.

கர்னாடக இசை உலகில் நிலவிய பேதங்களை தன் நூல்கள் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளார். அதிலே செபாஸ்டியனும் சகோதரர்களும் என்ற நூல் மிருதங்கம் உருவாக்கும் கலைஞர்களைப் பற்றியது. அது பல உண்மைகளை சொன்னது.

மத நல்லிணக்கம், மதச் சார்பின்மை ஆகியவற்றை தொடர்ந்து வலியுறுத்துபவர்.

மிக முக்கியமாக 

குடியுரைமைச் சட்டத்திற்கு எதிரான டெல்லி ஷாகின்பாத் போராட்டத்தில் கலந்து கொண்டவர். போராட்ட கீதம் என்றழைக்கப்பட்ட "ஹம் தேகேங்கே (நாம் காண்போமே" பாடலை பல மொழிகளில் பாடியவர், 

இது ஒன்று போதாதா? 

ரஞ்சனி காயத்ரி சகோதரிகளுக்கு மியுசிக் அகாடமி தலைவர் என்,முரளி கொடுத்த பதில் "உங்களுக்கு உள் நோக்கம் உள்ளது" என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆதிக்க சக்திகளின் குரல் இச்சகோதரிகள் வாயிலாக வெளிப்பட்டுள்ளது. அவர்களைப் பாராட்டுபவர்கள் எல்லோரும் அதே சிந்தனை கொண்டவர்கள்தான். 

இப்போது டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக பொங்குகின்ற கர்னாடக இசை வித்வான் சிரோண்மணிகள் யாராவது மகள் ஆப்பிரிக்கரை திருமணம் செய்து கொண்டதற்காக  சுதா ரகுநாதன் ஆபாசமாக வசை பாடப்பட்ட போது, அவருக்கு மேடைகள் மறுக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் அளிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக வாய் திறந்தார்களா?

மேட்டிமைச் சிந்தனைக்கு புனிதப் போர்வை போர்த்தும் போலிகள்தான் இவர்கள்.. . .

சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

Monday, December 16, 2024

ஞானியாயினும் ராஜாவாயினும் !

 


ஸ்ரீவில்லிப்பூத்தூர் கோயிலில் இளையராஜாவுக்கு அவமதிப்பு நடந்துள்ளது.

இளையராஜா இசை ஞானியாக இருக்கலாம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரப்பந்தத்திற்கு இசை வடிவம் கொடுத்திருக்கலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் முதல் பாடலுக்கு உள்ளத்தை உருக்கும்படி மெட்டமைத்திருக்கலாம். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தின் ஒரு நிலையை கட்ட பணம் வசூலித்துக் கொடுத்திருக்கலாம். இன்னும் சில தினங்களில் முதல் ஆசியராக தன் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றலாம். மோடியை அண்ணல் அம்பேத்கரோடு ஒப்பிட்டிருக்கலாம். அதனால் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் இருக்கலாம்.

எதுவாக இருப்பினும் கருவறை கூட அல்ல, அதற்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்திற்குள்ளே கூட  நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை.

தனக்கு நிகழ்ந்ததை அவமதிப்பு என்று கருதாமல் அர்த்த மண்டபத்திற்கு வெளியே அளிக்கப்பட்ட மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். நடந்தது பற்றிய செய்தி வதந்தி என்றும் தன் சுய மரியாதை பாதிக்கப்படவில்லை என்றும் அவரை சொல்ல வைத்துள்ளது.

அப்படி அவரது மனதை ட்யூன் செய்து வைத்துள்ளதுதான் சனாதனத்தின் வெ(ற்)றி.

அதனால்தான் அதனை எதிர்க்க வேண்டும்.                                                                                                

 

Sunday, December 1, 2024

சேட்டுக்கு கோடிகள், சலவைக்காரருக்கோ

 


ஊடகச்சங்கி ரங்கராஜ் பாண்டேவின் காமெடி காணொளி கீழே உள்ளது. 


மகராஜ் ஜி என்று அழைத்த 750 ரூபாய் சம்பளம் வாங்கிய சேட்டை கோடி கோடியாக புரள வைத்த பூஜை, சாமி என்றழைத்த சலவைக்காரருக்கு செய்யப்பட்ட போது நான்கு சலவைக்கடைகள்தான் கொடுத்து அதே தொழிலில்தான் நீடிக்க வைத்துள்ளது.

சேட்டை அவர் என்று மரியாதையுடன் சொல்லும் பாண்டே சலவைக்காரரை அவன், இவன் என்று சொல்கிறாரே, அங்கே பல்லை இளிக்கிறது சனாதனம். ஜாதிய மேட்டிமை புத்தி. 

Monday, November 18, 2024

படையப்பா நீலாம்பரியும் நிர்மலா சீத்தாராமனும்

 


படையப்பா நீலாம்பரி போல ஆணவம் மிக்கவர் நிர்மலா சீத்தாராமன் என்று இந்த பதிவில் எழுதப் போகிறேன் என்று நினைக்காதீர்கள். இது நீலாம்பரி, படையப்பாவிற்கு செய்த சம்பவம் போல நிர்மலா அம்மையாருக்கு நடந்தது என்பதை சொல்லத்தான்.

 சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆர்.எஸ்.எஸ்.ரெவிக்கு  உட்கார நாற்காலி கொடுத்ததை வைத்து ஒரு சங்கி சின்னப்பையன் சனாதனம் சமத்துவத்தை போதிக்கிறது என்று உளறியதை வைத்து நேற்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

 அதை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட படங்கள் கீழே.

 



எப்படி நீலாம்பரி படையப்பாவிற்கு உட்கார நாற்காலி தரவில்லையோ அது போல காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியும் நிர்மலா அம்மையாருக்கும் நாற்காலி தரவில்லை.

 

ஆம்.

 இதுதான் சனாதனம்.

 பெண்களை சமமாக நடத்தாது, அவர்கள்  இரண்டாந்தரப் பிரஜைகள்தான்.

இனியும் அந்த சின்னப்பையன் சனாதனம் சமத்துவத்தை போதிக்கிறது என உளற மாட்டான் என்று ம்புகிறேன்.

 பிகு: நிர்மலா மேடம், நெசமாவே அது நீங்கதானா?

 வழக்கமாக உங்களிடம் தென்படும் சிடுசிடுப்பு, ஆணவமான உடல் மொழி எதையுமே காணோமே! இப்படி பவ்யமா நிக்கறீங்களே!       

 

 

Sunday, November 17, 2024

சனாதனம் சமத்துவம் என்ற சங்கிக்கு சமர்ப்பணம்.

 


ஆட்டுத்தாடி சிருங்கேரி சங்கராச்சாரியாரை சந்தித்த புகைப்படத்தை ரங்கராஜ் பாண்டே “கண்ணில் பட்டது” என்று பகிர்ந்து கொள்ள, பாஜக ஐ.டி விங் மாநிலப் பொறுப்பாளர் சின்னப்பையனோ அந்த கண்ணில் கட்ட புகைப்படத்தை “சமத்துவம் போதிக்கும் சமாதானம்” என்று புளகாங்கிதம் அடைந்துள்ளான்.

 அப்படி புளகாங்கிதம் அடைய அந்த புகைப்படத்தில் என்ன உள்ளது?

 ஆட்டுத்தாடி அமர நாற்காலி கொடுக்கப்பட்டுள்ளது. சங்கர மடத்தில் நாற்காலி கொடுத்ததால் சனாதனம் சமத்துவத்தை கடைபிடிக்கிறது என்று சங்கிகள் சொல்கிறார்கள்.  ஆட்டுத்தாடி கையில் அதிகாரமிருப்பது மட்டுமல்ல, மேட்டுக்குடியையும் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு நாற்காலி கிடைத்திருக்கலாம்.

 


ஆட்டுக்காரனும் மத்திய மந்திரியாக இருக்கும் எல்.முருகனும் காஞ்சி சங்கர மடத்தால் கொல்லைப்புறத்தில் தரையில்தான் உட்கார வைக்கப் பட்டார்கள்.

 ஆகஸ்ட் மாதத்தில் அப்போது எழுதிய பதிவு கீழே உள்ளது.

 சனாதனம் சமத்துவமானது என்று எழுதிய அந்த முட்டாள் சங்கிக்கு அப்பதிவு சமர்ப்பணம்.      

ஆட்டுக்காரனுக்கு ஜமுக்காளம். எல்.முருகனுக்கோ ????

 


விஜயேந்திர சரஸ்வதியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக ஆட்டுக்காரன் புளகாங்கிதத்துடன்  பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ஆட்டுக்காரனின் ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன்.

 அந்த புகைப்படங்களை பார்க்கையில் ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. ஆட்டுக்காரனுக்கு சரியாசனம் தரப்படவில்லை என்பதை விட மடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளோ ஆட்டுக்காரனுக்கு தரிசனம் தரப்படவில்லை. கொல்லைப்புறத்தில் வைத்துத்தான் ஆட்டுக்காரனுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் அளவிற்குமான தகுதிகளோ, அருகதையோ  ஆட்டுக்காரனுக்கு இல்லை போல . . .

 


ஆட்டுக்காரனுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை போலவேதான் எல்.முருகனும் கொல்லைப்புறத்தில் உட்கார வைக்கப்பட்டார். அந்த புகைப்படத்தை தேடி  எடுத்து பார்த்தேன்.

 அப்போதுதான் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தேன்.

 ஆட்டுக்காரன்,எல்.முருகன் இருவரும் வீட்டிற்குள்  அனுமதிக்கப்படவில்லை. இருவரும் கொல்லைப்புறத்தில்   அமர வைக்கப்பட்டாலும்  ஆட்டுக்காரன் உட்கார ஒரு ஜமுக்காளம் போடப்ப்ட்டுள்ளது. ஆனால் பாவம் எல்.முருகனோ தரையில்தான் உட்கார்ந்துள்ளார்.



 ஒரு ஜமுக்காளத்தில்  உட்காரும் அளவிற்குக்கூட எல்.முருகனுக்கு தகுதி கிடையாதா?

 இது தீண்டாமையன்றி வேறில்லை . . .

 

Tuesday, March 5, 2024

ஆர்.என்.ரெவி எனும் கொள்ளையன்

 


ஆளுனர் எனும் அரசியல் சாசனப்பதவிக்கு அருகதையற்ற ஆர்.என்.ரெவி, சனாதன மனு தர்மத்தின் தரகனாக, சனாதனத்திற்கு எதிரான ஆளுமைகளை சனாதனத்தின் ஆதரவளார்கள் என்று கடத்திக் கொண்டுச் செல்லப் பார்க்கிறான்.

திருவள்ளுவர், வள்ளலாரைத் தொடர்ந்து அவன் இப்போது கடத்த முயற்சிப்பது ஐய்யா வைகுண்டரை . . .

ஆனால் அவனுக்கு இருவர் சிறப்பான செருப்படி கொடுத்துள்ளனர்.

ஐய்யா வழி பதியின் தலைமை நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார்.


தமிழ்நாட்டின் சபாநாயகர் திரு அப்பாவு


இதற்கெல்லாம் அந்த ஜந்து கூச்சப்படாது. அடுத்து வேறு ஒரு ஆளுமையை கடத்த முயற்சிக்கும்.

யார் கண்டது!

அது தந்தை பெரியாராகக் கூட இருக்கலாம். 

Thursday, January 18, 2024

சங்கிகளிடம் யாருமே இல்லாததால் . . .

 


ஆட்டுதாடி ரெவி, திருவள்ளுவரையும் சனாதனத்தின் உச்சம் என்று சொந்தம் கொண்டாடியது. இதே ஜந்து கொஞ்ச நாட்களுக்கு முன்பு வள்ளலாருக்கும் சனாதன முத்திரை குத்தியது.

இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

மதவெறி சங்கி, சனாதனவாதிகளிடம் அவர்களுக்கென்று சொல்ல எந்த ஒரு ஆளுமையும் கிடையாது.

சுதந்திரப் போராட்டத்திற்கும் காவிச்சனியன்களுக்கும்  எந்த தொடர்பும் கிடையாது. இருப்பதெல்லாம் மன்னிப்பு கடித புகழ் செல்ஃபி கோழை சாவர்க்கர்தான். அதனால்தான் "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்று எழுதிய, தூக்கு மேடைக்கு போகும் தருவாயில் "லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்' நூலை படித்துக் கொண்டிருந்த பகத்சிங்கை அவர்கள் ஆளாக சித்தரிக்க முயன்றார்கள்.

காந்தி, நேரு போன்ற மிகச்சிறந்த தலைவர்கள் கிடையாது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்த படேலுக்கு "ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி" கட்டியது.

"நான் இந்துவாக பிறந்திருக்கலாம், ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன்" என்று வெளிப்படையாகக் கூறி சனாதனத்துக்கு எதிரான கருத்துக்களை தனது பிரகடனமாக அறிவித்து புத்த மதத்திற்கு தழுவிய அண்ணல் அம்பேத்கரையும் தங்கள் ஆளாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

அந்த வரிசையில்தான் வள்ளலாருக்கும் திருவள்ளுவருக்கும் காவிச்சாயம் பூச முயற்சிக்கின்றனர்.

