Tuesday, May 26, 2020

மோடி தொடர்வாரா? அனுமதிப்பார்களா?



இந்த வருடம் ரம்ஜான் நோன்பு தொடங்கிய போது முதல் முறையாக நரேந்திர மோடி அதற்கான வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட சங்கிகளின் வெறித்தனத்தால் அரேபிய உலகம் கடுப்பில் இருந்த காலம் அது.

இப்போது முதல் முறையாக ரம்ஜான் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



அரேபிய மற்றும் வங்க தேச அதிபர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தனித்தனியே பதிவிட்டுள்ளார்.

"எதிர்காலத்திலும் இதனை தொடர்வீர்கள் என்றும் உங்கள் கட்சிக்காரர்களின் வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பீர்கள் என்றும் நம்புகிறேன்" என்று அந்த ட்வீட்டிற்கு பின்னூட்டம் அளித்துள்ளேன்,

சங்கிகள் என்ன எதிர்வினையாற்றப் போகிறார்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

ஏனென்றால்

"ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்காக உங்களை பிரதமராக்கவில்லை" என்றும் அதற்கு மேலும் (அந்த எழவை சொல்ல நான் விரும்பவில்லை) காலுராம் குஜ்ஜார் என்ற சங்கி பதில் ட்வீட் போட்டுள்ளார். பலரும் கண்டித்த பிறகு, அந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment