Monday, May 25, 2020

யோகி, மதுவந்தி - வாய் தவறி அல்ல ,வியாதி





மதுவந்தி போல உபி முதல்வர் யோகியும் அளந்து விட்டுள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் படி மூன்னூறு கோடி பேருக்கு அவரது மாநிலத்தில் மட்டும் வேலை தரப் போகிறாராம்.

அவ்வளவு பேர் உலகிலேயே இல்லை என்று நீங்கள் கருதலாம்.
வாய் தவறி சொல்லி இருப்பார் என்றும் கூட நினைக்கலாம்.

ஆனால் இதெல்லாம் வாய் தவறி சொல்வது அல்ல,

சங்கிகளுக்கே இருக்கக் கூடிய Megalomania என்ற வியாதி.  எதையும் மிகைப்படுத்தி பேசுவது என்பது அவர்களின் டி.என்.ஏ வில் இருக்கிற அம்சம். 

மோடி முதல் மதுவந்தி வரை அனைவருக்கும் இந்த வியாதி இருக்கிறது.

இதிலே இவர்கள் கொஞ்சம் கூட கூச்சப்படாத அம்சம் ஒன்றும் உண்டு. 

இவர்கள் செய்கிற ஒன்றை நூறாக, ஆயிரமாக, கோடியாக காண்பித்தால் பரவாயில்லை. 

எதுவுமே செய்யாமல் ஏராளமாக செய்ததாக கதை விடுவதுதான் கடுப்பேத்துகிறது. 

No comments:

Post a Comment