Saturday, May 16, 2020

செவ்வணக்கம் தோழர் கே.வி



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்ட தோழர் கே.வரதராஜன் இன்று இயற்கை எய்தினார்.

இயல்பாக எல்லோரோடும் பழகக் கூடியவர். நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சின் மூலம் அனைவரையும் கட்டிப் போடக்கூடியவர்.

2006 ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது குடியாத்தம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.  திமுகவின் தலைவர் திரு துரைமுருகன் பேசுகிறார். அபாரமான பேச்சு. கடைசியாக பேசிய தோழர் கே.வி யின் உரை அவரையும் மிஞ்சுவதாக அமைந்திருந்தது.

ஏ.ஐ.ஐ.இ.ஏ குடும்பத்திற்கும் தனிப்பட்ட இழப்புதான். தஞ்சைக் கோட்டச் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட தோழர் கே.லட்சுமணன் அவர்களின் இளைய சகோதரர் தோழர் கே.வி.

நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத சூழலை கொரோனா உருவாக்கியது இன்னொரு துயரம்.

செவ்வணக்கம் தோழர் கே.வி

1 comment: