Saturday, May 30, 2020

வட போனாலும் வெறி போகாது


கோவையில் நேற்று இரவு ஒரு வெறியன் இரண்டு கோயில் வாசல்களில் பன்றி மாமிசத்தை வீசி எறிந்திருக்கிறான்.

வழக்கம் போல சங்கிகள் வெறியூட்ட ஆரம்பித்தார்கள். ஹெச்.ராசா மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரின் ட்வீட்டுகள் அதற்குச் சான்று. அவர்கள் யாரை குறி வைப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.




ஆனால் காவல்துறை அந்த வெறியனை கண்டுபிடித்து விட்டது. ஹரி என்ற எஸ்.ராம்பிரகாஷ் என்பவன்தான்  அந்த கொடுஞ்செயலைச் செய்தவன்.

கோவை காவல்துறை பதிந்த ட்வீட்டில் "காவல்துறைக்கு நன்றி" என்று எழுதி வானதி அம்மையார் முடித்துக் கொண்டு விட்டார். "வட போச்சே" என்பதை அதில் உணர முடிந்தது.

காவல்துறை போட்ட ட்வீட் என்பது இந்து மக்கள் கட்சிக்கான பதில். அதிலே அவர்கள் "சமூக ஊடகத்தில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.




ஆனால் அந்த வெறி பிடித்த சங்கிகளுக்கு ஏது பொறுப்பு?

இந்து மக்கள் கட்சியின் புதிய ட்வீட்டை பாருங்கள்.




இந்த ரத்தக் காட்டேரிகள்தான் பன்றி மாமிசத்தை வீச வைத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அது தோற்றுப் போன வெறியில்தான் இப்படி வெறியூட்டுகிறார்கள்.

மன அழுத்தம் பாதிக்கப்பட்டவனின் செயல் என்று காவல்துறை கேஸை மூடக்கூடாது.

சங்கிகளின் பங்களிப்பை அடியாழம் வரை சென்று கண்டறிய வேண்டும்.

ஏனென்றால் இந்த கயவர்கள் இதே போன்ற சதியை சில காலம் முன்பு கேரளாவிலும் கர்னாடகாவிலும் கூட செய்திருக்கிறார்கள். 


1 comment: