Monday, May 25, 2020

வெஜிடேரியன் கொரோனா - ராஜ குரு மூர்த்தி நடுக்கம்


கீழே இருப்பது ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமசந்திரன் அவர்களின் முகநூல் பதிவு.


வெஜிடேரியன் கொரோனா
சென்னை மாதாவரத்துக்கு அருகில் வெஜிடேரியன் நகர் ஒன்று இருக்கிறது. அங்கு வெஜிடேரியன்கள் மட்டுமே மனை, வீடு வாங்கவோ குடியிருக்கவோ முடியும். சவுக்கார் பேட்டையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இஸ்ரேலுக்குச் சென்றிருந்த போது அங்குள்ள ஒரு வெஜிட்டேரியன் கிராமத்தினால் கவரப்பட்டார். அதே போல் 1990இல் அவர் உருவாக்கியதுதான் இது. வெஜிடேரியன் கிராமம் என்று அறியப் பட்டிருந்த இந்த இடம் சென்னை மாநாகராட்சி எல்லைக்குள் வந்த போது வெஜிடேரியன் நகரானது. (ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா)

நிற்க,

இந்த நகர் இப்போது கொரோனா தடுப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்திதான். யார் எந்த நோயினால் பாதிக்கப் பட்டாலும் மனிதர்கள் இப்படித்தான் உணர்வார்கள்.

ஆனால் நான்-வெஜிடேரியன் உணவினால்தான் கொரொனா பரவுகிறது என ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடக்கிறது. வெஜிடேரியன் உணவு சாப்பிட்டால் கொரோனா வராது என ராஜகுருமூர்த்தியே சொல்லியிருக்கிறாராம்.

குரு மூர்த்தி உடனே அங்கு குடியேறி நம் அச்சத்தைப் போக்க வேண்டுமென்று ரம்ஜான் தினத்தன்று பிரியாணி வெறியர்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்!


No comments:

Post a Comment