Thursday, May 28, 2020

எம்பி காடியே! அச்சா!

கோவைத் தோழர் கோவிந்தராஜ் ராமசாமி அவர்களின் பதிவு இது.
சூப்பர் தோழர் பி.ஆர்.என்.

படித்தவுடன் நீங்களும் சொல்வீர்கள்


திக்-திக் கடைசி 10நிமிடங்கள்.

சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு  மூட்டை முடுச்சுகளுடன் மூன்று அசாம் மாநில தொழிலாளர்கள் வாயிலருகே வந்து நிற்க .


அப்போது அங்கு வந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் PR நடராஜன் விசாரித்தார் .



இவர்களில் ஒருவர் தமிழ் அசாமி கலந்த மொழியில் இன்று அசாம்செல்லும் ரயிலுக்கு இங்கு அனுப்பி வைப்பார்களாம் கேள்விபட்டுவந்தோம் எப்படியாவது அனுப்பிவையுங்கள் என்றனர்.

இதை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிஐடியு கோவைமாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு கரகரத்த குரலில் தோழரே அசாம் வண்டி கிளம்பிடுச்சா என்றார்.

அதற்கு அவர் இப்போது தான் அனைவரையும் வழி அனுப்பி வைத்தேன் இருந்தாலும் என்றார் சம்மந்தப்பட்ட உயர்அதிகாரிகள் 5 நிமிடம் வண்டிநிற்கும் என்றார் . 

அவரும் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டார் .

நமது தோழர் மூவரை அழைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துவரலாம் என்றார்.


இருப்பது ஐந்து நிமிடம் இடையில் போலீஸ் தடுப்பு இருக்கும் . தான் பயன் படுத்தும் காரில் ஓட்டுனர்தோழர் ஆனந்தை அனுப்புகிறேன்.


உடன் சிபிஎம் அலுவலக ஊழியர் தோழர் மூர்த்தியும் உதவிக்கு உடன்வருவார் என்று கூறி அசாம் தொழிலாளர்கள் மூவரையும் காரில் ஏற்றிக்கொண்டு விரைந்து சென்று ரயில் நிலையம் வந்தனர்.

அப்போது 3நிமிடங்கள்மட்டுமே எஞ்சி இருந்து அதி காரியிடம் எம்பி அனுப்பி தொழிலாளர்கள் என்றதும் ஆதார் நகலை பரிசோதித்து அனுப்பினர். 

மேலே சென்று பார்க்கும்போது அசாம் ரயில் பயணத்தை துவங்கி நகர்கிறது.


அங்கிருந்த அதிகாரிகள் உடனே ஜல்தி செலோ ஜல்தி செலோ என்று ரயிலில் ஏற உதவினர் .அப்பாட என்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இருக்கையில் அமர அருகில் இருந்தவர்கள் விசாரிக்க நடந்ததை கூறினர் .

அழைத்து வந்தவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டி போன் செய்தனர். அப்போது நீங்கள் ரயில்நிலையம் வந்தது எம்பி.அவர்கள் பயன்படுத்தும் வாகனம்  அவர்தான் ஏற்பாடு செய்தார் என்றார்.

 வியந்து "எம்பி காடியே அச்சா!" என்று நன்றி தெரிவித்தனர்.


இதுதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செயல்பாடு!

No comments:

Post a Comment