Sunday, October 31, 2021

உண்மை வரலாற்றை நாம் பரப்புவோம்.

1921 மலபார் எழுச்சியை இந்திய விடுதலைப் போராட்டம் அல்ல என்று மோடி அரசு சமீபத்தில் அறிவித்தது நினைவிலிருக்கலாம்.

அந்த எழுச்சியில் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்ட விடுதலை வீரர்கள் பற்றி குமரி மாவட்ட மூத்த தோழர் ஷாகுல் ஹமீது விரிவாக எழுதியுள்ளார்கள்.

காட்டிக் கொடுத்த களங்கமும் மன்னிப்பு கேட்ட கறையும் மட்டுமல்ல சங்கிக் கயவர்கள் உண்மையான போராளிகளின் தியாகத்தை மறைக்கவும் மறுக்கவும்தான் முயல்வார்கள்.

அதற்கு வாய்ப்பில்லாமல் உண்மை வரலாற்றை நாம் பரப்புவோம். 

தோழர் ஷாகுல் ஹமீது அவர்களுக்கு நன்றி சொல்லி அவர் பதிவை பகிர்கிறேன்.






 1922,ஜனவரி 20ம் தேதி...

கேரள மாநிலம், மலப்புறம்-மஞ்சேரி சாலையில், வடக்கு திசையில்.......,

#கோட்டக்குந்நு(கோட்டைக்குன்று)..
மூன்று நாற்காலிகளில் மூன்று பேர், கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்ட நிலையில், கைகள் பின்புறமாக வளைக்கப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில்... இந்த மூவரில் நடு நாயகமாக, மெலிந்த உடல் வாகோடு நடுத்தர வயது கொண்ட, #வாரியன்குந்நத்து, #குஞ்ஞு #அகமது #ஹாஜி... மற்றொருவர் #செம்ப்றசேரி #தங்ஙள் மூவரையும் பின்னால் நின்று சுட்டுக் கொல்ல தயார் நிலையில் பிரிட்டிஷ் ராணுவம்..

கணீரென்ற குரலில், #வாரியங்குந்நன் என்று அழைக்கப்பட்ட, #குஞ்ஞு #அகமது #ஹாஜி, ஆங்கிலத்தில்:"நீங்கள் கைது செய்யப்பட்டவர்களை, பின்னால் நின்று முதுகில் சுடுவதை நான் அறிவேன்.. ஆனால், இன்று, என்னை, நேருக்கு நேர் நின்று என்னை கொல்ல வேண்டும் நீங்கள்; இந்த மண்ணுக்காக, போராடிய எனது நெஞ்சில், உங்கள் தோட்டாக்கள் துளைப்பதை நான் காண வேண்டும்; அந்த மகிழ்ச்சியோடு நான் மரணமடைய வேண்டும்"என்று கூறினார்!

ராணுவ அதிகாரிகள், மூவரின் கண் கட்டுகளை அவிழ்த்து, கைகளிலும் கால்களிலும் பிணைக்கப்பட்டிருந்த, சங்கிலியையும் எடுத்து விட்டு, நேருக்கு நேராக நின்று, சுட்டு கொன்றனர்; அத்தோடு நிற்கவில்லை பிரிட்டிஷ் ராணுவம்; மூவரின் உயிரற்ற உடல்களை, விறகு, மண்ணெண்ணெய் பயன்படுத்தி எரித்து சாம்பலாக்கி விட்டு, எஞ்சிய எலும்பு துண்டுகளையும், சாம்பலையும் மூட்டையாகக் கட்டி எடுத்துச்சென்று விட்டனர்!ஒரு வேளை, #வாரியன்குந்நத்து #குஞ்ஞகமது #ஹாஜி பெயரில் நினைவுச் சின்னம் எதுவும் எழுந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை தான்!

இனி.........,
மலப்புறம் பகுதியில், நெல்லுக்குத்து எனும் ஊரில், சக்கிப்பறம்பு என்ற, செல்வச் செழிப்பு மிக்க தறவாட்டில் பிறந்தவர், #குஞ்ஞகமது #ஹாஜி...
இயல்பாகவே, பிரிட்டிஷ் எதிர்ப்பில் திளைத்திருந்த இவரது தந்தையும் குடும்பமும்!

நூற்றுக்கணக்கான ஏக்கர் நில புலன்களும், வணிக நிறுவனங்களும், பிரிட்டிஷ் அரசால் பறி முதல் செய்யப்பட்டு, பெருந்தொகையும் பறிமுதல் செய்ததோடும் தணியவில்லை அவர்களின் வன்மம்!குஞ்ஞகமது ஹாஜியின் குடும்பத்தினர் பலரும், பிரிட்டிஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு, ஹாஜியின் தகப்பனார், சக்கிப்பறம்பன் மொய்தீன் குட்டி ஹாஜி அந்தமானுக்கு நாடுகடத்தப் பட்டார்!இதன் பின்னர், தனது தறவாட்டிலிருந்து குடி பெயர்ந்து, வாரியன்குந்நு எனும் இடத்தில் குடி பெயர்ந்தார்..

மூன்று முறை பம்பாய்/மெக்காவுக்கு குடி பெயர்ந்தார்..

பல முறை, தனது பிறந்த ஊருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை பிரிட்டிஷ் ஆட்சி..

தனது தந்தையார் நாடு கடத்தப்பட்டு, சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட பின்பும், வீறு கொண்டு எழுந்தார்,#வாரியன்குந்நத்து #குஞ்ஞகமது #ஹாஜி..

மலப்புறத்தில், கிலாஃபத் இயக்கத்தின் வழி காட்டியாகவும் தலைவராகவும்,பிரிட்டிஷ் எதிர்ப்பு போராளியாகவும் திகழ்ந்த #ஆலி #முசலியாரோடு இணைந்து பணியாற்றினார்,#வாரியன்குந்நத்து #குஞ்ஞகமது #ஹாஜி...

#ஆலி #முசலியார், 1922-ம் ஆண்டு, கைது செய்யப்பட்டு,1922,பெப்ரவரி மாதம்17ம் தேதி, கோயம்புத்தூர் மத்திய சிறையில் தூக்கிலேற்றி கொல்லப்பட்டார்... (அது தனிப் பதிவாக வரும்)

ஏற நாடு, வள்ளுவநாடு உட்பட 200 கிராமங்களை ஒருங்கிணைத்து, ஏறத்தாழ 750000 வீரர்களைக் கொண்ட ராணுவத்தை அமைத்து, #மலையாள #ராஜ்ஜியம் என்ற ஒரு நாட்டை,1920ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்21ம் தேதி பிரகடனம் செய்தார்,#குஞ்ஞகமது #ஹாஜி!

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள்,#மலையாள #ராஜ்ஜியம், ஏனைய நாடுகள் போலவே, பாஸ்போர்ட், வரிகள், உளவுத்துறை, Signal Systems,கலெக்டர், அமைச்சர்கள் என்று முழுமையான சுதந்திர நாடாகவே திகழ்ந்தது.
ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியின் ராணுவ, உளவுத்துறை, காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மலப்புறத்தில் முகாமிட்டு,1922ம் ஆண்டு, ஜனவரி 5ம் தேதி, தனது தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரம் சுற்றி வளைத்து கைது செய்தனர்,#குஞ்ஞகமது ஹாஜியை....

கைது செய்யப்பட்ட ஹாஜியை, மஞ்சேரிக்கு சங்கிலியால் கட்டி இழுத்து, மேளதாளங்களோடு இழுத்துச் சென்றனர்; போகும் வழியில், அவரது மீசையின் ஒவ்வொரு மயிரையும் பிடுங்கி எடுத்து சித்திரவதை செய்தே இழுத்துச் சென்றனர்!\

ஜனவரி 13ம் தேதி, மலப்புறம் துக்கிடி, கல்லேரியில் நடைபெற்ற ராணுவ விசாரணையில், #குஞ்ஞகமது #ஹாஜிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது!

தீர்ப்பு வழங்ப் பட்ட உடனே, முகம் நிறைந்த புன்னகையுடன், ராணுவ விசாரணை அதிகாரிகளிடம்,"பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்ததற்காக, எங்கள் மண்ணின் விடுதலைக்காக, மரணமடையும் வாய்ப்பை எனக்களித்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனக்கு; இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்ற அனுமதி வேண்டும்" என்றுகேட்டார்!அனுமதி வழங்கப்பட்டு, #வாரியங்குந்நன் ,தனது தொழுகையை நிறைவேற்றினார்.

கைது செய்வதற்கு,சில தினங்களுக்கு முன்னர், ஒரு காவல்துறை அதிகாரி வழியே,கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்; கடிதத்தில்,"போராட்டத்தை கைவிட்டு, சரண் அடைந்தால், கொல்ல மாட்டோம் என்றும், பாதுகாப்பாக, மெக்கா நகருக்கு அனுப்பி வைக்கலாம்"என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது!

கடிதத்தை பார்த்ததும், கடந்த கடவென்று சிரித்துக்கொண்டே,"மெக்கா நகரம் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் தான்; ஆனால் நான் பிறந்தது, #மெக்காவில் #அல்ல!இந்த #ஏறநாட்டு மண்ணில் பிறந்த நான், இங்கேயே மரணமடைந்து, இந்த மண்ணில் கலந்து விடவேண்டும்!இப்படி எல்லாம் என்னை விலை பேச வேண்டாம்"என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்...

1922ம் ஆண்டு, ஜனவரி 20ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், எரித்து சாம்பலாக்கி, மிச்ச சொச்சங்களைக் கூட விட்டு வைக்காமல் எடுத்துச்சென்று விட்டாலும், இப்போது மலப்புறத்தில் கோட்டைப் புறத்தில், கம்பீரமாக எழுந்து நிற்கிறது, #வாரியன்குந்நத்து குஞ்ஞகமது ஹாஜி நினைவு டவுன் ஹால்...




**சற்று நீளமான பதிவு தான்; ஒரு புத்தகமாக வெளி வர வேண்டிய வரலாற்று தகவல்களை இதை விட சுருக்கமாக எழுதுவது சற்றே கடினம்.
#ShahulHameed..#மீள்

உலக மகா நடிப்பு மோடி . . .

 


மோடியின் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு முக்கியக் கொள்கை என்னவென்றால்

திரிசூலம் கொண்டு மூன்று முக்கிய எதிரிகளை ஒழித்திட வேண்டும்.

அந்த மூன்று எதிரிகள்

இஸ்லாமியர்கள்,

கிறிஸ்துவர்கள்,

கம்யூனிஸ்டுகள்.

அப்படி திரிசூலத்தின் ஒரு முனை கொண்டு ஒழிக்கப்பட வேண்டியவர்களின் தலைவரை கட்டி அணைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதையும்

உலக மகா நடிப்பு

என்று சொல்லாமல் வேறெப்படி கூறுவது!!!!

பிகு: இந்த புகைப்படம் ஒரு கேள்வியையும் எழுப்பியது. அந்த கேள்வி நாளை.

"வட போச்சே" அண்ணாமலை

 


மகாவீர் தொடர்புடைய ஏதோ ஒரு நாளை முன்னிட்டு நவம்பர் நான்காம் தேதி சென்னையில்  இறைச்சிக் கடைகள் திறந்திருக்கக் கூடாது. பதப்படுத்தப் பட்ட இறைச்சி கூட விற்கப்படக் கூடாது என்று சென்னை மாநகராட்சி ஒரு ஆணை வெளியிட்டது. அந்த நாள்தான் தீபாவளி என்பதையும் பெரும்பாலானவர்கள் அன்று கண்டிப்பாக தங்கள் உணவில் இறைச்சி பயன்படுத்துவார்கள் என்பது ஆணையிட்ட அதிகாரிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும் அப்படி வெளியிட்டார் என்றால் அவர் அதிகாரி எனும் போர்வையில் ஒளிந்திருக்கும் சங்கி என்றே அர்த்தம். 

சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு வந்ததும் அந்த ஆணை அமலாக்கப்படாது என்று இறைச்சி விற்பனை எப்போதும் போல நடக்கும் என்றும் தமிழ்நாட்டு அரசு அறிவித்து விட்டது.

ஒரு பண்டிகையின் இயல்பான மரபை பாதிப்பது போல ஒரு ஆணை வருகிறது. அதனை ஆட்டுக்காரர் ஏன் எதிர்க்கவில்லை? ஒரு ஜைனப் பண்டிகைக்காக இந்து பண்டிகை பாதிக்கப்படலாமா என்று ஏன் குரல் கொடுக்கவில்லை? எச்.ராசா போன்ற பரம்பரை சங்கிகள் கூட வாய் திறக்கவே இல்லை.  மத்யமர் போன்ற சங்கிக் குழுக்களில் கூட யாரும் இது பற்றி எழுதவே இல்லை. 

திமுகவை திட்ட கிடைத்த நல்ல வாய்ப்பை இவர்கள் ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை?

ஆட்டுக்காரர் முதலில் கண்டித்திருந்தால், என் மிரட்டலால்தான் மாநில அரசு அடி பணிந்தது என்று பீற்றிக் கொண்டிருக்கலாமே! 

ஏன் நழுவ விட்டார்கள்?

இங்கேதான் அவர்களின் உண்மை முகம் வெளிப்படுகிறது. மூடத்தனமாக பாஜகவை ஆதரிக்கும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் இறைச்சி சாப்பிட வேண்டும் என்பதற்காக பாஜககாரர்கள் தங்களுக்கு படியளிக்கும் மார்வாடிகளுக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள்.

மேலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற அவர்கள் கோட்பாட்டின் படி இறைச்சி உணவு என்பது அவர்களுக்கு ஒவ்வாது.

அதனால்தான் தீபாவளி அன்று நீ கறி சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன என்று அலட்சியப்படுத்தினார்கள்.

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

சங்கிகள் அவர்கள் நம்மவர்களும் அல்ல, நல்லவர்களும் அல்ல. 


Saturday, October 30, 2021

கவிதை கேளுங்கள். என்ன குரல் 👍👍👍👍

 



நேற்று மாலை அலுவலகத்திலிருந்து  வீடு திரும்புகையில் ஒரு டீக்கடையில் ஒலித்த பாடல் சில நொடிகள் காதில் விழுந்து வீட்டிற்கு வந்ததும் முழுமையாக கேட்க வைத்தது.


நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள்.

 


யப்பா! வாணி ஜெயராமின் குரல், அது என்ன குரல்!

சூப்பர் குரல்

ஜெய்சங்கர் – விஜயகாந்த் பட்டங்கள் மாறுது.

 


இனி ஜெய்சங்கர் மக்கள் கருணாநிதி என்றும்

விஜயகாந்த் புரட்சிக்  கருணாநிதி என்றும்
 
அன்போடு அழைக்கப்படுவார்கள்.
 
ஆமாம். அதிமுகவின் பொன் விழா ஆண்டு மலரில்
எம்.ஜி.ஆர் ஒரு தேர்ந்த புகைப்படக் கருணாநிதி

 
என்று சொல்லப்பட்டத்தை விரிவு படுத்தினால் இது சரிதானே!
 
இன்னும் எத்தனை இருக்கிறது!
 
ஓவியக் கருணாநிதி
இசைக் கருணாநிதி
சிற்பக் கருணாநிதி
  
 கலைஞர் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் வெறுமனே கருணாநிதி என்று மட்டும் விளித்து அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்த அதிமுக அசிங்கப்பட்டிருக்கிறது.

 எல்லாம் சகவாச தோஷம்!

 பாஜகவுடனான கூட்டணி என்பதால் அவர்களைப் போலவே இவர்களுக்கும் மூளை வேலை செய்வதில்லை

Friday, October 29, 2021

நெகிழ்ச்சியான நினைவுகளை மீண்டும்



 எங்கள் வேலூர்க் கோட்டத் தோழர்கள் கே.அத்தாவூர் ரஹ்மான், உ.கங்காதரன் ஆகியோர் நேற்று மறைந்த மூத்த தலைவர் தோழர் நன்மாறன் அவர்களுடனான தங்கள் அனுபவம் குறித்து நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதை முன்பொரு நாள் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த பதிவுக்கு உரமூட்டுவதாக தமுஎகச அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் முத்து நிலவன் அவர்களின் பின்னூட்டம் அமைந்திருந்தது.

 அந்த பதிவையும் தோழர் முத்துநிலவன் அவர்களின் பின்னூட்டத்தையும் மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 தோழர் நன்மாறன் அவர்களுக்கு மனமார்ந்த   அஞ்சலி.                                                                  





 எங்கள் வேலூர் கோட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் மக்கள் ஒற்றுமை கலை விழா நடைபெறும். அதில் தமிழகத்தின் சிறந்த முற்போக்கு பேச்சாளர்களின் உரைவீச்சு நடைபெறும். இரண்டாண்டுகள் தோழர் என்.நன்மாறன் அவர்கள் எங்கள் கலை இரவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.


வாணியம்பாடியில் மாநாடு. இரவு கலை இரவு. காலை பொது மாநாட்டிலும் தோழர் நன்மாறன் பங்கேற்றார். அவர் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் தோழர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்கிறேன் என்று பிரதிநிதிகள் மாநாட்டிலும் வெகு நேரம் கலந்து கொண்டார். இரவு அவரை கலை இரவு நடக்கும் இடத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை அதாவூர் ரஹ்மான் என்ற தோழருக்கு அளித்திருந்தோம். 

தோழர் அதாவூர் ரஹ்மான் வார்த்தைகள் கீழே.

" கலை இரவு நடக்கும் இடம் ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கும். ஒரு ஆட்டோ பிடித்து வருகிறேன் என்றேன். எதுக்கு தோழர் ஆட்டோவிற்கு தேவையில்லாமல் செலவு செஞ்சுகிட்டு? வாங்க காலாற நடந்து போகலாம் என்று சொன்னார். மொத்த தூரமும் நடந்தே போனோம். போகும் வழியில் வாணியம்பாடி பற்றிய மொத்த விஷயங்களையும்  கேட்டுத் தெரிந்து கொண்டார். ஒரு டீக்கடையில் நின்றபடியே டீ சாப்பிட்டு விட்டு மேடைக்கு வந்தோம். அவருடைய எளிமையையும் பழகிய விதத்தையும்  பார்த்த யாரும் அவரை எம்.எல்.ஏ என்றே நமப மாட்டார்கள்"

தோழர் நன்மாறன் அடுத்து கலந்து கொண்டது விழுப்புரம் மாநாட்டு கலை இரவில். 

சென்னையிலிருந்து நேரடியாக பேருந்தில் வந்து இறங்கியவரை கலை இரவு மேடைக்கு அழைத்து வரும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டவர்கள் கங்காதரன், கணேசன் என்ற தோழர்கள்.

இப்போது தோழர் யு.கங்காதரன் சொன்னதை படியுங்கள்.

"கலை இரவு மேடைக்கு போறதுக்கு முன்னாடி மண்டபத்துக்கு போய் அவரு சாப்பிடட்டும் என்று அங்கே அழைத்துப் போனால் அங்கே உணவு தீர்ந்து போயிருந்தது. ஆனால் அதற்காக அவர் கோபப்படலை. அந்த தெருக் கோடியில ஒரு தள்ளு வண்டியில இட்லி விக்கறாங்க. அதில ஒரு ரெண்டு இட்லி சாப்பிட்டுப் போயிடலாம் என்றார். சரி ரூமுக்கு வந்து முகம் கழுவி ட்ரெஸ் மாத்திக்குங்க என்று சொன்னேன். மண்டபத்தின் வாசலிலேயே ஒரு பைப் இருந்தது. அதைத் திறந்தார். குனிந்த படியே அதில் முகம் கழுவினார். சட்டையை கையாலேயே இழுத்து விட்டுக் கொண்டு சீப்பு இருக்கா என்று கேட்டார். கொடுத்தவுடன் தலை வாரி போகலாம் தோழர் என்று கிளம்பி விட்டார். எம்.எல்.ஏ ங்கற பந்தா கொஞ்சம் கூட இல்லாத மனிதர்"

இந்த இரண்டு நிகழ்வுகளின் போதும் அவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருந்தார். 

நேரடியாக அனுபவித்ததால் அந்த தோழர்கள் இன்றும் அதனை மெய் சிலிர்க்கும் அனுபவமாக உண்ர்கின்றனர்.

தோழர் முத்துநிலவன் அவர்களின் பின்னூட்டம்        

   தோழர் நன்மாறன் எப்போதுமே (எனக்குத் தெரிந்து 25ஆண்டுக்கும் மேலாக) இப்படித்தான் எளிமையின் வடிவம், ஆனால் மேடையேறிவிட்டால் பேச்சில் கிண்டலும் கேலியும் அரசியல் கூர்மையுடன் கேட்போர் அனைவரும் ரசிக்கும்படியாகப் பொங்கிவரும். இது நேற்று முன்தினம் ஏப்ரல்-1 அறந்தாங்கி கலைஇரவு வரை தொடர்வதுதான் அவரது பலம்! புதுக்கோட்டையில் வந்து இறங்கியவரை, ஒரு பெரிய ஓட்டலின் பேரைச் சொல்லி, “காஃபி சாப்பிட்டுப்போவோம் என்என்“ என்றேன். அவரோ “சக்கரையில்லாம ஒரு டீ போதும் தோழர்“ என்றார். சரியென்று ஒரு சாதாரண தேநீர்க்கடை அருகில் நிறுத்தச் சொன்னார். 

அவரைக் காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, தேநீர் வாங்க ஓடினேன். அவர் பின்னாலேயே வந்து, டீக்கடை வாசலில் இருந்த ட்ரம்மிலிருந்து ஒரு குவளை தண்ணீர் பிடித்து முகம் கழுவிக்கொண்டு, தன்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே தேநீர் போடுபவரைப் பார்த்து, “சக்கரைஇல்லாம“ என்றார். நான் கடையில் நின்றுகொண்டிருந்தவர்களிடமாவது இவர்தான் இரண்டுமுறை எம்எல்ஏவாக இருந்தவர் என்று சத்தமாகச் சொல்ல ஆசைப்பட்டேன்.. ஆனால் அவருக்குப் பிடிக்காது என்பதால் மௌனமாக அவருடன் தேநீர் அருந்தினேன். பிறகு அறந்தாங்கிபோய்..அதே மாதிரி நாலு இட்லி.. மேடையேறிவிடடார். அவர் பேச்சு மட்டுமல்லாமல் வாழ்வும் அன்றும் இன்றும் அப்படியேதான். என்என்.களால்தான் நல்ல அரசியல் உயிர்வாழ்கிறது வேறென்னசொல்ல?       

பிகு:

 முகப்பில் உள்ள ஓவியத்தை வரைந்தது ஓவியர் தோழர் ரவி பாலேட்.

 புகைப்படங்கள், விழுப்புரத்தில் நடைபெற்ற கோட்டச்சங்க மாநாட்டு கலை இரவு நிகழ்வின் போது எடுக்கப்பட்டவை.                                        


மேடைக் கலைவாணரின் இறுதி உரை

 


அவர் எளிமையின் அடையாளம்,

போராட்ட உணர்வுக்கு உதாரணம்,

சிரிக்க, சிரிக்க பேசி சிந்திக்க வைப்பதில் முன்னோடி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என்.நன்மாறன் அவர்களுக்கு செவ்வணக்கம்.

அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அன்று அவர் ஆற்றிய ஒரு மிகச் சிறிய உரையை மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் தோழர் ஒருவர் ஒரு குழுவில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அந்த காணொளி இங்கே.



ஒரு நிமிட உரைதான். அதிலும் கூட தேசத்தின் மீதும் மக்கள் மீதும் அவர் கொண்டுள்ள நேசம் வெளிப்படுகிறது.


Thursday, October 28, 2021

மொட்டைச்சாமியாரின் மனதின் குரல்

 


மோடி மந்திரி மகன் காரேற்றி கொன்ற கொடூர சமபவத்திற்கு சாட்சி சொல்ல ஏன் ஆட்கள் முன்வரவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு மொட்டைச்சாமியாரின் மனசாட்சி என்ன பதில் அளித்திருக்கும் என்ற சிந்தனையில் எழுதியதே மேலே உள்ளது.               

 


கோழை சாவர்க்கர் மன்னிப்பு மகாத்மியம்

 



 கோழை சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதே மகாத்மா காந்தி சொன்னதால்தான் என்றொரு புதிய கட்டுக்கதையை சீனியர் சங்கி ராஜ்நாத்சிங் அவிழ்த்து விட்டார். அந்த பொய்க்கதையை தூள் தூளாக தகர்த்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத்.

 அந்த ஆங்கிலக் கட்டுரையின் முக்கியமான சில பகுதிகளை மட்டும் இங்கே தமிழில் தந்துள்ளேன். முழுமையான கட்டுரையையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். அதனை மின்னஞ்சலில் அனுப்பிய தோழர் விமலாவித்யா அவர்களுக்கு நன்றி.



 வி.டி.சாவர்க்கர் குறித்த ஒரு நூல் வெளியீட்டின் போது திரு ராஜ்நாத்சிங் “சாவர்க்கர் குறித்து பல பொய்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. அவர் சிறையிலிருந்த போது பல மன்னிப்புக்கடிதங்களை எழுதினார் என்று பரப்பப் படுகிறது. மகாத்மா காந்திதான் அவரை மன்னிப்புக் கடிதங்களை எழுதச் சொன்னார்” என்று கூறினார்.

 ஆக முதல் முறையாக பாஜகவின் ஒரு மூத்த தலைவர், அவர்களின் பெருமிதச் சின்னம் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு ஏராளமான மன்னிப்புக் கடிதங்களை எழுதியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

 அந்தமான் சிறையின் மனிதர்கள் வாழ முடியாத மோசமான சூழலையும் சித்திரவதைகளையும்  தீரத்துடன் சந்தித்த எண்ணற்றவர்கள் மத்தியில் அவற்றை தாங்க முடியாமல் கருணைக்காக கதறிய தங்களின் நாயகன் மீதான கறையை துடைத்திட பிரிட்டிஷாரால் 11 முறை சிறையிலடைக்கப் பட்ட மகாத்மா காந்தியின் பெயரை துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

 காந்தி தன் விடுதலைக்காக ஒரு முறையாவது பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளாரா?

 சாவர்க்கரும் இந்துத்துவாவும் குறித்த நூலில் ஏ.ஜி.நூரணி சாவர்க்கரின் கருணை மனுக்கள் பற்றி விரிவாகவே எழுதியுள்ளார். தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து கண்டெடுத்த ஆவணங்களை வைத்து “சாவர்க்கர் ஒன்றல்ல, பல கருணை மனுக்களை அனுப்பியுள்ளார் என்பதை சொல்கிறார்.

 பிரிட்டிஷ் அதிகாரிகளை கொலை செய்தது, கொலை செய்ய தூண்டியது ஆகியவற்றுக்காக கைது செய்யப்படும் சாவர்க்கர் 1911 ல் அந்தமான் சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

 அவர் கைதான சில மாதங்களிலேயே 1911 ல் முதல் கருணை மனுவை அனுப்புகிறார். அந்த கடிதம் ஆவணக் காப்பகத்தில் இல்லை. 14.11.1913 அன்று இரண்டாவது கருணை மனுவை அனுப்புகிறார். அந்த மனுவிலே 2011 ல் அனுப்பிய முதல்  கடிதம் பற்றி குறிப்பிடுகிறார். அந்த கடிதத்தில் அரசின் கருணைக்காக இறைஞ்சுகிறார். அரசு என்ன விரும்புகிறதோ அந்த பணியை செய்ய தான் தயாராக இருப்பதாக உறுதியளிக்கிறார்.

 1911 லும் 1913 லும் சாவர்க்கர் கருணை மனு அனுப்பிய காலகட்டத்தில் காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். 1915 ல் தான் அவர் இந்தியா திரும்பினார். அப்படி இருக்கையில் அவர் எப்படி கருணை மனு தரச் சொல்லி சாவர்க்கருக்கு அறிவுறுத்தியிருக்க முடியும்? ராஜ்நாத்சிங் சொல்வது பொய்யென்பது இதிலேயே அம்பலமாகி விட்டது.

 காந்தி அவர்கள் குறித்த ஒரு தொகுப்பில்தான் 1920 ல் சாவர்க்கரின் இளைய சகோதரர், தன் இரு மூத்த சகோதரர்களை சிறையிலிருந்து    விடுவிக்க வழி காட்டுமாறு காந்திக்கு கடிதம் எழுதுகிறார்.   

 காந்தி அனுப்பிய பதிலில் “உங்களுக்கு வழி காட்டுவது என்பது கடினமானது. இருப்பினும் வழக்கு விபரங்களை தொகுத்து உங்கள் சகோதரர்கள் மீதான குற்றங்கள் அரசியல் காரணமாகவே செய்யப்பட்டது” என்ற குறிப்பை வேண்டுமானால் அனுப்பி வையுங்கள்” என்று எழுதுகிறார்.

 ஆனால் சாவர்க்கர் அடுத்து அனுப்பிய கடிதம் காந்திஜியின் வழிகாட்டுதல் படி அல்ல. மாறாக இங்கிலாந்து ஆட்சிக்கு தன் விசுவாசத்தை வெளிப்படுத்தும் கருணை மனுதான். உங்களுக்கு உபயோகமுள்ளனாக செயல்படுவேன் என்ற உறுதிமொழிக் கடிதம்தான்.

 காந்தி அளித்த வழிகாட்டுதலுக்கும் சாவர்க்கர் அனுப்பிய கருணை மனுவுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது.  உண்மை இப்படி இருக்கையில் காந்திஜியின் வழிகாட்டுதல்படிதான் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார் என்று சொல்லி ராஜ்நாத்சிங், காந்தியை இழிவு படுத்துகிறார்.

 அந்தமானிலிருந்து விடுதலை பெற்றபின்பு சுதந்திரப் போராட்டத்திலிருந்து சாவர்க்கர் விலகித்தான் இருந்தார் என்ற உண்மையால் அவர் மீதான களங்கத்தைத் துடைக்க ராஜ்நாத்சிங் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

 அதே நிகழ்வில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் சர்சங்க்சாலக் மோகன் பகவத் இன்னும் ஒரு படி மேலே சென்று சாவர்க்கர் எப்போதுமே முஸ்லீம்களுக்கு எதிராக இருந்தது கிடையாது என்றும் அவரது கூற்றுக்கு சாட்சியாக சாவர்க்கர் உருதுவில் கஜல் பாடல்களை எழுதியுள்ளார் தெரியுமா என்று கேட்கிறார்.

 இதன் மூலம் சாவர்க்கர் முன்வைத்த,  பிரிவினையை ஊக்குவிக்கும் இந்துத்துவா கொள்கையின் உண்மை முகத்துக்கு முகமுடி அணிவிக்கப் பார்க்கிறார்கள். இந்துத்துவா என்பது ஒரு அரசியல் கோட்போடே தவிர அதற்கும் மத நம்பிக்கைக்கும் தொடர்பே கிடையாது.

 1935 ல் இந்து மகா சபா கூட்டத்தில் தலைமையுரை நிகழ்த்திய போதுதான் சாவர்க்கர், முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இரு தனித்தனி நாடுகள் வேண்டுமென்பதை முன்வைக்கிறார். இங்கிலாந்து ஆட்சியாளர்களின் பிரித்தாளும் கொள்கைக்கு வசதியாக இது அமைந்தது.

 யாருடைய தந்தை பூமியாக, புனித பூமியாக இந்த மண் உள்ளதோ அவர்களே இந்திய அன்னையின் குழந்தைகளாக இருக்க முடியும் என்று தேசியத்தோடு மதத்தை இணைப்பதுதான் இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையாக உள்ளது. இதன் மூலம் அவர் இந்து ராஷ்டிரம் என்று அவர் கருதும் இந்தியாவில் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் குடிமக்களாக இருக்க முடியாது.

 இந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்தான் காந்திஜியைக் கொன்றார்கள். இன்று ஆட்சியில் உள்ளவர்களும் இந்த சித்தாந்தத்தினை உயர்த்திப் பிடிக்கிறார்கள். இன்னும் எத்தனை முறைதான் அவர்கள் காந்தியைக் கொல்வார்கள்?

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

Opinion: On Savarkar And Gandhi, Rajnath Singh's Lie

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Brinda Karat

+++++++++++++++

October 14, 2021

 

+++ Shri Rajnath Singh, on the occasion of the release of a book on VD Savarkar said, "Lies are spread about Savarkar repeatedly. It was spread that he filed many mercy petitions seeking his release from jails. It was Mahatma Gandhi who asked him to file the mercy petitions...."

 

So here we have, perhaps for the first time, a senior leader of the BJP admitting that their icon Savarkar, had in fact written mercy petitions to the British.

