Tuesday, May 19, 2020

பாஜக புற்றுரை நாகம் - கரு.நாகராஜன்


கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களை பாஜகவின் கரு.நாகராஜன் இழிவு படுத்திய காணொளியைப் பார்த்தேன்.

அதில் வியப்பதற்கும் அதிர்ச்சியடைவதற்கும் ஏதுமில்லை.

நாக்பூர் பீடமே பெண்களுக்கு எதிரான மையம்தான். அதைச் சேர்ந்த அனைவருமே பெண்களுக்கு எதிராக விஷத்தை கக்கும் நாகப்பாம்புகள்தான். 

குஜராத் அகதிகள் முகாமை குழந்தை உற்பத்திச்சாலைகள் என்று சொன்ன கேவலமாக சொன்னவரை பிரதமராகக் கொண்ட கட்சியின் மற்ற உறுப்பினர்கள் மட்டும் யோக்கியமானவர்களாகவா இருப்பார்கள்? 

வேலைக்குப் போகும் பெண்களை இழிவு படுத்திப் பேசிய மோகன் பகவத், 
வேலைக்கும் போகும் பெண்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்று சொன்ன குருமூர்த்தி,
ஊடகக்காரர்களை இழிவு படுத்திய எஸ்.வி.சேகர்,
எப்போதும் ஆபாசமாகவே பேசும் எச்.ராசா, நாராயணன் என்று அக்கட்சியில் அனைவருமே பெண்களை இழிவுபடுத்துபவர்கள்தான்.

அவர்களை ஆதரிக்கிற ஜெமோவும் இவர்களுக்கு சளைத்தவர் அல்ல.
அடுத்தவர் பதிவுகளில் அவசியமின்றி மூக்கை நுழைக்கும் மாலன் இப்போது மட்டும் கள்ள மவுனம் சாதித்து தன் காவி நிறத்தை பாதுகாத்துக் கொள்கிறார்.

இது போன்ற சர்ச்சைகள் வரும் போதெல்லாம் சங்கிகளின் எதிர்வினைகள் எல்லாம் ஆபாசத்தில் முக்கி எடுக்கப்பட்டவையாக இருக்கும்.

எனவே 

கரு.நாகராஜன் மட்டும் கண்டிக்கப்பட வேண்டியவர் அல்ல.

பாஜக எனும் பாம்புப் புற்றே இடித்து நொறுக்கப்பட வேண்டிய ஒன்று.

No comments:

Post a Comment