Wednesday, May 13, 2020

மாறுதலுக்காக – மனம் விட்டு சிரியுங்கள்


தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து சுட்டது.

நான் மனதாற சிரித்தேன். நீங்களும் சிரிக்க வேண்டும் என்பதற்காக பகிர்ந்து கொள்கிறேன்.


  
#இத #எழுதுனவன் #ராகுல் #வெறியனாத்தான் #இருக்கணும்

ராகுலும் மோடியும் பாலைவனத்தில் வழி தவறி போய்ட்டாங்க.. 

இரண்டு பேரும் சாப்பிட்டு இரண்டு நாள் ஆனதால் பசி தாங்க முடியல

நடந்து போனபோது ஒரு மசூதி கண்ணில் படுது.. 

மோடி சொன்னாப்ல, நாம முஸ்லிமா நடிச்சு அங்க இருந்து சாப்பாடு கரெக்ட்  பண்ணுவோம்னு... 

நான் முகமது, நீ அஹமது ன்னு சொன்னாப்ல

ராகுல் அதுக்கு ஒத்துக்கல.. என்னோட அடையாளம் ராஜிவ் மகன்.. மாத்திக்க மாட்டேன் னு சொல்லிட்டாரு  

பேசிக்கிட்டே நடக்குறப்ப மசூதி வந்தாச்சு

இமாம் வெளிய வந்து அவங்கள நீங்க யாருன்னு விசாரிச்சார்.. 

நான் ராகுல் காந்தி னு சொன்னார்.. 

ராகுலுக்கு உடனே சாப்பாடும் தண்ணியும் கொடுத்தார்... 

மோடி தன்னோட பெயரை முஹம்மது ன்னு சொன்னாப்ல

உடனே இமாம் சொன்ன பதில் கேட்டு மோடி மயங்கி விழுந்துட்ட்டாப்ல.. 

அது... 

அடடே நோன்பாளி... இருந்து சாயங்காலம் நோன்பு தொறந்துட்டுதான் போகணும்...

Kanagraj Kanagu பதிவு


1 comment: