Friday, May 1, 2020

எந்நாளும் எதையும் மறவோமே!!!


இப்படி ஒரு மே தினத்தை இது வரை கண்டதில்லை.

மே தினப் பேரணிகள் கிடையாது.
மே தினப் பொதுக்கூட்டங்கள் கிடையாது.
மே தினக் கொடியேற்றங்களைக் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தோழர்களைக் கொண்டே நடத்த வேண்டிய சூழல்.

தனி மனித விலகலை கடை பிடிக்க வேண்டியும் ஊரடங்கு உத்தரவை மதிக்க வேண்டியும் உழைப்பாளர் தின நடைமுறைகளை தொழிலாளி வர்க்கம் மாற்றி அமைத்துள்ளது.

நரியின் கண் இரையின் மீதே என்பது போல இந்த சோதனையான சூழலிலும் கூட ஆளும் வர்க்கம் தன் முன்னுரிமைகளாக 

முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்தல்,
தொழிலாளிகளை தாக்குதல்

என்பற்றையே கொண்டுள்ளது.

பெரும் செல்வந்தர்களுக்கு கூடுதல் வரி விதிக்கலாம் என்று ஆலோசனை சொன்ன இளம் ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையை பாய்ச்சுகிற மத்தியரசு

தன் ஊழியர்களின் அகவிலைப் படி உயர்வை பறித்துள்ளது.

நிதிப்பற்றாக்குறை என்று புலம்பிக் கொண்டே புதிய நாடாளுமன்றக் கட்டிடம், ராஜ பாட்டை என்று ஊதாரித்தனச் செலவுகளை தொடர்ந்து கொண்டே உள்ளது.

இதையெல்லாம் தொழிலாளி வர்க்கம் எந்நாளும் மறவாது.

தனக்கு துரோகம் இழைப்பவரை எந்நாளும் மறவாது, மன்னிக்காது.
சரியான நேரத்தில் கணக்கு தீர்க்கும்.

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த தியாகிகளின் நினைவு வழிகாட்டும். 

அனைவருக்கும் புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்




1 comment: