Wednesday, May 6, 2020

டாஸ்மாக் - நல்லா ப்ளான் செய்யறாங்க . . .



டாஸ்மாக் கடையில் பாதுகாப்புக்கு எவ்வளவு காவலர்கள் இருக்க வேண்டும்,

டாஸ்மாக்கிற்கும் பொது இடத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் எப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்,

எப்படிப்பட்ட கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,

டாஸ்மாக் அதிகாரிகளோடு எப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப் பட வேண்டும்,

எந்த நேரத்தில் எந்த வயதினர்  சரக்கு வாங்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் யார் பொறுப்பு

என்று மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை தமிழக காவல்துறை வழங்கியுள்ளது.


இவ்வளவு துல்லியமாக திட்டமிடத் தெரிந்த தமிழக அரசிற்கு டாஸ்மாக் திறப்பதனால் இதுநாள் வரை கடைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தகர்ந்து போய் விடும் என்பது தெரியவில்லையா?

இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிற  நீங்கள் ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு அறிவித்த போது மட்டும் ஏன் தூங்கி விட்டீர்கள்?

உங்க ப்ளானிங் ஆற்றல் குடிமக்களுக்கு மட்டும்தான் பயன்படுமா?

No comments:

Post a Comment