Saturday, August 22, 2020

இன்றுதான் வினாயகருக்கு விடுதலை

 

ரசாயனப் பூச்சிலிருந்து விடுதலை. 

படுதாவை தொங்க விட்டு வண்ண திரவம் குடிக்கும் காட்சியை பார்ப்பதிலிருந்து விடுதலை. 

ஓயாமல் ஒலிக்கும் குத்துப் பாட்டுக்களை கேட்டு காதுகள் புண்ணாவதிலிருந்து விடுதலை. 

வீட்டில் மட்டும் வழிபடும் உண்மையான பக்தர்களுக்கு மட்டும் அருள் பாலித்தால் போதும் என்றொரு விடுதலை. 

டாஸ்மாக் மணம் சூழ போலீஸ் பாதுகாப்போடு வழியெங்கும் செல்வதிலிருந்து விடுதலை. 

கலவரங்களோடு இணைத்து தன் பெயர் சொல்லப்படுவதிலிருந்தும் விடுதலை. 

இறுதியாய் தடிகள் கொண்டு நொறுக்கப்படுவதிலிருந்தும் விடுதலை. 

வினாயகர் நிம்மதியாய் இன்று விடுதலைக் காற்றை சுவாசித்திருப்பார்.


1 comment: