Thursday, May 21, 2020

மனதின் வலி - அப்படியே ஆமோதிக்கிறேன்

கீழே உள்ளது ஒடிஷா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் திரு ஆர்.பாலகிருஷ்ணன், IAS அவர்களின் முக நூல் பதிவு.



நடந்து செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களில் உள்ள ரணங்களுக்கு சீக்கியர்கள் மருந்திடுகிறார்கள். இச்செய்கை மனதை நெகிழ வைக்கிறது. மனிதம் இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்ற நம்பிக்கையை தருகிறது.

இச்செய்தியை பகிர்ந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ்

மனிதம்தாண்டி புனிதம் உண்டா?
நடந்து தேய்ந்த கால்களுக்கு மருந்திடும் சீக்கியர்கள்.
கால்களின் ரணத்தைவிட மனதின் வலியை நிச்சயம் போக்கியிருக்கும்.

என்று குறிப்பிட்டிருந்தார்.

அதை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்.
பயணத்தை தொடர்வதற்கான தெம்பு நிச்சயம் அவர்களுக்கு கிடைத்திருக்கும். 

No comments:

Post a Comment