Friday, May 29, 2020

என்ன செய்ய உத்தேசம் மோடி?




தடம் புரண்ட ரயில்களை பார்த்துள்ளோம்.
தடம் மாறிய ரயில்கள் உங்கள் சாதனை.

பொம்மை வைத்து விளையாடிய குழந்தை,
தாயின் சடலத்தோடு விளையாடுகிறது.

உழைத்துச் சிவந்த கரங்களுடையோர்,
நடந்து நடந்து சிந்திய குருதியில்
சாலைகள் இப்போது சிவப்பாக.

சாலையில் பிரசவம் முடிந்தது.
பயணம் முடியவில்லை, துயரமும் கூட.

அக்கறையோடென்று கதைத்து
லட்சம் கோடிகள்
வசூலித்த பணம்
இன்னும் பத்திரமாய் 
உம் இரும்புப் பெட்டியில்.

திரட்டிய நிதியை
என்ன செய்வதாய் உத்தேசம்?

ஊர்ப்பணத்தை கொள்ளையடித்து
உண்டு கொழுத்தவர் 
மேலும் பெருத்துப் போக
அள்ளித் தரத்தானே
அந்தப் பணம்?


இன்னும் எத்தனை நாள்
இப்படியே கடந்து போகும்?
தேசத்தை விற்கும்
தரகராம் உம் ஆட்சிக்கு 
இறுதியுரை
எழுதாமலா போயிடுவோம்?

1 comment:

  1. இந்த ஆட்சியின் உச்சத்தில் இன்னும் இதைவிட கொடுமைகளை மக்கள் அனுபவிக்க வேண்டியது வரும் தோழா

    ReplyDelete