ஒரு வேளை ஆதாயம் கிடைக்கும் என்றால் நாளை தந்தை பெரியாரைக் கூட புகழ்ந்து தொழத் தொடங்கி விடுவார்கள்.

ஏனென்றால் அரசியலுக்காக பிணத்தைக் கூட தின்னும் கேடு கெட்ட ஜந்துக்கள் சங்கிகள்.

அப்படித்தானே சங்கி ஆட்டுத்தாடி ரெவி!!!

Friday, January 5, 2024

சனாதானம் டிமோவையும் மதிக்காது.

 


அயோத்தி ராமர் கோயிலில் ராமர் விக்கிரகத்தை டிமோ பிரதிஷ்டை செய்யக் கூடாது. அதற்கு அவர் அருகதை இல்லை என்று சுனா சாமி முதலில் சொன்னார். மனைவியோடு வாழவில்லை என்பதை காரணமாகவும் சொன்னார். அஸ்வமேத யாகம் செய்த போது ராமரும் சீதையுடன் வாழவில்லை என்பதும் சீதைக்குப் பதிலாக தங்கத்திலான சிலை ஒன்றை செய்து யாகம் நடத்தினார் என்பது ராமாயணத்தில் வரும் காட்சி. 


ஆக மனைவியோடு வாழவில்லை என்பதெல்லாம் காரணமல்ல. பின்?

இதோ அடுத்த தாக்குதல் பூரி சங்கராச்சாரியாரிடமிருந்து வந்து விட்டது.


சனாதன தர்மம் டிமோ, பிரதமராக இருந்தாலும் மதிக்காது என்பதற்கு இன்னும் ஒரு புதிய உதாரணம் இது.

உண்மையான வீரன், நேர்மையான வழிமுறைகள் மூலம் போர்களை வென்ற சத்ரபதி சிவாஜிக்கு முடி சூட்டவே படுத்தி எடுத்தவர்கள் டுபாக்கூர் டிமோவை மட்டும் விட்டு விடுவார்களா?

சந்தர்ப்பம் கிடைத்த போது தங்கள் ஜாதிய மேட்டிமை வாத விஷத்தை டிமோவிடமும் கக்கி விட்டார்கள்/ 

ஆனாலும் பெரும்பான்மை சங்கிகள் இதனை உணர்ந்துள்ளனரா?

மாலை பார்ப்போம்.


Wednesday, October 18, 2023

மதிமாறன் எனும் கோமாளி . . .

 


இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் இந்திய அளவில் புகழ் பெற்றதற்கு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரைதான் காரணம்.

அம்மாநாட்டை நடத்தியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.

பவா செல்லதுரை எனும் பதிப்பக உரிமையாளர், எந்த காலத்திலோ தமுஎகச அமைப்பில் இருந்தார். தமுஎகச அமைப்பை புளிச்ச மாவு ஆஜான் அவரை முன்னிறுத்தி சிறுமைப்படுத்தும் போது கள்ள மவுனம் சாதிக்கிறார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு,

எப்படி ஜெயமோகன் புளிச்ச மாவின் மூலம் புகழ் பெற்றாரோ, அது போல தோசை குறித்த ஆய்வின் மூலம் புகழ் பெற்றவர் மதி(யற்ற)மாறன். அவர் ஒரு பதிவு போடுகிறார்.


தமுஎகச வுக்கு சம்பந்தமில்லாத தனி நபரின் செயலை வைத்து தமுஎகச எனும் அமைப்பின் மீது வன்மத்தை கொட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அந்தாள் ஒரு கோமாளி என்று பலரும் சொல்வதும் சரிதான் ..

என்ன இவர் தன்னை திக, திமுக வுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அந்த அமைப்புக்களுக்குத்தான் இழிவு தேடிக் கொள்கிறார்.

அய்யா மதி கெட்ட மாறா! "நாங்களாவது சனாதன எதிர்ப்பு மாநாடுதான் நடத்தினோம். நீங்கள்தான் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகிறீர்கள்" என்று திக தலைவர் ஆசிரியர் கே.வீரமணி அவர்கள் தமுஎகச வை பாராட்டியது உமக்கு தெரியுமா?

தெரிந்துதான் வயிற்றெரிச்சலில் உளரினீரா?

அடுத்த முறையாவது மதியோடு எழுத முயற்சிக்கவும்...