Friday, May 8, 2020

சாக ஆயிரம் வழிகள்




உழைப்பைச் செலுத்தி
ஊதியம் பெற்று
உவப்பாய் வாழ
வழிகள் இல்லை இங்கே,
இருந்த சொற்பமும்
ஊரடங்கு மூலமாகவும்
அடை பட்டு கிடக்கின்றன.

செல்லா நோட்டெனச் சொல்லி
வீதியில் அலைய விட்டு
இறப்பிற்கு புது வழி
கண்டறிந்த நாடு இது.

நோய்த் தொற்றுமுன்பே
பசி எனும் பெரும் பிணி
தொற்றி இறக்க
இங்கே வழியுண்டு.

நடையாய் நடக்க வைத்து
சோர்விலேயே மடிந்து போக
இங்கே வழியுண்டு.

மதுக்கடையை
திறக்க வைத்து
போதை வழி குற்றங்கள்
உயிர் குடிக்கும் காட்சிகளும்
ஏராளமாய் இங்குண்டு.

எங்களை ஏற்றிச் செல்லாத
ரயில் எங்கிருந்து வருமென்று
நம்பிப் படுத்தவர்கள்
ரயிலேறி மரணிக்கலாம்
என்ற புது வழி இன்று.

வாழ வழி மறுத்து
சாக வழி உருவாக்கும்
இதுதான் புதிய இந்தியா


No comments:

Post a Comment