 

To whitewash the contrast of their icon who cravenly begged for mercy compared to the heroes of the freedom struggle who braved the torture and inhuman conditions of the jail in the Andamans in their courageous defiance of British rule, the BJP now wants to invoke the name of Gandhi. Gandhi-ji himself was arrested eleven times by the British.

 

 Did he make a single apology to the British to be let off?

 

Let's go by the pithy saying: never argue about matters of facts - or another - search for truth from facts.

 

Those wanting to know facts may like to study the highly informative, educative, meticulously-researched writings of AG Noorani on the subject of Savarkar.

 

 As Noorani points out in his book Savarkar and Hindutva, and also in his essay Savarkar's Mercy Petition, which he successfully unearthed from the National Archives of India, Savarkar wrote not one but several petitions of mercy to the British.

 

He was arrested by the British on separate charges of murder and abetment to murder of British officers. He was incarcerated in the Andamans jail in June 1911.

 

Savarkar's first petition for mercy was sent within a few months of his arrest. Although the text of that 1911 petition is not available, he referred to it in his second petition to the British authorities on November 14, 1913.

 

 He wrote "I remind your Honour to be so good as to go through the petition for clemency I had sent in 1911..." and further, "I am ready to serve the Government in any capacity they like...the mighty alone can be merciful and therefore where else can the prodigal son return but to the parental doors of the Government..."

 

These petitions actually pledged the offender to serving the British. Between 1911 and 1913, when these two mercy petitions had been written by Savarkar, Gandhi-ji was in South Africa.

 

He returned to India only in 1915. How then could he have advised Savarkar to plead for mercy? These facts prove that Rajnath Singh's claim is utterly false.

 

In 1914, Savarkar again asked for mercy, this time promising he would serve the British in any capacity they chose. He also asked for clemency for all political prisoners.

 

He believed a general amnesty would help his own release and that of his brother. He reiterated this demand in 1917. Thus there were at least four mercy petitions, three of them assuring full support to the British, signed by Savarkar before any contact had been made with Gandhi regarding their case.

 According to material published in the Collected Works of Gandhi, it was only in January 1920 that Gandhi received a letter from the third Savarkar brother pleading for advice on what should be done to get his two brothers released.

 

Gandhi's reply was clear enough. He wrote "I have your letter. It is difficult to advise you. I suggest, however, your framing a brief petition setting forth the facts of the case bringing out in clear relief the fact that the offence committed by your brother was purely political."

 

What Savarkar wrote to the British was not at all what Gandhi advised. On the contrary, it was (once again) cringe-worthy, promising the British utmost loyalty and a pledge to work for the British. He wrote that his release would "render me personally attached and politically useful".

 

It is an insult to Gandhi's memory to distort the note written by Gandhi to claim that Savarkar's actions were on Gandhi's advice. They had nothing in common.

 

Moreover, the point to be noted is that these mercy petitions were no ordinary ones. It was not unusual for prisoners to plead for clemency on health or humanitarian grounds.

 

This would enable them to get out of jail. Many prisoners were in fact released by the British on such grounds. But Savarkar's mercy petitions pledged allegiance to the Crown and indeed promised to work for the British. And on his release in 1924, this is exactly what he did.

 

From his first mercy petition in 1911, describing himself as a "son" of the British Government, to his promise in 1920 to be politically useful to a colonial power, Savarkar's distance from the values of India's freedom struggle cannot be bridged by manufacturing history or in distorting it as was sought to be done by Rajnath Singh.

 

It seems that he spoke on the basis of a biased RSS briefing. The RSS, as we know, is like a Union Minister in a Ministry of Defence of Untruths to obfuscate truth and facts.

 

Mohan Bhagwat, the RSS chief, was also present on the occasion. He made the claim that Savarkar was never anti-Muslim, the evidence of which was his writing ghazals in Urdu!

 

The highly-divisive Hindutva concept and ideology propagated by Savarkar is thus sought to be whitewashed. Hindutva is a political concept which has nothing to do with religious beliefs.

 

 As is well-known, it was Savarkar who, in his Presidential address to the Hindu Mahasabha in 1935, first described Muslims and Hindus as two separate nations. This suited the British policy of divide and rule.

 

The core of the ideology links religion with nationalism on the theory that only those for whom the fatherland or pitrbhumi is also the holy land or punyabhumi can be accepted as children of mother India, thus effectively excluding Muslims and Christians from being citizens of what he considered India to be the Hindu nation or rashtra.

 

Gandhi-ji was killed by those who were inspired by this ideology. Today that ideology is being glorified by those in power. How many more times will he be killed?

++++++++++++++++++++++++++++++++++++

Brinda Karat is a Politburo member of the CPI(M) and a former Member of the Rajya Sabha.

+++++++++++++++++++++++++++++++++++

Posted by : R.Vimala Vidya